Saturday, June 12, 2004

கடைசி நேர தவிப்பைத் தவிர்க்க.

சோம்பல் எல்லோருக்கும் உள்ளது. சோம்பலை வெல்பவர்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் சோம்பலை வெற்றிகொள்கிறார்களா என்றால் எல்லோராலும் அப்படி முடிவதில்லை. என்ன காரணம்?
உடல் ரீதியான காரணம் ,மனரீதியிலான காரணங்கள் இப்படி!
உடல் ரீதியாக என்றால் சில நோய்களின் காரணமாக உடல் தளர்வு இருக்கலாம்.இதற்கு டாக்டரைத்தான்
அணுகவேண்டும். சிலருக்கு மனரீதியிலான காரணங்கள் டாக்டரை அணுகவேண்டிய அளவில் இருப்பதும் உண்டு. இங்கே கடைசி நிமிடம் வரை காத்திருப்பதை தவிர்க்கவும் அதனால் எற்படும் பண செலவு மற்றும் ,மன, உடல் உளைச்சலைத் தவிர்க்க மேற்கொள்வேண்டிய சில வழிமுறைகள்
இது! உங்களுக்கு மட்டுமல்ல எனக்காகவும் தான்.

01) பெரிய நம்மையே அடக்கி ஆளக்கூடிய வேலைகளை சிறிய செய்யக்கூடிய வேலைகளாக பிரித்து
ஒவ்வொன்றாக செய்யலாம்.

02) ஒரு வேலையை செய்யவேண்டும் என்றால் உடல் பிரகாரமான நடவடிக்கை எடுங்கள்.
உ+ம் ஒரு புத்தகம் வாசிப்பது நெடுநாளாக தள்ளிப்போகிறது என்றால் அப்புத்தக்கத்தினை
அலுமாரியில் இருந்து எடுத்து நீங்கள் படிக்கும் மேசையில் வையுங்கள்.

03) ஒருவருக்கு ஒன்றைச் செய்கிறேன் என்று வாக்குக் கொடுங்கள் உங்கள் நண்பருக்கு/ மேல் அதிகாரிக்கு குறித்த நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதாக உறுதியளித்து அதன் படிசெய்து முடியுங்கள்.

04) ஒரு பெரிய திட்டத்தினை ஒவ்வொரு கட்டமாக முடிக்கும் போது உங்களுக்கே நீங்கள் கைமாறு செய்து கொள்ளலாம்

05)நீங்கள் நேரம் கடத்துகிறீர்கள் என்று நீங்கள் உணரும் போது"நான் எனது நேரத்தினை வீணாக்குகிறேன்"என்று உங்களிடமே
நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள். இந்த ஞாபகம் ஊட்டுதல் கடைசியில் காலதாமதம் செய்வதை கட்டுப்படுதவும். நிறுத்தவும் வழி வகுக்கும்.

06)தாமதத்தின் விலையை எண்ணிப்பாருங்கள்.
* வேலைப்பழு அதிகரிக்கலாம்.
*பணச் செலவு அதிகரிக்கலாம்.
*கடைசி நிமிடம் வரும் போது நீங்கள் சுகவீனம் அடைந்தால் என்ன நிலைமை?
*நீங்கள் ஒத்திப்போட்ட திட்டம் எதிர்பார்த்த காலத்தினை விட அதிககாலம் ,பணச் செலவு எடுத்தால் என்ன செய்வீர்கள்?
* தொடர்ந்து எதாவது தடங்கல்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?
*உங்கள் கடைசி நிமிட வேலையின் தரம் எப்படி அமையும் என்பதை யோசித்தீர்களா?

No comments: