Tuesday, July 13, 2004

ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும்........

சக்கரை வியாதியினால் துன்பப்படுகிறீர்களா?
ஆஸ்மா,இரத்தக்கொதிப்பினால் அவதிப்படுகிறிர்களா?
கை,கால் ,இடுப்பு வலிகளால் அவதியா?இல்லற வாழ்வில் திருப்தி இல்லையா?
குறிப்பிட்ட மருந்தை பாவியுங்கள் அல்லது வைத்தியரைச் சந்தியுங்கள்!
கடந்தவாரம் ரொரண்டோவில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் எல்லாம்மேற்படிவாசகங்கள்
இடம்பெற்றமுழுப்பக்க விளம்பரங்கள்,வானொலிகளில் எல்லாம் இதே விளம்பரங்கள்,
தீராத கொடிய புற்று நோயைக் கூடதனது மருந்து தீர்த்து வைக்கும் என்றும், இன்ன திகதி இன்னஇடத்தில்
சந்திக்கலாம் என்றும் வானொலிப் பேட்டிகள்.தமிழ் நாட்டில் இருந்து கனடாவுக்கு மூன்றாவது தடவையாக
வருகை தந்திருக்கும் ஒரு மூலிகை வைத்தியரின்பேட்டிதான் அது.எனக்கு இந்தியாவில் இருக்கும்
"சுற்றுப்பயணப் புகழ்" மூலிகை வைத்தியர்களின் ஞாபகம் தான் வந்தது.
சரி என்னதான் நடந்தது என்கிறீர்களா?
அந்த வைத்தியரிடம் நிறைய கூட்டம் போனது என்று கேள்வி.நல்ல பிரயோசனமான சுற்றுப்பயணம்.
வைத்தியருக்கு தான், டொலரில் அல்லவா பணம் கொண்டு சென்றிருக்கிறார்.அது தீர, இருக்கவே இருக்கிறது
4வது சுற்றுப் பயணம் .ஏமாறுகிறவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள்கவலைப்பட வேண்டியதில்லை.

No comments: