Tuesday, July 13, 2004

எத்தனை பெரிய மனம் உனக்கு ?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு!
எல்லோரும் மனிதரே என்பது
உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்!
உன்னை எட்டி உதைத்தாலும் அவன்
மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்!
உன் கதையை முடித்தாலும் அவன்
மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்!
உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன்!
உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!


தாக்க வந்தாலும் அவன் மனிதன்!
உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!

ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன்!
தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!

****கவிஞர் காசி ஆனந்தன்*****

No comments: