Wednesday, August 18, 2004

கவிதை சமுத்திரத்தில் இதோ ஒரு புதிய துளி

விதை சமுத்திரத்தில் இதோ........இன்னும் ஒரு சிறு துளி எனும் தலைப்பில்
"எனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகள் மொழிவடிவம் பெறவேண்டும்.அவை மக்களோடு மக்களாக கலந்திடவேண்டும். என்னைச் சுற்றியிருக்கும் என் சமுகத்தில் ஒரு சிறு துடிப்பையேனும் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே நான் எழுதுகிறேன்."
என்னும்
முன்னுரையுடன் கவிதைகளுக்கான ஒரு தளத்தினை ( www.sharishonline.com/)
தமிழ் ஓசை.கொம் வாயிலாக சில தினங்களுக்கு முன்னர் அறிய முடிந்தது. நல்ல பல கவிதைகள், புரட்சி, சமூகம், காதல், போன்ற தலைப்புக்களில் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் புதுக்கவிதைகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறார் இந்த இளவயதுக் கவிஞர் இந்த தளம் மற்றும் கவிதைகளுக்கு சொந்தக்காரர் திரு த.சரீஷ் எனும் கவிஞன். புலம் பெயர்ந்த ஒரு கவிஞர் என்பதனை அவரின் கவிதை வாயிலாக அறிய முடிந்தாலும் அவர் எந்த நாட்டில் வசிக்கிறார் என்பதை அறிய முடியவில்லை

தள வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதுடன் யுனிகோட் எழுத்துருவில் தளத்தினைக் காணமுடிகிறது. தளத்தில் சில இடங்களில் "மிக விரைவில் வரும் "எனும் வசனத்தினைக் காணமுடிந்தாலும் புதியதளம் தானே விரைவில் சரி செய்வார்கள் என எதிர் பார்க்கலாம். . கவிஞரின் கவிதை நூல்களின் விபரங்கள் தொகுக்கப் பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
ஒவ்வொரு தமிழ்மகனும்ஒவ்வொரு வரலாறு...!!! எனும் தலைப்பில் கவிதை கூறும் போது இடையில் சொல்கிறார்.

உயிருக்குப் பயந்து
ஊரைவிட்டு ஓடிவந்தேன்
எந்தன் வீடும் வீட்டுப் படிக்கட்டும்
முற்றத்து மாமரமும் புல்வெளியும்
©வரசம் ©வும் கோவிலும் குளமும்
கடற்கரையும் விளையாட்டுத் திடலும்
ஊர் நிலவும் உப்புக்காற்றும்
ஊரை விட்டு ஓடவில்லை
உயிருக்குப் பயந்து நான் மட்டும்
ஊரைவிட்டு ஓடி வந்தேன்
தன்மானம் இல்லாமல்
தாய்மண்ணை விட்டு
புலத்தில் வந்து புகுந்துகொண்டவன்
என்னை நீ பின்பற்றாதே..!

எனும் புலம் பெயர்ந்தவர்களுக்குரிய குற்ற உணர்ச்சியுடன்.

இன்னும் ஒர் கவிதையில் சொல்கிறார்.

சிங்கங்கள்
தேனீக்களை
போருக்கு
அறைகூவி
அழைக்கக்கூடாது-
ஏனெனில்தேனீக்களிடம்
கூர்மையானஆயுதம் உண்டு...!!!

நீங்களும் ஒரு முறை இந்தக் கவிதைகளைச் சுவைத்துவிட்டு இந்தக் கவிஞனுக்கு ஒரு வரி பாராட்டு தெரிவித்து விடலாமே.


No comments: