Monday, September 06, 2004

37 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த வாழ்த்து மடல்


சில வேளைகளில் நடைபெறும் சில சம்பவங்கள் மனிதர்களை இன்ப அதிர்ச்சிக்குள் கொண்டுபோய் விடும்.அப்படிப் பட்ட ஒரு
சம்பவம் அமெரிக்காவில் வதியும் ஒரு தாய்க்கு கிடைத்திருக்கிறது. சம்பவம் இதுதான்.

37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் விடுமறையைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது தாயாருக்கு
அனுப்பிய வாழ்த்து மடல் 37 ஆண்டுகளின் பின்னர் அண்மையில் தாயாரிடம் சென்றடைந்திருக்கிறது.

ஓகஸ்ட் 19,1967 எனும் திகதியிடப்பட்ட இத் தபால் நியூஜேர்சி தபால் நிலையத்தில் தபால் தரம் பிரிக்கும் இயந்திரத்துக்கு பின்னால்
விழுந்துவிட்டது.சென்ற ஜூலை மாதம் மேற்படி இயந்திரத்தினை அகற்றி புது இயந்திரத்தினை பொருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட
தபால் ஊழியர்களால் மேற்படி தபால் கண்டெடுக்கப்பட்டது.

வெறும் 4 சதம் முத்திரை ஒட்டப்பட்டிருந்த தபாலுக்கு மேலும் 23 சத முத்திரை ஒட்டி உரிய முகவரிக்கு அனுப்பி வைத்தனர்
தபால் ஊழியர்கள்.37 ஆண்டுகளுக்கு முன்னர் மகள் அனுப்பிய வாழ்த்து மடல் ஜூலை 14,2004 ல் பெற்றுக் கொண்ட தாயார்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப்போயிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் தனது மகிழ்ச்சியில் பெரும் பங்கு
தபால் ஊழியர்களையே சாரும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதில் என்ன ஆச்சர்யம் எங்கள் நாடுகளில் தபால்கள் தொலைவதும்,பிந்திக் கிடைப்பதும் சர்வசாதாரணம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

No comments: