Tuesday, June 01, 2004

கடலே!

இங்கு கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றிலே அண்மையில் வந்த கவிதை ஒன்று எனது மனதினைத்
தைத்தது.உங்களுடன்பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஈழத்தின்எழுச்சிக் கவிஏர் காசி ஆனந்தனின்
கவிதை வரிகள் இவை..

கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!


இந்நாள் இடிநகர் அலைகக் குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடி கரங்கள் ஒருநாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!


அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெலாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!


உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!


அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!


கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கிவிட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்.....
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

வலைப்பதிவுகளும் நானும்

சில நாட்களின் பின்னர் இங்கே எழுதுகிறேன்.பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக நேரம் கிடைக்கவில்லை.
இனி தொடர்ந்து எழுதுவேன். தமிழில் எழுதுவது கைகளுக்கு சிரமத்தினை கொடுத்தாலும், மனத்தினில் மகிழ்ச்சியை
க் கொடுக்கிறது. தமிழில் எழுதுவது என்பது கைகளினால் உணவையுண்பது போலவும் ஆங்கிலத்தில் எழுதுவது
என்பது கரண்டியினால் உணவை உண்பது போலவும் எனக்கு தெரிகிறது.உங்களுக்கும் இப்படியான உணர்வுகள்
, எண்ணங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
முன்பு தமிழில் இணையம் அல்லது தமிழிணையம் பிரபலமாகிக்கொண்டிருந்த காலங்களில்
இணையத்தளங்கள் புதிது புதிதாக முளைவிட்டதுபோல இப்போது வலைப்பதிவுகள் திசைக்கொன்றாக
(எனக்கெனவோ வலைப்பூ என்பதனை விட வலைப்பதிவு என்பது தான் பிடிக்கிறது. நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?)
வந்து கொண்டுஇருக்கின்றன.இணையத்தில் பத்திரிகை படிப்பது எப்படி தவறாதோ அதே போல அண்மைக்காலங்களில் நான்
வலைப்பதிவுகளுக்கும் வருவதும் தவறாமல் நடக்கிறது தமிழ்நாட்டுத்தமிழ்(இதில் சென்னை
த்தமிழும் அடக்கம்),இலங்கைத்தமிழ்,சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ் இப்படி பலப்பல தமிழ் பேசி வருகின்றன.எல்லாத்தமிழும் எனக்கு புரிந்தாலும் சத்தியமாக எனக்கு இந்த
சென்னைத்தமிழ் மட்டும் புரியவில்லை.மற்றவர்களுக்கு புரிகிறதா என்பதுவும் எனக்கு புரியவில்லை.
. சில வலைப்பதிவுகள் நண்பனுடன் உரையாடுவது போல
எம்முடன் வம்பளக்கின்றன.சில வலைப்பதிவுகள் காதல் மொழி
பேசி கிளுகிளுப்பூட்டுகின்றன.சில அடிமனத்து வேதனை
களை ,நிகழ்கால விடயங்களை பகிர்ந்து கொள்கின்றன.சில மொட்டாகி பூப்பதுக்கு முன்னரே கருகிநிற்பதையும் காண
முடிகிறது.மொத்தத்தில் வலைப்பதிவுகள் எல்லாமே எதோ!! ஒரு வகையில் சுவாரசியத்தினைத் தருகின்றன.