Friday, July 23, 2004

பி.சந்திரசேகரனின் பேட்டி

ஜூனியர் விகடன் 25.07.2004  இதழில் "இந்தியாவே கை கொடு" என்னும் தலைப்பில் ஒரு பேட்டி வந்துள்ளது.  பேட்டியை இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் தலைவர்களில் ஒருவராகிய ,இலங்கை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய திரு பி.சந்திரசேகரன் வழங்கி இருக்கிறார்.
தலைவர் பிரபாகரனை பல முறை சந்தித்து பேசியிருக்கும் சந்திரசேகரன் பல உண்மைகளை  உணர்ந்தவர் , பல உண்மைகளை இதில் தெரிவித்தும் இருக்கிறார். பாண்டவர்களின் நிலை போல் இன்று நிற்கும் விடுதலைப் புலிகளின் நிலை பற்றி மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.திரு பி.சந்திரசேகரன் முன்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சில வருடம் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 20, 2004

இந்தியாவின் NO-1 தமிழ் நாளிதழ் எது?

ந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் தமிழ் வார இதழ் குமுதம் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததே.பத்திரிகைகளில் இந்தியாவில்
 NO -01  தமிழ் நாளிதழ் என தினத்தந்தியும்,இல்லை காசு கொடுத்து வாங்கிப்படிப்போர் எண்ணிக்கையில் தினமலர் தான் முதலிடத்தில் என்று தினமலரும் விளம்பரம் செய்வதையும் நான் அவதானித்திருக்கிறேன்.

அப்படியாயின் தினத்தந்தியை எல்லோரும் ஓசியில் படிக்கிறார்கள் என்று தினமலர் சொல்கின்றதா? உண்மையில் இந்தியாவில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் விற்பனையாவது தினத்தந்தியா?   தினமலரா?   நான் இந்தியாவில் வசித்த காலத்தில் இருந்து எனது   மனதில் இருந்து வரும் சந்தேகம் இது.

வாழ்க்கை என்பது இதுதானோ?

னக்கு நினைவு தெரிந்தநாளில் இருந்து காலையில் கோப்பி(காப்பி)குடிப்பது எப்படி தவறாதோ அதே போல பத்திரிகை படிப்பதும் தவறியதில்லை  சரியாக 7.00  மணிக்கு  பத்திரிகை பையன்(பையர்)  வந்து  பெல் அடிப்பார். பத்திரிகையையும் கையோடு கொண்டு ஓடுவது சாப்பாட்டு மேசைக்கு, சாப்பிட்டுக்கொண்டே 8.00  மணி பாடசாலைக்கு போகுமுன்னர் பத்திரிகை முழுவதும் படித்துவிடுவேன்.  இப்படிஆரம்பித்த பழக்கம் பின்னர் சாப்பிடும் நேரத்தில் எதாவது ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை இருந்தால் தான் சாப்பாடு உள்ளே போகும் என்ற அளவில் வந்து விட்டது.


 புத்தகம் வாசிக்காமல் சாப்பிட்டால் சாப்பிட்டது போலவே இருப்பதில்லை. இப்படி எல்லாவற்றையும் படித்ததால் நிறைய பொதுவிடயங்கள் அரசியல் விடயங்கள் எனது மண்டையினுள் புகுந்துகொள்ள பாடசாலையில் நடைபெற்ற ஒரு பொதுஅறிவு போட்டி நிகழ்சியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றேன். அதிலிருந்து நண்பர்,உறவினர் வீடுகளுக்கு சென்றால் ஒருவர் சொல்லுவார் இந்த பொடியன் சரியான கெட்டிக்காறன்.பொது விடயத்தில் என்ன கேட்டாலும் பதில் சொல்லுவான் என்று. உடனே மற்றவர்கள் 4, 5 கேள்விகள் கேட்பார்கள். இப்படி எங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் பாடசாலை வட்டாரங்களில் நான் பொது அறிவில் பிரபலம்ஆனேன்.

இனி நான் வாசிப்பது  கூட மிக வேகத்தில் தான்.எனது அப்பப்பாவுக்கு (எனது அப்பாவின் தந்தை)  சந்தேகம் இப்படி மிக வேகத்தில் வாசிப்பது மனதில் நிற்குமா என்று'ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு இராமாயணத்தை எடுத்து கையில் தந்து சொன்னார் குறிப்பிட்ட பக்கத்தினை எடுத்து இதிலிருந்து 5 பக்கத்தினைப் படிகேள்விகள் கேட்பேன் என்று.  5 பக்கங்களையும் படித்தவுடன் கேள்விகள் கேட்டார். நான் கேள்விகளுக்கு பதில் சொன்னதுடன் மட்டும் அல்ல எந்த பக்கத்தில் எந்தெந்த  விடயம் இருக்கு என்பதனையும்சொன்னதுடன் அசந்துவிட்டார். எனக்கு ஒரு சிறு பரிசு கூட தந்த ஞாபகம். 

சில தினங்களுக்கு முன்னர் எனது பகுதி MP  யிடம் ஒரு அலுவலாக சென்றிருந்தேன். MP யின் காரியதரிசி பெண் எல்லா விபரங்களையும் பதிந்துவிட்டு  எனது மனைவியின் Date Of Birth கேட்டார். எனக்கு உடனடியாக ஞாபகம் வரவில்லை. சில நிமிடங்கள் யோசித்தேன்.நான் யோசித்துக்கொண்டு நிற்பதை கண்ட அருகில் அமர்ந்திருந்த மனைவி வந்து விபரம் சொல்லகாரியதரிசி பதிந்தார்.

பின் சிரித்துக்கொண்டு சொன்னார் எல்லா கணவர் மாரும் இப்படிதான் போலும்என்று. பின்னர் எது நடக்கும் என நினைத்தீர்களோ அதுவே சரியாக நடந்தது.வீடு வந்து சேருமட்டும்  எனக்கு திட்டுத்தான். வீட்டிலும் தொடர்ந்து  திட்டுதான்.திருமணம் முடித்தவர்களுக்குதெரியும் தானே பின் என்ன நடந்திருக்கும் என்று.

பிழை என்னில் தானே. ஞாபக மறதி ஏற்படும் அளவிற்கு எனக்கு வயதில்லை.ஏன் இப்படி?  இரவு படுத்திருக்கும்போது எனது நினைவுகள் சற்று பின்னோக்கி போனது.அது தான் மேலே உள்ளது.  நான் மட்டும் தான் இப்படியா? அல்லது காரியதரசி பெண் சொன்னது போல பெரும்பாலான கணவன்மார்  இப்படிதானா?   உங்கள் அனுபவங்கள் எப்படி?


சந்திரிகாவின் கட்சி அங்கீகாரம் ரத்தா?

லங்கையில் தற்போது 51 அரசியல் கட்சிகள் தேர்தல்திணைக்களத்தில் அரசியல் கட்சியாப் பதிவுசெய்துள்ளன.இதில் 25 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தினை ரத்துசெய்வது குறித்து தேர்தல் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து  வருவதாக தெரியவருகிறது.கடந்த இரண்டுக்கும்மேற்பட்ட தேர்தல்களில் பங்கேற்காத 25 கட்சிகளின் அங்கீகாரமேஇரத்து செய்யப்பட உள்ளது.
 
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்இலங்கையின் ஒரு பிரதான கட்சியும்,இப்பொது ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் பிரதான கட்சியுமாகிய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின்அங்கீகாரமும் கேள்விக்குறியாகி இருப்பதுதான்.பொது ஜன ஐக்கிய முன்ணணிஎன்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டமைத்து பல தேர்தல்களில் பங்குபற்றியதால் சிறீலங்கா சுதந்திரகட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பலகாலமாயிற்று.
 
அதே போல ஒரு நிலைதான் லங்கா சமசமாஜக் கட்சிக்கும்.அத்துடன் விடுதலைப்புலிகளின்  அரசியல் கட்சியாகிய விடுதலை புலிகள் மக்கள் முன்னணி, பேரியல் அஷ்ரபின் தேசிய ஐக்கியமுன்னணி  போன்றவற்றின் அங்கீகாரமும் இரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
90 களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது விடுதலை புலிகளால்  விடுதலைப் புலிகள் மக்கள்முன்னணி  என்ற கட்சி உருவாக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தில்அரசியல் கட்சியாக பதியப்பட்டதும்.இதன் தலைவராக மாத்தையாஇருந்ததும் குறிப்பிடத்தக்கது.