Tuesday, August 31, 2004

குழந்தைகளும் கேள்விகளும்............

குழந்தைகள் உள்ளவர்களுக்கு தெரியும் குழந்தைகளின் கேள்வி கேட்கும் தன்மை பற்றி. என்னத்தில்,எங்கு சந்தேகம் வரும் என்று இல்லை. இடக்கு முடக்காக கேட்பார்கள்.தாய் தந்தையர் பதில் சொல்ல முடியாமல் சில வேளை திண்டாட வேண்டி வரும். இதுவும் அப்படிப்பட்டதுதான்.

தனது நாய் இறந்து விட்டதுக்காக அழுதுகொண்டிருக்கும் சிறுவனை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் "தம்பி எனது தாத்தா இறந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது நான் என்ன அழுது கொண்டா இருக்கிறேன் எழும்பி வேலையைப் பார் என்று"

அதற்கு அந்த சிறுவன் கேட்டான் ஒரு கேள்வி "நீங்கள் உங்கள் தாத்தாவை சிறுவயதில் இருந்தா வளர்த்தீர்கள்"? என்று?

சிறுவனுக்கு புத்தி சொன்ன பக்கத்து வீட்டுக்காரர் சப்தம் போடாமல் நகர்ந்துவிட்டார்.வாயையும் "எதையுமோ"பொத்திக்கொண்டு.

இது நேற்று டாக்டரிடம் போனபோது காத்திருந்த வேளையில் பத்திரிகையில் படித்தது.சரி நீங்களும்ரசிப்பீர்கள் என்பதற்காக தந்திருக்கிறேன் இங்கு.