Thursday, April 28, 2005

பத்திரிகையாளர் கடத்தல்...

ன்றைய தினம் கொழும்பில் வைத்து பிரபல அரசியல் விமர்சகரும் தமிழ்நெட் இணைய தளத்தின் ஆசிரியரும், தராக்கி எனும் புனைபெயரில் எழுதிவந்தவருமாகிய திரு த.சிவராம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பல தடவைகள் இவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.
பல தடவைகள் இவருக்கு பொலிசாரினாலும் இராணுவத்தினாலும் பல அச்சுறுத்தல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கப்பட்டிருந்தன.அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் துனிச்சலாக தனது கருத்தினை வெளிப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தலைநகர் கொழுப்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர்
ஆங்கில பத்திரிகையிலேயே சிவராமின் கருத்துக்கள்,விமர்சனங்கள் வெளிவந்தன.இக்கடத்தல் தொடர்பாக சந்தேகம் இலங்கை அரச புலனாய்வு துறை மீதும் பொலிசாரின் மீதும் விழுந்திருக்கிறது.இது தொடர்பாக மேலதிக தகவல்கள் இனி வரும் தினங்களில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

No comments: