Wednesday, August 03, 2005

ரொரண்டோவில் பாரிய விமான விபத்து.

இன்று மாலை 4.30 மணிக்கு
279 பயணிகளுடன் ரொரன்ரோ பியர்சன் சர்வதேச வானூர்தித் தளத்தில் தரையிறங்க முற்பட்ட ஏயர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயர் பஸ் 340 ரக வானூர்தியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது வானூர்தியில் பெரியளவில் தீப்பிடித்தபோதும் பயணிகள் எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியத்தில் இருந்து கடும் காற்றும் இடிமுழக்கத்துடன் கூடிய மழையும் பெய்து கொண்டிருந்தது ரொரண்டோவில். அப்படி இருந்த நிலையில் தரையிறங்கமுற்பட்ட இந்த விமானம் இடிமின்னல் காரணமாக
விபத்துக்கு உள்ளாகியது.

401 அதிவிரைவு நெடுஞ்சாலை வழியே சென்றவர்கள் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை காணமுடிந்ததாக கூறினார்கள்.
நல்லவேளையாக விமானப்பயணிகளுக்கோ அல்லது நெடுஞ்சாலை வழியே
சென்றவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.விமானப்பயணிகளுக்கு காயம்
மட்டும்தான்.

விமான நிலையம் இவ் நெடுஞ்சாலைக்கு அண்மையிலேயே இருப்பது
குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு:-

www.ctv.ca

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1937&Itemid=43

No comments: