Monday, September 19, 2005

எங்கே போகிறோம் நாம் ?- பகுதி 3

ரி அவர்களை விடுவோம். நாம் என்ன செய்கிறோம். எங்கள் உள்ளே எழுந்த காய்ச்சல் அடக்க மானுடத்துக்கு எதிராக பாடுகிறோம்.விடுதலைக்கு எதிராக வீறுகொள்கிறோம்.அப்போது தமிழ் இளைஞர் பேரவைக்கு தலைவராக இருந்த சி.புஷ்பராஜா எழுதிய "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" என்னும் நூல் எழும் தேவை ஏன் வந்தது? தன்னை மையப்படுத்திய அக்காலத்தைய தமிழீழ விடுதலைப் போர் பற்றி எழுதுகிறார்.தானே மணமகன்,தானே பிணம் என்கின்ற உளவியல் சிக்கல் அந்த நூலில் ஊடுபாவாக ஓடியது. அதே காலத்தில் போராளியாக இயங்கிய ஒரு சிலரிடம் நான் கதையாடியபோது "இது மிக போக்கிலிதனமான ஒரு புத்தகம்"என்று ஒருவர் சொன்னார். இப்போது அது குறித்து விரிவாக எழுதுவது என் நோக்கம் அல்ல.பொதுப் பார்வையிலும்,பொதுப்புத்தியிலும்,விமர்சனபூர்வமாகவும் ஒருநூல் வரவேண்டியதும் அவசியம்.

ஷோபாசக்தியின் "கொரில்லா","ம்" ஆகிய புதினங்களும் சில சிறுகதைகளும் ஈழ விடுதலைப் போர் மீது சேற்றை அள்ளிவீசும் செயலாகவே எனக்குப்படுகிறது."தேசத்துரோகி" என்றொரு சிறுகதை. அக்கதையில் அப்பாவித் தமிழர் அவலமாக கொல்லப்பட்ட துன்பவரி வந்ததுதான்.அனால் அதையும் விட துருத்திக்கொண்டு நின்றது வேறொரு செய்தி 'மிகுந்த கோபத்துடன் அகங்காரமும் வீரமும் தோய்ந்த குரலில்' அப்பாவி தமிழர்களை மிதிவெடிக்குள் விரட்டிக்கொன்ற ரணில் விக்கிரமசிங்க என்னும் முன்னைய சிறீலங்கா பிரதமரை தமிழீழவிடுதலைப் புலிகள் நம்புகின்றார்கள் என்பதே!இது அரசியல் ஆய்வாகவோ அல்லது இராணுவ ஆய்வாகவோ தெரிவிக்கப்பட்டிருந்தால் அச் செய்தி பார்வைக்குரியதே! ஆனால் ஒரு சிறுகதையில் அது சொல்லப்பட்டிருக்கும் மறைமையானது வலிந்து தாக்கும் முறையாகும்.ஒன்றைச் சொல்லலாம்.நமது தேசிய விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் நமது தலைமையும் விலை போகக்கூடிய ஒன்றோ அல்லது ஏமாறக்கூடிய ஒன்றோ அல்ல. ஷோபாசக்திக்கு அந்தக்கவலை வேண்டாம்.

இப்படி ஒரு சிலரின் செய்கை இப்போது,இந்த விடுதலைப் போரில் மாத்திரம் நிகழ்வது அல்ல.எப்போதும்,எந்த விடுதலைப்போர் நிகழ்ந்த காலத்திலும்,இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.எம் கடன் என்னவெனில் இப்படியானவர்களை இனம் காண்பதும்,இவர்களை உலகுக்கு அறிவிப்பதுமாகும்.அவ்வளவே!

அ.இரவி அவர்களால் எழுதப்பட்டு முழுமையான கட்டுரையாக வெளிவந்ததை இங்கு பகுதிகளாக்கி தந்தேன்.(எனது நேரம்,வசதி கருதி)

No comments: