Thursday, October 13, 2005

சிறி சுவாமிநாராயண் மந்திர்!


இங்கே நீங்கள் படத்தில் காண்பது கனடா ரொரண்டோவில் இருக்கும் சிறி சுவாமி நாராயண் மந்திரின் அழகிய தோற்றமே இது.உலகெங்கும் 45 நாடுகளில் இயங்கும் சுவாமி நாராயண் அமைப்பினரால் இவ் ஆலயம்,ஆச்சிரமம் அமைக்கப்பட்டுபராமரிக்கப்பட்டு வருகிறது.

எனது கமெராவினால் கிளிக்கிய படங்கள் இது.முற்றுமுழுதாக சலவைக்கல்லால்அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய இந்து ஆலயம்.ரொரண்டோவில் பார்க்கவேண்டிய இடங்களில் இந்த ஆலயமும் ஒன்றாகும்.சில தினங்களுக்கு முன்னர் நண்பன் ஒருவரை காண இந்தப் பகுதிக்குசென்றிருந்தேன்.அப்போது இந்த ஆசிரமத்திற்கும் சென்று வந்தேன்.மிக அழகாக,தூய்மையாக,சிறந்த ஒழுங்கமைப்புடன் இந்த மந்திர்செயற்பட்டு வருகிறது.சுவாமிகளின் உரையினைக் கேட்கலாம்என்றால் உரை அன்று குஜராத்தி மொழியிலே இடம்பெற்றது.

தமிழ்நாட்டிலும் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் இவர்களின் ஆச்சிரமம் இருப்பதாக அங்கு பணிபுரிந்த தொண்டர் தகவல் சொன்னார்.தனியே மதத்துடன் நின்றுவிடாது பல சமூகப்பணிகளிலும் இவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

1 comment:

Anonymous said...

அருமையான மேகங்கள். நல்ல புகைப்படங்கள்