Saturday, October 15, 2005

இந்திய உளவுப்பிரிவின் குறி!

இந்திய உளவுப்பிரிவால் இலக்கு வைக்கப்படும் இலங்கை தமிழ் ஊடகத்துறை. ஏன்? எதற்கு? எப்படி?

இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
........................................................................................

சுவிஸிலிருந்து சத்திரியன் எழுதிய இக்கட்டுரையினை மேலே தொடர்ந்து
படிக்க கீழே உள்ள சுட்டியினை சுட்டுங்கள்.

http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=2990&Itemid=44

No comments: