Friday, November 11, 2005

ஈழத்தமிழர் தொடர்பான சில பதிவுகள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையில் திரு சா.ஆ. தருமரத்தினம் அவர்களால் ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள் எனும் தலைப்பில் ஒரு தொடரெழுதப்பட்டுவருகிறது. இதுவரையில்
இந்ததலைப்பில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துவிட்டன.நூலாக எழுதப்பட்டதை வெளியிடுகிறார்களோ அல்லது இப்போதுதான் வெளியிடப்படுகிறதோ என்பது எனக்கு தெரியவில்லை.ஆனாலும்
இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி.இன்றைய காலகட்டத்தில் ஈழத்தவர் அல்லாத உலகெங்கினும் பரந்து வாழும் பல தமிழர்களுக்கு ஈழப்போராட்டம்,ஈழசரித்திரம் சம்பந்தமாக சரியான தெளிவான அறிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த இணையம் வந்ததன் காரண்மாக சரியான தெளிவான அறிவினை பெற்றவர்கள் பலர்.அதில் இந்த வலைப்பூக்களுக்குகூட நிறைய
பங்கு இருக்கிறது. வலைபதிய வந்ததன் பின்னர் தான் ஈழம்,ஈழப்போராட்டம்,ஈழவரலாறு சம்பந்தமாக சரியான அல்லது தெளிவான அறிவை பெற்றுக்கொண்டதாக பலர் சொல்லியிருக்கின்றனர்.அந்தவகையில்
இக்கட்டுரைகளை எழுதுபவரும் இணையத்தில்வெளியிடுபவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
இனறைய இளைஞர் சமுதாயம் கூட வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள இது உதவும்.

இதுவரையில் வந்த இரண்டு கட்டுரைகளாவன.

"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்"

No comments: