Thursday, November 24, 2005

கருத்துக்களுக்கான"கருத்து" இணையத்தளம்

கருத்துரிமைக்காக "கருத்து" அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.கடந்த நவம்பர் 13 ந்திகதி தொடக்கிவைக்கப்பட்ட கருத்து என்ற அமைப்பும் அதன் இணையத்தளமும் தமிழ்நாட்டில் யாரும் சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லலாம் என்ற நோக்கிலே உருவாக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் கவிஞர் கனிமொழி.கருத்துரிமைக்கான இந்த அமைப்பின் இணையதளத்தில் யாரும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தமதுகருத்துக்களை சொல்லலாம்.குஸ்பு,சுகாசினி பிரச்சனை ஏற்பட்டுள்ள இந்த் நேரத்தில் இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது பலரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பார்ப்போம் கருத்து அமைப்பின் எதிர்காலம் எப்படிஇருக்கப்போகின்றது என்பதை.கருத்தினை எதிர் கொள்ளப்போகின்றவர்கள் "கருத்தினை" கருத்துக்களால் எதிர்கொள்வார்களா அல்லது கத்தி துடைப்பம் செருப்புக்களால் எதிர்கொள்ளப்போகிறார்களா என்பதை.ஏனெனில் சகிப்புத்தன்மை என்பது தற்போது தமிழனுக்கு இல்லாமல் போய்வெகு காலம் ஆகிவிட்டதே.சரி நீங்களும் கருத்து கொல்லப்போறீங்களா?இங்கேயே கருத்துக்கள் சொல்லி அடிச்சுக்கொள்வது போதாதா.இது எதற்கு வேறு என்கிறீர்களா?ஒரே இடம் போர் அடிக்கும் அதுக்குதான் புது இடம்.

தளம் இதுதான்.
http://www.karuthu.com

நேரடியாக கருத்துகளுக்கு செல்ல
http://www.karuthu.com/forum/forum_topics.asp?FID=4

No comments: