Wednesday, June 29, 2005

தொல்.திருமாவளவன் ரொரண்டோ வருகிறார்.

மிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும் ஈழத்தமிழர்களின் பால் கரிசனை உள்ளவருமாகியதிரு.தொல்.திருமாவளவன் அவர்கள் ஜூலை மாதம் 2,3 திகதிகளில் ரொரண்டோவிலிருந்து வெளிவரும்ஈழமுரசு பத்திரிகை நடாத்தும் "இனிய மாலை 2005" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனடாவருகிறார்.

தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையான ஈழமுரசு, தான் நடாத்தும் "இனிய மாலை 2005" நிகழ்ச்சிக்கு திரு.திருமாவளவனையும், பி.பி.சி. தமிழோசையின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில்ஒருவராகிய திரு விமல் .சொக்கநாதனையும் அழைத்திருக்கின்றனர். ரொரண்டோ வாழ் தமிழர்களால் 2 ம் திகதி அவருடன் கலந்துரையாட முடியும் என நினைக்கிறேன்.

என்னால் சந்திக்க முடியுமானால் விபரங்கள் தருகிறேன். நிகழ்ச்சி நடைபெறும் இடம்,நேரம். தொலைபேசி இலக்கம் என்பனவற்றிற்கு இங்கே பார்க்கவும்.

ஏற்கனவே மயிலாடுதுறை சிவா, திருமா சிங்கை வருகிறார் என ஒரு பதிவு இட்டு அதையொட்டி எழுந்த வாதப்பிரதிவாதங்களையும் நான் படித்திருக்கிறேன். இங்கு ரொரண்டோவில் ஈழத்தமிழர்களால் வாரா வாரம் பதிப்பிக்கப்படும் ஒரு இலவச செய்திப் பத்திரிகைதான் ஈழமுரசு. இதனைப் படிப்பவர்கள் 99 சதவீதம் ஈழத்தமிழர்கள் தான். விளம்பரங்கள் கொடுப்பவர்களும் 99 சவீதத்தினர் ஈழத்மிழர்கள் தான்.

எதற்காக திருமாவை தனது நிகழ்விற்கு அழைக்கவேண்டும்?.தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுபவரும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் அமைத்து தமிழ் மொழிக்காக பாடுபடுபவரும் சிறந்த ஒரு போராட்டவாதியும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் விடிவுக்காக பொடாக்கு அஞ்சாது குரல் கொடுத்தவரும்,குரல் கொடுத்துவருபவருமாகிய திரு தொல்.திருமாவளவனை சிறப்பிக்கவேண்டும்.அவரிடம் நாம் பல கருத்துக்களில் கலந்துரையாடவேண்டும்.அவரிடம் இருந்து பல கருத்துக்களை நாம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் திரு.திருமாவை அழைத்திருக்கின்றனர்.

தமிழை நேசிப்பது தமிழிற்காக குரல் கொடுப்பது
கூட பலருக்கு கேலியாக இருக்கிறது. உங்களுக்கு தமிழின் அருமை தெரியவில்லை புரியவில்லை.ஆனால் எங்களுக்கு புரிந்திருக்கிறது
ஏனெனில் தமிழை பேசாதே என தடுக்கப்பட்டோம். தமிழ் புறக்கணிக்கப்பட்டது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டோம். தமிழை பேசியதற்காக குரவளையினையே அறுத்தார்கள். என்ன நடந்தது? மேன்மேலும் எங்களுக்கு தமிழ் மீது காதல் ஏற்பட்டதேயல்லாமல் வெறுப்பு ஏற்படவில்லை. ஒன்றினை மறுக்கும் போது அல்லது மறைக்கும் போதுதான்
அதன் மீது வெறியே ஏற்படுகிறது.அப்படி தான் எங்களுக்கு தமிழும் ஆகிபோனது. அப்படியே தமிழுக்காக போராடுபவர்கள் மீதும் காதல் வருகிறது. இதை சிலர் அரசியல் என்று சொன்னாலும் கூட ஏனெனில் தமிழ்நாட்டில் 04 வருடங்கள் தங்கியிருந்து கண்ணார காதார "தமில்"
கேட்டவன் நான். தமிழுக்கு எவ்வளவு மதிப்பு என்பதனையும் உணர்ந்தவன்.


நாம் திருமாவை நேசிப்பது இந்த காரணிகளால் தான். தமிழ்நாட்டு "அரசியல்" பற்றி நாம் கவலைப்படவில்லை.கூட்டணிகள் குத்துவெட்டுகள் பற்றி கவலை இல்லை. கலைஞர் கருணாநி மீது நம்பிக்கை இருந்தது."தமிழினத் தலைவர்"என்று அவரை அழைப்பதை கேட்க இப்போ சிரிப்புதான் வருது.அவருக்கு வாக்களித்தால் தமிழன் புத்தியுள்ளவன்.வாக்களிக்காவிட்டால் "சோற்றால் அடித்த பிண்டம்"அத்துடன்
அவருக்கு வாக்களித்தால் தமிழன் விழித்துவிட்டான். இல்லாவிட்டால்
"தமிழன் இன்னும் உறங்குகிறான்" என்று கொமன்ற் வேறு. எது எப்படியோ திருமாவை அழைத்தவர்கள் தமது பணத்தில்தான் வரவழைத்திருப்பார்கள் இதில் சிலருக்கு சந்தேகம் அதுதான் சொன்னனான்.

.வைகோ,.நெடுமாறன்,.திருமா,சுபவீரபாண்டியன் போன்றோரை பல தடவைகள் பல நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கின்றனர் தமது காசில்.
ரொரண்டோவில் 2.5இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இதில் 98 வீதம் ஈழத்தினை சேர்ந்தவர்கள். மிகுதி 02 சத வீதத்தினர் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள். இதனை ஏன் இங்கு சொன்னேன் என்றால் சிலர் அடிக்கடி இந்தியா,இலங்கைக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்குமிடம் ரொரண்டோ என பொத்தாம் பொதுவாகஎழுதுகின்றனர்.நான் நினைக்கிறேன் அவர்களுக்கு எழுத்தில் கூட ஈழத்தமிழர்களை பற்றி சொல்ல மனம் இல்லை போலும்.ஈழத்தமிழர்களின் பங்கை வளர்ச்சியினை ஏன் மறைக்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் என்றால் மலேசியா,சிங்கப்பூர் என்று சொல்லலாம் என நினைக்கிறேன்.இலங்கைக்கு வெளியே என்றால் கனடா என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டால் சரி.

மற்றும் படி ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு சகோதரர்கள் இடையே வேறுபாடு காட்டவோ வேறு எந்த நோக்கிலோ இப்பதிவு எழுதப்படவில்லை என்பதனை கண்டிப்பாக மனதில் இருத்தவும்.

Monday, June 27, 2005

தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை!.

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார்.
ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான்.

அவர்களின் உரையாடலைக் கேளுங்கள்.
எனக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா?
தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார்.
ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள்.

கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே!

தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை சென்றுவிட்டது!

Image hosted by Photobucket.com


நன்றிகள்- தினக்குரல் (செய்தி), தமிழ்நெட் (படம்)