Saturday, August 13, 2005

கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?

திர்காமர்: இலங்கையிலே இருக்கும் அமைச்சர்களில் தமிழும் தெரியாத சிங்களமும் தெரியாத ஒருவர் என்றால் அவர் கதிர்காமராகத்தான் இருப்பார்.
அவரின் ஒரு சிறு நீரகம் ஒரு பெளத்த பிக்குவினால் தானமாக வழங்கப்பட்டது தமிழர்களுக்கு எதிராக அவர் செய்த சேவைகளுக்காக.யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக்(தினமலர் வழமை போலவே தவறான தகவல் தருகிறது) கொண்ட கதிர்காமரின்
தந்தை ஒரு இராணுவ அதிகாரி.பண்டாரநாயக்கா குடும்பத்துக்கு மிகவும்
வேண்ணியவர்.

கொழும்பே அவரின் பிறப்பிடம்.சந்திரிகாவினால் திடீரென அரசியலுக்குள்
கொண்டுவரப்பட்ட கதிர்காமர்,சந்திரிகா எதற்காக அவரை வெளிவிவகார
அமைச்சராக்கினாரோ அந்த நோக்கத்தினை சிறப்பாக நிறைவேற்றினார்.
இலங்கையின் வரலாற்றினை பார்த்தால் வெளிவிவகார அமைச்சர்கள் பலர்
சிறுபான்மையினராகவே காணப்பட்டனர்.இதில் ஏ.சி.எஸ்.ஹமீட் 17 ஆண்டுகள்
வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார். இதன் நோக்கம் கூட மத்திய
கிழக்கு நாடுகளில் இருந்து பல சலுகைகளை பெறும் நோக்கில் ஜே.ஆர் அவரை மந்திரியாக்கினார். அதன் பின்பு கதிர்காமர்.பெயரளவில் தமிழரான
கதிர்காமரை வெளிநாட்டுமந்திரியாக்கினால் பிறநாடுகள் ஒரு
"தமிழ்" வெளிவிவகார மந்திரி புலிகள் பற்றி சொல்வதை காது கொடுத்து கேட்கும் என்பதாகும். இதற்கு கனதியும் அதிகம் என்றும் சந்திரிகா நம்பினார்.இதில் சில வெற்றிகளும் பெற்றார்

நாம் கோடரிக்கு பிடியினை(காம்பு) ஒரு மரத்தில் இருந்து போட்டுவிட்டு அந்த மரத்தையே வெட்டுவதில்லையா? அதுதான் இங்கு நடந்தது.

புதினம் இணையத்தளம் இது பற்றி ஒரு கண்ணோட்டம் தருகிறது.
புதினம் இணையத்தளம் தரும் "கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன?" இங்கே வாருங்கள்.