Thursday, August 18, 2005

மதம் பிடித்தலையும் மனிதர்களே!

ந்துமதத்தினை போற்றியொரு பதிவு.
இந்து மதத்தினை தூற்றியொரு பதிவு.
இஸ்லாத்தினை தூற்றியொரு பதிவு.
இஸ்லாத்தினை போற்றியொரு பதிவு.
ஏசுவை போற்றியொரு பதிவு.
ஏசுவை தூற்றியொரு பதிவு.

மதம் யானைக்கு மட்டும் தான் வரும்
என்று இருந்தேன்.
மனிதனுக்கு வழிகாட்டுவது தான் மதம்
என்று எண்ணியிருந்தேன்.ஆனால் இங்கு
மதம் மனிதனை மதம்கொள்ளச்செய்கிறதே.
இப்போது தான் தெரிகிறது ஏன் மதத்திற்கு மதம்
என்று பெயர்வைத்தார்கள் என்று.

இது பிடித்தால்
மனிதர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்
என்பதனாலாகுமோ?
எது நடக்கிறதோ அது நன்றாகவேநடக்கிறது
என்றாய் கீதையில் மதம் பிடித்த மனிதர்கள்
தலைகால் புரியாமல் பேசுகின்றனர்,எழுதுகின்றனர்.
மற்றைய மதமும் தன் மதம் போல்தான்.
காலத்துக்கு ஒவ்வாத விடயங்கள் ராமின்
மதத்திலும் உண்டு,
ரகீமிடத்திலும் உண்டு,ராபர்ட்டிடமும் உண்டு.தன்
முதுகுபார்க்க மறுப்பவர்கள்,தவறுபவர்கள் மற்றவர்
முதுகை அழுக்கு சுட்டும்
விந்தையை என்ன சொல்வது ?

ஆயிரத்தெட்டு அழுக்குகள் உம் முதுகு
மேலிருக்க மற்றவர் முதுகழுக்கு சுட்டும் மதம்
பிடித்த மனிதர்களே!
உங்கள் முதுகழுக்கு களைந்த
பின்னர் மற்றவர் முதுகழுக்கு சுட்டலாம் நெஞ்சு நிமிர்த்தி!.
மதத்தின் மேல் காதல் கொள்வீர்!.வேண்டாம் வெறி!.
அதுவரையில் இறைவனே இப்பாவிகளை
மன்னித்தருளும்!.