Friday, September 02, 2005

விஜயகாந்தின் அரசியல் இணையத்தளம்!

டிகர் அரசியலாளர் விஜயகாந் அவர்களுக்காக புதிய ஒரு இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.இதில அவர் தொடர்பான விடயங்கள்,அவரின்
பேட்டிகள்,அவரின் புகைப்படங்கள்,அவரின் பேச்சுக்கள்,அவர் ரசிகர்களுக்கு எழுதும் கடிதங்கள் போன்ற பல விடயங்கள்அவற்றில் தொகுக்கப்பட்டிருக்கிறது.அவரின் அரசியல் பயணத்துக்கு முன்னோடியாக
அவரைப் பற்றிய சகல விடயங்களையும் தாங்கி இந்த இணையத்தளம்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்துருவினை தரவிறக்கம் செய்வதன்
மூலம் இத்தளத்தினை தமிழில் பார்க்கலாம்.

தளம் இதுதான்:--http://www.namadhuvijayakanth.com

உண்மை உண்மையைத் தவிர வேறொன்றில்லை

ன்று ஒரு பதிவு இட்டிருந்தேன் தமிழ் பேசும் முஸ்லீம்கள்...என்ற தலைப்பிலே எழுதியிருந்த ஒரு பதிவு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.அதில் பெயரிலி மற்றும் டீ.சே அவர்கள் "உண்மை"பற்றி சில உண்மைக்கருத்துக்களை உண்மையாகவே கூறியிருந்தனர்.பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகம் ,விவேகம் ஆச்சரியத்தினை அளிக்கிறது.
நீண்டநாட்களின் பின்னர் பின்னூட்டகுளத்தில் தொபுக்கடீர் எண்டு மூழ்கி கரை ஏறியது மிகவும் சந்தோஷத்தினை தந்தது.

இது டீ.சே யின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி:-'உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

இதற்குபெயரிலியின் பின்னூட்டம்:-
'///உண்மைகளை மட்டுமே பேசுதலே' மிகச்சரியானது என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.///ப்ரோ ரப்பர், 'உண்மை என்றும் ஒன்றானதல்ல";அதனால், "நிகழ்வுகளைப் பேசுவோம்; அதுவும் கிடைத்த தரவுகளாற் பேசுவோம்; எமது பார்வைகளால் அல்ல" ;-))

இதற்கு டீ.சே யின் பதில் பின்னூட்டம்:-
ப்ரோ தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. //ஆதாரத்துடன் பேசப்படும் உண்மையான விடயங்களை // என்று முதல் பின்னூட்டத்தில் கூறப்பட்ட உண்மைகளைத்தான் நானும் குறிப்பிட விரும்பினேன் :-). அவரவர்க்குரிய 'உண்மைகளை' அல்ல. பிறகு பின்நவீனத்துவக்காரர்களும் அடிக்க வந்துவிடுவார்கள். உண்மை என்பது எப்படி ஒன்றாக இருக்கும். பல உண்மைகள்தானே உண்மை என்ற உண்மை உனக்குத்தெரியாத உண்மையற்றவனாய் இருக்கின்றாயே என்று (ஆகா ஒருவருக்கும் விளங்காத ஒரு சொற்றொடரை நானும் எழுதிவிட்டேன் :-))

உண்மையாகவே எனக்கு இவர்கள் உண்மையைப்பற்றி எழுதியிருக்கும் உண்மைக்கருத்துக்கள் புரியவில்லை.பெயரிலி சொன்ன உண்மையைப் பற்றிய உண்மைக் கருத்துக்கள் எனக்கு கொஞ்சம் விளங்குகிறது.ஏன் இப்படி உண்மையினைப் பற்றி உண்மையில் இவர்கள் எழுதிய உண்மைக்கருத்தினை புரிந்துகொள்ள உண்மையாகவே சிரமமாக இருக்கிறது என்று யோசித்தபோது இந்த கதை ஞாபகம் வந்தது.

எங்கோ எப்போதோ படித்தது.நீதிபதிகள் இருக்கிறார்களே இவர்களுக்கு உண்மையினை அறிந்து கொள்ளவேண்டிய தேவை, கட்டாயம் உண்டு.அவர்கள் எப்படி உண்மையினை அறிந்து கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்இந்த சம்பவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வக்கீல் முதன்முறையாக நீதிமன்றம் வருகின்றார் முதல் அனுபவம் வேறு.எனவே உணர்ச்சி வசப்படுகிறார்.கூச்சப்படுகிறார்.தடுமாறுகிறார்.

"தூரதிர்ஸ்டம் பிடித்த என் கட்சிக்காரர் விதிவசத்தால் அகப்பட்டுக் கொண்ட என் கட்சிக்காரர்...!இதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாறுகிறார்.இப்போது நீதிபதி சொல்கிறார்.

"உங்களிடம் வந்துவிட்ட உங்கள் கட்சிக்காரரின் நிலை எங்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது...மேலே தொடர்ந்து வழக்கு விபரங்களை சொல்லுங்கள்!"

சத்தம் தமிழனுக்கு ரொம்பப் பிடித்தது!

டந்த வார இறுதியில் இங்கு நடந்த இரண்டு நிகழ்வுகளுக்கு போகவேண்டி ஏற்பட்டது.இரண்டுமே தமிழர்களின் விழாக்கள் முற்றுமுழுதாக தமிழர்களே கலந்து கொண்டனர்.முதல் விழாகாலை 10.00 மணிக்கு என்று சொல்லியிருந்தனர்.சரி என்று நானும் துணைவியாருமாக புறப்பட்டு போனால் விரைவு நெடுஞ்சாலையில்அந்த விழாவுக்கு செல்லவேண்டிய வெளியேற்றத்தினை(exit) தவறவிட்டுவிட்டேன்.

சரி என்று போட்டு வேறு வெளியேற்றம்? வாயிலாக வெளியே வந்து விழா மண்டபத்தினை சென்றடைந்தபோது நேரமோ 10.30 மணியாச்சு விழா தொடங்குவதற்கான அறிகுறியே காணவில்லை.ஒவ்வொருவராக வரத்தொடங்கி விழா ஆரம்பித்தது காலை 11.30 மணிக்கு.விழா ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே தொல்லை தரத் தொடங்கிவிட்டதுஒலிபெருக்கி.200பேர் கூடியிருக்கும் ஒரு சிறிய மண்டபத்தில் இவ்வளவு சவுண்டில் ஒலிபெருக்கியை வைத்தால் எப்படி இருக்கும்.இரண்டுதடவை ஒலிபெருக்கி இயக்கிக் கொண்டிருந்தவரிடம் சொன்னேன் ஒலியளவு அதிகமாக இருக்குதுகொஞ்சம் குறையுங்கோ எண்டு.அவரும் சிறிது குறைப்பார் பின்னர்சில நிமிடங்களின் பின்னர் ஒலியளவு பழையபடி வந்துவிடும்.இப்படி அன்றையவிழா தொல்லையாக கழிந்தது.

இங்கு பல தமிழர்களின் விழாக்களுக்கு போயிருக்கிறேன்.அங்கு தொல்லைதருவது இந்த ஒலிபெருக்கியாகவே இருக்கும்.தமிழர்களின் விழாக்கள் என்றால்அலறிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கி.மற்றைய நாட்டவர்களின் நிகழ்வுகளில்பார்த்தால் நிகழ்வின் தேவையொட்டியே இருக்கும் ஒலிபெருக்கின் ஒலி அளவு.ஏன் இப்படி வதைக்கிறார்களோ தெரியவில்லை.ஒலியளவு தேவையான நிகழ்வுகள் என்றால் பரவாயில்லை.எல்லா நிகழ்வுகளுக்கும்அல்லவா அப்படி செய்கின்றனர்.

தமிழர்களுடன் பிறப்பில் தொடங்கும்"சத்தம்" அவர்களின் வாழ்வெங்கினும் தொடர்கிறது.பிறந்தால் "சத்தம்" பெரியவள் ஆனா"சத்தம்" திருமணத்தில் "சத்தம்"இறந்தால"சத்தம்" நல்ல காலம் முதலிரவை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள்.இனி கோயிலில் போனால் "சத்தம்".அது இறைவனை கூட சத்தமிட்டுதுயில் எழுப்பி வணங்க சொல்கிறது. இது சமயம்.இப்படி தமிழனுக்கு சப்தம் இடுவது,சத்தம் கேட்பதும் பிடித்துப் போயிறு போலும்.

நல்ல காலம் பனையின் உச்சியில் லவுட்ஸீக்கர் கட்டி பாட்டு போட்ட பரம்பரையில் வந்த எம் தமிழர் இங்கும் அதையே செய்திருப்பர்.நல்ல காலம் இங்கு பனைகள் இல்லாமல் போனது.அத்துடன் அங்கு மாதிரி இல்லாமல் இங்குள்ள சட்டங்கள்.அந்த மட்டில் எமது காதுகள் தப்பித்ன போங்கள்.

முகமூடிகள் கிழிகின்றன...மூக்குகள் அறுக்கப்படுகின்றன...

புலிகள் தமிழ்நாட்டிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி தமது இயக்கத்துக்கு நிதி திரட்டுகிறார்கள்.என இன்று நேற்றல்ல பல காலமாகவே இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில புலிகள் மேல் புழுதிவாரி தூற்றிவந்தன, வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள் யாராவது போதை பொருள் கடத்தி பிடிபட்டாலும் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு மட்டும் புலியாக தெரிவார்கள்.செய்தி வெளியிடுவார்கள்.

இங்கு அவர்களின் நோக்கம் புலிகளை இழிவுபடுத்துவது மட்டுமே.இவர்களுக்கு எப்படியாவது என்ன வழியிலாவது புலிகளை தூற்றவேண்டும்.சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஒரு சுங்க அதிகாரியின் விடயத்தில் கூட அவரின் வீட்டில் புலிகள் பற்றிய புத்தகங்கள் கிடந்தன என்பதை சம்பந்தபடுத்தி புலிகளுக்கு சார்பானவர்கள் என்றால் அவர்கள் சிறுமிகளை வன் புணர்பவர்கள் என்றோ அல்லது புலிகள் என்றால் இப்படியான சம்பவங்களை செய்பவர்கள் என்றோ ஒரு தோற்றப்பாட்டை பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இவ் ஊடகங்கள் முயல்கின்றன.மொத்தத்தில் புலியெதிர்ப்பு என்னும் தமது அரிப்பை தாமே இப்படி செய்தி வெளியிடுவதன் மூலம் தடவிவிட்டுக் கொள்கின்றன.

இதற்கு எவ்வையிலும் குறைந்ததல்ல இந்தப்பதிவு 40தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் யாழ்ப்பாண புலி என்னும் இத்தலையங்கத்தின் மூலம் இதனை எழுதியவரின் முகமூடி கிழிந்துவிட்டது.இங்கு இவர் பேசியது பாலியல் துஸ்பிரயோகம் பற்றியல்ல.இவரின் நோக்கமும் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றியல்ல. புலியெதிர்ப்பே இங்கு முன்னிலை வகிக்கிறது. மனநலம் பற்றி கதைக்கும் இவரின் மனநலம் பற்றி மற்றவர்கள் சந்தேகப்படும் படி இருக்கிறது.கண்டிப்பாக இச் செயலை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

இவரின் பதிவுகளில் பொதுநலம் என்பர்.மக்கள் என்பர்,ஜனநாயகம் என்பர்,பொருள்முதல் வாதம் என்பர்.மர்க்சிசம் என்பர்,சோசலிசம்என்பர்,இலக்கியம் என்பர்,இலக்கணம் என்பர்.போரெதிர்ப்பு என்பர் அழகாக வார்த்தையாடுவார்..இவை யாவும் முகமூடிகள். நிஜமுகம் புலியெதிர்பு.நிஜமுகத்தினை மறைப்பதற்காக இந்தமுகமூடிகள்.இந்தபதிவுடன் கிழிந்தன முகமூடிகள்,நிற்பது அவரின் நிஜமுகம் அல்லது அவரின் மனம்.வேண்டாம அய்யா முகமூடிகள்.நீங்கள் எதை எழுத விரும்புகிறீர்களோ அதை பாசாங்கு இல்லாமல் எழுதுங்கள் நீங்கள் எதை எழுதினாலும் பார்க்க படிக்க பலர் இருக்கின்றனர்.ஏன் நான்கூட படிப்பேன்.ஏனெனில் பதிவுகள் படைப்பது யாராக இருந்தாலும் தீர்மானிப்பது நான்தானே.
யாரும் எதையும் எழுதலாம்.அது அவரவர் சுதந்திரம் நான் வேண்டுவது
எல்லாம் பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்.

இதைப் போலதான் இன்னுமொருவிடயத்தில் சில இலங்கை இந்திய ஊடகங்களின் மூக்கறுக்கப்பட்டிருக்கிறது.முதலாவது பந்தியை படியங்கள்.இனி விடயத்தினை சொல்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு கடத்தப்படுகிற போதைப் பொருள்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசின் போதைப் பொருள் தடுப்புத்துறையின் மண்டல இயக்குநர்சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையிலிருந்து வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:

தமிழ்நாட்டிலிருந்து சிறிலங்காவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள்களை கடத்தியதற்கான எதுவித சான்றும் இதுவரை இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்கும் ஆவணங்கள் எதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. புலனாய்வுத்துறை தரப்பு தகவலும் கூட இது தொடர்பில் இல்லை என்றார்.அந்த நாளேட்டில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள்:

கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை போதைப் பொருள் கடத்தியதாக தமிழ்நாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் இந்தியர்கள்.

இந்த ஆண்டு காலத்தில் 72 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. இதில் 275 கிராம் மட்டும்தான்
மாலத்தீவிற்கு கடத்தப்பட இருந்தது. மற்ற அனைத்தும் சிறிலங்காவுக்குத்தான் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.போதைப் பொருள் கடத்தலில் சிறிலங்கா கேந்திரமாக விளங்குகிறது.
இதுவரை நிலப்பரப்பில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மையில் படகு மூலம் சிறிலங்காவுக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருளை இந்திய கடற்படை உதவியுடன் முதன் முறையாக இந்தியபோதைப் பொருள் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் சில ஊடகங்களின் மூ........க்கு அறுக்கப்பட்டிருக்கிறதுதானே.

தமிழ் பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பின்னால்.....


தமிழ் பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பின்னால் அணி திரள வேண்டும்: மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள்

வுனியா பிரகனடத்தை நிறைவேற்ற தமிழ்பேசும் முஸ்லிம்களும் தங்கத் தலைவன் பிரபாகரன் பின்னால் அணி திரள வேண்டும் என்று யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் பணிமனை செயலர் மௌலவி எஸ்.எம்.சகீல் வேண்டுகோள் விடுத்தார்.

கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:

ஆண்டாண்டு காலமாக ஆண்டுவந்த பூமியையும் வீதிகளையெல்லாம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் சுற்றிவளைத்தனர்.
சிங்கள அரசுகள் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டன. எங்களுடைய உரிமைகளை நாங்கள் பெற்று வாழ்வதற்குக் கூட தடை விதித்தனர்.
அந்த நிலைமையில் தான் இந்தப் போராட்டம் உருவாக்கப்பெற்றது.
இந்தப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் என்றும் சளைத்தவர்கள் அல்லர். தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்தவர்களாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வரலாறுகளையும் நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களுடைய தாயக கடமை என்று புறப்பட்ட இந்தப் போராட்ட பயணத்திலே நாம் தமிழ்பேசும் மக்கள் என்ற வகையில் கைகோர்த்தவர்களாக என்றும் செயற்படவேண்டும்.
தலைவர் பிரபாகரன் பின்னணியிலே தங்களுடைய வரலாற்றை தமிழர்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள். இது பாராட்டப்படக்கூடிய விடயம்.
நாம் நியாயத்தைப் பேசுகின்றோம். உண்மையை இந்த உலகிற்கு, இந்த மண்ணுக்கு, சர்வதேசத்திற்கு நாங்கள் புலப்படுத்துகின்றோம்.

ஆனால் நாங்கள் ஓர் குடும்ப உறவைக் கொண்டவர்கள். தமிழ்மக்கள், முஸ்லிம் சமூகங்களும் ஒரு குடும்ப உறவைக் கொண்டவர்கள். எங்களுக்குள் பல பிரச்சனைகள் எழலாம். அதனை நாங்களே தீர்ப்போம்.
எங்களுடைய குடும்பமே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். இதற்குள் அன்னியவர்களின் ஊருடுவல் எங்களுக்குத் தேவையில்லை.

வவுனியா எழுச்சி நிகழ்வில் எடுத்த முடிவுகளை நிறைவேற்ற தங்கத்தலைவன் பின்னால் அணிசேர தமிழர்கள் மற்றுமல்ல தமிழ்பேசும் மக்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.

..புதினம்..