Thursday, September 29, 2005

இதுவும் ஒரு செருப்பு மேட்டர் தான்!

இந்த குஷ்பு மேட்டருக்கு பின்பு பிரபலமாகிவிட்டது செருப்பு,துடைப்ப மேட்டர்.செருப்பை வைத்து தொழில் புரிவோரை அவமானப்படுத்தியது என்று பதிவுகள் வேறு. இதுவும் ஒருசெருப்பை பற்றிய பதிவுதான்.இணையத்தில் கண்ட ஒரு படத்தினைதான் இங்கு நீங்கள் பார்க்கின்றீர்கள்.பல வரிகளில் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அதேபோல இந்த படத்திலுள்ள செருப்பையும் அணிந்திருக்கும் கால்களையும்பார்த்தவுடன் ஒரு இனம்தெரியாத சோகம் எழுகிறது மனதில்.அத்துடன் உடனடியாக இந்த செருப்புக்கும்,கால்களுக்கும்சொந்தக்காரனின் முகத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.வறுமையும் இயலாமையும் எப்படி மனிதனை ஆட்டுவிக்கிறது என்பதனை முகத்தில் அறையும் விதமாய்சொல்கிறார் இப் படப்பிடிப்பாளர்.ஒரு நல்லபுகைப்படபிடிப்பாளனின் வெற்றி இப்படியான விடயங்களில் தான்தங்கி இருக்கிறது. ஹவானாவில் இப்படம்
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.

செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.

Wednesday, September 28, 2005

செருப்பு வெளக்கமார் கழுதை கூட்டாளி.

செருப்பு வெளக்கமார் கழுதை கூட்டாளி

உள்குத்து வெளிக்குத்து பேசி சல்லியடிக்கும் கூட்டமே இதற்குப் பதில் சொல்லாதே.


1. யாரையோ எதிர்க்க சாதாரண மக்களின் ஜீவனத் தொழிலான கழுதையை "கேவலக்" குறியீடாக மாற்றிய உங்களை என்ன செய்வது?


2. ஏன் உங்கள் பார்வையில் கழுதை கேவலக் குறியீடாகத் தெரிகிறது?


3. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது கழுதையை போட்டோ எடுக்க?


4. ஏன் குதிரையை அழைத்துவந்து உங்கள் எதிர்ப்பை சினிமாவுக்கு காட்ட வேண்டியது தானே?


5. கழுதையை வைத்து கஷ்ட ஜீவனம் செய்யும் எங்களைப் பற்றி ஏதாவது சிந்தித்தது உண்டா?


6. ஏன் சினிமா/நடிகை/நடிகர்கள் சுற்றியே கழுதையை வைத்துக் கொள்கிறீர்கள்?


7. கேவலம் ..கேவலம் ..கழுதைக்காக ஒரு போஸ்ரரைக்கூட கிள்ளிப்போடாத நீங்கள்தான் கூட்டாளி வர்க்கமா?

8. பெற்ற மகனையே கழுதை என்று திட்டி "கழுதையை" அவமானப்படுத்தும் நீங்கள்"குதிரை" என்று திட்டமுடியுமா?


இப்படிக்கு,


கீழைத்தெரு சலவைத்தொழிலாளர்கள் சங்கம்.

( குதிரை வைத்துள்ள " சோம.இராமசாமி" இதில் சேத்தி இல்லை)


கீழைத்தெரு பிராணிகள் முன்னேற்ற சங்கம்

(சிறுத்தைபுலி வைத்திருக்கும் கோந்து.கோயிந்தசாமி இதில் கண்டிப்பாக சேத்தி இல்லை)


"என்னமோ போங்க" எழுதியிருந்த பதிவைப் பார்த்தவுடன் எழுந்த(காப்பி) கற்பனை இது. ஹீ.....ஹீ...... யாரும் இதை சீரியசாக எடுக்கவேண்டாம்.

நகைச்சுவைக்காவே இப்பதிவு.இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.அனால் ஒண்டு சிலவேளைகளில் சிந்தித்தால் மனிதனை விட கழுதையும், குதிரையும் எல்லாவிடயத்திலும் மேல் என்று எனக்கு படுகிறது.

நடப்பவைகளை நினைத்தால் எங்கு போய்முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.மொத்தத்தில் ஒண்ணுமே புரியலை உலகத்திலே, என்னமோநடக்குது மர்மமாய் இருக்குது.


Tuesday, September 27, 2005

எவன் விற்றாலும் தமிழ் வியாபாரம் ஆகிறது.

"மிழை விற்று ஆதாயம் தேடியவர்கள் தமிழ் அறிஞர்களை விட, அரசியல் வாதிகளே அதிகம். இதில் பரிதாபம் என்னவென்றால் எவன் விற்றாலும் தமிழ் வியாபாரமாகி விடுகிறது. அது மட்டுமா? எவன் தமிழ் விற்றாலும் தமிழுக்கு தலைவனாகி விடுகிறான். தமிழ்நாட்டில் தமிழர்களைவிட தமிழ் விற்பவர்களே அநேகம்.''

சொன்னவர்:-கவிஞர் சினேகன்.
மாலைச்சுடர் பத்திரிகைப் பேட்டியில்