Wednesday, December 07, 2005

காலம் வரும்......

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி.

கடந்த காலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புலிகள் மற்றும் பொது மக்கள் கொல்லப்பட்ட போது புலிகள் சொன்னார்கள் இது அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவின் வேலை என்று.
அரசு சொன்னது இது கருணா தரப்பு வேலை தமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று.கண்காணிப்பு குழு சொன்னது இதில் மூன்றாம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று.அப்போது ஏறியது புலிகளின் பி.பி

அப்படியே அந்த நிகழ்வுகள் யாழப்பாணம் நோக்கி நகர்ந்து தமிழ் இன உணர்வாளர்கள் கொல்லப்பட பதிலடியாக இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் இடம்பெற அரசு சொல்கிறது புலிகள் தான் இச் சம்பவங்களுக்கு காரணம் என்று.புலிகள்சொல்கிறார்கள் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று. போர் நிறுத்த கண்காணிப்புகுழு சொல்கிறது இந்த தாக்குதல்கள் புலிகளால் செய்யப்பட்டவை என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று.
இப்போது ஏறிக்கொண்டிருப்பது அரசின் பி.பி

சும்மாவா சொன்னார்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று.