Sunday, December 24, 2006

நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.......

ன் மனதினை கவர்ந்த பாடல்களில் ஒன்று.பாண்டவர் பூமி படத்தில் யுகேந்திரன் மற்றும் சித்திரா சிவராமன் பாடிய ஒரு அழகிய பாடல்.

கேட்டு ரசியுங்களேன் நீங்களும்.







Wednesday, December 13, 2006

தமிழ் குடில் -- இணைய வானொலி.

நீண்ட நாட்களாக உறை நிலையில் இருந்த "தமிழ் குடில்" இணைய வானொலி நவம்பர் 27 முதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது.

"தமிழால் உலகளக்க" தரணியெங்கும் முழங்கும் தமிழ் குடில் இணைய வானொலி தற்போது பதிவு செய்யப்பட்ட பல நிகழ்சிகளை வழங்கிவருகிறது.சித்திரைப் புத்தாண்டிலிருந்து பல்வேறுபட்ட பல நிகழ்சிகளை படைக்க இருக்கின்றது.

இன்னலுறும் மக்களினதும் தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட இவ்வானொலியின் உருவாக்கத்தில் திரு அ.மனோகரன்,அமல்ராஜ்,இல .சஞ்சீவ்கான்,ரி.ஞானரட்ணசிங்கம் மற்றும் ஏ.சி.தாசீசியஸ் போன்றோர் பங்களித்திருக்கின்றனர்.

நீங்களும் விரும்பினால் இவ் வானொலியுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க முடியும்.

தமிழ்குடில் இணைய வானொலி பற்றிய விளக்கம்

தமிழ் குடில் வானொலியின் அண்மைய அலசல் ஒன்று.

குட்டக் குட்டக் கணக்க குனிந்து விட்டோமோ?

--------------------------------------------------------------------------------------------

Tuesday, December 12, 2006

வல்லவன்.-மலேசியாவிலிருந்து தமிழ் குரல்

மலேசிய தமிழ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "வல்லவன்" ஒளித்தட்டில் இருந்து
இந்தப் பாடல்.எப்படி பாடல்? ரசித்தீர்களா?

Saturday, December 09, 2006

நான் ஒரு தடவை சொன்னா................

எனது மனதில் எழும் கருத்துக்களைப் மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்
வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.
அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்
தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)


இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்
தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று
நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)


மீண்டும் சந்திப்போம்.

சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.

சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்
இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க
நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம் பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.
சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்
பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும். ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ் நகரில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படையினரின் தடைகள்! -

(யாழின் மைந்தன்)/தினக்குரல்

யாழ்ப்பாண சமுதாயம் மூன்று சகாப்தமாக"போரின் வலி"யை தாங்கிய சமுதாயமாகவே இன்றும் உயர்ந்து நிற்கின்றது. காலம் முழுவதும் பசி,பட்டினி, சாவு போன்ற கொடுமைகளுக்கு முகம் கொடுத்து, இனத்தின் விடுதலைக்காக தன்னைக்காவு கொடுத்து வருகின்றது. யாழ்ப்பாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் எல்லாம், விடுதலையுணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கு அரசின் அடக்குமுறையால் நாளை என்ன நடக்கும் என்ற நினைவில் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சுருங்கச் சொன்னால் தினம் தினம் வரும் செய்திகள் அவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அரசாங்கம், யாழ்ப்பாண மக்களுக்கான பிரதான வழங்கல் பாதையை மூடிவிட்டு அம் மக்களை பட்டினிச்சாவில் தள்ளியுள்ளது. அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்து அவர்களை சொந்த மண்ணிலே சிறை வைத்துள்ளது. உறவைப் பிரிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக ஏங்கி நீண்ட நாட்களாக கண்ணீர் வடிக்கின்றனர். காலை எழுந்தவுடனே பெட்டி படுக்கையுடன் இன்று கப்பல் பயணம் கிட்டுமா, விமானப் பயணத்துக்கு யாரை நாட வேண்டுமென பசி பட்டினியுடன் திரிவது சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. எது வேண்டுமானாலும் தருகின்றோம் எங்களை அனுப்பி விடுங்கள் என கெஞ்சிக் கேட்பது யாருக்கு கேட்கப் போகிறது.

அரசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை, உணவு மருந்து பரிசோதகர்கள் நிச்சயமாக வழங்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் பொருட்களை அரசாங்கத்துக்கு விற்பனை செய்பவர்கள் கொழும்பில் `குளுகுளு' அறைகளில் வாழும் யாழ்ப்பாண வியாபாரிகள் தான் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் காலம் காலமாக நாட்டரிசியை தமது மதிய உணவுக்கு பயன்படுத்தி வந்த கலாசாரம் அவர்களுடையது. தென்னிலங்கையில் ஒரு பிடி நாட்டரிசி கூட கிடைக்கவில்லையென்ற நினைப்பில், தரம் குறைந்த கோறா, சம்பா அரிசியையல்லவா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த அரிசிச் சோற்றை உண்டு பழகாத மக்களுக்கு தினம் தினம் வயிற்றோட்டத்தால் வாடும் நிலையே காணப்படுகின்றது.இதுவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை, தேயிலைத் தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையாக கிலோ முப்பது ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையாகும்.

பாதுகாப்பு பிரிவினருக்கு, பாவிப்பதற்கு மணப்புச் சவர்க்காரம் யாழ்ப்பாண மக்களுக்கு சொறி சிரங்குள்ளவர்கள் என காபோலிக் அமிலம் சேர்த்த லைபோய்தான் என்கிறார்கள். சாக்குக் கணக்கில் "சோயாமீற்" என தரம் குறைந்த உணவுப் பொருளே பங்கீட்டுக்கு என்கிறார்கள்.

யாழ். மாவட்டத்தில், ஒரு போதும் சூரியா தீப்பெட்டியைத் தவிர வேறு எந்த தீப்பெட்டியையும் வாங்க மாட்டார்கள். காரணம் மற்றைய தீப்பெட்டிகள் பற்றாது என்பது நம்பிக்கை, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட தீப்பெட்டிகளோ இருபது குச்சுகள் கூட பற்றாது. ஆனால் அரசாங்கம் நானாவித பொருட்கள் தாராளமாக அனுப்புவதாக பிரசாரம் செய்கின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் லீற்றர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்ததால், அது கிடைக்குமா என நாய் போல் அலைந்து திரிவது எல்லோர் மனங்களையும் வருத்துவது யாருக்குத் தெரியும்.

குடாநாட்டில் அதிக மக்கள் நடமாடும் ஒரே நகரம் யாழ்ப்பாணம் தான். அதற்கும் முழுமையாக பாதுகாப்புப் பிரிவினர் வேட்டு வைத்து விட்டனர். முதலில் பிரதான வீதிகளில் இடைக்கிடை தடையைப் போட்டு மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர். எந்தவொரு வர்த்தக நிறுவனம் முன்னாலும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை நிறுத்தக் கூடாதென தடை விதித்தனர். உத்தரவை மீறியவர்களை தாக்கினர். இன்றைக்கு நகரமே சோபை இழக்கும் வகையில், திடீர் திடீரென யாழ்ப்பாண பஸ் நிலையத்தை புனரமைப்பதாகக் கூறி பேருந்து தரிப்பிடத்தை கழற்றி விட்டு பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் பண்ணைக்கு மாற்றப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது. இது நகருக்குள் நடமாடும் சகல மக்களுக்கும் ஆபத்து என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறார்கள். நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ மையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம். இது கோடிக்கணக்கான முதலீட்டை வைத்திருக்கும் நகர வர்த்தகர்களை தமது பொருட்களை நகரின் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு வழி செய்துள்ளது. அழுது புலம்புவதைத் தவிர வெள்ளம் வருமுன்னர் அணைகட்டுவது அவசியமானதாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப்பாதையைத் திறக்க வேண்டுமென இணைத் தலைமை நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் கூடிய நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இந் நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாண சமுதாயம் முழுமுனைப்போடு செயல்பட்டது மட்டுமல்ல, அவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் பிரிவினர், இவ் வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட இரு மதகுருமாரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் விரோத உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். இம் மதகுருமார் உண்மையில் அப்படி நடந்து கொண்டனரா என விசாரணை நடாத்தி வருகின்றது. துன்பப்படும் மக்களுக்காக நீதியை நிலைநாட்ட மதகுருமார் செயல்படுவது தேச விரோத குற்றம் என யாழ்ப்பாண சமுதாயம் அழுதுபுலம்புகின்றது.
இதேவேளையில் யாழ்ப்பாண மாணவர் சமுதாயம் மீதும் கல்வியாளர்கள் மத்தியிலும் புதிதாக குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தவர்களை தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதை இந் நடவடிக்கை காட்டுகின்றது.அதிபர்கள், குடாநாட்டில் இடம்பெறும் அவலங்களுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு தோன்றி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களையும் தங்கள் வழிகாட்டலில் தான் செய்திகளை பிரசுரிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது உலகமே வெறுக்கும், மியன்மார் இராணுவ ஆட்சி முறைக்கு யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயகத்தை நேசிக்கும் யாழ். மக்கள் கருதுகின்றனர். குடாநாட்டில் விரைவில் "பத்திரிகை தணிக்கை" வரும் என்பதில் சந்தேகமில்லை. குடாநாடு பல தடவைகளில் செய்தித் தணிக்கைகளுக்குள் ஜனநாயகத்தின் குரலாக வெளிவந்த வரலாறு இருந்துதான் வந்துள்ளது.

Wednesday, November 15, 2006

அம்பலமாகும் இலங்கையின்" பொட்டுக்கேடு"


சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'!

லங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக். ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங் கள் படைக்குத் திரட்டுகின்றார்கள் என்று "ஆடு நனைகிறது எனக் கவலைப்பட்ட ஓநாய்கள்' போல முதலைக் கண்ணீர் வடித்த தென்னிலங்கை, இப்போது "தேள் கொட்டிய திருட னாக' துடிக்கின்றது. வயது குறைந்த தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலி கள் படைக்குச் சேர்க்கிறார்கள் என்றுதான் இதுவரை குற்றச் சாட்டுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இலங்கை அரசுப் படைகளோ தனது ஒட்டுப்படையான கருணா குழு மூலம் தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாக மடக்கிப் பிடித்து, கடத்திச் சென்று, படைக்குச் சேர்க்கின் றன என்ற உண்மையைச் சர்வதேச அமைப்பு இந்த விட யத்தில் உண்மையைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் தகுதியுடைய ஸ்தாபனம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகத் தென்னிலங்கை அரசின் போக்கு எத்தகையது, அதன் உண் மைச் சொரூபம் என்னவென்பவையெல்லாம், அதன் முகமூடி கிழிய இப்போது வரிசையாக அம்பலமாகத் தொடங்கிவிட் டன.

1990 களில் யாழ். நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி அகதிகள் 170 இற்கும் அதிகமானோரை விமானக் குண்டு வீச்சு மூலம் கூண்டோடு கொன்றொழித்துவிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று உண்மையைத் தென்னிலங்கை புதைகுழி தோண்டிப் புதைத் தமை போன்றதல்ல இப்போதைய நிலைமை.

சீருடையினரின் இரும்பு வேலிகளைத் தாண்டி, மறைப்புகளைக் கடந்து, கொடூர நெருக்குவாரங்களை மீறி, உண்மைகளும், நிகழ்வுகளின் மூலங்களும் அம்பலமாகும் நிலைமைக்குத் தொழில் நுட்பமும், வசதிகளும் வளர்ந்துவிட்டன. அதனால், சத்தியத்துக்கு வேலி போட்டு மூடும் தென்னி லங்கை முயற்சி தோற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களைச் சுற்றி வளைத்து கருணா குழு பிடிப்பதற்கு கிழக்கில் அரச படைகள் எப்படி உதவுகின்றன, எவ்வாறு சிறுவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கின்றன, மடக்கிப் பிடிக்கப்படும் சிறுவர்கள் பல படை முகாம்கள் மற் றும் தடைநிலைகளைத் தாண்டி, பாதுகாப்பான இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு பலவந்தமாக ஒட்டுப்படைகளில் இணைத்து ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத் தப்படுகிறார்கள், இத்தகைய அராஜகம் குறித்துச் செய்யப்படும் முறைப்பாடு களை அரசும், அரசுப் படைகளும், பொலிஸும் எவ்வாறு உதாசீனம் செய்கின்றன என்று எல்லா விடயங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் அலன் றொக்.

இந்த விவகாரங்களை நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துத் தாம் முறையிட்டார் எனவும், இது குறித்து முழு அளவில் விசாரணைகளை நடத்தி உண்மை களைக் கண்டறியவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் ஜனாதிபதி உறுதி யளித்தார் என்றும் கூட அலன் றொக் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உறுதி வழக்கங்களில் சர்வதேச சமூகத் துக்கு ஏதோ நம்பிக்கையிருக்குமோ என்னமோ, ஆனால் தமி ழர் தரப்புக்கு நம்பிக்கையே கிஞ்சித்தும் கிடையாது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனில் தொடங்கி ரவிராஜ் எம்.பி.படுகொலை வரை பல்வேறு அராஜகங்களுக்கு இவற்றில் பலவற்றுக்குக் குற்றச்சாட்டு விரல் அரசுப் படைகளை நோக்கி நீண்ட நிலையில் இத்தகைய நியாயமான விசாரணைகள் பற்றிய அறிவிப்புகள் ஜனாதிபதி மஹிந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டமையையும் அவற்றினால் ஏற்பட்ட பலன் யாதுமில்லை என்பதை யும் "விசாரணை எனும் மாயமான்' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இப்பத்தியில் விவரமாக விளக்கியிருந்தோம்.

இந்த விடயத்தில் விசாரணை அறிவிப்புக்கும் அது அப் படியே பொருந்தும். இன்னொரு விடயம். சிறுவர்களைப் பலவந்தமாக மடக் கிப் பிடித்துக் கடத்திச் சென்று ஆயுதப் படையில் சேர்க்கும் இந்தத் திருகுதாளம் தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. 1988 1989 ஆம் ஆண்டுகளில் "அமைதிப்படை' என்ற பெயரில் இந்தியத் துருப்புகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக் கிரமித்திருந்த சமயத்தில், அந்தப் படைகளுடன் சேர்ந்து வந்த குழுக்களும் கூட இதே மாதிரி அராஜகம் புரிந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.

இவ்வாறான பலவந்த கட்டாய ஆட்சேர்ப்பும், ஆயுதப்
பயிற்சியும் சண்டை என வரும்போது எவ்வாறு பொல பொலத்து எதிர்ப்பக்கமாகத் திரும்பின என்பதை 1989 நவம் பர், டிசம்பர் மற்றும் 1990 ஜனவரி அனுபவங்கள் மூலம் இலங்கை கண்டறிந்துள்ளது.

அந்தப் பட்டறிவிலிருந்து கற்ற பாடத்தை மறந்து, இராணுவத்தின் சதி வலையில் சிக்கி, அதே "மண் குதிரைத் திட்டத்தை' நம்பிப் போர் எனும் ஆற்றில் இறங்க முயலும் தரப்புகள் ஒன்றுக்கு இரண்டு தடவை இந்த உழுத் துப்போன முயற்சி குறித்து சிந்திப்பது நல்லது.

நன்றி:-யாழ் உதயன் ஆசிரிய தலையங்கம் (14-11-2006)





Saturday, November 11, 2006

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.

கதிரவெளிப் பகுதியிலிருந்து புதன்கிழமை புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை

* கண்காணிப்புக் குழு தெரிவிப்பு

இலங்கை அரசாங்கமும் படைத் தரப்பும் கூறுவதுபோல் கடந்த புதன்கிழமை கதிரவெளிப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் படை முகாம்களை நோக்கித் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியர் கூறுகையில்;

கதிரவெளியில் படையினரின் கடுமையான தாக்குதலுக்கிலக்கான பாடசாலைப் பகுதியில் புலிகளின் முகாம்கள் எதுவுமிருக்கவில்லை.
இதனை அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தியதுடன் அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினரும் புலிகளின் முகாம்கள் எதனையும் காணவுமில்லை.
புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான அறிகுறி எதுவுமில்லை.


பாடசாலையில் இருந்த அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தப் பாடசாலையின் மீதே தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தரப்பாயிருந்தாலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.


http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm

படுகொலை செய்யப்பட்ட தமிழ் M.Pயின் இறுதிப் பேட்டி.


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்கள் சிங்களத் தரப்பின் பொய்மைகளுக்கு விளக்கமான சாடல்கள் என ஆணித்தரமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

"மாமனிதர்" ரவிராஜின் இறுதி நேர்காணல்":

ஏ-9 பாதை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இதனிடையே ஒக்ரோபர் 16 ஆம் நாள் வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டும் என்று அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அந்தத் தீர்ப்பில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. எமக்கு அரசியல் பிரச்சனை உள்ளது. வடக்கு -கிழக்கு மக்கள் இணைந்தே வாழ்கின்றனர். வடக்கு கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் அபிலாசையாகும். அந்த மக்களினது அடிப்படை மனித உரிமையும் அதுதான்.
முன்னைய காலத்தில் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் அரசுகள் இருந்தன. எங்கள் மக்களுக்கு இது புதியது அல்ல. வடக்கு - கிழக்கு பிரதேசங்கள் முன்னைய காலத்திலேயே தமிழ் பகுதிகளாக இருக்கின்றன. அதற்காக நாம் இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. வடக்கு கிழக்கு ஒரே அலகாக கருதப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் நிலையில் அதுதான் அடிப்படையானதாக இருக்கும்.

இந்த நாடு பிரிக்கப்படக்கூடாது என்று ஏன் நீங்கள் சொல்லுகிறீர்கள்?

ஏனெனில் இந்த நாடு பிரிக்கப்படாமல் இருக்கும்போது மக்களின் உணர்வுகள் வலுவானதாக இருக்கும் என கருதுகிறீர்கள். அதேபோல் வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கு வலுவானதாக கருதுகின்றனர். தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக அது இருக்கும். இரு மாகாணங்களும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும்.

அதே நேரத்தில் ஒற்றையாட்சி அரசாங்கக் கோட்பாடு என்பது நீண்டகாலமாக ஏற்கப்படாதது. அது பழைய நடைமுறை. அது இன்று செல்லுபடியாகாதது. நாம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தோம். எந்த ஒரு தமிழர் தலைவரும் தனியரசையோ கூட்டரசையோ அப்போது கோரவில்லை. ஆனால் ஏன் தற்போதைய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்?
பொன்னம்பலம் அவர்கள் 50-க்கு 50 விழுக்காடு கோரிக்கையை முன்வைத்தார் எனில் காரணம் உள்ளது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று மொகமெட் அலி ஜின்னா கோரினார். நாமோ 50-க்கு 50 விழுக்காடு மற்றும் கூட்டரசு கோரிக்கையை முன்வைத்து தற்போது தனியரசுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றனர். இருந்தபோதும் அரசியல்வாதிகளாகிய நாங்கள் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்று இப்போதும் நம்புகிறோம். யார் இந்த நிலைக்கு பொறுப்பு? சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டோம்.

சோல்பரி ஆணையத்தின் சரத்துகள் முதலில் நீக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கானது.

சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

அப்படியானால் எம்மை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?

இந்தியா சுதந்திரமடைந்தது 1947. இப்போது 22 மாநிலங்கள் உள்ளன. இருந்தபோதும் ஐக்கிய நாடாகத்தானே இருக்கிறது. ஏனெனில் அங்கே நிர்வாக அமைப்பு அப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
கூட்டரசு முறை என்பது நாட்டை பிளவுபடுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். நாம் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் கொள்ளலாம்.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியரசு அதிகாரங்கள் கோரப்பட்டன. இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களை கேட்டால் நாங்கள் இந்தியர்கள் என்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பட்டினிச்சாவில் உள்ளனர்.

நாம் ஒரே குடும்பத்தவர். ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட அல்லது இளையவர்கள் மீது அனுதாபம் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். ஆனால் ஏ-9 மூடப்பட்டதால் என்ன செய்துள்ளனர்?

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தினால் திறக்க முடியவில்லை என்று கூறப்பட்டால் அந்த மக்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்கிற தோற்றம்தானே வெளிப்படும். நாங்கள் கப்பலில் உணவுப் பொருட்களை தருகிறோம் எனில் எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது?

ஏ-9 பாதை மூடப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் அறவிடுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. என்னே ஒரு பொய்? ஏ-9 பாதை திறப்பு என்பது 2002 ஆம் ஆண்டு நடந்தது. அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தனர்? ஏ-9 திறப்புக்கு முன்னர் அவர்கள் நிதி பெறவில்லையா? அவர்களிடம் போதுமான உணவும் இதர வசதிகளும் இருந்தது இல்லையா? அரசாங்கத்தின் கீழ்த்தரமான பொய் இது.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று தான் திரும்பினேன். மக்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வரி விதிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் 1995 ஆம் ஆண்டு முதல் யாழ். மேயராக இருந்தபோது கப்பல்களில் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம். பெற்றோலின் விலை அப்போது 1இ000 ரூபாயாக இருந்தது. அப்போது வரி யாருக்குப் போனது?

நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ஏழை மக்களுக்கான இலவசமாக பிரதேச செயலகங்களினூடே விநியோகிக்கப்படுகின்ற அரசாங்கம் தருகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரி விதித்தது இல்லை. மேலும் எந்த மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்துகின்றனர்? மகிந்த ராஜபக்சவா? கேகலிய ரம்புக்வெலவா? ஏன் இந்த ரவிராஜ் கூட இல்லை... அவர்கள் பிரதேசத்தில் வாழும் மக்கள்தானே..
ஏ-9 பாதை திறக்கப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரி விதிப்புடன் கூட பெற்றோல் விலையின் விலை 10 ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது.

பூநகரிப் பாதையினூடாக கிளிநொச்சி செல்வது என்பது அதிக தொலைவும் கடினமான சாலையும் கொண்டதாகும். கடலிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில்தான் அந்தப் பாதை உள்ளது. இருந்தபோதும் அந்தப் பாதையை பார்வையிடச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? கண்காணிப்புக் குழுத் தலைவர் மயிரிழையில் உயிர்தப்பி பதுங்கு குழிக்குள் பதுங்க வேண்டியதாயிற்று? பூநகரிப் பாதையினூடாக சென்றால் வரி இருக்காதா?

மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்....

அம்பந்தோட்டைக்குச் செல்லும் பிரதான பாதையை மூடிவிட்டு கொழும்பிலிருந்து கப்பலினூடே பொருட்களை எடுத்துச் செல்லுங்களேன்...

அம்பந்தோட்டையில் பயங்கரவாத பிரச்சனை என்கிறீர்களே... ஏன் எப்போதுமே பயங்கரவாதம் தொடர்பிலான விவகாரத்தையே பேசுகிறீர்கள்?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.1. சரத்தில் தெளிவாக ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை அரசாங்கம் விரும்பவில்லை எனில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று அரசாங்கம் ஏன் சொல்லவில்லை?

யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிந்து போனால் யுத்தம் தொடங்கிவிடும். அப்பகுதி மக்களுக்கு அதனால் எதுவும் இல்லை. ஏ-9 பாதை மூடப்பட்டமையால் அப்பாவி மக்கள் சொல்லமுடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி விலங்குகள் கூட பட்டினியால் சாகின்றன.

அங்கே உள்ள இராணுவ முகாமிலிருந்து கொழும்புக்கு விசா வாங்கி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஏ-9 பாதையை தங்கள் பகுதிகள் புலிகள் மூடியிருப்பதாக சொல்வது என்னே ஒரு முட்டாள்தனம்! ஏன் நான் கிளிநொச்சிக்கும் பளைக்கும் அண்மையில்கூட சென்று வந்தேனே... எறிகணைத் தாக்குதலிலிருந்து தப்பியும் வந்திருக்கிறேன்.

யார் தாக்கியது என கேட்கிறீர்கள்?

வெளிப்படையாக....யுத்த காலத்தில் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நான் இருந்தபோது பதில் தாக்குதல் என்ற பெயரில் 50 முதல் 60 எறிகணைகளை இராணுவம் அடிக்கும்... தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து ஒன்றிரண்டு எறிகணைகள் வந்து விழும்.

ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும் என சர்வதேச பார்வையாளர்கள் தலையீட்டுடன் விடுதலைப் புலிகள் கருதுகின்றனர்.
பொதுமக்களை கப்பலில் ஏற்றிச் சென்றபோது விடுதலைப் புலிகள் தாக்கியதாக சொல்கிறீர்களே... ஏன் பொதுமக்களை கடலினூடே கப்பலில் அரசாங்கம் அழைத்துச் செல்ல வேண்டும்?

ஒரே கப்பலில் 1000 பேர் பயணித்தனரே..யார் அவர்கள்?

300 பேர்தான் பொதுமக்கள். மற்ற அனைவருமே பாதுகாப்புத் தரப்பினரே. பாதுகாப்புத் தரப்பினர் தங்களது உற்றார் உறவினர்களைப் பார்க்கச் செல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இராணுவத்தினரை கொண்டு செல்வதற்காக மகளையும் ஏற்றிக்கொண்டு அரசாங்கம் சென்றது. ஏ-9 பாதையை திறந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லையே.

1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக "ஜயசிக்குறு" நடவடிக்கையை மேற்கொண்ட அரசாங்கத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அரசாங்கம் ஏ-9 பாதையை மூடி வைத்துள்ளது.
இந்தப் பிரச்சனைக்கான தீர்வு எனில் தனிப்பட்ட நபர்கள் பிரச்சனை உள்ளது... என்னுடைய நண்பர் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜாதிக ஹெல உறுமய ஏன் இராணுவ தளபதி சரத் பொன்சேகா என....
பௌத்தர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கின்றனர்.

இருந்தபோதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்த பிக்குகள் யாழ்ப்பாண மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏ-9 பாதையூடாக எடுத்துச் செல்ல எதிர்க்கின்றனர்.

ஏ-9 விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவது என்பது இந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும் என்று விமல் வீரவன்ச கூறுகின்றார்... இறைமையைப் பற்றி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? 1971 ஆம் ஆண்டு ஜனநாயகப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக யார் ஆயுதம் தூக்கியது? 1988-89 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மண்ணெணெய் விளக்கைக் கூட அவர்கள் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆகையால் அவர்களால் இன்று எப்படி இறைமையைப் பற்றி பேச முடிகிறது?

இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்திய பஞ்சாயத்து முறை பற்றி பேசப்படுகிறது. இந்தியப் பஞ்சாயத்து முறை என்பது ஒரு கிராம நிர்வாக அமைப்பு. உயர்நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னர்... கிராமங்களுக்கு- சுயாட்சி அளிப்பது போன்றதானது. இலங்கையில் அது நடைமுறைப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படவில்லை.

சிங்களவர்களும் தமிழர்களும் இராணுவப் போராட்டம்- இரத்தக் களறியை இந்த நாட்டில் பார்க்க விரும்பவில்லை. அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். ஆழிப்பேரலையின் போது முல்லைத்தீவில் தமிழர்களுக்கு சிங்களவர் உதவினர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை. நான் பேச்சுக்களை ஆதரிக்கிறேன். இதை நான் மட்டுமே சொல்லவில்லை. கலிங்கத்துப் போருக்குப் பின்னர் அசோக சக்கரவர்த்தி கூறியதுதான் இதற்கு முதல் உதாரணம்.

பட்டினியால் வாடும் மக்களுக்கு முதலில் உணவுப் பொருட்களை அனுப்பி நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை அளிக்கும் என்றார் ரவிராஜ்.

நன்றி-----புதினம்.

Sunday, November 05, 2006

சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும்.......

ஆடுகள் நனையுதெண்டு சில ஓநாய்கள் கவலைப்படுது.அனால ஓநாயின்
ஆட்டின் மீதான அக்கறை எப்படிப்பட்டது எண்டது எல்லோருக்கும் தெரிந்ததே.இந்த ஓநாய் இதைப்பற்றி என்ன சொல்லுது?

http://www.timesonline.co.uk/article/0,,3-2421834,00.html

Monday, October 09, 2006

இந்திய தலைவர்களை சந்திக்கும் முயற்சியின் பின்ணணியில்......

ந்தியத் தலைவர்களை சந்திப்பதற்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் முயற்சிகளின் போது நடந்தவை பற்றி மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி தினக்குரல் பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருக்கும் கட்டுரையினை தேவை கருதி இங்கு தருகிறேன்.
தினக்குரல் நிறுவனத்தினருக்கும் திரு மறவன்புலவு சச்சிதானத்துக்கும் எனது நன்றிகள்.


ஈழத் தமிழரின் அடிமை வாழ்வு நீங்க வேண்டும்.

ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடைய வேண்டும்

என்ற இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிலிருந்து மேற்கொண்டு வருகிறேன்.

ஈழத் தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத் தமிழரிடமே இருக்க வேண்டிய தேவை.

1987 -91 கால, ஈழத் தமிழர்- இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,

இந்தியாவில் அகதிகள் நலம்,

சிங்களப் படைகளுக்கு இந்தியா உதவக் கூடாதமை,

இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத் தமிழர் செயற்படார் என்ற உறுதி,

தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,

தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்பவது,

இந்த நோக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒலி/ஒளிபரப்புகள்,

இந்த நோக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத் தமிழர் பால் நல்லெண்ணத்தை உருவாக்குவது போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.

இந்தப் பின்னணியில் 28.08.2006 முதலாக 23.09.2006 வரையுள்ள மூன்று வார காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியது என் கடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் பழம் பெரும் விடுதலைத் தியாகியும் பாராளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே தங்குவார். ஈழத் தமிழர் - இந்திய உறவுகள் மேம்பாடடையும் முயற்சிகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு முறை இருவருமாகத் டில்லிக்கும் போய் வந்தோம்.

தமிழகச் சட்ட சபைத் தேர்தலுக்கு முன் பெப்ரவரியில் ஒரு சுற்றாகவும், தேர்தலுக்குப் பின் ஜூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்தோம். பெப்ரவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள் வெளிவராதவாறு காத்துக் கொண்டோம். தேர்தலுக்குப் பிந்தைய ஜூலை மாதச் சந்திப்புக்கு இரா.சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம் தெரிவித்திருந்தார். எனவே தமிழகத் தலைவர்களிடம் அதைக் கடிதமாக முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வர் கலைஞர், எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா, மார்க்சிய பொதுவுடமைக் கட்சி இவை தவிர, ஏனைய கட்சித் தலைவர்கள், ஈழத்தவர் இவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம் தெரிவித்தனர்.

ஒப்பியவாறு இரா.சம்பந்தன் வரவில்லை. எனவே, மாவை சேனாதிராஜாவும் நானும் இச் சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன. இரா.சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் கராணம் எனத் தெரிவித்திருந்தார். அக் காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம். இந்தச் சந்திப்புகளின் தேவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் தோன்றியது.
அடுத்த சுற்றுச் சந்திப்புகளுக்காக, இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்டார். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பின் தமிழகத் தலைவர்களைத் தொடர்புகொள்வதே ஏற்றது எனக் கருதிய நான், காத்திருந்தேன். முந்தைய அநுபவம் பாடமாக இருந்தது.

23.08.2006 அன்று மாவை சேனாதிராசா சென்னைக்கு வந்தார். விரைவில் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வந்து விடும் என எனக்குக் கூறினார்.

28.08.2006 மாலை 5 மணியளவில் வைகோவின் செயலர் அருணகிரி என்னிடம் வந்திருந்தார். அவர் வெளியிடவுள்ள புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் பார்த்துத் தவறுகள் இருப்பின் திருத்தித் தருமாறு கேட்க வந்திருந்தார். ஈழத் தமிழர் தொடர்பாகப் பல நூல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றை நான் பார்த்துக் கொடுப்பது வழமை. தினமணியில் வெளிவந்த `மன்னிப்போம்.. மறப்போம் அரவணைப்போம்' என்ற என் கட்டுரையைத் தம் கட்சி ஏடான சங்கொலியில் மீள் பிரசுரம் செய்யுமாறு வைகோ தன்னிடம் சொன்னதாகவும், வைகோ என்னிடம் பேச விரும்பியதாகவும் அருணகிரி தெரிவித்தார்.

சென்னை வரும் போது வைகோவைச் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தேன். உடனே வைகோவுடன் தொடர்பு கொண்டு, 29.8 மாலை சென்னையில் சந்திப்பதற்கு அருணகிரி ஏற்பாடு செய்தார். மாவை சேனாதிராசாவும் அப்போது உடனிருந்தார். நீங்களும் வாருங்கள் என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். நீங்களே சந்தித்து விட்டு வாருங்கள் என்றார்.
29.8 மாலை 6 மணிக்கு வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மறுநாள் 30.8 பிரதமரைச் சந்திக்க டில்லி செல்வதாகக் கூறிய வைகோ, பலவற்றை என்னுடன் பேசினார்.

சிங்களத் தலைவர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பிரதமரையும் கட்சித் தலைவரையும் சந்தித்துப் போகிறார்கள். தமிழர் தரப்பு நியாயங்களைக் கூற ஈழத் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். ஏற்கனவே குறித்து வைத்திருக்கிறேன், கட்டாயம் பேசுவேன் என்றார்.
ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் நேரம் ஒதுக்க வேண்டும் என வைகோ, நெடுமாறன் ஆகிய இருவரும் மிகத் தீவிரமாகவும், மருத்துவர் இராமதாஸ், கி.வீரமணி போன்ற பலர் அடிக்கடியும் போராட்டங்கள் நடத்துவதும் அறிக்கைகள் வெளியிடுவதும் தமிழ் நாட்டில் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வந்த நிகழ்வுகள், ஈழத் தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பது பற்றி முன்பொரு முறை பிரதமரிடம் வைகோ பேசிய பொழுதும், கவனிக்கிறேன் எனப் பிரதமர் வைகோவிடம் கூறியிருந்தார்.

31.08.2006
30.8 பிரதமர்- வைகோ சந்திப்பின் போது, ஈழத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் வைகோவின் பேட்டி 31.8 காலை இதழ்களில் வந்திருந்தது. அன்று காலை 11 மணிக்கு வைகோ என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மாவை சேனாதிராசாவையும் அழைத்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு கேட்டார். நானும் மாவை சேனாதிராசாவும் அவரிடம் சென்றோம்.

எம்மிடம் பல விபரங்களைச் சொன்ன அவர், பிரதமர் உங்களைக் கட்டாயம் சந்திப்பார். அதற்கான உறுதியை என்னிடம் தந்துள்ளார். ஆணையையும் என் முன்னே இட்டார். நீங்கள் கடிதம் எழுதித் தொலைநகலாக உடனேயே அனுப்புங்கள் என்றார்.

வீடு திரும்பியதும் இரா.சம்பந்தனை தொலைபேசியில் மாவை சேனாதிராசார தொடர்பு கொண்டார். இந்தியாவில் இரா.சம்பந்தன் இருப்பதாகவும் 4.9 சென்னை வருவார் என்றும் அவர் வந்ததும் கடிதத்தைத் தயாரித்து அனுப்பலாம் என அவரே சொன்னதாகவும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். அவர் வரும் வரை காத்திருக்க வேண்டாம், நீங்கள் உடன் கடிதத்தை அனுப்புங்கள் எனக் கேட்டேன். மாவை சேனாதி ராசா உடன்படவில்லை.

நான் மனம் நொந்தேன். தமிழ்ச் சாதியின் தலைவிதி இதுவா? என மாவை சேனாதிராசாவிடம் கேட்டேன். தமிழ் நாட்டில் பலர் இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள், கருத்துருவாக்கத்தில் பலர் தம் நேரத்தை, பொருளைச் செலவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அழுத்தத்தை உணர்ந்த பிரதமரும் ஒப்புகிறார். நீங்கள் கடிதம் அனுப்புவது முறை, அதை ஏன் பின் போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். இரா. சம்பந்தன் வரட்டும் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

01.09.2006
மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும் சந்திப்புக் கேட்டு, இருவரும் ஏற்கனவே கையொப்பமிட்டுக் கலைஞருக்கு எழுதிய கடிதத்தை வெள்ளிக்கிழமை காலை , கலைஞர் வீட்டுக்கு கொடுத்தனுப்பினோம்.
மதியம் கவிஞர் காசி ஆனந்தனும் மனைவியாரும் என்னைத் தற்செயலாகச் சந்திக்க வந்திருந்தனர். என் ஆற்றாமையையும் ஆதங்கத்தையும் அவர்களிடம் சொன்னேன். ஈழத் தமிழர் நியாயங்களை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பு நழுவி விடும் போலத் தெரிகிறதே என்றேன். வாங்கோ சச்சி, நெடுமாறனிடம் போவோம் எனக் கவிஞர் கூறினார். நேரே நெடுமாறனிடம் போனோம். விபரத்தைச் சொன்னேன்.ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கூறி எங்கள் மூவரையும் வழியனுப்பினார்.

அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்குத் தொலைபேசியில் செய்தி வந்தது. 4.9 இல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்து விடுவார், உடன் பிரதமரைச் சந்தியுங்கள் என்பதே செய்தியின் சாரம் என மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.

இரா. சம்பந்தன் 5.9 இரவு தான் வருகிறார், அவர் வந்த பின்பு முடிவு செய்வோம் என்பதையும் மாவை சேனாதிராசா சொன்னார்.
2.9 காலை நெடுமாறன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும். கஜேந்திர குமார் பொன்னம்பலம் நாளையோ மறுநாளோ வருவார். வந்ததும் டில்லிக்குப் போகலாம் என்றார். மாவை சேனாதிராசாவுக்கும் அத்தகைய செய்தி இரவே வந்துள்ளதை அவரிடம் கூறினேன்.

இதற்கிடையில் வைகோ என்னை அழைத்தார். 9.9 க்கு முன் சந்திப்பு நிகழ வேண்டும். 10.9 பிரதமர் வெளிநாடு போக உள்ளார். போனால் 20.9 க்குப் பின்னர் தான் நாடு திரும்புவார் என்றார் வைகோ.

கலைஞரோ தமிழ் நாட்டின் முதலமைச்சர். மூத்த அரசியல் வாதி. ஏற்கனவே ஈழத் தமிழரின் சில செய்கைகள் அவரைப் புண்படுத்தியுள்ளன. அவரைச் சந்திக்காமல் பிரதமரைச்சந்திப்பது முறையல்ல. அவருடைய வாழ்த்துகளுடன் செல்வதே ஈழத் தமிழருக்கு நல்லது, எனவே, அந்தச் சந்திப்புக்கு முயல்வோம் என்றார் மாவை சேனாதிராசா.

காலை வேளைகளில் தொலைபேசியில் அழைத்ததால் கலைஞருடன் நேரில் பேசும் வாய்ப்புகள் உண்டு. என்னோடு உள்ள பரிச்சயத்தால் அவர் பேசுவதுண்டு. எனவே 3.9 காலை 6 மணியளவில் கலைஞர் இல்லத்துக்கு அழைத்தேன். அவர் உடற் பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். குழப்பாதீர்கள் பின்னர் அழைக்கிறேன் எனக் கூறிய நானே நேரில் போய்ப் பேசுவதே முறை எனக் கருதினேன். அன்று முற்பகல் உதவியாளர்களிடம் பேசினேன். உங்கள் கடிதத்தை இன்னமும் பார்க்கவில்லை என்றார்கள்.

எனக்கும் மனம் கேட்கவில்லை. இரா.சம்பந்தன் வரும் வரை பார்த்திருப்பதா? மாவை சேனாதிராசா கடிதம் எழுதினால் என்ன? 3.9 காலை 9 மணிக்கு மருத்துவர் இராமதாஸின் உதவியாளரைத் தொலைபேசியில் அழைத்தேன். மருத்துவர் இராமதாஸே நேரில் பேசினார். பத்து மணிக்குச் சந்திப்போம் என்றார். மாவை சேனாதிராஜாவும் நானும் சென்றோம். 22 உறுப்பினருள் 10 உறுப்பினராவது சேர்ந்து செல்ல வேண்டும். பிரதமரிடம் விபரங்களைச் சொல்லுங்கள்; அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.

இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எதையும் செய்ய முடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்.

04.09.2006
8.9 அல்லது 9.9 இல், பிரதமரைச் சந்திக்கப் போகிறோம். உங்களைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பதும் முறையல்ல. 7.9 காலை எமக்கு நியமனம் தாருங்கள் எனக் கேட்டு 4.9 நாளிட்ட கடிதம் ஒன்றை மாவை சேனாதிராசா எழுத அதையும் 1.9 கடிதப் படியையும் இணைத்துக் கொண்டு, 4.9 காலை 9 மணிக்கு நேரில் கலைஞரின் இல்லம் சென்றேன். அங்குள்ள உதவியாளர் யாவரும் அன்புடன் என்னை வரவேற்று, கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். மாலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்றனர். மாவை சேனாதிராசாவும் நானும் மாறி மாறிக் கலைஞரின் உதவியாளருடன் தொடர்பு கொண்டவாறாயிருந்தோம். சாதகமான பதில் வரவில்லை.

06.09.2006

5.9 மாலை சம்பந்தன் சென்னை வந்தார். 6.9 காலை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவரும் சென்னை வந்தனர். சிவாஜிலிங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார். மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பர நாதன் நால்வரும் 6.9 மதியம் எனதில்லத்தில் கூடிப் பிரதமரின் சந்திப்பு பற்றிப் பேசினோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் கோருவது என்ற கருத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருந்தது.

இரா. சம்பந்தன் சென்னையில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9 அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.
நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு. பிரதமர் சந்திக்க ஒப்புதல் தந்துள்ளார். சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கேட்டு நாம் அவருக்குக் கடிதம் அனுப்பவில்லை. 30.8 இல் ஒப்புதல் தந்தவர், 10.9 இல் வெளிநாட்டுக்குப் புறப்பட இருப்பவர், ஏதோ நாம் கேட்ட உடனே நேரம் ஒதுக்குவார் என்ற துணிவு 6.9 வரை எமக்கு இருப்பது அசாத்தியத் துணிவு தான் எனக் கருதினேன். ஆனாலும் உந்துதலை விடாமல் கடிதம் அனுப்புவோமா எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்தாய்? என்ற என் மனக் குமுறலை அதே சொற்களால் இந்த நால்வரிடம் கூறினேன்.

7.9 காலை எனது இல்லத்தில் இந்த ஐவரும் சந்திப்பது என இரா. சம்பந்தனிடமிருந்து தொலைபேசி செய்தி வந்தது.

07.09.2006
காலை 10.30 மணியளவில் எனது இல்லத்தில் இந்த ஐவரும் கூடினர். நானும் அங்கிருந்தேன்.
பிரதமர் எங்களைச் சந்திக்க ஒப்பமாட்டார், எனவே, நியமனம் கேட்டு அவருக்கு கடிதம் எழுதுவதில் பயனில்லை என்றார் இரா. சம்பந்தன். மற்ற நால்வருக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அதை அவர்கள் ஒவ்வொருவராக விளக்கிக் கூறினர்.

பிரதமர் அலுவலகத்தில் என்ன செய்வார்கள் என முன்கூட்டியே முடிவு செய்வதற்கு எமக்கு உரித்தில்லை. பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய முடிவை நாம் இங்கிருந்து செய்ய வேண்டாம். மூன்று படி நிலைகளாக முயல்வோம். பிரதமருக்குக் கடிதம் எழுதுவோம், கலைஞருக்குக் கடிதம் எழுதுவோம், பிரதமரிடம் என்ன கேட்கப் போகிறோம் என்பதையும் எழுதி வைத்திருப்போம் என அழுத்தம் திருத்தமாகச் சம்பந்தனிடம் கூறினேன்.
தமிழகத்தின் முதல்வர் கலைஞர், அவரை மீறி, அவரின் ஒப்புதல் பெறாமல் பிரதமரிடம் போவது முறையல்ல. கலைஞரின் ஒப்புதலைப் பெறுவோம் அதன் பின்னர் பிரதமரிடம் செல்வோம் என்றார் இரா. சம்பந்தன்.

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர், பெப்ரவரி 2006 இல், மாவை சேனாதிராசாவும் நானும் கலைஞரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தோம். கலைஞருடைய வழிகாட்டலில் டில்லியுடன் தொடர்பு கொள்ள விரும்பகிறோம் என்று அப்பொழுது அவரிடம் கூறினோம். நீங்கள் நேரே டில்லியுடன் தொடர்பு கொள்ளுங்கள், என அவர் அப்பொழுது சொன்னார். அதற்குரிய வலுவான காரணங்களையும் கலைஞர் எமக்கு விளக்கினார்.

ஈழத் தமிழருக்கு நன்மை எனில் கலைஞர் ஒரு பொழுதும் குறுக்கே நிற்கமாட்டார். ஈழத் தமிழர் தமக்குரியதை விரைந்து பெற வேண்டும் என்பதே கலைஞரது உளமார்ந்த விருப்பம். அவர் டில்லிக்கு எங்களைப் போகச் சொல்லி விட்டார். எனவே, கலைஞரைக் காரணம் காட்டிச் சந்திப்பைத் தவிர்க்க வேண்டாம் எனக் கூறினேன். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்ததை இரா. சம்பந்தனுக்கும் மற்ற நால்வருக்கும் மாவை சேனாதிராசா விரித்துக் கூறினார்.

மதியம் 1.30 மணியளவில் கலைஞருக்கான தமிழ்க் கடிதத்தை முதலில் நான் எழுதினேன். பிரதமருக்கான ஆங்கிலக் கடிதத்தை இரா. சம்பந்தன் எழுதினார். இரண்டையும் நானே தட்டச்சுச் செய்து கொடுத்தேன். சம்பந்தன் கையெழுத்திட்டுத் தந்தார். பிரதமரின் இல்ல மற்றும் அலுவலகத் தொலைநகல் எண்களைத் தேடிக் கொடுத்தேன். தொலைநகலை அனுப்பி விட்டதாக மாவை சேனாதிராசா எம்மிடம் வந்து கூறிய பொழுது 7.9.2006 பிற்பகல் 2.30 மணிக்கு கலைஞருக்கு தொலைநகலாகக் கடிதம் போய்ச் சேர்ந்தது.

சரி பிறகு சந்திப்போம் எனச் சம்பந்தன் எழுந்தார். பிரதமருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்பதைத் தெளிவாக்கி, எழுத்தில் தயாரித்து முடிப்போம் என நான் வலியுறுத்த, சம்பந்தன் மீண்டும் அமர்ந்தார். எழுதினார். தட்டச்சு நிலையில் சரி பார்த்த பிறகு போகலாம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கடிதத்தைத் தட்டச்சுச் செய்ய முன் வந்தார். தட்டச்சுப் படிகளுள் ஒன்று இரா. சம்பந்தனிடம் மற்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் என்ற நிலையில் அன்றைய கூட்டம் கலைந்தது.
தொலைநகலில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம் என்பதை வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் கூறினேன். வைகோ தென் மாவட்டமொன்றில் இருந்தார். பின்னர் அன்றிரவு அவராகவே என்னுடன் பேசினார். நாளை சந்திப்பு நிகழலாம் போலத் தெரிகிறது என்றார்.


7.9.2006
காலை 10.30 மணிக்குக் கூடிய பொழுது, எங்களுள் பலருக்கு இருந்த கருத்தொற்றுமையில், பிரதமரைச் சந்திக்கும் வரை இது தொடர்பான செய்திகள் வெளிவரக் கூடாதென்பதாகும். ஆனால், கூட்டமாக நாம் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுதே, சிவாஜிலிங்கத்தின் தொலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்பகள் வந்தன. அது மட்டுமல்ல, அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் விரும்பினார்.

பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளை, பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிலிருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாதென முடிவு செய்தோம்.
8.9.2006 காலை 10.30 மணி. பிரதமர் அலுவலகத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்? விமான நிலையத்திலிருந்து எத்தனை கி.மீ. தூரத்தில் உள்ளீர்கள்? அடுத்த விமானம் எப்பொழுது? விபரங்களைத் தயாரித்து என்னை அழைக்கமுடியுமா? எனக்கேட்டுத் தன் பெயரையும் தொலைபேசி எண்ணையும் அந்த உதவியாளர் என்னிடம் தந்தார்.

பயண ஒழுங்குகளையும் பிரதமர் அலுவலகத் தொடர்பையும் நான் கவனிக்க உறுப்பினரைத் திரட்டும் முயற்சியில் மாவை சேனாதிராசா ஈடுப்பட்டார். விமானச் செலவுகள் பற்றி உடனடியாகக் கவலை வேண்டாம் நான் இப்பொழுது பொறுப்பு நிற்கிறேன். பிறகு பார்ப்போம் என்றேன்.
பிற்பகல் 1.45 விமானம் உள்ளதையும் பயணச் சீட்டுகள் பெறமுடியும் என்பதையும் மதுராடிராவல்ஸ் வி.கே.டி. பாலன் உறுதி செய்தார். இந்த விபரங்களை நான் மாவை சேனாதிராசாவிடம் சொல்லி, ஏனைய உறுப்பினரைத் திரட்டி மதியம் 12 மணி அளவில் விமான நிலையம் போக ஆயத்தமாகச் சொன்னேன். பிரதமர் அலுவலகத்திற்கும் இந்தத் தகவலைச் சொன்னேன். தாம் சொல்லும் வரை விமான நிலையம் போக வேண்டாம் எனவும் ஆயத்தமாக இருக்கும் படியும் பிரதமர் அலுவலக உதவியாளர் என்னிடம் கூறினார்.

இதற்கிடையில் அடுத்து விமானம் எத்தனை மணிக்கு என விசாரித்தேன். மாலை 6 மணிக்கு என்றார்கள். அதையும் பிரதமர் அலுவலகத்தில் கூறிய பொழுது சந்திப்பதாயின் 1.45 விமானத்திலேயே வந்துவிட வேண்டும் பிரதமர் அலுவலகத்துள் செயலாளர் போயுள்ளார். வந்ததும் சொல்கிறேன் காத்திருங்கள் என்றார் பிரதமர் அலுவலகத்தின் அந்த உதவியாளர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பத்மினி சிதம்பரநாதனும் பயணப் பொதிகளுடன் எனதில்லம் வந்து சேர்ந்தனர். சம்பந்தனும் சிவாஜிலிங்கமும் நேரே விமான நிலையம் வந்துவிடுவதாகக் கூறினர். தொடர்பாக இருங்கள் நாம் சொன்னதும் புறப்படலாம் என ஆயத்த நிலையில் அவர்களை வைத்திருந்தோம்.

1 மணியளவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு எனக்கு வந்தது. நியமனத்தை உறுதிசெய்ய முடியவில்லை. வைகோவுடன் தொடர்பாக இருங்கள் அவருக்கு விபரம் சொல்கிறோம். வெளிவிவகார அமைச்சிடமும் பேசி வருகிறோம் என்றார்கள்.

இதற்கிடையில் மாவை சேனாதிராசாவுடன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் தொடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்.

உடனுக்குடன் வைகோவிற்கு விபரம் சொன்னோம். அவரும் பிரதமர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு வந்தார். 8.9 இரவு ஒரு கூட்டத்திலிருந்த வைகோவைப் பிரதமர் அலுவலகம் அழைத்து, வெளிநாட்டுப் பயணத்தின் பின்னரே சந்திப்பு என்பதை எம்மிடம் தெரிவிக்கக் கூறினார்கள். இதை எம்மிடம் தெரிவித்த வைகோ, மறுநாள் 9.9 காலை இரா. சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இதை மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்தேன். குழுவாகப் போவதென முடிவாயிற்று.

டில்லிப் பயணத்துக்காகப் பயணப் பொதிகளோடு எனதில்லம் வந்த பத்மினி சிதம்பரநாதன் வெளியே விடுதியில் தங்கியிருக்க விருப்பமில்லை என்றதால் எனது இல்லத்திலேயே தங்குவது என முடிவாயிற்று. மாவை சேனாதிராசா ஏற்கனவே எனது இல்லத்தில் தங்கியிருந்தார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8 இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்தநாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்டோடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம். ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றின் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?

7.9 பிற்பகல் 2.30 மணிக்கு கடிதம் அனுப்புகிறோம். 8.9 காலை 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகம் எம்மோடு தொடர்பு கொள்கிறார்கள். அத்தகைய வேகம் பிரதமர் அலுவலகத்திற்கு இருந்தது. 30.8 இல் ஒப்பியதற்கு 7.9 இல் கடிதம் எழுதும் வேகம் ஈழத் தமிழர் தரப்பில் இருந்தது.

09.09.2006
முற்பகலில் வைகோவைச் சந்திக்க இரா.சம்பந்தன் மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அழைத்துச் சென்றேன். சிவாஜிலிங்கம் வரவில்லை. செய்தியாளரிடம் அவர் கொண்ட தொடர்புகள் பற்றியும் தேவையற்ற கசிவுகள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்ததன் விளைவாகவே அவர் அழைக்கப்படவில்லைப்போலும் என நான் ஊகித்தேன்.

தொடரும்)

Tuesday, October 03, 2006

பரிசோதனை.

நீண்ட நாட்களின் பின்னர் தமிழ்மணம் பக்கம்.
புதிய டெம்பிளேட்டுடன். பரிசோதனைக்காக இப்பதிவு.

Sunday, September 03, 2006

பாக்கு பொட்டலத்தில் திருக்குறள்.

அண்மையில் வீட்டில் விசேடத்துக்கு வாங்கிய பாக்கு பொட்டலத்தினை
எதேச்சையாக எடுத்துப் பார்த்தேன் பொட்டலத்தின் பின்புறம் திருக்குறள்
வரிகள்,அத்துடன் சுற்றுச்சூழல் சம்பந்தமான வாசகங்கள்.
பொட்டலத்தில் உள்ளபடி இது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களின் சமூக அக்கறைகொண்ட அத்தயாரிப்பாளார்கள்
பாராட்டுக்குரியவர்கள்.

ஹீ ஹீ இது கூட எடுத்து போடாட்டி கமராவைச்சிருக்கிறதுக்கே அர்த்தம்
இல்லைதானே..........................

Saturday, August 19, 2006

பேனாவிடம் தோற்றுப் போனவர்கள் துப்பாக்கி.....

பேனாவிடம் தோற்றுப்போனவர்கள் துப்பாக்கிகளுடன் காதல் செய்பவர்கள்.


கோப்பாய் இராஜவீதியில் உள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தின் களஞ்சியம் நேற்றிரவு 10.30 மணியளவில் ஆயுததாரிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டது. மாடிவீடு ஒன்றில் களஞ்சியம் அமைந்துள்ள இடத்துக்கு நான்கு ஆயுததாரிகள் சென்றனர். அப்போது குடாநாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயுததாரிகள் நால்வரும் கறுப்பு நிற ரீ-சேர்ட் அணிந்திருந்தனர். தமது வாய்களை கறுப்புத்துணியினால் கட்டியிருந்தனர்.

களஞ்சியங்களின் இரவுக்காவலுக்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரின் கண்களையும் கைகளையும் பின்னால் கட்டிய ஆயுததாரிகள், அவரைத்தூரத்தே போகுமாறு சைகை காட்டிவிட்டு களஞ்சியத்துக்கு தீ வைத்தனர். சத்தம் போட்டால் சுட்டுவிடுவோம் என்று சொல்லியே பாதுகாப்பு உத்தியோகத்தரைக் கட்டினர். வந்தவர்களில் ஒருவர் யாழப்பாணத் தமிழிலும் மற்றறொருவர் மட்டக்களப்பு தமிழிலும் கதைத்தனர். தீ சுவாலை விட்டெரிந்து சிறிது அணைந்த பின்னர் சுமார் 11:30 மணியளவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு, நெருப்பை அணைக்கக்கூடாது எனவும் அணைத்தால் பின்னர் வந்து சுடுவதாகவும் கூறிச் சென்றனர்.

இன்று காலை 9 மணிக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தீ வைப்பு குறித்து முறைப்பாடு செய்தனர். பொலிசார் வந்து பார்த்துவிட்டு நிறுவன அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கூறினர். பொலிசார் களஞ்சியங்களை பார்வையிடச் சென்ற வேளையிலும் தீ எரிந்துகொண்டிருந்தது. இந்த உதயன் களஞ்சியத்தில் பத்திரிகை அச்சிடும்தாள், கணனிகள் மற்றும் எலக்ரோனிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பெறுமதி பல இலட்சம் ரூபாவாகும்.

Friday, August 11, 2006

"ஆனந்தவிகடன் தலையங்கம்"

மிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை அனுப்பிய இந்திய மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஆனந்த விகடன்" வார ஏடு தலையங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடன் தலையங்கம் வருமாறு:

சிங்கள போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் அளித்து வந்த பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி, அவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் காட்டிய பலமான எதிர்ப்பின் விளைவே இந்த இடமாறுதல்.
இலங்கை மண்ணில் மோதல்கள் நிகழும் இந்த நேரத்தில்... அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான உணர்வுகள் அலையடிக்கும் இந்த நேரத்தில்... தமிழ் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படியொரு பயிற்சி முகாமுக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு இவர்கள் உதவ மாட்டார்கள். கூட்டங்களில் அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களை அமைதிப்படுத்தவும்தான் இந்தப் பயிற்சி என்று மத்திய அரசு சொல்வது எடுபடாத சமாதானம்!

நல்லது நடக்கும்போதெல்லாம், மத்திய அரசிடம் வலியுறுத்தி இதை நாங்கள்தான் செய்ய வைத்தோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நடந்திருக்கும் இந்த நெருடலான சம்பவத்துக்குச் சொன்ன பதில்... எதிர்ப்புகள் எழுந்திருப்பதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசுக்கு இங்குள்ள உணர்வுகளைத் தெரிவித்து, பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டோம் என்பதே!

இந்தச் சூழ்நிலையில் இப்படியொரு பயிற்சி முகாம் தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றால், எங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமலே மத்திய அரசு இதை நடத்தியது மிகப் பெரிய தவறு என்று மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

மாநில உரிமைகள் பற்றிக் கால காலமாகக் குரல் கொடுப்பவர்கள், இப்போது அதைச் செய்யவில்லையே, ஏன்? என்று ஆனந்த விகடன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் விமானம் களத்தில்??

புலிகளின் வான்படை விமானம் பலாலி பெரும் தளத்தின் மீது தாக்குதல்?

அந்தா இந்தா என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த பூனை கடைசியில் வெளியே வந்துவிட்டது.ஆம் புலிகளின் விமானப்படை விமானம் ஒன்று பலாலிபெரும் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையனும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டுள்ளார்.இருந்தாலும் அரசு படைகளிடம் இருப்பதை போல புலிகளிடம் இருக்கும் விமானங்கள் யுத்த விமானங்களாக இருப்பதற்கு சாத்தியம் இல்லை.அவை இலகு இரக விமானங்களாகவே இருக்கும்.அப்படிதான் வரும் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் புத்தியுள்ளவனுக்கு புல்லும் ஆயுதமாகும்.ஆம் சிறிய விமானங்களை வைத்துக்கொண்டு இராணுவத்துக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்த புலிகளால் முடியும் என்பதுடன் சில குறிப்பிட்ட முக்கிய இலக்குகளை தாக்கவும் முடியும்.

இது புலிகளின் கடந்த கால வரலாற்றில் நிருபித்து காட்டப்பட்டுள்ளது.

Thursday, August 10, 2006

யுத்த தர்மம்.

போர் என்றால் வைத்தியசாலைகள்,அதுசார்ந்த அம்பியூலன்ஸ் வண்டிகள்
என்பனவற்றை தாக்கக்கூடாது என்பது ஜ.நா சபையால் வரையப்பட்டு
உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.

ஆனால் இலங்கையில் ? நேற்றைய தினம் சிறிலங்காவின் இராணுவ ஆழ
ஊடுருவும் படையணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில்
தாக்குதல் நடாத்தியிருப்பதோ அம்பியூலன்ஸ் வண்டி மீது.
அதுவும் இவ் அம்பீயூலன்ஸ் வண்டியானது நெடுங்கேணி அரசினர் வைத்தியாலைக்கு சொந்தமான வண்டி.கொல்லப்பட்டவர்களில் ஒருவர்
வைத்தியசாலை டொக்ரர் அவரின் மனைவி,மற்றும் இரு தாதிமார்,சாரதி

வழமைபோலவே தாம் இத்தாக்குதலை நடத்தவில்லை என்று இராணுவம்
மறுக்கலாம். ஜ.நா நடைமுறைகளை மீறுவது இலங்கை படைகளுக்கு
புதிய விடையமுமல்ல.சிங்கத்தின் வழித்தோன்றல்களிடம் மனிதத்தன்மையினை எதிர்பார்ப்பது எமது தவறல்லவா?

Wednesday, August 09, 2006

வரலாற்றில் கறுப்பு பக்கம் - இலங்கை

தொண்டர் அமைப்புகளின் பணி பற்றிய வரலாற்றில் கறுப்புப் பக்கம்

இப்போது மூதூர் நகரில் அரச சார்பற்ற பிரெஞ்சுத் தொண்டு நிறுவ னம் ஒன்றின் சார்பில் பணிபுரிந்த பதினைந்து அப்பாவித் தமிழர் கள் மோசமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய ரீதியில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.............

தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்.

மேலதிக தகவல்களுக்கு:-

http://www.pathivu.com/index.php?subaction=showfull&id=1155055032&archive=&start_from=&ucat=1&

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19133

Sunday, July 16, 2006

தமிழகத்தில் இருந்து ஒரு எதிர்வினை.

தமிழ்நாதம் இணையதளம் ஈழத்தவர் மத்தியில்ஒரு பிரபல்யமான இணைய தளம்.

உலகெங்கிலும் இருந்து வெளிவரும் பல்வேறு இணையத்தளங்களையும் ,வானொலி,பத்திரிகைதொலைக்காட்சிகள்,சஞ்சிகைகள் போன்றவற்றின் இணைப்புக்களையும் ஒருங்கே தரும் ஒரு இணைய தளம். பல ஒலி வடிவிலான செய்திகளையும் தருவது அதன் சிறப்பம்சம்.

அண்மையில் அத்தளத்தில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.வீரகேசரி வாரவெளியீட்டில் "நிலாந்தன்" எழுதிய "ஈழத்தமிழர்களின் போராட்டமும் மாறிவரும் தமிழக ஊடகச்சூழலும்" என்ற கட்டுரையே அது.

அதற்கு சில தினங்கள் கழித்து அக்கட்டுரைக்கு எதிர்வினையாக தமிழ்நாட்டில் இருந்து "சேவியர் அந்தோனி" என்பவர் எழுதி அனுப்பிய "தமிழக ஊடகங்களின் நிலையினை புரிந்துகொண்டு அடக்கி வாசியுங்கள்" கட்டுரையினை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாதம்.

தமிழ் நாட்டின் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன.அதன் நோக்கங்கள்,செய்தி நிறுவனங்களின் தன்மைகள்,அங்குள்ள ஊடகவியலாளர்களின் மனநிலை போன்றவற்றினை புட்டுப் புட்டு வைத்திருக்கின்றது அக்கட்டுரை.

தமிழ்நாட்டு ஊடகங்களின் தன்மைபற்றி பலரும் பலவற்றை எழுதியிருக்கின்றனர். அண்மையில் வசந்தன் கூட ஒரு பதிவு போட்டிருந்தார். நானும் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
1500 கிலோ மீற்றர் தாண்டியிருக்கும் கனடாவில் கூட சரியான செய்திகள் கிடைக்கும் போது 25 கிலோ மீற்றரில் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்களில்" கொழும்புக்கு அருகே இருக்கும் வல்வெட்டித்துறை"என்று செய்தி வருவது சென்னைக்கு அருகே இருக்கும் ராமேஸ்வரம் என்று எழுதுவதற்கு ஒப்பானது .

எப்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படி செய்திகள் திரி?வடைகின்றன? தூங்குகின்றவனை எழுப்பலாம்.ஆனால் தூங்கின்றவன் மாதிரி நடிப்பவனை........

Saturday, July 15, 2006

இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"

இருளிலிருந்து மெல்ல வெளிவரும் இந்தியாவின் "முதலாவது விடுதலைப் போர்"


தனது பங்கை உறுதிப்படுத்தும் தமிழகம்

வரலாறு வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. தோல்வியுற்றவர்களைப் பற்றி அது கவலை கொள்வதில்லை. ஆனால், வென்றவர்களில் ஒரு பகுதியினராக இருந்தும் தங்களது வரலாற்றை இழந்தவர்களை என்ன சொல்வது? தமது சரித்திரத்தை பதிவு செய்யாமல் அல்லது அதற்கு உரிய இடத்தை வழங்குவதை உறுதிப்படுத்தாமல் விட்டமைக்கான அவர்களின் அக்கறையின்மையையும் அசட்டையையுமே நாம் குற்றஞ்சாட்ட முடியும்.
இந்திய வரலாற்றைப் பதிவு செய்யும் பொழுது வடஇந்தியா எப்பொழுதும் தென்இந்திய நிகழ்வுகளை புறக்கணித்தே வருகின்றது என்பது தென்னக வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நீண்டகால குமுறலாக இருந்து வருகின்றது. ஆனால், அதனை உரிய இடத்தில் வைப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா என்பது கேள்விக்குறிதான்.

இந்தியா கிறிஸ்துவிற்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசியாவிலிருந்து வந்த மொகலாயர்களிடம் அடிமைப்படத் தொடங்கிவிட்டது. ஆயினும், இக்காலப் பகுதியிலும் தென்னகம் தனது சுதந்திரத்தை காப்பாற்றியே வந்துள்ளது.
அதற்குப் பின்னர், பிரஞ்சுக்காரர்களிடமும் போத்துக்கீசரிடமும் பாரத தேசத்தின் சில பகுதிகள் அடிமைப்பட்டுக் கொண்டன. ஆயினும், ஒட்டுமொத்த இந்தியப் பெருநிலப்பரப்பும் அடிமைப்பட்டுக் கொண்டது ஆங்கிலேயரிடம்தான்.
வியாபாரம் செய்வதற்காக உள்நுழைந்தவர்கள், படைபலத்தையும் பல்வேறு யுத்திகளையும் பயன்படுத்தி படிப்படியாக இந்திய பெருநிலத்தை கைப்பற்றிக் கொண்டனர்.


ஆயினும், அவர்களினால் அதை இலகுவாக செயற்படுத்த முடியவில்லை. ஹைதர் அலி, திப்புசுல்தான், புலித்தேவர், சென்னம்மாள், வேலு நாச்சியார், சின்ன மருது, பெரிய மருது போன்ற மன்னர்களினதும் இராணிகளினதும் கடுமையான எதிர்ப்பை முறியடித்தே தென்னிந்தியாவை அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

இவ்வாறாக, இந்தியாவெங்கும் ஆதிக்கத்தை பரப்பி வேரூன்றிய ஆங்கிலேயர்களிற்கு எதிராக அவர்களின் கீழ் பணிபுரிந்த இந்தியச் சிப்பாய்கள் இறந்தொழிந்தனர். 1857 இல் வடஇந்தியாவில் கல்கத்தாவிலிருந்து மீரட் வரை பரவிய சிப்பாய்களின் கிளர்ச்சியையே பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்களும் இந்திய அரசாங்கமும் "சிப்பாய் கலகம்" அல்லது முதலாவது விடுதலைப் போர் என்று அழைக்கின்றனர்.

இந்திய அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் 150 ஆண்டு நிறைவை அடுத்த வருடம் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கான திட்டங்களைத் தற்பொழுது தீட்டி வருகின்றது. ஆனால், 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னதாகவே தென்னிந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகம் வரலாற்று இருளிற்குள் மறைந்து கிடக்கின்றது.

1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி காலை தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 130 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேலூரில் இடம்பெற்ற சிப்பாய் கலகம், வடஇந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தைவிட 51 ஆண்டுகள் முந்தையதாகும். வரலாற்றில் நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் வழக்கப்படி இது "முதலாவது சிப்பாய் கலகம்" என்றும் வடஇந்தியாவில் நடைபெற்றது" "இரண்டாவது சிப்பாய்க் கலகம்" என்றே கூறப்பட வேண்டும்.

வடஇந்திய சிப்பாய் கலகத்திற்கு அடிப்படையாக சிப்பாய்களின் துப்பாக்கிகளில் பன்றி மற்றும் மாட்டுக் கொழுப்பை பிரிட்டிஷ் பேரரசு பயன்படுத்தியமை அமைந்தது.
இதனால், ஆத்திரமுற்ற இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் கிளர்ச்சியில் குதித்தனர்.

வேலூர் சிப்பாய் கலகத்திற்கு பிரிட்டிஷாரின் ஆடை அணிகலன் தொடர்பான உத்தரவுகள் அடிப்படையாக அமைந்தன.
1799 இல் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியர் வேலூர் கோட்டையில் தடுத்துவைத்தனர்.
1806 இல் பிரித்தானியர் படையினரிற்கான புதிய ஆடை விதிமுறைகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்தியச் சிப்பாய்கள் சாதிக் குறியீடுகள், காதணிகள் மற்றும் தாடி என்பன அகற்ற வேண்டும். இதற்குப் பதிலாக தோலால் அலங்கரிக்கப்பட்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட தலைப்பாகைகளை அணியுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

பெரும்பாலான இந்தியப்படை வீரர்கள் இதனை எதிர்த்தனர். மறைவில் குமுறிக் கொண்டிருக்கும் எதிர்ப்பை, 1806 ஆம் ஆண்டு மே மாதமளவில் சென்னையிலிருந்த பிரித்தானிய அதிகாரிகள் அறிந்தனர்.
எதிர்ப்பை வெளிப்படுத்திய சில படையினரை அவர்கள் அடையாளம் கண்டனர். அவர்களிற் சிலரை பகிரங்கமாக அடித்ததுடன் வேறு சிலரை பணியை விட்டு நீக்கினர்.

ஆனால், கிளர்ச்சிப் படைவீரர்கள் பணியவில்லை.
ஜூலை மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் கிளர்ச்சி படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் திகதி காலை மூன்று மணிக்கு ஆரம்பமான தாக்குதலில் 1,500 பேரைக் கொண்ட வலுவான இந்தியச் சிப்பாய்களிடம் வேலூர் கோட்டை வீழ்ந்தது.
அங்கிருந்த 350 வெள்ளையர்களில் 100 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிப்பாய்கள் பாரிய தவறை இழைத்தனர். வெற்றிக் களிப்பிலிருந்த அவர்கள் கோட்டை வாயில்களை பாதுகாப்பாக மூடத் தவறினர். வேலூரிலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவிலிருந்த ஆட்காட்டில் தளத்தைக் கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் சென்னை குதிரைப்படையினர் பிந்திய காலைப் பொழுதில் திறந்திருந்த வாயில்களினூடாக உள்ளே புகுந்தனர். தாக்குதல் தொடங்கியது.

350 கிளர்ச்சிப் படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்தனர். பிரிட்டிஷார் இறுதியில் கோட்டையை மீளக் கைப்பற்றினர்.
மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சியை தூண்டியதாக சந்தேகப்பட்ட பிரித்தானியர்கள் அவர்களை கல்கத்தாவிற்கு இடம்மாற்றினர்.
இருளிற் கிடந்த வரலாற்றின் 200 ஆவது ஆண்டு நிறைவு இம்மாதம் 11 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியத் தபால் துறை முத்திரை வெளியிட முன்வந்தது. இதை "இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கு" இறுதியில் கிடைத்த உரிய அங்கீகாரம் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

தபால்தலையில் வரலாறு பதியப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள் மனதில் பதியும் வகையில் பணி முன்னெடுக்கப்படுமா என்பது இன்னமும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

நன்றி-என்.சிவேந்திரன்/தினக்குரல்

Friday, July 14, 2006

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக..

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக சூடாக இருக்கிறது என்றுதலைப்பிட்டு பாலச்சந்தர் கணேசன் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு ஒன்ரு இட்டிருந்தார்.அதில் அவருக்கு பிடித்த சில தமிழ் வரிகளை தந்திருந்தார்.7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லைஅது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.

சரி படியுங்கள் தமிழ் வரிகளை .

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.

தமிழா நீ பேசுவது தமிழா

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

மிக மிக அவசரத்தில் போட்டது.

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக.......

தமிழ்மணம் கடந்த சில நாட்களாக சூடாக இருக்கிறது என்று தலைப்பிட்டு பாலச்சந்தர் கணேசன் சில மணிநேரங்களுக்கு முன்பு பதிவு ஒன்று இட்டிருந்தார்.அதில் அவருக்கு பிடித்த சில தமிழ் வரிகளை தந்திருந்தார்.

7 பேரை அழைத்திருந்தார்.மற்றவர்களுக்கு பொது அழைப்பு.ரோட்டில் ஜந்து ஆறு பேர் கூட்டமாய் நின்றால் என்ன ஏது என்று எட்டிப்பார்ப்பதில்லை அது போல இங்கு எட்டிப்பார்த்து போட்ட "தமிழ்" வரிகள்.

சரி படியுங்கள் தமிழ் வரிகளை.

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்.


தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


தமிழே உயிரே வணக்கம் தாய் மண் உறவம்மா உனக்கும் எனக்கும்.


தமிழா நீ பேசுவது தமிழா?


யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோமே.


தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!


மிக மிக அவசரத்தில் போட்டது.

Saturday, July 08, 2006

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.

இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.

தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.

தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.

கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.

சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.

நன்றி:--- இளங்கோ (இலண்டன்) http://www.webeelam.com/

Wednesday, June 21, 2006

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி!

பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி மல்யுத்த களமாகியது சபா மண்டபம்

தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி. எம்.பி.க்கள் முட்டிமோதிச் சண்டை

கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட அதேசமயம் வட, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லையென்ற விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜே.வி.பி. எம்.பி.க்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் முட்டி மோதிக் கொண்டதால் சபை சிறிது நேரம் மல்யுத்தக் களம் போன்று காட்சியளித்ததுடன் அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார பகல் 10.30 மணி வரை சபை அமர்வை இடைநிறுத்தி வைத்தார்.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தில் கொல்லப்பட்டோருக்கு சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.ரவிராஜ் கிளப்பிய ஒழுங்குப் பிரச்சினையையடுத்து தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரனையும் அரச தரப்பினரும் ஜே.வி.பி.யினரும் இணைந்து தாக்கியதையடுத்து சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், ரவிராஜ், ஈழவேந்தன் மற்றும் ஐ.தே.க. எம்.பி.யான மகேஸ்வரன் ஆகியோர் ஜே.வி.பி. உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, நிகால் கலப்பதி, ஜயந்த விஜேசேகர, அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் அரச தரப்பில் பிரதியமைச்சர்கள் ரோஹித அபேவர்தன, சரத் குணரட்ண ஆகியோரும் தாக்க, ஐம்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதால் சபை அல்லோலகல்லோலப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதன்பின் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களையடுத்து விமல் வீரவன்ஸ கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றினார்.

ஒரு நிமிட மௌன அஞ்சலி

கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலைகளை கடுமையாகக் கண்டித்து உரையாற்றிய விமல் வீரவன்ஸ அதில் கொல்லப்பட்ட மக்களுக்கு சபையில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டுமென சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சபாநாயகர் சபையின் அனுமதியைக் கோரவே அரச, எதிர்த்தரப்பு பிரதம கொரடாக்கள் சபையில் மௌன அஞ்சலி செலுத்த இணக்கம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசதரப்பு, ஐ.தே.க., ஜே.வி.பி., ஹெல உறுமய, முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இ.தொ.கா., தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் கலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பில் செல்வராஜா கஜேந்திரனும் ஈழவேந்தனும் எழுந்திருக்கவில்லை.

ரவிராஜ் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினை

ஒரு நிமிட மௌன அஞ்சலி முடிவுற்றதும் சபாநாயகர் கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவம் தொடர்பாக விசேட கூற்றை வெளியிட ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரருக்கு அனுமதி வழங்கினார்.
அத்துரலிய ரத்தினதேரர் உரையாற்றுவதற்காக எழுந்து நின்றபோது குறுக்கிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உறுப்பினர் என்.ரவிராஜ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பினார். இதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

கொல்லப்படும் தமிழர் மனிதர்களில்லையா?

ரவிராஜ் தனது ஒழுங்குப் பிரச்சினையில் "கெப்பிட்டிக்கொல்லாவ படுகொலை தொடர்பாக நாம் வேதனைப்படுகிறோம். அச்சம்பவத்தை கண்டிக்கிறோம். மௌன அஞ்சலியிலும் பங்கேற்றோம். ஆனால், தமிழர்கள் இராணுவத்தாலும் துணைப் படைகளாலும் கொல்லப்படும் போதெல்லாம் நாம் அதனை இச்சபையின் கவனத்துக்கு கொண்டு வந்த போதெல்லாம் அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுப்பதில்லை. இன்றுவரைக்கும் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

இன்று கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர் கொல்லப்பட்டதற்காக சபையில் மௌன அஞ்சலி செலுத்துகிறீர்கள். தமிழர்கள் கொல்லப்படும்போது அசட்டை செய்கிறீர்கள். சிங்களவர் கொல்லப்படும்போது அஞ்சலி செலுத்துகிறீர்கள். அப்படியானால் தமிழர்கள் மனிதரில்லையா?

விவாதம் கோரிய கரு ஜயசூரிய

இவ்வேளை, ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கெப்பிட்டிக்கொல்லாவை படுகொலை தொடர்பாக விவாதமொன்று அவசியமெனவும் இதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கித்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கரு ஜயசூரியவின் விவாதக் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.

சபாநாயகர் முன்பாக கஜேந்திரன் M.P மீது தாக்குதல்

இதையடுத்து, தமிழ்க் கூட்டமைப்பினர் சபைக்கு நடுவே இறங்கி சபாநாயகருக்கு முன்பாக வந்து தமிழர்கள் மனிதர்களில்லையாவென சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர். இவ்வேளை, திடீரென பாய்ந்து வந்த அரச தரப்பினரும் அரச தரப்பின் பக்கமிருந்த ஜே.வி.பி.யினரும் தமிழ்க் கூட்டமைப்பினரை சூழ்ந்து கொண்டனர்.

இதற்கிடையில் ஓடிவந்த படைக் கல சேவிதர்களும் உதவியாளர்களும் விலக்குப் பிடிக்க முயன்றனர். ஆயினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் இடம்பெற்றது.

அரியநேத்திரன் எம்.பி.க்கும் அண்மையில் நியமனம்பெற்ற அரச தரப்பு எம்.பி.யான சரத் குணதிலகாவுக்குமிடையே இழுபறி ஏற்பட்டதுடன் கெட்டவார்த்தைகள் உரத்த குரலில் பிரயோகிக்கப்பட்டன.


ஐ.தே.க.வும் கூட்டமைப்புடன் கடுமையான தர்க்கம்

இதேவேளை, ஐ.தே.க. எம்.பி.க்களான நவீன் திசாநாயக்கவும், தயாசிறி ஜயசேகரவும் கூட்டமைப்புடன் கடுமையாக தர்க்கம் புரிந்ததுடன் நவீன் திசாநாயக்க தாக்கவும் முற்பட்டார். இதற்கிடையில் ஐ.தே.க. எம்.பி.க்களான ஹேம குமார திசாநாயக்க, மனோ விஜயரத்ன ஆகியோர் கூட்டமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க முனைந்ததுடன் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர்.


தன்னை தாக்கியோரை திருப்பித் தாக்கிய மகேஸ்வரன் M.P

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை அரச தரப்பினரும் ஜே.வி.பியினரும் இணைந்து தாக்குவதனை தடுப்பதற்காக ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரன் முயன்றபோது அவரை ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த விஜேசேகர சட்டையில் பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன், ஜயந்த விஜேசேகரவை தாக்கினார். இதையடுத்து, ஜே.வி.பி.யின் ஏனைய உறுப்பினர்களான நிகால் கலப்பதி, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மகேஸ்வரனை தாக்க முயன்ற போது அவர்களையும் உதைத்துத் தள்ளினார் மகேஸ்வரன். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்த மகேஸ்வரன் அரச மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலரையும் தாக்க முற்பட்டார். இவரைக் கட்டுப்படுத்துவதற்கு பலரும் பெரும் பிரயத்தனப்பட்டனர்.

ஹெல உறுமயவுடன் கடும் வாக்குவாதம்

அரசதரப்பு, ஜே.வி.பி.யுடன் இணைந்து ஹெல உறுமயவினரும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது வசைமாரி பொழிந்தனர். கொலையாளிகள், புலிகளின் அடிவருடிகள் எனத் திட்டினர். பச்சை இனவாதிகள், தமிழனின் இரத்தம் குடிப்போரென தமிழ்க் கூட்டமைப்பின் ரவிராஜ் எம்.பி. ஹெல உறுமயவினரை பதிலுக்குச் சாடினார்.


களத்தில் குதித்த விமல் வீரவன்ஸ

இதேவேளை, நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கையில் திடீரென விமல் வீரவன்ஸ தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களான கஜேந்திரன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன் ஆகியோரைத் தாக்கினார். இதற்கிடையில் நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோர், ஹேமகுமார நாணயக்கார, மனோ விஜயரத்ன ஆகியோர் தமிழ்க் கூட்டமைப்பினரை அவர்களின் இடத்திற்குள் அழைத்துச் சென்றனர். ஆனால், எதிர்த்தரப்பு ஆசனங்களுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அரச தரப்பும் ஜே.வி.பி.யினரும் முயன்றனர்.

பறந்த செருப்புகள் உடைந்த விளக்குள்

எதிர்த்தரப்பிற்குள் அரச தரப்பும் ஜே.வி.பி.யும் நுழைய முயன்றதையடுத்து நிலைமை இன்னும் சிக்கலானது. தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. எதிர்த் தரப்பு வரிசையின் முன் மேசையில் இருந்த சில மின் விளக்குகள் உடைந்து நொருங்கின. பேப்பர், புத்தகக் கட்டுகள் இருதரப்புக்கும் பறந்தன. கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும், வெட்டுவேன் கொல்லுவேன் போன்ற எச்சரிக்கைக் குரல்களும் சபையை அதிரவைத்தன.

கஜேந்திரனின் கழுத்தை வெட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. எம்.பி.
மோதல்களை படைக்கல சேவிதர்களாலும் உதவியாளர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் இருதரப்பும் ஆளுக்கு ஆள் தாக்க முற்பட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜயந்த விஜேசேகர, கஜேந்திரனுக்கு கழுத்து வெட்டுவேன் என முழக்கமிட்டார். அதுவரைக்கும் நான் என்ன புளியம்பழம் பறிப்பேனாவென கஜேந்திரன் எம்.பி. திரும்பிக் கேட்டார்.

சபையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரதமர்

சபையில் இரு தரப்பும் ஆளாளுக்கு மோதிக் கொண்டிருந்தபோது பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் அமைதியாக அமர்ந்திருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வாவும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் அமைதியாகவே காணப்பட்டனர்.
ஆனால், ஏனைய பலரும் அரச தரப்புக்கும் ஜே.வி.பி. க்கும் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். தமிழ்க் கூட்டமைப்பினரை பலர் சூழ்ந்து தாக்கியபோது அவர்கள் தடுக்க முனையவில்லை.

சபாநாயகரால் சபை ஒத்திவைக்கப்பட்டது

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. உறுப்பினர்கள் கை, கால்களை நீட்ட வேண்டாமென சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அதனை எவரும் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் 10.25 மணியளவில் சபையை 5 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் தாக்குதல்கள், இழுபறிகள் தொடர்ந்தன. பலர் சபை நடுவே விழுந்தெழும்பினர்.

சமரச முயற்சியில் சம்பந்தன், ரோஹித

இந்நிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், சிவநாதன் கிஷோர் ஆகியோரும் அரச தரப்பில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இரு தரப்பினரையும் பலத்த பிரயத்தனப்பட்டு அமைதிப்படுத்தினர்.

அரச தரப்பும், ஜே.வி.பி. யும் சற்று அமைதியடைந்தபோதும், ஐ.தே.க. எம்.பி.யான நவீன் திசாநாயக்க தமிழ்க் கூட்டமைப்பினரைத் திட்டித் தீர்த்ததுடன் கடும் வார்த்தைகளையும் பிரயோகித்தார். இவருடன் ரவிராஜும் வாதாடினார்.

மீண்டும் சபை கூடியது


நிலைமை ஓரளவு சுமுகமடையவே 10.55 மணியளவில் சபை மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நீரியல் வளங்கள் தொடர்பான திருத்த சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Sunday, June 11, 2006

சின்னமாமியே.... உன் சின்ன மகள்.........

ஈழத்து பைலா பாடல்கள் பற்றி ஒரு பதிவினை மே 12,2005 இல் எழுதியிருந்தேன்.

இப்போது சில பாடல்கள் mp3 வடிவில் கிடைக்கப்பெற்றேன்.அதில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணி stickam player பதிந்து தந்துள்ளேன்.( 4 பாடல்கள்)

Stickam player எனது வலைப்பதிவின் முதற் பக்கத்தில் மட்டும் தெரிகிறது. மேலும் அப்படியே சில படங்களையும் இணைத்திருக்கிறேன். எனது கமெராவில் சுட்டது . எப்படி எண்டு சொல்லுங்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்.

Monday, May 22, 2006

நீ குடிக்கலாம் நான் பொறுப்பல்ல......

னடாவைப் பொறுத்தவரை குடித்துவிட்டு வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றம்.சைபர் வீதம் ஆல்ககோல் உடலில் இருந்தாலே போதும் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல் செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனை வழங்கப்படலாம் .அல்லது இவை இரண்டுமே நடைபெறலாம்.இங்கு வாகனம் ஓட்டுவதற்குரிய சாரதி அனுமதிப்பத்திரம்
எடுக்கும் சிரமம் பலருக்கும் தெரிந்ததே.

அப்படியும் எத்தனையோ பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அமெரிக்காவைப் போலல்லாது
கனடாவில் ரோட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு குறைவு என்பதால் பலரின் தலை தப்புகிறது.

1999 ம் ஆண்டு புதுவருட தினத்தன்று இரவு விருந்தொன்றில் பங்கு பற்றிவிட்டு வந்த இருவரின் கார்கள் விபத்துக்குள்ளானதில்
ஒரு காரில் வந்தவர் இறந்துவிட அவரின் நண்பி நடமாடமுடியாதபடி காயம்பட்டார்.

இரண்டாவது வாகனத்தில் வாகனத்தை செலுத்தி வந்தவர் மதுபோதையில் இருந்தபடியால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விபத்தில் உயிர்தப்பிய பெண் தான் 17வது முதல் சக்கர நாற்காலியில் நடமாடுவதற்கு காரணம் குடிபோதையில்
வந்த சாரதி மட்டுமல்ல அவரை விருந்துக்கு அழைத்து குடிக்க கொடுத்த வீட்டுக்காரரும் தான் என்றும் கூரி அவர்களிடம் இருந்து நட்ட ஈடு
கேட்டு வழக்கு தொடந்திருந்தார்.

அந்த வழக்கு முன்னரே ஒட்டாவா நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றம் கொண்டு சென்றார்.
மேல் நீதிமன்ற தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்னர்வந்தது .அதாவது வழக்கு தொடுத்த பெண்மணிக்கு பாதகமாக
"விருந்தை நடத்தியவர்கள் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது" என்று .

அதாவது மதுபோதையில் விபத்து நடந்தால்
அதற்கு விருந்து வைத்தவர் பொறுப்பு அல்ல என்று.

இங்கு இப்படி நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்பது என்பது சாதாரண விடயமே.ரிம் கோட்டன் என்பது கனடா ,அமெரிக்காவில்
உள்ள ஒரு கோப்பிக்க்டையின் பெயர்.இங்கு ஒரு பெண்மணி கோப்பி( காப்பி) வாங்கியிருக்கிறார் .கோப்பி கொண்டுவந்து
கடைச் சிப்பந்தி வைக்கும் போது அப் பெண்ணின் தொடையில் பட்டு சிறு காயம் ஏற்பட்டுவிட்டதாம்.அதன் பின்னர் அப்பெண்மணி
அக்கடைக்கு எதிராக நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து பெரும் தொகையை பெற்றதாகவும் ஒரு கதை.
இப்போது கோப்பி கப்புகளில் எச்சரிக்கை- மிகவும் சூடானது என்று ஒரு வாசகம் பொறிக்கப்பாட்டிருப்பதை காணலாம்.

இப்படிதான் எனது உறவினர் ஒருவர் எப்படியாவது ஏதாவது ஒன்றின் மேல் வழக்கு போட்டு காசு பார்க்கலாம் என்று
கனடா வந்ததில் இருந்து அலைகிறார்.ஆனால் இன்னமும் ஒன்றும் மாட்டவில்லை அவருக்கு.

Sunday, May 21, 2006

"உலகத் தமிழர் தலைவரும் ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பும்"

லங்கையில் அமைதி திரும்பி தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும். அதற்குரிய சகல விதமான முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது தடவையாகப் பதவியேற்றிருக்கும் கலைஞர் மு.கருணாநிதி கூறியுள்ளதுடன், சமாதானத்தை ஏற்படுத்தத் தேவையேற்படின் தலையிடுமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து முழு விபரத்தையும் அறிந்த பின்பு மத்திய அரசு தலையிடவேண்டிய தேவையிருந்தால் அது குறித்து வலியுறுத்துவோம் என்றும் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கலைஞர் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதேதினம் இலங்கையின் வட,கிழக்கிலிருந்து 102 மக்கள் ஒரே தினத்தில் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். இந்த வருட ஆரம்பத்திலிருந்து வட, கிழக்குப் பகுதியிலிருந்து 1019 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 20 வருடகாலமாக பாக்கு நீரிணையைப் பல்வேறு துன்பங்களின் மத்தியிலும் கடந்துசென்று தமிழ்நாட்டில் தஞ்சமடையும் வட, கிழக்குத் தமிழர்களின் எண்ணிக்கை இலட்சங்களைத் தாண்டியிருந்தது. தற்போதும் 60 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய (யூ.என்.எச்.சி.ஆர்.) புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த வெள்ளியன்று வந்த 102 அகதிகளும் தமிழர் தாயகமான வட,கிழக்கில் மிகவும் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமையாலேயே படகுகள் மூலம் தமிழகத்தை நாடி வந்திருப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக யூ.என்.எச்.சி.ஆரின் பேச்சாளர் ஜெனிபர் பகோனிஸ் ஜெனீவாவில் கூறியிருக்கிறார்.

`அகதிகளின் பயணம் அதிகரித்துவருகிறது. நிலைமையை நாம் அவதானித்துக்கொண்டிருக்கிறோம்' என்றும் அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இலங்கை நிலைவரத்தை முழுமையாக அறிந்துகொள்ளவில்லையென தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் மத்தியில் அவதியுறும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவு ஆறுதலளிக்கும் வார்த்தையாகத்தானும் இல்லை.

`உலகில் எந்த மூலையில் வாழுகின்ற தமிழனும் துன்பப்படும்போது அவனுக்காக குரல் கொடுப்பேன்' என்று கலைஞர் வெளியிட்டுவந்த கருத்துகளை வெறும் அறிக்கைகள் என்று கருதாமல் தன் உள்ளுணர்வை வார்த்தைகளால் வடித்திருக்கிறாரே என்று பரவசப்பட்ட, தற்போதும் பரவசப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களும் உள்ளனர்.

இப்போது கலைஞருக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் 6 கோடி தமிழர்களின் தலைவராக மட்டுமன்றி இந்திய மத்திய அரசாங்கத்திலும் கலைஞரின் `அதிகாரபலம்' கணிசமான அளவில் உள்ளது. இந்த அதிகாரபலத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் இலங்கைத் தமிழர்கள் தமது நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலமைச்சராக பதவியேற்றபின்பு முதற்தடவையாக கலைஞர் இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு செல்கிறார். அங்கு அவர் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது கலைஞர் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழரின் பிரச்சினைக்கு கூட்டுச்சம்மேளன முறைமையிலான தீர்வே சிறந்தது என்று கலைஞர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். வட,கிழக்கில் தமிழர்களின் பிரச்சினையை முழுமையாக அறிந்திருந்ததாலேயே இந்தக் கூட்டுச்சம்மேளன முறைமையிலான அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் தற்போ
து நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு சமஷ்டி முறையிலானது (Federal) என்று கூறப்பட்டாலும் அதனை முழுமையற்ற சமஷ்டி முறைமை (Quasi Federalism) என்ற அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பாரதத்தில் தற்போதைய அரசியலமைப்பு முறைமையிலும் பார்க்க அதிகளவு அதிகாரப் பகிர்வைக் கொண்டதே கூட்டுச்சம்மேளன (Confederation) முறைமையாகும். இந்த முறைமையிலான தீர்வே வட,கிழக்கு தமிழர்களின் நெருக்கடிக்குத் தீர்வு தரும் என்று மனதார விரும்பும் கலைஞர் கருணாநிதி அதனை ஈழத்தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டுமென்பதே எதிர்பார்ப்பாகும்.

ஒற்றையாட்சி முறைமைக்குள் தீர்வுகாண முடியாதென்பதை தென்னிலங்கையின் பிரதான கட்சிகளான ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் தலைமைத்துவங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சமஷ்டி முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது மீண்டும் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தான் யாவும் என்று அதிகாரபீடம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வட,கிழக்கில் மோதல்கள் மோசமாக வெடித்துள்ளதுடன், தமிழகத்திற்கான `படகு அகதிகள்' படையெடுப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலைஞர் வெறுமனே வார்த்தைகளால் மட்டும் `இலங்கையில் தமிழர்கள் சுபிட்சமாக வாழவேண்டும்' என்று கூறுவதுடன் நிறுத்திவிடாமல் நியாயபூர்வமான உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை தனது செல்வாக்கு, அதிகார வரம்பெல்லைக்குள்ளேயே மேற்கொள்ள முடியுமென்பதே இலங்கையிலுள்ள குறிப்பாக வட, கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் உலகத் தமிழரின் தலைவரெனக் கருதப்படுபவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகும்.

நன்றி- தினக்குரல்

Tuesday, March 28, 2006

கிழக்கில் உதயமாகிறது "ஜிகாத்" குழு!

கிழக்கில் உதயமாகிறது சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ "ஜிகாத்" குழு!

சிறிலங்கா இராணுவத்தில் தனி முஸ்லிம் படையணியை உருவாக்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இது தொடர்பில் கூறியதாவது:

இராணுவ முஸ்லிம் படையணியின் தேர்வுக்கான நேர்காணல் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. அம்பாறையில் எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் நாள் வரை இந்த நேர்காணல் நடைபெறும்.
இப்படையணியில் மொத்தம் 500 பேர் இணைக்கப்பட உள்ளனர் என்றார் சமரசிங்க.

இது தொடர்பிலான விளம்பரம், சிறிலங்கா அரச ஊடகமான கடந்த ஞாயிறன்று சண்டே ஓப்சர்வரில் வெளியாகி இருந்தது.

புதிதாகச் சேர்க்கப்பட உள்ளவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிமாகவும் 8 ஆம் வகுப்பு வரை படித்தவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு நபருக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாய். இதில் போக்குவரத்து, மருத்துவ சலுகைகள், தங்குமிடம் அனைத்தும் அடங்கும்.

கிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்களின் துணை இராணுவக் குழுவான ஜிகாத் குழு இயங்கி வருகிறது என்றும் இது பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வுத்துறை உதவியுடன் இயங்குவதாகவும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பிலான ஆதாரங்கள் உள்ளன என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் "இராணுவத்தில் முஸ்லிம் படையணி" என்பதும் இந்தப் படையணி கிழக்குப் பிரதேசத்தில் மட்டுமே இயங்கும் என்பதும் ஒரு உத்தியோகபூர்வமான ஜிகாத் குழுவை உருவாக்கும் நடவடிக்கையாகவே சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கும் இந்த முஸ்லிம்கள் குழுக்களின் நீண்டகால செயற்பாடுகள் பற்றிய ஒரு தொகுப்பு:
தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை தொடக்கத்தில் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மீதான பாரிய படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டது.

இதற்கு வீரமுனை கிராமப் படுகொலையை உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீரமுனை என்கிற தமிழ்க் கிரமாமமானது பல முஸ்லிம் கிராமங்களைச் சூழ்ந்து அமைந்தது.
மட்டக்களப்பு நகரிலிருந்து 38 கிலோ மீற்றர் தென்மேற்கில் இக்கிராமம் உள்ளது.

1990 ஜூன் மாதம் 11 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையேயான யுத்தம் தொடங்கிய போது வீரமுனை கிராமம் 3 பாரிய படுகொலைகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஜிகாத் அமைப்பு, சிறிலங்காவின் "ஊர்காவல்" படையினர், சிறிலங்கா அரசாங்கத்தினது இராணுவம், சிறப்பு அதிரடிப்படை ஆகியவை இந்தப் படுகொலைகளை நடத்தின.

தமிழ்க் கிராமங்களில் யுத்த காலத்தில் படுகொலைகளையும் மனித உரிமைகளையும் மீறியதில் பாரிய பங்களிப்புச் செய்தது சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை.
1990 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று மேலே குறிப்பிட்டுள்ள குழுவினருடன் இணைந்து கொண்ட சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான தமிழ் ஆண்களை வயது வேறுபாடின்றி சுற்றி வளைத்து கொண்டுவெட்டுவான் முகாமுக்குக் கொண்டு சென்றது.
பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அனைவரையுமே படுகொலை செய்தனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடைமைகளையும் வீடுகளையும் எரித்து நாசப்படுத்தினர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் சிறப்பு அதிரடிப்படையினர், ஜிகாத் அமைப்பில் உள்ள முஸ்லிம்கள், ஊர்க்காவல் படையினர் வீரமுனை கிராமத்தைச் சுற்றிவளைத்தனர்.
முன்னைய பாரிய படுகொலைச் சம்பவங்களால் அச்சமடைந்த அம்மக்கள் சிந்தையாதிரை பிள்ளையார் ஆலயத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் ஆலயத்துக்குள் உள்நுழைந்த முஸ்லிம் தீவிரவாத இளைஞர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்காவல் படையினர் ஆலயத்திலேயே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 56 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர்.

இந்தப் படுகொலைகளால் வீரமுனை கிராமமே ஒட்டுமொத்தமாக வெளியேறி காரைதீவு அகதி முகாமுக்கு இடம்பெயர்ந்தது. 1993 ஆம் ஆண்டு இக்கிராமத்தினர் சிலர் வீரமுனை கிராமத்துக்குத் திரும்பினர். பெருமளவானோர் இன்னமும் அகதி முகாம்களிலே வசித்து வருகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அம்பாறை அக்கரைப்பற்றில் பி.எல்.ஓ.என்ற முஸ்லிம் ஆயுதக் குழு உருவானது. இக்குழுவானது முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தமிழர்கள் உள்நுழவதைத் தடை செய்வதாக அறிவித்தது. இத்தகைய பெயரில் 1985, 1990 ஆண்டுகளில் தமிழர் விரோத சக்திகள் ஒரு குழுவை உருவாக்க முனைந்துள்ளனர். அக்குழுவினர் 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5 ஆம் நாள் வெளியிட்ட துண்டறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கைகளை முஸ்லிம் பகுதிகளில் கைவிட வேண்டும் என்று எச்சரித்தது.

இருப்பினும் இக்குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

1999 ஆம் ஆண்டு அபுசாலி ஜூலியா (வயது 34) என்ற ஏறாவூர் தாமரைக்கேணியைச் சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருமணமான வேறு ஒரு ஆணை விரும்பியதால் இஸ்லாமிய மதச் சட்டத்தை அப்பெண் மீறியதாகக் கூறி முஸ்லிம் ஆயுதக் குழுவினர் படுகொலை செய்தனர்.

அதன் பின்னர் சமாதானப் பேச்சுக்கள் நடைபெறத் தொடங்கிய 2002 ஆம் ஆண்டு சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவத்தினரால் பாரிய படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற ஊர்காவல் படையில் உள்ள 23 ஆயிரம் பேரினது எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
கற்பிட்டியில் ஜூன் மாதம் 21 ஆம் நாள் ஊர்காவல்படையினர் முகாமில் ஜோன் அமரதுங்க பேசியதாவது:

சிறிலங்கா காவல்துறையினரது கடமைகளை ஊர்காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் காவல்துறையினரை விட குறைவான ஊதியம் பெறுகின்றனர். நாளாந்த ஊதியமே ஊர்காவல் படையினருக்கு வழங்கப்படுகிறது.

அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஊர்காவல் படை கலைக்கப்படமாட்டாது. மாறாக அது வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் ஜூன் 23 ஆம் நாள் (2002) விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில்,

முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை ஒப்புக் கொண்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயான நல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்கும் வகையில் சில சக்திகள் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியை விரும்புகிற அனைத்து முஸ்லிம்களும் இத்தீவிரவாதக் குழுக்களின் செயற்திட்டங்களுக்குப் பலியாகாமல் அமைதிக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகம் மீதான இத்தாக்குதலையடுத்து தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பதற்றம், மோதல் ஏற்பட்டது.
அப்போது மக்கள் நடத்திய பாரிய அளவிலான பேரணியில் "ஒசாமா" குழு எனப்படுகிற முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரே இத்தாக்குதலுக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது.

ஒசாமா குழு என்றும் ஜிகாத் குழு என்றும் இயங்கி வந்த இக்குழுவை சிறிலங்கா இராணுவம் இயக்கியது. அதன் தலைவராக ஹக்கீம் என்பவர் செயற்பட்டு வந்தார்.

ஜூன் மாதம் 26ஆம் நாள் (2002) இல் பி.பி.சி. தமிழோசை நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த தமிழ் ஊடகவியலாளர் பி. சதாசிவானந்தத்தின் மூதூர் இல்லம் மீது மீண்டும் ஒசாமா அணி என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த ஜிகாத் குழு தாக்குதல் நடத்தியது.

சதாசிவானந்தம் நடத்திய ஆதரவற்ற சிறார் விடுதியையும் இந்த ஜிகாத் குழு தாக்கியது.

மூதூரில் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 6 பேர் பலியாயினர்.
வன்முறைப் பகுதிகளை பார்வையிடச் சென்ற சிறிலங்கா உள்விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிய கதையாக ஒரு உண்மையையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அமைச்சராக இருந்த ஜோன் அமரதுங்க,

கடந்த வாரம் (2002 ஜூன் 23 ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை) நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு சக்தி இயங்குவதாக அரசாங்கம் நம்புகிறது என்று கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இத்தகைய தீவிரவாதக் குழுவினரைக் கொண்டு சிறிலங்காவின் உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக முஸ்லிம் ஊர்க்காவல் படை வலுப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் இந்த ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

தீவிரவாத முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபக்கம் தனது துணைப் படைகளில் இணைத்துக் கொண்டிருந்த நிலையில் - சர்வதேச அளவில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கிற லஸ்கர் இ தொய்பா, சிறிலங்காவின் ஆசீர்வாதத்துடன் கிழக்கில் கால் பதித்தது.

சிறிலங்காவின் கிழக்கில் ஜிகாத் குழுவாக அறியப்படுகிற இந்தக் குழு பாகிஸ்தானின் உதவியுடன்தான் இயங்கி வருவதாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவும் எச்சரித்திருந்தது.

இந்தியாவின் "அவுட்லுக்" வார ஏட்டில் இது தொடர்பான கட்டுரையும் வெளியாகி இருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பி.ராமன், முஸ்லிம் ஜிகாத் குழு தொடர்பிலான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அப்போது சிறிலங்கா
வுக்கான பாகிஸ்தானிய தூதுவராக ஓய்வு பெற்ற இராணுவ கேணல் பசீர் வாலி நியமிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தை நிராகரிக்குமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் எழுதியிருந்தார்.

அவர் எழுதிய கட்டுரையின் விவரம்:
இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவது தொடர்பில் எதுவித ஆதாரமும் இல்லை. இருந்தபோதும் சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர் இ தொய்பா அமைப்பு ஆர்வம் காட்டுகிறது.
கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது.

2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் "ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர் இ தொய்பா நெருங்கிய தொடர்புகொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது.

இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச் சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை என்றும் இராமன் தெரிவித்திருந்தார்.

"அவுட்லுக்" இதழ் வெளியிட்டிருந்த இக்கட்டுரையை 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் நாளன்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட மறுப்பறிக்கை:
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை வெளிவிவகார அமைச்சு நிராகரிக்கிறது.

இந்திய உளவு அமைப்பான றோவின் முன்னாள் செயற்பாட்டாளரால் தவறான தகவலை பரப்பும் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எதுவித ஆபத்தான சூழ்நிலை உணரப்பட்டாலும் பாகிஸ்தான் மீது பகைமையைத் தூண்டு வகையில் ஐ.எஸ்.ஐ. மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று அந்த மறுப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து இயங்குகிற காஸ்மீர் ஆயுதக் குழு லஸ்கர் இ தொய்பா. மர்கஸ் தாவா- வல்- இர்ஸாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஆயுதக் குழுதான் லஸ்கர் இ தொய்பா.

இச்சூழலில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் ஆலயம் அமைக்க பேரினவாத சக்திகள் முயற்சித்தன. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன.

இதைக் கண்டித்து ஏப்ரல் 12ஆம் நாள் (2005) கொழும்பில் சிங்கள பௌத்த தேசியவாதிகள், பௌத்த பிக்குகள் கண்டனப் பேரணி நடத்தினர்.
அந்தப் பேரணி முடிவில் புத்த சாசன அமைச்சுவிடம் சிங்களப் பேரினவாதிகள் கையளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பொத்துவில் பிரதேசத்தில் சட்டபூர்வமான பௌத்த மத செயற்பாடுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், ஆயுதமேந்திய முஸ்லிம் தீவிரவாதிகளும் எதிர்க்கின்றனர். இந்த முஸ்லிம் ஆயுதக் குழுவினர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் கல்முனையில் இரு சிறிலங்கா காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியை ஜாதிக ஹெல உறுமய நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜிகாத் குழுவின் தலைவராக குற்றம்சாட்டு வந்த அப்துல் சமது அப்துல் ஹக்கீம் என்ற மதுகர ஹக்கீம் (வயது 42) அடையாளம் தெரியாத நபர்களால் மூதூர் பளை நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவ நாளன்று மோட்டார் சைக்கிளில் தனது ஹலால் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. எப்போதும் அவருடன் இருக்கும் 6 பாதுகாப்புப் படையினர் சம்பவம் நடந்த போது உடனிருக்கவில்லை.
கட்டைப்பறிச்சான் சிறிலங்கா இராணுவ முகாமிலிந்து 500 மீற்றர் தொலைவில் மூதூர் பிரதான வீதியில் ஹக்கீம் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிகாத் குழுவினரிடையிலான உள்மோதல் அல்லது வர்த்தக மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் அப்போது தெரிவித்திருந்தனர்.

1985, 1990, 1995 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் பாரிய அளவில் நடைபெற்ற தமிழ், முஸ்லிம் வன்முறைகளில் தொடர்புபட்டவர் இந்த ஹக்கீம் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் மீது ஜிகாத் குழு இயங்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின் விவரங்களை கொழும்பு ஆங்கில நாளேடான "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியிருந்தது.
ஜிகாத் குழுவின் செயற்பாடுகளுக்கு உதவியாக இருந்த திருகோணமலையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் 22 ஆம் படையணியில் மேஜர் தரத்திலான அதிகாரி, புலனாய்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

சிறிலங்காவின் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஊடாக ஜிகாத் குழுவினருக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டன என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அமைச்சர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பாகிய பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்க்ஸ்லி றொட்ரிக்கோ, கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை வெளியிட்ட போது கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுதக் குழு இயங்குகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்திய போதும் தான் ஜிகாத் குழு என்று சொல்லவில்லை சில ஆயுதக் குழுக்கள் இயங்குகிறது என்று மீண்டும் விளக்கமளித்தார்.

அண்மையில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுத்த பல முஸ்லிம் இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தாக்கி அச்சுறுத்தியிருந்தது.
முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக் குழுக்கள் இயங்குவது தொடர்பான செய்திகள் தொடர்பில் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் நேரடியாக பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இருப்பினும் முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுவில் இணைவதற்கான சூழல் இருப்பதாக எச்சரித்து வந்தனர்.
அண்மையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் முஜிபுர் ரகுமான் வெளியிட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதமேந்துகிற உரிமை இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆயுத நடமாட்டத்தை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அப்பிரதேசத்தில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் நடமாடலாம் ஆனால் அவர்கள் ஆயுதக் குழுவினரா? ஜிகாத் குழுவினரா என்பது எமக்குத் தெரியாது என்று பிரசாத் சமரசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்கா இராணுவமானது முஸ்லிம் தீவிரவாதக் குழுவினரை முதலில் ஊர்காவல் படையில் இணைத்து உத்தியோகபூர்வ துணை இராணுவக் குழுவாக செயற்படுத்தியது.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் துணையுடன் ஜிகாத் குழுவை உருவாக்க அனுமதித்து தெற்காசிய பிராந்திய அமைதிச் சீர்குலைவுக்கு உடந்தையாக சிறிலங்கா செயற்பட்டு வருகிறது.

இதனிடையே ஜெனீவா பேச்சுக்களில் இந்தக் குழுவினரை விடுதலைப் புலிகள் பகிரங்கப்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திவிட்டனர்.

இதனால் சர்வதேச சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற நடுக்கத்தில்-
உத்தியோகப்பூர்வமான ஜிகாத் குழுவாக-
"கிழக்குப் பிரதேச சிறிலங்கா இராணுவ முஸ்லிம் படையணி"யை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகவே சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நன்றி:-www.puthinam.com