Saturday, July 08, 2006

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்!

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.

இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.

தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.

தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.

கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.

சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.

நன்றி:--- இளங்கோ (இலண்டன்) http://www.webeelam.com/

36 comments:

Anonymous said...

You may include Ram and S.Swamy also in the list.

பாலசந்தர் கணேசன். said...

நீங்கள் பிராமணர் என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தும் , கருணாநிதியை எதிர்த்தும் எழுதுகிறீர்கள் என்ற கேள்வியை சோவிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் " 1996 ஜெயலலிதா வேறு ஜாதிகாரராக மாறிவிட்டாரா? அல்லது கருணாநிதி பிராமணராகி விட்டரா? என்று கேட்டார். சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறார். துக்ள்க் 75000 காப்பி விற்பனை ஆகின்றது. ஆனால் அவர் பிராமணர் என்பதால் அவரை நீங்கள் தான் சந்தேக பார்வையில் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகிறது. சோ கிண்டலடிக்காத, விமர்சனம் செய்யாத அரசியல்வாதியே கிடையாது. எமர்ஜென்சியை எதிர்த்த தைரியசாலி அவர். கருணாநிதி ஆட்சியில் பாடாய்படுத்த பட்டது துக்ளக். எனினும் 1996இல் அவர் கருணாநிதி, மூப்பனார் கூட்டணி அமைய உறுதுணையாக இருந்தார் என்பது நினைவு கூறதக்கது.

ஜூலியன் said...

Your fowarded article gives us a mixed message and also shows an equivalent hatred towards Brahmins. Undoubtly there is a high percent of Tamilnadu Brahmins who hate ezham tamils. They subtley tell they stand against LTTE, not against ezham. However their actions and reactions show you otherwise. Yet, there is a quarter in Tamilnadu that happens to equate Congress to India and Sonia to Mother India. It is not necessarily comprised of Brahmins, but it hates Ezham tamils more than many Tamilnadu brahmins do. Look around tamil blogs. You can find such individuals with venom in words. Thus, do not blindfoldly attack brahmins in a very simplified fashion.

In Kusbhu, Suhashini's issue, Tamilnadu pro-ezham crowd was flatly wrong and took a backward step in time. Only because it supports ezham tamils I can not support them in Kusbhu's issue.

Anonymous said...

You may include two other characters,Ram and S.Swamy in that list.

ஈழவன் said...

இக்கட்டுரையோடு முற்றாக ஒத்துப்போக முடியவில்லை.
பெரும்பாலும் ஜூலியன் சொன்னவை தாம் எனதும்.
குஷ்பு, சுகாசினியின் படங்களைப் புறக்கணிப்போம் என்று "கோமாளித்தனமாக" அறிவித்த புத்தியின் தொடர்ச்சி இக்கட்டுரையிலும் தெரிகிறது.

Anonymous said...

டென்னிஸில் கிருஷ்ணன் குடும்பம் இருந்த வரையில் பாராட்டி விட்டு அமிர்தராஜ்களும் பயஸ்களும் வந்த உடன் அவ்விளையாட்டின் விதிகளை மறந்துவிட்டாரா சோ? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்.

ஆனாலும் ஒருத்தர் பிடிக்கலைன்னா அவரு என்ன பண்ணினாலும் தப்பு, அவரு பண்ணறது எல்லாம் ஜாதிக்காக.

என்ன அறிவு. என்ன கண்டுபிடிப்பு. நல்லாயிருங்கடா சாமி.

நாமக்கல் சிபி said...

சோ தப்பு செய்தார்னா பார்ப்பனர்களை அடிங்க, விஜயகாந்த் தப்பு செய்தார்னா நாயுடுவை அடிங்க, ராமாதாஸ் தப்பு செய்தார்னா வன்னியரை அடிங்க...
ஒருத்தர் தப்பு செய்தார்னா அந்த இனத்தையே சொல்வது தவறு.

வரவனையான் said...

சோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில் மிதக்கும் முளை கொண்ட பிராணிகளை
என்றைக்கு தமிழ் நாட்டை விட்டு ஓட்டி விடுகிறோமோ அன்று தான் விடியும்.

Anonymous said...

You have absolutely no idea what you are talking about - all the stuff you said in this article are just plain gas! That periyar saying you started off this article with is the most abused statement. You and the other so called "rational thinkers" seem to have a template to write about brahmins and aryans and time and again just fill in the blanks. All you guys need to do is just "think" - then you can "rationally think"
..ram

Anonymous said...

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும்.

Cricket is the most popular game
in India.CHO is knowledgeable
about it and so he writes.
The selection of the Indian
cricket team is not done
on the basis of caste.Dinamalar
is giving much importancr to
World Cup.It is also owned
by brahmins.

Your post is full of nonsense.

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் எழுதியதாக நினைத்து விழும் சாத்துக்களைத் தாங்கிக் கொள்ளுங்கள்.

வரவனையானின் பின்னூட்டம் சந்தேகமாகவுள்ளது.

கட்டுரை தொடர்பாக ஒரு சிரிப்பு மட்டுமே.
என்வரையில் பார்ப்பன எதிர்ப்பு, துவேசம் என்பதை ஈழத்தில் பெரியளவில் காணவில்லை. போராட்டத்தை நடத்துபவர்களிடமும் காணவில்லை. அவர்கள் எதிரிகள் தொடர்பில், கருத்துத் தொடர்பில் தெளிவாகவே இருக்கிறார்கள்.

வெற்றி said...

/* Look around tamil blogs. You can find such individuals with venom in words. Thus, do not blindfoldly attack brahmins in a very simplified fashion. */

/*
ஒருத்தர் தப்பு செய்தார்னா அந்த இனத்தையே சொல்வது தவறு */

யூலியன் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரின் கருத்தே என் கருத்தும். நாம் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக வசைபாடுவதன் மூலம் அச் சமூகத்திலிருக்கும் ஈழ ஆதரவாளர்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமல்ல, அவர்களின் ஆதரவையும் நாம் இழக்கலாம். ஈழத்தமிழர்களாகிய நாம் மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் இது.

Anonymous said...

இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.

இதைப்போன்ற கட்டுரைகள் எல்லாம் திருவாளர் டோண்டு, வஜ்ரா சங்கர், ஜயராமன்,இத்யாதி... போன்றவர்களுக்கெல்லாம் கண்ணுக்கு தெரியாது. இதற்கெல்லாம் பின்னூட்டம் இடுவதற்கு அவாள்களிடம் சரக்கு ஒன்றும் இல்லையென்று தோன்றுகிறது. 'அவாள்'களுடைய சார்பு கட்டுரைகள் வலைப்பதிவுகளில் வந்தால் எல்லோரும் கூட்டு சேர்ந்து போற்றுவதும் புகழ்வதும் தாங்க இயலாது. ஏனென்றால் அது ' அவாள் ' களின் இனப்பாசம்.

Anonymous said...

சோ இவாளின்ர புலித்தலைவர புகழ்ந்திருந்தா? இவாளல்லாம் சோவாள
திட்டிருப்பாளா..? சோஅவாள் இந்தியாவுல எல்லாரையும் திட்டுறாள்
பேசுறால் அவாளுக்கு வராத கோபம் இவாளுக்கு எதனால் இவாளுக்கு மட்டும் வந்தது இவாளின்ர புலித்தலைவர திட்டிற்றாள் சோஅவாள்

சோ அவாளிடம் ஒருவாள் ஒரு கேள்வி கேட்டாள் ஒரு தடவ அதாவது
இந்தியாவுக்கு மைக்கல் ஜக்சன் வந்ததைபற்றி. நீங்க என்ன நினைக்கிறீங்க
என்று. சோ அவாள் பதில் சொன்னாள் இப்படி ஒரு நாயகட்டி போட்டு
அடிச்ச எப்படி கத்துமோ அப்படி கத்துற ஒருத்தர பாக்கிறதுக்கு
எல்லாரும் ஓடிபோறாங்க இதைப்பற்றி நான் வேறஎன்ன சொல்ல
அப்படின்னார். அதுக்கு மைக்கல் ஜக்சன் ஒரு நாயவிட்டு சோஅவாள
கடிக்க விட்டுருக்கலாம். யார்சொன்னது துக்ளக் பத்திரிகை விலைபோகலைன்னு புலி பத்திரிகைய விட அதிகம்தான்
பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான் பார்ப்பான்
வைச்சுக்குங்க

thamillvaanan said...

வணக்கம் கரிகாலன்

உங்களுடைய இணைப்புக்கு நன்றி. பல கருத்துக்களை அறியகூடியதாக இருந்தது.

ஒரு சில களைகளை கருத்தில் எடுத்து வயலே களைகள் நிரம்பியது என்பதுபோல வாதிப்பது ஏற்ககூடியதல்ல. சோவும் இந்துராமும் களைகள்.

இலங்கையில் உயிர்வாழ்வுக்கான போராட்டத்தை செய்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களே சிங்களவர்களை இவ்வாறு வெறுப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் பிராமணர்களை வேரோடு அழிக்கவேண்டும் என்ற கருத்தியல் அடிப்படையில் பல கருத்துக்களை காணக்கூடியதாகவுள்ளது.அது ஆரோக்கியமானததல்ல என்பதே என் கருத்து.

தனியே சோ என்ற தனிமனிதனையும் அப்பத்திரிகையையும் தான் இக்கட்டுரை சுட்டிநின்றிருக்குமானால் மிகவும் நல்ல கட்டுரையாக இருந்திருக்கும்.

Anonymous said...

i am a brahmin,
yes i am a brahmin,
but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,
please dont create hatred stop this nonsense.
you guys by making useless hatred, trying to disturb the peace of TN
so stop this nonsense.

Gyanadevan said...

கரிகாலன்,
உங்கள் பதிவு, தேர்தல் சமயத்தில் தெருமுனையில் பேசும் மூன்றாம் தர பேச்சாளரின் பேச்சு போல் வெறும் சத்தம் மட்டுமே உள்ளது. வருத்தம் தான்.

Muthu said...

நண்பர் வெற்றிக்கு,

ஈழ தமிழர்கள் நிலை சிக்கலாகி உள்ளதுதான்.பலரின்ஆதரவு வேண்டும் தர்ன.

அதற்காக சோ மற்றும் குழுவினரின் ஆதரவும் வேண்டும் என்ற அளவிற்கு நாம் போகவேண்டுமா?

Anonymous said...

///i am a brahmin,
yes i am a brahmin,
but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,
please dont create hatred stop this nonsense.
you guys by making useless hatred, trying to disturb the peace of TN
so stop this nonsense.
///
டியர் பிராமின் அவர்களே,

இதைப்போன்ற உங்களுடைய பின்னோட்டத்தை 'டோண்டு, வஜ்ரா, ஜயராமன், ......... போன்ற வலைப்பதிவுகளுக்கும் போய் தமிழினத்திற்கு எதிராக அவர்கள் எழுதும் அவர்களுடைய கட்டுரைகளுக்கும் எழுதுங்களேன். ப்ளீஸ்

நன்றி: தமிழ் நண்பன்

Anonymous said...

Am sorry to comment,
useless article with no value additions,
feel like a drunken persons talk infront of TASMAC

கருப்பு said...

அந்த அஃறினையை எல்லோரும் மறந்திருந்த வேளையில் மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். புலிகளும் ஈழத்தமிழர்களும் பாப்பானின் சோற்றில் மண்ணையா அள்ளிப் போட்டனர்? பிறகு ஏன் இந்த வெறுப்பு அவர்கள் மேல்??? ச்சே திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

pls dont approve this comment.

karikaalan,

could u pls write to me at

mathygrps at gmail dot com

i would like to talk to you about thamizmanam natchaththiram.

nandri!

-Mathy

ரவி said...

சோ, நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க...

(so) என்று சொன்னேன்...:))

Anonymous said...

ungalukku vera velaiye illaya i wasted my 5 mins time

சீனு said...

//சோ தனக்கு சரியென்றது பட்டதை செய்கிறார் எழுதுகிறார். துக்ள்க் 75000 காப்பி விற்பனை ஆகின்றது. ஆனால் அவர் பிராமணர் என்பதால் அவரை நீங்கள் தான் சந்தேக பார்வையில் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகிறது//

பாலச்சந்தர் கணேசன்,
மிகச் சரி! நானும் அதை ஆமோதிக்கிறேன் (உடனே என்னை ஒரு group-ல் சேர்த்துவிடாதீர்கள்).
ஆனால், அவர் வி.பு.வை எதிர்ப்பதுதான் நெருடல். O.K. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சார்புத்தண்மை இருக்கும்.

ஒருத்தர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே சொல்வது தவறு.

//You may include two other characters,Ram and S.Swamy in that list.//
//இந்தக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. அவாள்களைத்தவிர அனைவரும் 'கேனையர்கள்' என்ற எண்ணத்தில்தான் ' சோ ' வுடைய எழுத்துக்களில் தமிழர்களையும் தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல் அதிகமாக இருக்கிறது.//
// am a brahmin,
yes i am a brahmin,
but i 100% support my tamil brothers in ezham.,because they speak tamil, because they are basically from tamil nadu,//
அது ஏன் இப்படி எழுதிபவர்களெல்லாம் "பெயரிலி"க்களாகவே எழுதுகிறார்கள்? யார் திட்டப்போகிறார்கள்?

Nakkiran said...

போதுமப்பா இந்த பிராமண எதிர்ப்பு.. போய் உருப்படும் வேலையை பார்ப்போம்

Sundar Padmanaban said...

பின்னூட்டத்தை எப்படித் துவங்குவது என்றே புரியாமல் சில நிமிடங்களாக அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

//கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். //

அநியாயத்துக்கு ஒக்காந்து யோசிக்கறாய்ங்கப்பா. பயங்கரமான காமெடி!

இப்பதிவை எழுதியவர் இலங்கையில் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டுவரும் ஒரு துயரமான விஷயத்தை இப்படி அநியாயத்துக்கு நகைச்சுவைப் படுத்திவிட்டார் என்பதுதான் வருத்தம். ஒரு வேளை இதை முகமது பின் துக்ளக் படத்தைப் பார்த்துவிட்டு எழுதியிருப்பாரோ!

என்னமோ போங்க!

(எனக்கு 'திம்மி' பட்டம் கிடைக்கப் போகிறது என்று சக பதிவர் ஒருவர் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார். அநேகமாக வாரயிறுதியில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்!).

Anonymous said...

சோ, இன்றல்ல நீண்ட நெருங்காலமாகவே தன்னை அறிவிக்கப்படாத இந்துத் தீவிரவாதியாகத்தான் நினைத்துக்கொண்டு எழுதி வருகிறhர். வக்கீலல்லவா அதனால் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் வெளிவரக்கூடிய அளவில் தன்னால் முடிந்த இந்துத்தீவிரவாதத்தை வளர்த்து வருகிறhர்.

தமிழீழப்போராட்டவாதிகளை அவருக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. எப்படி நமக்கு சோவைப் பிடிப்பதில்லையோ அப்படி அவருக்கு உரிமைப்போராட்டம் நடுத்துவோரைப் பிடிப்பதில்லை. அவ்வளவுதான்.

Anonymous said...

சோ ஒரு இனவாதி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் எல்லாரும் இனவாதிகள் இல்லை. சோவைக்குறித்து நீங்கள் சொன்ன பல விவரங்கள் உண்மை. கிரிக்கட்/பிராமணம் போன்றவற்றை தவிர்த்து இருந்தால் இந்த பதிப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கும்.

சோவை, பொது நூலகங்களில் துக்ளக் படிக்கும் பெருசுங்க நம்பிவிடக்கூடாது. இந்த வட இந்திய TV Channels தமிழ்நாடு/தமிழர் பற்றிய விவாதம்னு நம்ம ஊரு பெருசு யாரன்னா கூப்பட்னும்னா, இவரை கூட்டிட்டு வந்து உக்கார வச்சுடராங்க. இவரு சொல்லறதத்தான் வடக்கத்திய காரணுங்க நம்பறானுங்க. அத நம்மால ஒன்னுமே செய்ய முடியாது.[:(]

Anonymous said...

இப்படி பொத்தம் பொதுவாக முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை .எனக்கு சோ வை பிடிக்கும் .ஆனால் தேடி படிப்பதில்லை .அவரது கருத்துக்களில் இலங்கை பிரச்சனை தவிர அனைத்திலும் உடன்பாடு உண்டு .அத்துடன் இந்திய அரசியலில்அவர் யாரையும் தொடர்ந்து எதிர்ப்பதுமில்லை ஆதரிப்பதுமில்லை அவ்வப்போது விமர்சிப்பதுடன் சரி

Anonymous said...

/// வரவனையான் said...
சோ போன்ற யூத ஆரியக்கொழுப்பில் மிதக்கும் முளை கொண்ட பிராணிகளை
என்றைக்கு தமிழ் நாட்டை விட்டு ஓட்டி விடுகிறோமோ அன்று தான் விடியும்.

/////
இது நட்சத்திர பிண்ணூட்டம்

Anonymous said...

No useful purpose will be served by all of us fighting in a dirty pond!

The problem of tamilians must be whole-heartedly and with all people's support has to be delat with. Here, Cho's views or any other persons' view do not matter. When Kalaignar can wield so much influence why can't he use it in a constructive way and press Centre to find an amicable settlement. It is all a funny thing only persons from far off land need to negotiate for a settlement. We as Tamilians as a whole can lead and create a conducive atmosphere for a lasting solution and whether Kalaignar will do that?

uvi

Anonymous said...

"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி"

"பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் பாப்பனுக்கு உடல் முழுவதும் நஞ்சு."

சத்திய வார்த்தைகள் இந்தகாலத்துக்கும் மிக பொருந்தி வருகிறது, உண்மையில் பெரியார் ஒரு தீர்க்கதரிசிதான். சோவிற்கு மிக கச்சிதமாக இந்த தொப்பி பொருந்துகிறது:-))

VSK said...

பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous said...

Well said !!!! very good post ... a must read for all tamils ... everyone must first identify the potential terror in tamilnadu in the form of brahmins... We already knew a lot about CHO and his unabashed support for them... but ... RAM is he also a black (white/aryan) sheep ??? can U please post his threats also ???? i thought he is good and hindu is a fair option.... evrybody are the same!!!!! Oh no ...

bala said...

//evrybody are the same//

Dear Tamizhan,

In the name of prevention of cruelty to fellow human beings, I appeal to you: "Please stop writing in English;better still ,stop writing altogether.Also, please change your name.You are an insult to Tamils and TamilNadu."

bala