Thursday, August 10, 2006

யுத்த தர்மம்.

போர் என்றால் வைத்தியசாலைகள்,அதுசார்ந்த அம்பியூலன்ஸ் வண்டிகள்
என்பனவற்றை தாக்கக்கூடாது என்பது ஜ.நா சபையால் வரையப்பட்டு
உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை.

ஆனால் இலங்கையில் ? நேற்றைய தினம் சிறிலங்காவின் இராணுவ ஆழ
ஊடுருவும் படையணி வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில்
தாக்குதல் நடாத்தியிருப்பதோ அம்பியூலன்ஸ் வண்டி மீது.
அதுவும் இவ் அம்பீயூலன்ஸ் வண்டியானது நெடுங்கேணி அரசினர் வைத்தியாலைக்கு சொந்தமான வண்டி.கொல்லப்பட்டவர்களில் ஒருவர்
வைத்தியசாலை டொக்ரர் அவரின் மனைவி,மற்றும் இரு தாதிமார்,சாரதி

வழமைபோலவே தாம் இத்தாக்குதலை நடத்தவில்லை என்று இராணுவம்
மறுக்கலாம். ஜ.நா நடைமுறைகளை மீறுவது இலங்கை படைகளுக்கு
புதிய விடையமுமல்ல.சிங்கத்தின் வழித்தோன்றல்களிடம் மனிதத்தன்மையினை எதிர்பார்ப்பது எமது தவறல்லவா?

2 comments:

கோபா said...

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் !


உணர்வுபூர்வமான பதிவுகள் தொடர்ந்து வர வேண்டும் !!

மக்கள் சார்பாக நன்றி!!!

ப்ரியன் said...

இந்த பின்னூட்டம் வெளியிடுவதற்கு அல்ல:

உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததால் பின்னூட்டமாக இடுகிறேன் இன்றைக்கு வெளியாகி இருக்கும் ஆனந்த விகடனின் தலையங்கம் இது.

ஆனந்த விகடன் தலையங்கம்:

எங்கே குரல்?

சிங்கள போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தில் அளித்து வந்த பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி, அவர்களை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்-கிறது மத்திய அரசு. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் காட்டிய பலமான எதிர்ப்பின் விளைவே இந்த இட மாறுதல்.

இலங்கை மண்ணில் மோதல்கள் நிகழும் இந்த நேரத்தில்... அந்நாட்டு அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொந்தளிப்பான உணர்வுகள் அலையடிக்கும் இந்த நேரத்தில்... தமிழ் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படியரு பயிற்சி முகாமுக்கு அனுமதி அளித்த மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது.

இலங்கையின் ராணுவ நடவடிக்கைக்கு இவர்கள் உதவ மாட்டார்கள். கூட்டங்களில் அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களை அமைதிப் படுத்தவும்தான் இந்தப் பயிற்சி என்று மத்திய அரசு சொல்வது எடுபடாத சமாதானம்!

நல்லது நடக்கும்போதெல்லாம், மத்திய அரசிடம் வலியுறுத்தி இதை நாங்கள்தான் செய்ய வைத்தோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நடந்திருக்கும் இந்த நெருடலான சம்பவத்துக்குச் சொன்ன பதில்... எதிர்ப்புகள் எழுந்திருப்பதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசுக்கு இங்குள்ள உணர்வுகளைத் தெரிவித்து, பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டோம் என்பதே!

இந்தச் சூழ்நிலையில் இப்படியரு பயிற்சி முகாம் தமிழகத்தில் நடந்திருக்கக் கூடாது என்பதுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றால், எங்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமலே மத்திய அரசு இதை நடத்தியது மிகப் பெரிய தவறுÕ என்று மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா?

மாநில உரிமைகள் பற்றிக் கால காலமாகக் குரல் கொடுப்பவர்கள், இப்போது அதைச் செய்யவில்லையே, ஏன்?

குறிப்பு இதை சக பதிவாளர் : ஈழபாரதிக்கும் http://eebarathi.blogspot.com/ பின்னூட்டமாக அனுப்பி இருக்கிறேன்.நான் என் பதிவில் இட்டால் கவனம் பெறாமல் போக வாய்ப்பு உள்ளதாலேயே இந்நடவடிக்கை.நன்றி.