Friday, August 11, 2006

புலிகளின் விமானம் களத்தில்??

புலிகளின் வான்படை விமானம் பலாலி பெரும் தளத்தின் மீது தாக்குதல்?

அந்தா இந்தா என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருந்த பூனை கடைசியில் வெளியே வந்துவிட்டது.ஆம் புலிகளின் விமானப்படை விமானம் ஒன்று பலாலிபெரும் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ்நெற் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையனும் ஏறக்குறைய ஒப்புக்கொண்டுள்ளார்.இருந்தாலும் அரசு படைகளிடம் இருப்பதை போல புலிகளிடம் இருக்கும் விமானங்கள் யுத்த விமானங்களாக இருப்பதற்கு சாத்தியம் இல்லை.அவை இலகு இரக விமானங்களாகவே இருக்கும்.அப்படிதான் வரும் தகவல்களும் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் புத்தியுள்ளவனுக்கு புல்லும் ஆயுதமாகும்.ஆம் சிறிய விமானங்களை வைத்துக்கொண்டு இராணுவத்துக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்த புலிகளால் முடியும் என்பதுடன் சில குறிப்பிட்ட முக்கிய இலக்குகளை தாக்கவும் முடியும்.

இது புலிகளின் கடந்த கால வரலாற்றில் நிருபித்து காட்டப்பட்டுள்ளது.

No comments: