Saturday, November 11, 2006

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.

கதிரவெளிப் பகுதியிலிருந்து புதன்கிழமை புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை

* கண்காணிப்புக் குழு தெரிவிப்பு

இலங்கை அரசாங்கமும் படைத் தரப்பும் கூறுவதுபோல் கடந்த புதன்கிழமை கதிரவெளிப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் படை முகாம்களை நோக்கித் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியர் கூறுகையில்;

கதிரவெளியில் படையினரின் கடுமையான தாக்குதலுக்கிலக்கான பாடசாலைப் பகுதியில் புலிகளின் முகாம்கள் எதுவுமிருக்கவில்லை.
இதனை அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தியதுடன் அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினரும் புலிகளின் முகாம்கள் எதனையும் காணவுமில்லை.
புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான அறிகுறி எதுவுமில்லை.


பாடசாலையில் இருந்த அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தப் பாடசாலையின் மீதே தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தரப்பாயிருந்தாலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.


http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm

No comments: