Sunday, February 04, 2007

சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்

எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையேசந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்அவர்களின் உரையாடல் இருக்கும்.

எண்ணத்தில் உதித்து சில மாதங்களேஆன ,முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? சரி ,சரி கைதட்டியது போதும்.இன்றைக்கு அவர்கள் கதைக்கும் விடையம் அரசியலாக இருந்தாலும்தொடர்ந்து பல்வேரு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்..இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்.................................... என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.ஒரு பெயரை முன்மொழியுங்கள்.

அன்புடன் கரிகாலன்..

Photobucket - Video and Image Hosting



.சுப்புக்குட்டி:-வணக்கம் அம்மான்.

சுப்பு அம்மான்:-வணக்கம்டா மோனை.எங்க துலையாலையோ?

சுப்புக்குட்டி:-இல்லை அம்மான் சும்மா ஒரு தேத்தண்ணி குடிப்பம் எண்டு வந்தனான்.

சுப்பு அம்மான்:-இல்லையடா மோனை நீ அடிக்கடி அம்மான் அம்மான் எண்டு கூப்பிட எனக்கொரு விசியம் எல்லோ ஞாபகத்துக்கு வருது.அம்மான் எண்டு யாரை சொல்லுறது எண்டு தெரியுமோ. அந்த காலங்களில அப்பு,ஆச்சி ,குஞ்சிஅப்பு எண்டு கூப்பிட்ட காலங்களில தாயின்னரை சகோதரங்களை தான் அம்மான் எண்டு சொல்லுறது.அனால் இப்ப சிலதுகள் அம்மான் எண்டால்அது இது எண்டு கரடிவிட்டுக்கொண்டிருக்கினம்.

சுப்புக்குட்டி:- அம்மான் நீங்கள் சந்தடி சாக்கில எங்கேயோ அம்பு விடுறீங்கள் போல கிடக்கு.

சுப்பு அம்மான்:- அதை விடு மோனை.. என்ன மோனை புதினங்கள்?

சு.குட்டி:-எங்கடை ரணிலார் எல்லோ நேபாளம் போயிருந்தவராம்.

சுப்பு அம்மான்:-எட மோனை அவர் அங்க என்னத்துக்கடா மோனை போனவராம்.?எங்கடை அரசியல் வாதிகள் அங்கை எல்லாம் போகமாட்டினமே.

சுப்புக்குட்டி:-நேபாளத்திலே சண்டைஎல்லாம் முடிஞ்சு போச்செல்லே அம்மான்.அதுதான் அங்கை ஒரு மகாநாடாம் இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் மோதலின் பின்னரான பொருளாதார முகாமைத்துவம்எண்ட தலைப்பிலே.அதுக்கு தான் ரணிலை கூப்பிடவையாம்.

சுப்புஅம்மான்:-அடிடா எண்டானாம் புறப்படலையிலை.சரி,சரி அவர் அங்கை என்ன சொன்னவராம்?

சுப்புக்குட்டி:-நேபாளம் முன்னேற வேண்டும் எண்டால் நாடும் அதன் மக்களும் ஒற்றுமைப்படவேண்டும் எண்டும் நேபளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என்றும் வேற பல விசியங்களையும் சொன்னவராம்.

சுப்பு அம்மான்:- எனக்கெண்டா சிரிப்புதான் வருதடா தம்பி.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி... எண்டெண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே.தன்ரை நாட்டிலே,நாட்டையே சீரழிக்கும் இனப்பிரச்சனையையே தீர்க்க மனதில்லாதவர்கள் அடுத்த நாட்டுக்கு போய் அவர்களுக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா சிரிப்பு சிரிப்பு தான் வருது. ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லையடி பெண்ணே எண்டதுதான் எனக்கு ஞாபகம் வந்து துலைக்குது.

சுப்பு குட்டி:- கூப்பிட்டவர்களை தான் சொல்லவேணும்.அம்மான் நீங்கள் நீங்கள் சிரிப்பா சிரிக்க எண்டு சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது இவர் இப்படி வெளிநாட்டில இருக்க இவரின் கட்சியிலை இருந்து 17 பேர் எல்லோ கூண்டோட கட்சி மாறிட்டினம்.கட்சி மாறினதுமல்லாமல் எல்லாருக்கும் அமைச்சு பதவிகள் நாடே சிரிப்பா சிரிக்குது.

சுப்பு அம்மான்:- இப்ப இலங்கையின்னரை அமைச்சரவையயை பாத்தியே தம்பி 107 பேர்.2 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டுக்கு 107 அமைச்சர்கள் எண்டால் ,இனி அவயின்றை சம்பளம்,கிம்பளம் எண்டு எவ்வளவு செலவுகள் பாத்தியேடா மோனை. பதவியாசை எப்படி எல்லாம் மனுசரை ஆட்டுது பாத்தியோ தம்பி. முந்தின காலங்களிலே எல்லாம் தொண்டமானின்றை கட்சி மட்டும்தான் யார் ஆட்சிக்கு வரீனமோ அவரோடை கூட்டு வைக்கும்.அதிகாரத்தில் இருந்தால் தான் தனது ம்க்களுக்கு எதாவது? நன்மை செய்யலாம் எண்டு.இதிலே கண்டியோ ஆருக்கு நன்மை எண்டு சொல்லாமலே தெரியும் தானே.

சுப்பு குட்டி:-ஓம் அம்மான் இண்டைக்கும் அந்த மலையக மக்கள் கல்விஅறிவு பெறாமல் ,சரியான வீட்டு வசதிகூட இல்லாமல்,குடிக்கும்,சினிமாவுக்கும் அடிமையாக இருப்பதற்கே காரணமே மேற்படி தலைவர்கள் தான்

சுப்பு அம்மான்:-இப்படி இருந்த இலங்கையில் இப்ப பிரதான எதிர்க்கட்சியில் இருந்தே கட்சி தாவுறாங்கள் எண்டால் இலங்கை அரசியல் எப்படி சாக்கடையா போட்டுது பாத்திட்டியோ?இலங்கையிலே பெரும்பாலான அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள்,படித்தவர்கள் இருந்தும் அதிகார போதை அவங்களை எப்பிடி ஆட்டுது பாத்தியோ?இதில இரண்டு பேர் மகிந்தவை கடுமையா விமர்சித்தவை

சுப்புக்குட்டி:-இப்பிடி வர்றவைக்கு எல்லாம் பதவி குடுத்தால் மகிந்தற்றை கட்சிக்குள்ள பிரச்சனை வராதோ அம்மான்.சு.அம்மான்:-ஏன் வராது? இப்பவே புகைச்சல் கிளம்பிட்டுது எண்டு லேசுபாசா கதை வருது.ஜே.வி.பி காரங்கள் வேற முறுக்கிக்கொண்டு நிக்கினம் பாப்பம் என்ன நடக்குதெண்டு.சில வேளை இலக்சன் வந்தாலும் வரும் கண்டியோ.

சுப்புக்குட்டி:- சரி, அம்மான் வீட்டை போகவேணும் பிறகு சந்திப்பம் என்ன?சுப்பு அம்மான்:- ஓமடா தம்பி பிறகு சந்திப்பம் என்ன?
சு.குட்டி:- ஓமோம்

No comments: