Monday, November 19, 2012

துப்பாக்கி -- ஸிலிப்பர் கில்லர் - -சிறுவர்கள்

 

Terror: Children train with pistols

நன்றி ---மிரர்

ன்று வெளியான இங்கிலாந்தின மிரர் பத்திரிகையில் வெளிவந்த படத்தினையே மேலே பார்க்கிறீர்கள் பாகிஸ்தானில் உள்ள வடக்கு வாஸிரிஸ்தான் பகுதியில் சுமார் 5 வயதான இளம் சிறுவர்களை  மூளைச் சலவை செய்து, ஜிகாதி எனப்படும் தற்கொலைப் படையினராக அல்குவைதா தீவிரவாதிகள் மாற்றும் படமே இதுவாகும் .இந்தப்பகுதி ஆப்கானுக்கு மிகவும் அருகில் இருக்கும் பகுதியாகும்  

ஏற்கனவே இறந்த தீவிரவாதிகளின் ஆதரவற்ற குழந்தைகளை , தந்தையர் வழியிலேயே(ஜிகாதி) அவர்களும் செல்ல வேண்டும் என்று போதிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டு, அவர்களுக்கு குண்டு வெடிப்பு பயிற்சி தரப்படுகிறது. .

தலிபான்களுக்காகப் போராடும் கூலிப் படையினரைத் தயார் செய்து அனுப்பும் அமைப்பாக அல்குவைதா மாறியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதச் சதிச் செயல்கள் இந்த அமைப்பினால் நிகழ்த்தப் பட்டுள்ளன. அல்குவைதா அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்ப சிறுவர்களைத் தயார் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தீவிரவாதம் குறித்த ஆய்வுப் பிரிவின் தலைவர் நீல் டோய்ல் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான இந்த செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துலக ஊடகங்களில்  இடம்பெற்றுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது .உணமையில் இது ஒரு கண்டிக்கப்பட வேண்டிய செயல்.உணமையில் இவ் சிறுவர்கள் எதையும் ஆராய்ந்து பார்க்க முடியாதவர்கள் .எது சரி எது  பிழை என உணரமுடியாதவர்களை தீவிரவாதிகள் தமது நலன்களுக்காக,மதத்திற்காக பயன்படுத்துவது என்பது அவர்கள் வணங்கும் இறைவனாலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது .இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு செயல் ஆகும் .

மதம் என்பது மனிதனை வழிப்படுத்துவதற்கே  அன்றி மதமே வாழ்க்கை அல்ல என்பதை எப்போது புரிந்து கொள்வார்களோ?

Monday, November 12, 2012

வந்துட்டேன்யா…..வந்துட்டேன்யா …. மீண்டும் “வைகைப்புயல்” வடிவேலு

 

மிழ் சினிமாவுக்கு  1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகமான வடிவேலு,கொஞ்சக்காலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர் .ஆபாசமில்லாத அப்பாவி கிராமத்தானாக பல படங்களில் நடித்து பலருடைய  இதயங்களில் நகைசுவையால் கோலோச்சியவர்.வடிவேலுவின் மொழி நடை ,நடையுடை பாவனைகள் பலரையும் கவர்ந்தவை ,அவரின் நகைச்சுவை காரணமாகவே மதுரைத்தமிழ் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது .

இப்படி தமிழ் திரையுலகில் கோலோச்சிய வைகைப்புயலின் வாழ்வில் ஏற்பட்ட   அரசியல் தொடர்பால்  அவரின் திரை உலக பயணம் ஒரு முடிவிற்கு வந்தது .இது உண்மையில் அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அடியாகும் .உண்மையில் அவர் கிழே உள்ள பேட்டியில் கூறியபடி அவருக்கு போட்டி அவர்தான் .இது உண்மையும்  கூட. அவரின் அரசியல் அவரின் தனிப்பட்ட விடையம் .நல்லதொரு நகைச்சுவை கலைஞன் அரசியலில் ஈடுபட்டு அரசியல் பண்ணப்பட்டதில் நொந்து போனது அவரின் நகைசுவையினை ரசித்த  ரசிகர்கள் தான் .அந்த ரசிகர்களின் வாதத்தினை போக்க வந்திருக்கும் ஒரு செய்தி இதுதான்

நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலு கூறுகையில், நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என்ற காமெடி கதையுடன் என்னை அணுகினார். அப்படத்தில் முக்கிய கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

கதை ஆப்பிரிக்காவில் நடப்பதுபோல் இருக்கும். எனவே படப்பிடிப்புக்காக அங்கு செல்ல இருக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. அதிலும் நான் நடிக்கிறேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல.

பூபதிபாண்டியன் இயக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.

அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை என்றும் சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

உணமையில் இது அவரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.இப்போதே  மேற்படி இரு படங்களை பற்றிய கற்பனை மனதினில் விரிகின்றது .வைகைப்புயலை மீண்டும் தமிழ்த்திரையுலகம் அழைத்துவரும் .எஸ் .ரவிக்குமாருக்கும் ,சிம்புதேவனுக்கும் வடிவேலுவின் ரசிகன் என்ற வகையில் எனது வாழ்த்துக்கள் .உண்மையில் எனது மனம் சோர்வுறும் வேளைகளில் எல்லாம் நான் எனது சோர்வை போக்க செய்வது வடிவேலுவின் நகைச்சுவைகளை பார்ப்பது ஆகும் .

நல்ல நடிகன் மட்டும் அல்ல நல்லதொரு பாடகனுமாகிய வடிவேலு பாடிய பல பாடல்கள் எம் மனதை மகிழ்விக்க வல்லன.அப்படிப்பட்ட சில பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன .கேட்க விரும்பின் இங்கே சுட்டவும் .

நன்றிகள்  .

Friday, November 09, 2012

குதிரையும்……. ஆடும்………ஒரு ஜென் கதை

 

சில தினக்களுக்கு முன்னர் படித்த ஒரு ஜென் கதை எனது மனதுக்கு மிகவும் பிடித்தது .நல்லதொரு தத்துவத்தினை சொல்லும் அக்கதையினை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து  கொள்கிறேன் .

ஒரு மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி கற்று வந்தனர். அவரது சீடர்களுக்கு அந்த துறவி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில், சீடர்கள் அவரிடம் "குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?" கேட்டனர். அதற்கு அவர் "குதிரையும் ஆடும்" என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை, எங்களுக்கும் அந்த கதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.

அதாவது "ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, "எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்" என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.

மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் "நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்." என்று சொல்லிச் சென்றார்.

அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.

எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் "என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!" என்று சொன்னார்" என்று கதையை சொல்லி முடித்தார்.

பின் அவர்களிடம் "பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்." என்று இறுதியில் சொல்லி விடைபெற்றார்.

நிச்சயமான உண்மை .

Tuesday, November 06, 2012

நானும் ஒரு தாய் -----குறும்படம்

 

அண்மையில் ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது  .படத்தினை பார்த்த பின்பு தான் இயக்குனர் பற்றி தேடியபோது அவர் ஈழத்தினை சேர்ந்தவர், மட்டக்களப்பினை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன்  இயக்குனர் பாலுமகேந்திராவின்  மாணவர் என்றும் அறிய முடிந்தது .அத்துடன் இக் குறும் படம் இந்தியாவில் பல விருதுகளை வாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நான் படத்தினை பற்றி விமர்சனம் எழுதுவதை விட நிங்களே சில நிடங்களில் இப்படத்தினை பார்த்துவிட்டு விமர்சிக்க்லாமே.

நானும் ஒரு தாய்

 


கிழே இருக்கும்  இந்த வீடியோவினைப்பாருங்கள் இந்த மேற்கத்திய இசைக்கலைஞர் எவ்வளவு இலாவகமாக எமது தவிலை வாசிக்கின்றார் என்று .சினிமா இசையை தவிர வேறு இசைகளை ரசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதையும் ரசிப்பார்கள் ஏன் எதிர்பார்க்கலாம்.

 

தனிமையில் தவிலை எப்படி கையாளுகிறார் பாருங்கள் .

நன்றி /வணக்கம்

Sunday, November 04, 2012

முஸ்லிம்களின் சாபமா சான்டி புயல் ???

 

ட்வீடரில் கருத்து தெரிவித்துள்ள சில முஸ்லிம் மதப்பெரியவர்கள் அமெரிக்காவை தாக்கிய சாண்டி சுறாவளி முஸ்லிம்களின் சாபம் எனவும் அல்லாவை அவமதித்ததால் தான் சான்டி அமெரிக்காவை தாக்கியதாக கருத்து வெளியிட்டுள்ளனர் .

ஏற்கனவே அல்லவை பற்றி படம் எடுத்து அதனால் உலகெங்கும் அமெரிக்கா வினை எதிர்த்து கலவரங்கள் ஏற்பட்டதும் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதும் கடந்தகால சம்பவங்கள். இதனை மனதில் வைத்து சில மதப்பெரியவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர் ட்விட்டரில் .

எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் : அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்,ஆச்சரியப்படுகின்றனர் . நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் அமெரிக்கவை பழிவாங்கினான்?? என்பதே எனது கருத்து.

இவரது டுவீட்டுக்கு ஒருவர்  பதில்  தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும்  இந்தப் புனிதப் புயல்??? என்று கூறியுள்ளார்.

அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். எனவும் அவர் அந்த ட்வீட்டில் சொல்லியிருக்கிறார் .இனி இன்னொரு மத குருவின் செய்தி

சவுதியை   சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் ?என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.ஆனால்  அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி இறந்தவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் இதற்கு பதில்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது, என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதப்பெரியவர்களா?.

கனடாவில் இன்னும் ஒரு சில நிடங்களில் நேரமாற்றம் !

 

கனடா மற்றும் அமெரிக்காவிலும் இன்னும் சில நிமிடங்களில் நேரமாற்றம் நடைபெற உள்ளது . Day Light Saving Time எனப்படும் ஒரு வகையில் கடந்த மார்ச்சில் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்ட நேரமானது இன்று இரவு இரண்டு மணியாகும் போது மீண்டும் பழைய நிலைக்கு அதாவது ஒரு மணித் தியாலமானது பின்னகர்த்தப்படும் .அதாவது இரண்டு மணியாகும் போது ஒரு மணியாகும் .எமது கைபேசிகளில் , தொலைகாட்சிகளிலும் இனையத்துடன் இணைக்கப்ட்ட  சில வீட்டு உபகரணங்களிலும் இவ் நேர மாற்றம் தானியங்கியாக மாறறமடையும். ஒரு சில நாட்களுக்கு இம் நேர மாற்றம் ஆனது சங்கடமாக இருந்தாலும் பின்னர் பழகிவிடும்  குளிர்காலத்தின் போது இரவு நேரத்தின் அளவு இங்கு அதிகமாக இருக்கும் .பகல் பொழுது குறைவு .

எனவே இவ் நேர மாற்றத்தின் காரணமாக ஒரு மணித்தியாலம் அதிகமாக நித்திரை கொள்ளலாம்.இன் நேரமாற்றம் ஆனது மின்சக்தியை சேமிக்கவும் ,மனித வலுவை அதிகளவில் பயன்படுத்தும் நோக்கில்   கொண்டுவரப்பட்டது .

இன்றைய தினம் இது கனடா மற்றும் அமேரிக்கா நாடுகளில் இன்னும் சில நிடங்களில் அமுலுக்கு வருகிறது,கனடாவில் ஆறு விதமான நேர வலயங்கள் இருப்பது பலருக்கு தெரியாத ஒன்று .ரொறன்ரோக்கும் வான்கூவருக்கும் இடையே நான்கு மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உண்டு . பரப்பளவில் பெரிய கனடாவில் ஆறு நேர வலயங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை தானே .

நேரமாற்றம் ஆனது எப்படி யாரால் என்ற விபரங்கள் பின்னர் ஒரு பதிவில் தருகிறேன் .

Wednesday, October 31, 2012

உங்களுக்கு தெரியுமா இந்த செய்திகள்.!

 

  1. அன்டார்டிகா நிலப்பரப்பு மட்டுமே எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தம் இல்லாதது
  2. தீக்கோழியின் முட்டையை முழுமையாக அவிக்க  4 மணித்தியாலங்கள் பிடிக்கும் .
  3. ஒரு கிங் கோப்பராவின் விஷம் 01 யானையை அல்லது 25 மனிதர்களை கொல்லக்கூடியது .
  4. வாழைப்பழம் மனிதனை சந்தோசமாக வைத்திருக்கும் ஒரு விதமான இரசாயான  பொருளைக் கொண்டுள்ளது.
  5. கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது. 
  6. கட்டைவிரலின் நகத்தினைவிட  நடுவிரல் நகத்தின் வளர்ச்சி  அதிகமானது.
  7. குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது .
  8. வெனிசுவேலா நாட்டில் உள்ள ஏஞ்சல் எனும் நீர்விழ்ச்சி கனடாவின் நயகரா நிர்விழ்சியை விட 20 மடங்கு உயரமானது .
  9. எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
  10. கிறிஸ் நாட்டின் தேசிய கீதம் 158 வரிகளை உள்ளடக்கியது .
  11. நலமாக இருக்கும் ஒரு மனிதக் கண்ணால் 17000 நிறங்களை பிரித்தறிய முடியும் .
  12. 80 வீதமான குத்துசசண்டை வீரர்கள் மூளை பாதிப்பினால் அவதியுறுகின்றனர்.
  13. ஒப்பிட்டு அளவில் மனித உடலில் உள்ள மிகப்பலமான தசைப்பகுதி நாக்கு ஆகும் .
  14. கேன்(தகர டப்பாக்கள் )கண்டு பிடிக்கப்பட்டு 48 ஆண்டுகளின் பின்னரே Can opener  கண்டு பிடிக்கப்பட்டன .
  15. ஒரு பெண் மக்றல் மீன் ஒரு நாளைக்கு சராசரியாக (500000) ஜந்து இலட்சம் முட்டைகளை இடும்.
  16. தேனீக்கள் மணிக்கு பதினைந்து மைல் வேகத்தில் பறக்க கூடியவை .
  17. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் (௦.17  சதுர மைல்கள்) சனத்தொகை  10000 ..இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ (௦.7 சதுரமைல்கள் )
  18. ஒரு மனித இதயம் 1.5 மில்லியன் கலன் இரத்த சுற்றோட்டத்தை ஏற்படுத்துகிறது .
  19. 60 வயதினை அடையும் போது மனிதனின் நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளில் 80 வீதமானை இறந்துவிடும் .
  20. வளர்ந்த ஓட்டசிவிங்கியின் நாக்கின் நீளம் 21 அங்குலம் .இதை வைத்து அது தனது காதையும் சுத்தப்படுத்திக் கொள்ளும் .

Sunday, October 28, 2012

வெண்டைக்காய் சாப்பிடுங்கள் சர்க்கரை வியாதி கட்டுப்படும்!

வெண்டைக்காய் சாப்பிடும்படியும் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாகவும் எனக்கு ஒரு மெயில் வந்தது .கண்டதையும் போர்வேட் செய்யும் நண்பர் அனுப்பிய மெயில் அது .உண்மைதான அது என சோதனை செய்து பார்க்க எனது தந்தைக்கு பரிந்துரைத்தேன் .அவரும் வெண்டைக்காய் உண்டு விட்டு இரத்தத்தில் வெல்லத்தின் அளவை பரிசோதித்துப்பார்த்த போது வெல்லத்தின் அளவு இரத்தத்தில் குறைந்து காணப்பட்டது .

சரி என்று சொல்லி அவர் சில தினங்கள் அம்முறையினை பின்பற்றி  வந்தபோது அவருக்கு தும்மல் தடிமன் வந்து விட்டது .எனவே அவர் இப்போது கிழமையில் முன்று தினங்கள் மட்டும் வெண்டைகாய் மருத்துவம் செய்து வருகிறார்.

சரி எப்படி அதைப்பின்பற்றுவது ? வழிமுறை இங்கே .உங்கள் உடல்நலத்துக்கு ஏற்ப எச்சரிக்கையோடு சொந்தப்பொறுப்பில் பின்பற்றவும். (ஹி..ஹி. நிதிமன்றம் கரிகாலனின் மனக்கண்ணில் )சரி ,இனி விபரங்கள்

  • ஒரு வெண்டைக்காய்  எடுத்து நன்கு கழுவிக் கொள்ள  வேண்டும். பின் அதன் இரு முனைகளையும்(அடி ,நுனி) நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி , ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கிவிட்டுப்பார்த்தால் வழவழ நீர் இருக்கும் , அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
  • அடிக்கடி உங்கள் இரத்தத்தினை பரிசோதிக்க வேண்டும் .இரத்தத்தில் சர்க்கரை கூடினாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை .

இதன் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை .அத்துடன் மருத்துவ ரீதியில் வைத்தியர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை .வெண்டைக்காய் போலவே சிறு குறிஞ்சா .பாவக்காய் ,வெந்தயம் சின்ன சீரகம் போன்றவையும் இரத்தத்தில் வெல்லத்தின் அளவை குறைப்பதாக நீரிழிவு நோயாளிகள் சொல்கிறார்கள் .ஏன் கொய்யாப்பழம் கூட நீரிழிவை குறைப்பதாக சொல்கிறார்கள் .ஆனால் இதனால் ஏதாவது பின்விளைவுகள் வருமா என்பது பற்றி அலோபதி வைத்தியர்கள் தான் சொல்லவேண்டும் .பாவற்காய் அடிக்கடி சாப்பிடுவது உடலில் நீர்சத்தினை குறைக்கும் என்பதாக ஒரு தகவலும் உண்டு

நன்றி .உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

விஷ் யு ஏ ஹாப்பி நியூ இயர்! இளையராஜா, கமல்ஹாசன்

 

இன்னும் சரியா இரு மாதங்களில் அதாவது டிசெம்பர் மாதம் 31 திகதி இரவு மணி 11.59. க்கு உலகெங்கும் இருக்கும் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒலிக்கப்போகும் ஒரு பாடல் .கடந்த இருபது வருடங்களாக ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் ஒரு தமிழனின்  தமிழ் தேசிய கீதம் .ஆம்  சகலகலாவலவனின்” இளமை இதோ இதோ”.இருபது வருடங்களை கடந்தும் இந்தப்பாட்டை அடித்துக்கொள்ள   இசையாலும் சரி மேட்டாலும் சரி ஒரு பாடல் இன்னும் வரவில்லை .புத்தாண்டின் புத்துணர்ச்சியை கேட்பவர் மனதில் அப்படியே கொண்டு வருவதில் இப்பாடலுக்கு அருகில் எந்தப்பாடலும் கிட்ட நிற்க முடியாது .ஆப்படி ஒரு  புத்துணர்ச்சி தரும் இப்பாடல் .

பாடலுக்கு மெட்டமைத்து இசையமைக்கும் போதும் சரி அதைப்படமாகும் போதும் சரி இப்பாடல் ஆண்டுகளை கடந்தும் ஒ(ளி)லித்துகொண்டிருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களே நினைக்கவில்லையாம் .ஆனால் காலங்களை கடந்தும் கமல்ஹாசன்,இளையராஜா இவர்களின் பெயரினை சொல்லும் என்பது மட்டும் நிச்சயம் .

ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்கள் பிரபல்யம் இல்லாத காலத்தில் வந்த இப்பாடல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் இக்  காலத்திலும் ஈடு கொடுத்து நிர்ற்பதால் இப்பாடலையே சகலாகலாவல்லவன் எனலாம்.

பாரதி ராஜா போன்றவர்களால் நல்லதொரு வழியில் சென்ற  தமிழ்சினிமா உலகம் ஏவிஎம் இன் சகலகலாவல்லவன் படத்தால்,இதன் வெற்றியால் மீண்டும் மசாலா பட தயாரிப்புக்கே திரும்பியதாக ஒரு குற்றசசாட்டு ஒன்று உண்டு .இது உண்மையும் கூட.

Saturday, October 27, 2012

பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு

 

ப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்து கொள்ள ஆர்வமாகக் வந்திருப்பிர்கள். இக் கேள்விக்கெல்லாம் விடை தெரிந்தால் பலருடை குடும்ப வாழ்க்கை இனிதாகவே இருக்கும் .ஆனால் பெண்களின் மனதினை ஆழ்கடலுக்கு ஒப்பிடுவார்கள் .ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் அந்த ஆழ்கடலின் ஆழத்தினை அளவிட்டுப்பார்த்து விடலாம் .அதாவது பெண்களின் மனதை பற்றி அறிந்து கொள்ளலாம்

.

பெண்களின் மனதை அறிந்து கொள்ள தேவைபடுவது   எல்லாம் கொஞ்சம் அன்பும். பாசமும்,அக்கறையும் அத்துடன் நீங்கள் உண்மையான அக்கறையும் பாசமும் வைத்திருக்கின்றிர்கள் என்ற நம்பிக்கையுமே.இதைப்படிக்கும் .ஆண்களே சொல்லுங்கள் உங்களுக்கு உடல் நலம் இல்லாமல் போகும் பொது உங்கள் மனைவி உங்கள் மீது காட்டும் கரிசனைக்கும் ,உங்கள் மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போகும் போது நீங்கள் காட்டும் கரிசனைக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். இதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆவீர்கள் .

சரி விடையத்துக்கு வருகிறேன் .பெண்களைப்பற்றி சில உளவியலாளர்கள் கண்டு பிடித்த சில அடிப்படை உண்மைகளை இனி நான் சொல்லப்போகிறேன் .நான் சொல்லுவது சரிதானா என நீங்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்,

  • பெண்கள் பல திறன்  கொண்டவர்கள் .அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும்..போனில் பேசிக்கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்து கொண்டு பொஸ் வருகின்றாரா எனவும் கவனிக்க அவர்களால் முடியும்.ஒரே நேரத்தில் அடுப்பில் நாலு கறி வைத்து  சரியாக உப்பு, புளி,காரம் போட்டு சமைக்க முடியும் .அவர்களின் முளையும் அதற்கேற்ப பல்முகத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஆண்களால் இப்படி  ஒரே நேரத்தில் எல்லாவறையும் செய்ய முடியாது.
  • ஆண்கள் பொய் பேசினால் பெண்களால் உடனேயே  கண்டுபிடித்துவிடமுடியும்.ஆண்களின் முகபாவனை ,அங்க அசைவுகள் ,வார்த்தை உச்சரிப்பு இவரை வைத்து பொய் என்பதை கண்டுபிடிக்கிறார்கள் .ஆண்கள் பெண்களுடன் இருக்கும் போது இவற்றை எங்கு கவனிக்கிறார்கள் .விளைவு அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று சொல்லிகொண்டு தாடி வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள் .இதிலும் ஆண்கள் சொதப்பல் தான் .
  • குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டு இருப்பார்கள் ,ஆனால் பெண்கள் பிரச்சைகளை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அன்புக்குரியவ்ர்களிடம் சொல்லிவிட்டு அதை மறந்துவிடுவார்கள் .
  • ஆண்களின் சிந்தனை, செயல் எல்லாம் மதிப்பு ,வெற்றி ,தீர்வு பரறறியே இருக்கும் பொதுவாக சுயநலவாதிகள் ,அனால் பெண்களின் சிந்தனைகள் எல்லாம் குடும்பம் ,நண்பர்கள்,உறவுகள் இப்படிதான் இருக்கும் .
  • பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ,ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள் .
  • உறவுக்குள் ஒரு பிரச்சனை என்றால் பெண்களால் அவர்களின் எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாது .ஆண்கள் அப்படியல்ல .
  • ஒரு ஆண் சந்தோசமா இருக்க நல்ல வேலை வேண்டும் கூடுதலாக சந்தோசமாக இருக்க மது ,மாது ஏதாவது வேண்டும் .அனால் பெண்களுக்கு கணவன்,பிள்ளைகள் ,நல்ல உறவு நல்ல உறவினர்கள் ,நல்ல பொழுது போக்கு,நல்ல சந்தோசம் இப்படி எல்லாமே நல்லாகை இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்பி அடைவார்கள்
  • பெண்கள் எதனையும் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்.ஆசைகளையும் ஒளிவு மறைவாகவே வெளிப்படுத்துவார்கள் ஆண்கள் நல்லதோ கெட்டதோ விடையத்தை பட்டேன போட்டு உடைத்துவிடுவார்கள்.ஆசையையும் கொட்டித்தீர்த்து விடுவார்கள் .
  • பெண்கள் இதயத்தால் சிந்தித்தால் ஆண்கள் மூளையால் சிந்திப்பார்கள்

இப்படிப்பட்ட, பெண்களை புரிந்து கொண்டவர்களை நாம் என்ன பெயரால் அழைக்கிறோம் தெரியுமா? “காதல் மன்னன் “என்று .அதாவது பெண்களின் மனதை புரிந்து கொண்டவன், பல பெண்களை வசிகரிப்பவனை பாருங்கள் என்னத்தை பார்த்து பெண்கள் இவனிடம் மயங்குகிறார்கள் என்ற கேள்வி நம்மிடம் எழும் .பெண்களை வசிகரிக்க,ஆழகு ,அந்தஸ்து ,பணம், படிப்பு தேவை இல்லை .தேவையானவை பெண்களின் மனதை புரிந்து கொள்ளும் ஆற்றல் மட்டுமே ..பெண்களே என்ன சொல்கின்றீர்கள் ?  

.இப்போது காதல் மன்னன் ஆக நீங்கள் தயாரா?இதை வாசித்த பின்னர் உங்கள் மனைவியின் அல்லது காதலியின் மனதினை புரிந்து கொள்ள நிங்கள் முயற்சி செய்வீர்களாயின் நீங்கள் காதல் மன்னன மட்டும் அல்ல நீங்கள் ஒரு மன்மத ராஜாவும் கூட .

சரி இங்கே ஒருவர் எமக்கு சொல்லித்தருகின்றார் எப்படி பெண்களை “பிக்கப் பண்ணுவது “என்று .படித்தும் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதாவது பெண்களை புரிந்து கொள்ளமுடியாதவர்கள் அதன் காரணமாக பெண்களை “பிக்கப்”பண்ண முடியாதவர்கள் இவ் வீடியோவை பார்த்து பெண்களை “பிக்கப்" பண்ண  கற்றுக்கொள்ளலாம். எது வசதியோ அதனைப் பின்பற்றலாம் .முயற்சி திருவினையாக்கும் .

கரிகாலன் எப்படி என்று கேட்கலாம் ,நான் எங்கேயும் எப்போதும் ராஜா தான் அதாகப்பட்டது மன்மத ராஜா தான்!!!! 

வீடியோ :-

Friday, October 26, 2012

அல்லாவின் நாமமா அல்லது மகிந்தவின் நாமமா? எதை உச்சரிப்பது!

 

லங்கையில் ஒரு ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் அமைச்சரும் கூட அண்மையில் பாராளுமன்றத்தில் மகிந்தவை அளவுக்கதிகமாக் புகழப் போய் சிக்கலில் மாட்டுப்பட்டுப்போய் இருக்கிறார் .இலங்கையின் முஸ்லிம் சமய கலாசாரதுறை அமைசசர் ஏ.எச் .எம் .அஸ்வர் என்பவரே அவராவார்.

News Service

இவர் நீண்டகாலமாக ஜக்கிய தேசிய கட்சியில் இருந்துவிட்டு கதிரை ஆசையால் ஆளும்கட்சி பக்கம் தாவியவர்.அத்துடன் இவர்  இப்போது முஸ்லிம் சமய ,கலாசார அமைச்சராகவும் இருக்கிறார் .மதம் மாறியவர் ஏற்கனவே அம்மதத்தில் இருந்தவரை விட அதிக  சீன் காட்டுவார் .அதைப்போல இவரும் விசுவாசத்தில் சீன் காட்ட போய் அவர் சார்ந்த மதத்தினரால்  மதரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார் .

இலங்கை பாராளுமன்றத்தில் கிரிக்கெட் ஆட்ட சதி பற்றி நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது உரையாற்றிய அஸ்வர்

இலங்கை கிரிக்கெட்டில் ௭ந்தவித ஊழலும் மோசடியும் கிடையாது. தற்போது இலங்கையில்  விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார். வடக்கு, கிழக்கிலும் கிரிக்கெட் துறை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, ஜனாதிபதி மஹிந்தவின் நாமத்தை மந்திரமாக உச்சரித்து வந்தால் நன்மை கிடைக்கும். வெற்றிக்கோப்பையை கைப்பற்ற வேண்டுமெனில் தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை உச்சரியுங்கள் என விளையாட்டு வீரர்களுக்கு  அறிவுரையும் தெரிவித்தார் அஸ்வர்.

அதுதான் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.அவரின் உரையானது முஸ்லிம்களின் ,இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது என்பதால் இதற்காக அவர் தவ்பா செய்வதுடன் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி கருத்து  தெரிவித்துள்ளது.

அஸ்வரின் மகிந்தவின் நாமத்தினை உச்சரிப்பது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவனின் பெயரை உச்சரிப்பதால் மட்டுமே ஒருவனுக்கு நன்மை கிடைக்கும் என்றும் இறைவன் அல்லாதவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை கிடைக்கும் என ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்து விட்டார் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.

இது பற்றி நன்கு தெரிந்திருந்தும் ஏ எச்.எம். அஸ்வர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் அவர் இஸ்லாத்தை வேண்டுமென்றே அவமதித்துள்ளதோடு தனது எஜமான விசுவாசத்துக்காக இறைவனைக்கூட உதாசீனம் செய்துள்ளமை முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும். என்றும் சொல்லியுள்ளார் .அத்துடன் அவர் மேலும்

நாடாளுமனறம் என்பது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை பெறுவதற்குமான உயரிய இடமாகும். அப்படியான இடத்தில் பேசப்படும் அனைத்து விடயங்களும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரின் இக்கூற்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகப்பெரிய அழுக்காகவே பதிவு செய்யப்படும்.என்பதுடன் இவருடைய கூற்றை பார்க்கும் போது இவர் உணவு உண்ணும் போதும் பிஸ்மில்லாஹ் என்று இறைவன் நாமத்தை கூறாது பிஸ்மி மஹிந்த என்றே சொல்லி உணவு உண்ணுவார் போல இருக்கின்றது. இத்தகைய ஒருவர் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சராக இருந்ததை எண்ணி வெட்கப்படுகிறோம்.

இன்றைய பதவிகள் என்பன உலகின் இன்பங்களாகவும் சோதனைகளாகவுமே உள்ளன. அப்பதவிகளுக்காக இஸ்லாத்தையே அவமதிப்பது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆகவே அஸ்வர் தனது இணைவைப்பு கருத்திற்காக மன்னிப்பு கோருவதோடு இதற்கெதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பகிரங்க தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. என்று தனது அறிக்கையில் கேட்டுள்ளார் .

அமைச்சர் பாவம் . பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காய் வந்ததற்கு என்ன பண்ணுவார்.அமைச்சரின் நிலை யாருக்கு தெரியும்?எனக்கு ஒரு சந்தேகம் அமைச்சர் அடிக்கடி “அம்மாவின்” அமைச்சர்களின் அறிக்கைகளை இணையத்தில் படிப்பாரோ?

சரி இது இலங்கையில் பெரிய பிரச்னையாக வரும் என்று நினைக்கின்றிர்களா?இலங்கை விடையமே தெரியாத ஆளாக இருப்பிர்கள் போல் உள்ளதே ஒரே ஒரு வெள்ளை வாகனம் போதும் எல்லாவறையும் சமாளிக்க..

Thursday, October 25, 2012

மனிதனைப்போலவே பேசும் அமெரிக்க திமிங்கிலம் -ஆய்வாளர்கள் ஆச்சரியம்

 

மெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத்திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே ஒரு சுவாரசியமான கதைதான்.

கலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.

கரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு மேலே வரச்சொல்லி குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர.

ஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத்துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் நிஜமானது .

என் ஓ சி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத்திமிங்கிலம் தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.

காரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத்திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக்கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை.

எனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலிகளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.இதன்படி, இந்த என் ஓ சி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப்பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.

அவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என் ஓ சி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப்பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது.

நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

சுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத்திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த sமுயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை.

அனால் எனக்கு ஒரு சந்தேகம் சிவனே என்று இருந்த இந்த திமிங்கிலம் மனிதனைப்போல பேச முயற்சித்து என்ன பாடுபடப்போகுதோ ,?

Tuesday, October 23, 2012

எகிப்தியர்கள் பாலியல் வெறியர்களா?

 

நேற்று எகிப்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கடந்த கால சம்பவங்களின் நீட்சியாகவே  பலரால் கருதப்படுகிறது .நேற்றிரவு எகிப்தின் கெய்ரோ நகரின் தாகிர் சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரான்சின் தொலைக்காட்சியான பிரான்ஸ் –24 ஆனது தனது பெண் அறிவிப்பாளரை அனுப்பி இருந்தது .சோனியா திதிரி என்கிற அப்பெண் அறிவிப்பாளர் தனது நேரடி ஒளிபரப்பை தொடர்ந்தபோது அவரை சுற்றியிருந்து பார்த்துக்கொண்டிருந்த  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலியல் ரீதியிலான தாக்குதல்களை அவர்மேல் நடத்த தொடங்க ,முத்தமிட முயற்சிக்க அது நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பாக உலகெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது .

பின்பு ஒருவாறு அவருடைய இன்னுமொரு பத்திரிகையாளர் நண்பர் மூலமாக அவர் இத்தாக்குதலில் இருந்து மீண்டு கொண்டாலும் இச்சம்பவத்தின் அதிர்ச்சி விலகாமல் அவர் காணப்பட்டாராம் .பின்பு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை வைத்து நேரடி ஒளிபரப்பு இடம்பெற்றது .அவர் மீதான பாலியல் ரீதியான தாக்குதல் சம்பவத்தினை அவர் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்போது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது .

இது மட்டும் அல்ல கடந்த காலங்களில் பல பெண் நிருபர்களின் மீது பாலியல் ரீதியான பல தாக்குதலகள் இடம்பெற்றுள்ளன .எகிப்தின் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் (கோஸ்னி முபாறுக்) போது அரசு தரப்பாலும்,எதிர் தரப்பாலும் பல பாலியல் ரீதியான பல சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன .அப்போது உள்நாட்டு ,வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல பல உள்நாட்டு பெண்கள் மீதும் சந்தடி சாக்கில் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டன .

இணையத்தில் தேடினால் நிறைய சம்பவங்கள் காணக்கிடைக்கிறது .அமெரிக்க பெண் நிருபர் ,இங்கிலாந்து பெண் நிருபர் ,இப்படி பட்டியல் நீளுகிறது ,

சரி ஏன் இப்படி பெண் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையில் போய் நிற்கிறது .முக்காடு இல்லாமல் இப்படியான் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்த அவர்களுக்கு  அதிகாரத்தினை கொடுக்கிறது.

தாக்குதல் என்றால் என்னவகை என்று கேள்வி எல்லாம் கேட்ககூடாது .அது பாலியல் வகையான தாக்குதலாக கூட இருக்கலாம் .அதற்கும் ஆண்களுக்கு  அனுமதி உண்டு.

இப்போது உங்களுக்கு ஏன் தாக்குதல் நடைபெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை தானே .

சரி இவ்வளவு சொல்லிவிட்டேன் அந்த வீடியோவினையும் தந்துவிடுகிறேன் .

நேர்முக வர்ணனையில் பெண் அறிவிப்பாளர். .சிவனே????????என்று பின்னணியில் நிற்கும் கூட்டம்,அவர்களின் முகபாவனை .அறிவிப்பாளர் மீது திடீரென கை வைப்பவர் .செய்தியாளரை விட்டு விலகும் கமெரா .

ஏவ்பி செய்தி நிறுவனத்தின் செய்தி

நன்றி

Monday, October 22, 2012

நகைச்சுவை புயல் வடிவேலையே மிஞ்சிய நபர் !!

 

என்ன படம் என்று நினைவினில் இல்லை .ஒரு படத்தில் வடிவேல் கிணற்றி னை  காணவில்லை என்று போலீசில் புகார் கொடுப்பதும் போலிஸ் அதனை கேட்டு குழப்பம்  அடைவ்துமாக ஒரு கொமடி வரும் .அதனை பார்த்து அனைவரும் சிரித்திருப்போம் .அதனை தூக்கி சாப்பிடும் விதமான ஒரு சம்பவம் அண்மையில் போஸ்னியா நாட்டில நடைபெற்றுள்ளது .

அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்த  ஒரு பாலம் காணாமல் போய்விட்டது .என்ன பாலம் காணமல் போய்விட்டது என்கிறீர்களா?ஆம் ஒரு பாலம் தான் காணாமல் போய்விட்டது .விவசாயக் கிராமான அப்பகுதிமக்கள்

ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து பார்த்தபோது அப்பகுதி ஆற்றைக்கடக்க அமைக்கப்பட்ட சிறிய பாலத்தினை காணவில்லை .ஊரெல்லாம் ஒரே பரபரப்பு  எப்படி பாலம் காணமல் போகும் என்று ? கடைசியில் போலீசில் புகார்  கொடுக்கப்பட்டது .போலிசுக்கு வழமையாக கழிவு நீர் கால்வாயின் இரும்பு முடிகளை திருடும் ஒரு நபரின் மீதே சந்தேகம் .அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பாதிபாதியாக உடைக்கப்ட்ட நிலையில் பாலம்  அவரின் வீட்டு முற்றத்தில் காணப்பட்டது .

சிறுக சிறுக திருடி சம்பாதிப்பதை விட பெரும் தொகையில் சம்பாதிக்கலாம் என் ஆசைப்பட்ட இந்த முட்டாள் திருடன் கடைசியில் கம்பி எண்ணியது தான் மிச்சம் .இச்சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பினை ஏற்படுத்தி விட்டுள்ளது .

வைகைப்புயல் பற்றி ஒரு செய்தி .வடிவேல்  மீண்டும் திரையில் முகம் காட்டப்போகிறார்  இம்சைஅரசன் இருபத்திமுன்றாம் புலிகேசி இரண்டாம் பாகம் மூலம் தமிழ திரைக்கு மீண்டும் வரும் வடிவேல் மின்டும் ஒரு ரவுண்டு வரவேண்டும்.தமிழ் திரையுலகில் ஏற்பட்ட நகைச்சுவை பஞ்சத்தினை  போக்க வேண்டும் .அப்ப சந்தானம் என்கிறிர்களா .வடிவேலுக்கு முன்னால் சந்தானம் ஒரு தூசி .யானை படுத்திருந்தால் பூனை ஆட்டம் போடுமே அதுதான் .

சந்தானத்தின் கொமடிக்கு சிரிப்பு வருதா என்ன ?

Friday, October 19, 2012

ஆங்கிலம் இப்படியும் கற்பிக்கிறார்கள் இந்தியாவில் !

 

அண்மையில் யூரியுப்பில் எதேச்சையாக ஒரு வீடியோ  காட்சியினைபார்க்க நேர்ந்தது .பார்த்ததும் அதிர்ந்து விட்டேன் .எப்படி பள்ளிக்குழந்தைகளுக்கு  ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று ,ஒரு வட இந்திய நகரத்தில் அல்லது கிராமத்தில் உள்ள பாடசாலையில் இப்படத்தினை எடுத்திருக்கின்றனர் .கிராமம் ஆகத்தான் இருக்கும்

எப்படி ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கின்றனர் பார்த்திர்களா?.முழுவதும் ஹிந்தியில் இருப்பதால் முழுவதும்  விளங்கவில்லை, இருப்பினும் விடியோவினைப் பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது .  எப்படி இவ்வாறு நடக்க அனுமதித்தனர் இந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்  ?ஆங்கிலம் தெரியாத ஆசிரியர் பாடம் எடுக்க எப்படி அனுமதித்தனர் .சில பின்தங்கிய கிராமப்புறங்களில் ஆசிரியர் பணியாற்ற பின்னடிப்பதால் வேறு பாடமெடுக்கும் ஆசிரியர்களை ஆங்கிலம் எடுக்க அனுமதித்திருக்கிறார்கள் போலும் .அனால் அதற்காக இப்படியா சொல்லித்தருவார்கள்.சொல்லி கொடுக்கும் இவையெல்லாம் இன்றைய நாளில் சிறு பிள்ளைகள் கூட தவறின்றி சொல்வார்களே

வீடியோவைப்பாருங்கள் கொஞ்சம் ஒலியை அதிகப்படுத்திவிட்டு பாருங்கள் .

சன்டே—sande

மண்டே mande

அப்பிள்   apil

மேங்கோ    mego

இவை french  அல்ல ஆங்கிலம்தான் ஆங்கிலம் தான் சொல்லித்தருகிறார்

.

என்ன அடக்கமாட்டாமல் சிரிப்பு வருகிறதா? சிரியுங்கள் ஆனால் வீடியோவை பார்த்து அல்ல இந்த சமுக அமைப்பினை பார்த்து சிரியுங்கள் ,வசதியுள்ளவனின் பிள்ளை நல்ல பாடசாலை ,நல்ல கல்வியினை பெறும் போது ஏழையின் பிள்ளை தரையினில் அமர்ந்து இப்படியான ஆசிரியர்களிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவலத்தினை எண்ணி சிரியுங்கள் .நாட்டின கல்வி முறையினை எண்ணி சிரியுங்கள்.

நன்றிகள்

Friday, October 12, 2012

உலகின் அதி பயங்கரமான 10 விமான நிலையங்கள்.

விமானப் பயணம் என்பது எல்லோருக்கும் மகிழ்வினை கொடுக்கக்கூடிய ஒரு விடையம் .சிலருக்கு அடிக்கடி  விமானப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் .சிலருக்கோ விமானப்பயணம் என்பது வாழ்வில் ஒரு முறையாவது கிடைக்கவேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும்,

எது எப்படி இருந்தாலும் விமானப்பயணம் செய்பவர்களுக்கு தெரியும் அது ஒரு இனிய அனுபவம் .என்று ,அதற்காக கனடாவிலிருந்து இலங்கை அல்லது இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இனிமையாக இருக்குமா என்று கேட்டால் அடிக்கவந்து விடுவார்கள் .இலங்கைக்கு அல்லது இந்தியாவுக்கு வருவது இனிமையாக இருக்குமே ஒழிய விமானப்பயணம் இனிமையாக இருக்காது ,கிட்டத்தட்ட ௨௦ மணித்தியாலங்கள் பயணம் என்றால சும்மாவா?

,இனிமையான விமானப்பயனங்களை கற்பனை செய்து வைத்திருக்கும் நாம் இங்கே கிழே பார்க்கும் விமான நிலையங்களுக்கு பயணம் செய்வோமானால் எமது மனநிலை எப்படி இருக்கும்? இந்த விமான நிலையங்களுக்கு  நாம்  கண்டிப்பாக விமானப் பயணம் போகவேண்டிய சூழ்நிலை   ஏறபட்டால் நாம்   போவோமா? மாட்டோமா?

ரிஸ்க் எடுப்பது என்பது  ரஸ்க் சாப்பிடுறமாதிரி என்ற பரம்பரையில் வந்த நாங்கள் ரிஸ்க் எடுத்தே தீருவோம் என்கிறிர்களா? உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்ய நீங்கள் தயாரா?

சரி! கிழே இருக்கும் விடியோக்களை பார்த்துவிட்டு சொல்லுங்களேன்

.

ஒன்றை பார்த்து விட்டீர்கள் இனி அடுத்த வீடியோ .

http://www.youtube.com/watch?v=fLphTxDix-c&feature=related

Wednesday, October 10, 2012

மதவாதிகளின் வெறிச்செயல்! பெண் கல்வியை ஊக்குவித்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு !!

 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சேர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு  பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்தவரும், சமாதானத்துக்கான சர்வதேச விருது ஒன்றுக்காக பரிந்துரை செய்யப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இச் சிறுமி தனது சேவையினால் பாகிஸ்தானில் மட்டும் ல்ல ,உலகெங்கிலும் புகழ்பெற்றவர்.

 

இந்நிலையில் சம்பவத்தினை தாமே செய்தோம் என்று இஸ்லாமிய கடும் கோட்பாளர்கள் ஆகிய தலிபான்கள் சொல்லி இருக்கின்றனர் .அவர் ஒரு தலிபான் எதிர்ப்பாளர் மேற்கத்திய ஆதரவாளர் அதனால் தான் சுட்டோம் என்று காரணம் சொல்லிருக்கின்றனர்.அனால் என் இச்சிறுமி சுடப்பட்டார் என்பதன் காரணத்தினை வாய்க்குள் விரலை வைத்திருக்கும் சிறு பிள்ளை கூட சொல்லிவிடும் .

பெண்கள் கல்வி கற்பதனை எதிர்க்கும் தீவிர மத வெறியரான தலிபான்கள் பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும்  சிறுமியை சுட்டதன் பின்ணணி யாருக்கும் விளங்க முடியாது அல்ல .ஏற்கனவே ஆப்கானில் பெண்கள் பள்ளிகளை மூடி,இயங்கும் பள்ளிகளில் விஷம் கலந்து பெண் பள்ளிப் பிளைகளை,ஆசிரியைகளை கொன்று இப்படி பல வழிகளில்  பெண்கள் கல்வியை முடக்கும் தலிபான்கள் பெண்களை முக்காடு இட்டு வீட்டுக்குள்ளே முடக்கவே இதனையும் செய்திருக்கின்றனர்.எனது முன்னைய பதிவு ஓன்றினை பார்க்கவும் மேலதிக தகவல்களுக்கு.

சரி நடந்த சம்பவம் இதுதான்

ஸ்வாத் பகுதியின் முக்கிய நகரமான மின்கோராவில் பள்ளிக்கூடத்திலிருந்து பெண் குழந்தைகள் வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய தாடி வளர்த்த  மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து, மலாலா யூஸுஃப்ஸாய் இருக்கிறாரா என்று கேட்டு விட்டு பின்னர் அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக பார்த்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

தலையில் காயம் பட்டுள்ளதாகவும்  , ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இச்செயல் பலத்த கண்டனத்தினை எழுப்பியுள்ளதுடன் பலரும் இச்சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்..நாமும் மதவாதிகளால் சுடப்பட்ட இச்சிறுமி பூர்ணகுணமடைய இறைவனை வேண்டுவோம்

மேலாதிக வாசிப்புக்கு சுட்டிகள் :-

http://www.guardian.co.uk/world/2012/oct/09/taliban-pakistan-shoot-girl-malala-yousafzai

http://www.nytimes.com/2012/10/10/world/asia/teen-school-activist-malala-yousafzai-survives-hit-by-pakistani-taliban.html

http://www.facebook.com/malalayousafzaiofficial

Tuesday, October 09, 2012

கேரளா அரசின் ஏயர்-கேரளா ! தமிழக அரசின் எயர்–அம்மா !!

 

தலைப்பை பார்த்து கண்ணை கட்டுதே என்று வடிவேல் பாணியில் புலம்புகிறி ரிகளா?தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம் .இதுவும் நடக்கலாம்.நடக்காது என்று யாரவது சொல்லமுடியுமா? எயர் அம்மா சில வேளைகளில் அம்மாவின் பிறந்த தினத்திலிருந்து  பறக்க தொடங்கினால்  பிளேனின் நிறம் பச்சையாக இருக்கும்  என்பதை மட்டும் என்னால் அடித்து  சொல்லமுடியும்.. விமான பணிபெணகளும் வேறு வழி பச்சைதான் சாரி, பச்சை சாரிதான் அதற்காக பச்சை பச்சையாக வீடியோ எல்லாம் போடுவார்களா என்று கேட்டக் கூடாது ?

சரி விடையம் இதுதான் கேரளா அரசு எயர் -கேரளா என்னும் பெயரில் ஒரு விமான நிறுவனத்தினை அடுத்த ஆண்டு  ,மலையாள புதாண்டுடன் தொடங்க இருக்கிறது .வெளிநாடுகளில் நிறைய மலையாளிகள் வசிப்பதால் தமது விமானத்தில் பறந்தால் அரசுக்கு வருமானம் வரும் என்பதனால் இத்திட்டம்.

நல்லதொரு திட்டம் தான் அனால ஒரு சிக்கல் இந்திய சிவில் விமான போக்குவரத்து  நிறுவனத்தின் விதிப்படி வெளிநாட்டு சேவையில் ஈடுபட என்னும் எந்தவொரு நிறுவனமும் முதல்  ஜந்து ஆண்டுகள் உள்ளூர் சேவையில் ஈடுபடவேண்டும் .அதன்பின்னரே வெளிநாட்டு சேவைக்கு அனுமதி.

அதாவது கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன் எனும் பழமொழி நினைவுக்கு வருகிறதா? முதல் ஜந்து ஆண்டு உள்ளுரில் கேட்டிககாரதனமாக   கோழி மேய்தால் பின்பு வெளியூரில் மேய்க்க அனுமதி .

அனால் கேரளா அரசு ஒரே அடியாக வெளிநாட்டுக்கு சேவைக்கு அடிஎடுக்க் நினைக்கிறது . ஒரு அரசு  இயக்குவதால் தமக்கு அனுமதி கிடைக்கும் என் நம்புகிறார்கள்

சரி மலையாள விமான சேவை என்றபடியால் தமிழ்படங்களில் காட்டப்படும் தோற்றத்தில் விமானப் பணிப்பெண்கள் இருந்து சேவையாற்றுவார்கள் என் நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல !!!!!!!

Neelthamara Photos

பேஸ்புக் பக்கம் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை !

 

 பதினாறு வயது பெண்!, பேஸ்புக் அழைப்பு!! கலவரம் !

பேஸ்புக் இன்றைய நாளில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்படும் இணையத்தளம்.பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவன் கணக்கிலேயே எடுக்கப்படாத காலம்.பேஸ்புக்கினால் நன்மைகளா தீமைகளா அதிகம் விளைகிறது எண்டு பார்த்தால் நன்மைகளும் சரி தீமைகளும் சரி  சரிக்கு சரி சசமாகவே இருக்கிறது.பேஸ்புக் மூலம் பெண்கள் ஏமாற்றம் ,மோசடி ,புரட்டு ,கள்ளக்காதல்,வதந்தி,பணமோசடி இப்படி பல  இன்னோரன்ன சம்பவங்கள் ந்டைபெருவதாகவே பல தகவலகள் காண முடிகிறது.அண்மையில்  நண்பர் இக்பால் செல்வன் பேஸ்புக்கினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்றைப்பற்றி எழுதியிருந்தார். இது அதற்கு எதிர்மாறானது

சரி நீட்டி முழக்கவில்லை .ஒரு பதினாறு வயது இளம்பெண் தனது . 16வது பிறந்த தினத்துக்கு பேஸ்புக் மூலம்  விடுத்த அழைப்பு கலவரத்துக்கு காரணம் ஆகியது.தனது பிறந்த நாளுக்கு பேஸ்புக் முலமாக இப் பெண்  அழைப்பினை விடுத்தபோது கிட்டத்தட்ட 240,000 பேருக்கு மேற்பட்டோர் அழைப்பினை பெற்றுக்கொண்டனர். 30000 பேர் பார்ட்டிக்கு வருவதாக உறுதிப்படுத்தினர் நெதர்லாந்தினை சேர்ந்த இப்பெண் இவ் அழைப்பானது தனது “உறவினருக்கும் நண்பர்களுக்கும்” மட்டுமானது என்பதனை கூறிப்பிட மறந்ததால் பிறந்த தினத்தன்று ஹாரேன் என்னும் ஊரில் உள்ள இப்பெண்ணின் விட்டிற்கு முன்னால்   கிட்டத்தட்ட5000  பேர் கூடிவிட்டனர் .

Muenster, Germany - May 7, 2011: facebook.com website seen through a blurred keyhole. Photography concept of data privacy issues. Facebook is the biggest social networking website of the world, owned by Facebook, Inc.  Stock Photo - 9475437

தமது மகளின் பிறந்தநாள் விழாவுக்கு இந்தளவில் விருந்தினர்கள் வருகையினைக் கண்ட இப் பெண்ணின் பெற்றோர் வெலவெலத்து போய்விட்டனர் .இது மட்டுப்படுத்த வீட்டு விழா என்பதை செவிமடுக்காத பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட கூட்டம் எப்படியும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வது என்று களம இறங்க வன்முறை வெடித்தது .பியர் போத்தில்களுடன் காணப்பட்ட இளைஞர் கூட்டத்தினால்   கடைகள் சூறையாடப்பட போக்குவரத்து விள் க்குகள் ,மின்விளக்குகள் ,கார் இப்படி பல  சேதமாக்கப்பட கலகம் அடக்கும் போலீசார் 500 பேர் வந்துசேர்ந்தனர் .

பின்னர் இளைஞர் கூட்டம் ஆனது போத்தில்கள்,கற்களை கொண்டு போலீசாருடன் மோதலில் ஈடுபடபோலீசார் பல மணிநேரம் போராட ஒருமாதிரி கலவரம் ஓய்ந்தது .ஆறு பேர் காயமடைந்தனர் ,34 பேர் கைது செய்யப்பட்ட்டனர்.

இது கடந்த வாரம் நெதர்லாந்தில் இடம்பெற்ற சம்பவம் ,இவ்வளவுக்கும் அப்பெண செய்த தவறு தனது  அழைப்பில் பிரைவேட என் குறிப்பிட மறந்துதான் ,சிறிய ஒரு விடையம் எப்படி கலவரம் ஆக மாறியது  பார்த்திரிகளா? “,ஒரு சமுக இணையதளத்தின் சக்தி எந்தளவுக்கு பரந்துவிரிந்துள்ளது பார்த்தீர்களா? அண்மையில் அரபு நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள் எப்படி வேகம் பெற்றன என்பது உங்களுக்கு தெரியும் தானே ?

இன்றைய தினம் பத்திரிகைகளில் வாசித்த செய்தி மனிதனின் இன்றைய தேவைகள் எவை என்பன தொடர்பாக

“காலத்துக்கு ஏற்ப மக்களின் விருப்பங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில் சினிமா மீது மக்களுக்கு அதிக மோகம் இருந்தது. இப்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். பலருக்கு செக்ஸ், சிகரெட் போன்றவற்றை விட இவையே அதிக ஆசையை தூண்டுவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் ஜெர்மனியில் ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 18 முதல் 85 வயது உடையவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மது, சிகரெட், செக்ஸ் மற்றும் பல்வேறு விருப்பங்கள் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமுதாய வலை தளங்களில் படங்களை பார்ப்பது, படிப்பது, கருத்துகளை எழுதுவது ஆகியவற்றை தவிர்க்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர். மது, செக்ஸ் போன்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தங்களின் ஆசையை தூண்டுவது இவை என்று தெரிவித்துள்ளனர்.”

என்னைப் பொறுத்த வரையில் வலைபதிவையும் இவற்றில் சேர்க்கவேண்டும் என்பேன் .நீங்களும் இதை அமோதிப்பிர்கள் என்பேன் அது கூட ஒரு போதைதான் .(நான் சொல்லவில்லை என் மனைவி )

சரி சொல்லவந்த விடையத்துக்கு வருகிறேன் .எதுவாக இருந்தாலும் பொது வெளியில் உங்கள் கருத்துகள்,எண்ணங்கள் ,அழைப்புகள்.பின்னுட்டங்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் பொது அவதானமாக பதிவிடுவீர்கள் என் நம்புகிறேன் ,நீங்களும் ஒரு கலவரத்துக்கு காரணமாக் இருக்கமாட்டிர்கள் என நம்புகிறேன்

எசகு பிசகாக பேஸ்புக்கில் பதிலளித்து மாட்டிகொண்டுள்ள இன்றைய உதாரணம் சோனியாவின் மருமகன் வதேரா. இவரது பேஸ்புக்கில் பக்கத்தில் தன மீதான ஊழலை விமர்சித்து கருத்திட்ட இவர் நாட்டின் ஜனநாயக அமைப்பினை விமர்சித்ததாக எழுந்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தினை முடக்கிவைத்திருக்கிறார்.  

இதில் இருந்து தெரியும் சேதி .சனி நாக்கில் துள்ளி விளையாடினாலும் கூட.தேவை சாந்தியும் சமாதானமும் உங்கள் நாக்குக்கு மட்டுமல்ல ,முளைக்கு கூட.

Saturday, October 06, 2012

த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


த(கொ)லைக்கு விலை பேசும் முஸ்லிம்கள்!


ஜேர்மனியில் மறைந்து வாழும் ஈரான் நாட்டைச் சேர்ந்த "ராப்” இசைக்கலைஞரான ஷாஹின் நாஜாஃபிக்கு (Shahin Najafi) ஈரானிய ஷியா  முஸ்லிம்கள்  ம்ரணதண்டனை விதித்துள்ளனர்.
அவரது  த(கொ)லைக்கு 100,000 டொலர் விலை வைத்துள்ளனர். ஈரானிய மதகுருக்களுக்கு எதிராகப் பாட்டெழுதிப் பொது மேடைகளில் பாடி வருவதால் நாஜாஃபி மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் இத் தண்டனையானதுத ஈரானிய  ஷியா முஸ்லிம் சமூகத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய  இமாம்களைப்(மதகுரு) பற்றி கேலி செய்யும் பாடல்களை நாஜாஃபி பாடியதால் அவரிற்கு  ஈரானின் ஷியா சமயத் தலைவரான அயாதுல்லா சாஃபி (Ayatollah Safi) கோல்படுயகானி  மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. வெகுகாலமாக ஈரானிய சமயப் பெருமக்களோடு கருத்து வேறுபாடு கொண்டதனால் நாஜாபி 2005 முதல் ஜெர்மனியின் கோலோனில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த வருடம் மே மாதத்தில் “nagi” என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் ஷாஹின் நாஜாஃபி. இப் பாடல் தொகுப்பில்  ஈரானிய சமூகத்தைப் பற்றியும் ஈரானிய அரசியலைப் பற்றியும் விமர்சித்த பாடல்களும் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்தே ஃபத்வா எனப்படும் சமயத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால் ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமியத் தீவிரவாதி யாராவது நாஜாஃபியைக் கொல்லும் ஆபத்து உள்ளது.
எனவே இவர் தற்போது  காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறார். ஈரானின் ஷியா மதகுருவான சஃபி மீது காவல்துறையில் முறையீடும் செய்துள்ளார். 

இது தொடர்பாக நாஜாஃபி  கூறும் பொழுது  தனக்கு சமயத்தை(இஸ்லாத்தினை) இழிவுபடுத்தும் நோக்கம் எதுவுமில்லை என்றும், சமூக நடப்பையே தனது பாடலில் வெளிப்படுத்தியதாகவும், இதனைத் திரித்துக் கூறி தன் மீது வெறுப்பைப் பரவ விட்டிருப்பதாகவும் கூறினார்.
நான் இளைஞன், என்னால் இசைநிகழ்ச்சி நடத்தாமல் சும்மா இருக்க இயலாது என்றும்  ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாமல் கருத்துக்களை வாளால் எதிர்கொ(ள்)ல்லும் சம்பவங்களின் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்களில் ஒரு சம்பவமே இது.

இது தொடர்பாக பத்திரிகையில் ( Newyork Times) வந்த செய்தியின் சுட்டி:-

http://www.nytimes.com/2012/05/15/world/middleeast/shanin-najafi-iranian-born-rapper-faces-death-threats-over-song.html?_r=0

Tuesday, October 02, 2012

மூத்த வலைப்பதிவர் மறைவு !!!!!! கண்ணீர் அஞ்சலிகள்!!

 

ன்றைய பொழுது தற்செயலாக யாழ் இணையம் சென்றபோது பார்த்த செய்தி மனதினை அதிர செய்தது .ஆம் மூத்த  வலைப்பதிவர் ஈழநாதன் தனது 31 வயதினில் அகாலமரணம் என்ற செய்தியே தான் அது .2007 ம் ஆண்டுக்கு பின்னர் வலை பதிபவ்ர்களுக்கு அவரை தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் .அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டின் தொடக்கத்தில்    இருந்து  2007 ஆண்டுவரை வலைபதிவிலும். யாழ் இணையத்திலும் எழுதிவந்தவர். அபொழுது எல்லாம் திரட்டியே இல்லாத காலம்.மதி கந்தசாமியின் ஒரு வலைப்பதிவில் எல்லா வலைபதிவுகளும் தொகுகப்பட்ட காலம்

.கரிகாலன் ஆகிய நான் ,ஈழநாதன் ,சயந்தன் ,வசந்தன் .மதி கந்தசாமி இப்படி சிலர் தான் ஈழத்தினை சேர்ந்த பதிவர்கள் மற்றவர்கள் தமிழகத்தினை சேர்ந்த உறவுகள்.சண்டை சச்சரவு அற்ற பதிவுகள் ,விட்டுக்கொடுப்புகள் ,நாகரிகமான ஆரோக்கியமான் கருத்தாடல்கள் , இப்படி இருந்த காலம் .அப்பொழுது தனது நிறைந்த தமிழ் அறிவாலும் இலக்கிய திறனாலும் உதவி செய்யும் பண்பாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ,”ஈழநாதம்” அவரது பிரதான் வலைபதிவு ,அதை விட  மேலும் 4,5 வலைபதீவுகள் வைத்திருந்தார் .ஈழத்து நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமான நூலகம் திட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.அதை விட யாழ் இணையத்தில் நிறைய பங்களிப்புகள் செய்தவராவார்.

2007ம் ஆண்டின்பின்பு எந்தொரு இடத்திலும் அவரது எழுத்துகள் காணப்படவில்லை.யாருடனும் தொடர்பில் இல்லை .சிங்கப்பூரில இருந்து எழுதிய அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது .நுலகம் சார்ந்தவர்களுடன்  கேட்டபோது தங்களுடன் தொடர்பு இல்லை என்று சொன்னார்கள் ..இப்படி  ஆட்கள் காணமல் போவது ஈழத்தவர் வாழ்வில் சகயம் என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை .

இப்போது செய்தி வந்திருகிறது தனது மனைவி ,பிள்ளை இவர்களை தவிக்கவிட்டு அகால மரணம் அடைந்திருப்பதாக .நல்லதொரு நண்பனை இழந்த துயரம் எனக்கு ,நல்லதொரு மகனை ,கணவனை தகப்பனை இழந்ததொரு துயரம் அவரின் குடும்பத்திற்கு .

அவரின் பிரிவால துயருறும் அவரின் குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த

அனுதாபங்கள்!

.நண்பனே உனக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள்!

தமிழை விற்று பிழைப்பவன் எல்லாம் நூறு ஆண்டுகள் வாழும்போது  தமிழக்காக உழைப்பவர் எல்லோரும்  அற்ப ஆயுளில் போவதென்பது  தமிழே நீ கொண்டுவந்த சாபமா ??

 

eelanathan

பட உதவி(நன்றி) :-யாழ் இணையம்

Tuesday, September 18, 2012

மனைவிகளின் அகராதி (Dictionary) : உங்கள் முதுகை காப்பற்ற என்னால் ஆனா சில உதவிகள்!

 

உண்மையிலே பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் .பெண்களின் மனதினை கடலின் ஆழத்துக்கு ஒப்பிடுவது வழமை .உண்மையில் பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை அறிவது கடலின் ஆழத்தினை அறிவதை விட கடினம் .

ஒரு பெண் ஒரு விடயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றால் வேண்டும் வேண்டும் என்பதாகவே அர்த்தம் கொள்ளவேண்டும் .காதலிக்கும் பொது நோ என்றால்  எஸ் என்பதாகவே அர்த்தம் பெண்கள் அகராதியில் .எனக்கு திருமணமாகி கிட்டத்தட்ட எழு வருடங்கள் ஆகிவிட்டன இப்போதும் கூட சில விடையங்களில் மனைவி என்ன சொல்ல வருகிறார் என்பதில் “ங்கே” தான்.

ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி கதைப்பது மட்டுமல்ல சில விடையங்களில் ஆலோசனை சொல்லிவிட்டு நான் அதன்படி நடந்து அந்த விடையம் பாதகமாக முடிந்தால் எனது மனைவி சொல்லுவார் பாருங்கள் ஒரு வசனம் அப்படியே கோபம் பொத்துக்கொண்டு வரும்.

:”உங்களுக்கு எங்கே போச்சு மதி ?நீங்கள் எல்லோ யோசிச்சு செய்திருக்கோணும்” இப்படி பந்தை தூக்கி என்னில் போடுவார் .சரி நீளமாய் கதைத்து ஒரு பிரயோசனமும் இல்லை .உங்களிடமே சொந்த கதை சோக கதை நிறைய இருக்கும் எண்டு நினைக்கிறான் . என்ன கொஞ்சத்தை பகிருங்கள் .

இப்ப உங்களுக்கு உதவ சில மனைவிமார்களின் அகராதி தாறன் .நான் பெற்ற இன்பம் பெறுக இவ் !வையகம்.

 

மனைவி  

 

அர்த்தம்

நமக்கு வேணும்

எனக்கு வேணும்

உங்கள் முடிவு

நான் சொல்லுறதுதான் சரி .பிறகு உங்கள் விருப்பம்

தாரளமாக செய்யுங்கள்

எனக்கு விருப்பமில்லை

உங்களுக்கு என்ன விருப்பமோ

பின்னாடி எப்படியும் என்னட்டை தான் வரவேணும்

எனக்கு ஏதும் வருத்தமில்லை

வருத்தமாய் இருக்கிறேன்

நிங்கள் ரொம்ம மேன்லியக இருக்கிங்க

மூஞ்சையை பார் .சேவ் பண்ணவும்

இந்த கிச்சன் சரியான கஸ்டமா இருக்கு

வேற வீடு பார்க்கவும்

உங்களுக்கு என்னில் விருப்பமோ?

பெரிசா எதோ கேட்டகப் போறேன்

என்னை உங்களுக்கு நல்ல பிடிக்குமோ?

உங்களுக்கு பிடிக்காத ஒரு விடையத தினை   செய்திருக்கிறேன்

நான் நல்ல குண்டா இருக்கிறேனோ ?

அழகாய் இருப்பதாக சொல்லவேண்டும்

சரி

இல்லை

இல்லை

சரி

ஒன்றும் இல்லை

நிறைய இருக்கு

நான் அதைபற்றி பேச விரும்பவில்லை

இப்படி ஏத்திவிட்டுதான் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி வரும் பொது கடையில் சாப்பாடு வாங்கிவரவும்
தோள்மூட்டெல்லாம் ஒரே வலி (படுக்கையில்) வாலைச்சுருட்டிக்கொண்டு தள்ளிப் படுக்கவும்
அப்பா,அம்மாவிடம் இருந்து போன் காசு அனுப்ப தயாரா இருக்கவும்
புடைவை கடையில்:- சீப்பான புடவையா எடுங்கோ விலை கூடிய புடவையா எடுங்கோ என்று என்வாயால் சொல்லவேண்டும்

இந்த அகராதி  நீண்டுகொண்டே போகும்  .நிளும் காலம்  உங்கள் ஆயுளையும் மன(ண)வழ்க்கையையும் பொறுத்து அமையும்

சாந்தியும் ??????சமாதானமும் ??????? உண்டாக கடவதாக.

சரி ஒரு ஜோக் :-

கணவன் :- அம்மா போன் பண்ணியவ வயிற்றுவலியாம் டாக்டரிடம்         

                     காட்டவேனும்  பணம் அனுப்ப சொல்லி

மனைவி:- இதற்க்கு எல்லாம் டாக்ரரிடம் கட்ட தேவையில்லை .சுக்கு                  தண்ணி      குடிச்ச வயிற்று வலி போய்விடும் பணம் அனுப்ப

தேவையில்லை

கணவன் :- சரி உங்கடை அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிவிடுகிறேன்

மனைவி :- ????????????

Thursday, September 13, 2012

என்னை யாராவது கொன்று விடுவார்கள்: பயத்தில் 11 வயது பாகிஸ்தான் கிறிஸ்துவ சிறுமி

 

என்னை யாராவது கொன்று விடுவார்கள், எனக்கு பயமாக இருக்கிறது என பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 வயது சிறுமி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் குரான் புத்தகத்தில் இருந்த பக்கங்களை கிழித்து எரித்ததாக 11 வயது கிறிஸ்துவ சிறுமி ரிம்ஸா மாஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முஸ்லிம் இமாம் காலித் ஜடூன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ரிம்ஸா வீட்டை முற்றுகையிட்டு மத நிந்தனை புகார் கூறியதை அடுத்து சிறுமி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கின்படி சிறுமிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்ற நிலையில், இமாம் போலியாக ஆதாரங்களை உருவாக்கி இருப்பதாக மற்றொரு முஸ்லிம் மத தலைவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து ரிம்ஸா விடுதலை செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அடையாளம் தெரியாத பகுதிக்கு பெற்றோருடன் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின் இமாம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சி.என்.என் பத்திரிகை நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரிம்ஸாவுடன் பேசினார்.

அப்போது தன்னை யாராவது எப்படியும் கொன்று விடுவர் என பயப்படுவதாக ரிம்ஸா மிரட்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் குரான் புத்தக பக்கங்களை எரிக்கவேயில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.

ரிம்ஸாவின் வக்கீல் குறிப்பிடுகையில், சிறுமி மீது இமாமுக்கு விருப்பம், அதற்கு சிறுமி ஒத்துக் கொள்ளவில்லை.

அதனால் ஏற்பட்ட விரோதம் காரணமாக மத நிந்தனை குற்றச்சாட்டை அவர் சுமத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

 


Wednesday, September 12, 2012

ஈராக் பெண்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய மத வெறியர்கள்!

 

அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறிய பின்னரும், அங்குள்ள ட்ரென்ட்,
அமெரிக்க நாகரீகத்தை ஒட்டியே உள்ளதால், தீவிர மத அமைப்பு ஒன்று ‘பேஷன் போலீஸ்’ என்று ஒரு கண்காணிப்பு பிரிவை அமைத்துள்ளது.
‘பேஷன் போலீஸ்’ முழு ஈராக்கிலும் இல்லை என்றாலும், இரு நகரங்களில் தீவிரமாக இயங்குகிறது.

இஸ்லாமிய கலாசார முறைப்படி உடை அணியாத பெண்களை குறி வைக்கிறது ‘பேஷன் போலீஸ்’.

கசிமியா நகரில் ‘பேஷன் போலீஸ்’ செயல்படுவது மட்டுமன்றி, வீதிகளில் அறிவிப்பு பலகைகளும் உள்ளன.
“மத கலாச்சாரத்தை பின்பற்றாவிட்டால் தண்டனை அடைய நேரிடும்’ என்கிறது ஒரு அறிவிப்பு பலகை. “‘அபயா’ அணிந்து வெளியே செல்லாத பெண்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்கிறது மற்றொரு அறிவிப்பு பலகை. அபயா என்பது, தோளில் இருந்து கால் வரை அணியப்படும் உடை.

தலைநகர் பாக்தாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு நகரமான திவானியாவில், போஸ்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளன. ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் போட்டோ ஒன்றை போட்டு, அதன்மேல் சிவப்பு வர்ணத்தில் பெரிய அளவு X ஒன்று போடப்பட்டுள்ள போஸ்டர் அது.
மற்றொரு போஸ்டர், பெண்கள் முழுமையாக தமது தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

மயாடா ஹமீத் என்ற 32 வயது பெண், தமக்கு ‘பேஷன் போலீஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்கிறார்.
“அவர்கள் (‘பேஷன் போலீஸ்’) தொலைவில் இருந்தே என்னை வாட்ச் பண்ணியபடி இருந்தார்கள்.
அப்போதே புரிந்து விட்டது, விபரீதமாக ஏதோ நடக்க போகிறது என்று. சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு அருகே வந்து
, “இது முதல் எச்சரிக்கை. இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணியாவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை கிடையாது.
தண்டனைதான் வழங்கப்படும்” என எச்சரித்துவிட்டு சென்றார்” என்றார்.

‘பேஷன் போலீஸ்’ என்பது, சீருடை அணிந்த ஒரு பிரிவல்ல. அதிகாரபூர்வ காவல்துறையும் அல்ல. சாதாரண
மக்கள் போலவே அவர்கள் நடமாடுகிறார்கள். கலாசார உடை அணியாதவர்களை எச்சரிக்கும்போதுதான் அவர்கள் ‘பேஷன் போலீஸ்’ ஆள் என்று தெரியவருகிறது.

ஈராக்கிய அரசு, இந்த ‘பேஷன் போலீஸ்’ தமது போலீஸ் பிரிவு அல்ல என்கிறது. தலைநகர் பாக்தாத்தில்
செய்தியாளர் மாநாட்டில் பேசிய போலீஸ் பிரிவு தலைவர், “பெண்கள் உடை அணிவது தொடர்பான தடைகள்
அல்லது நடைமுறைகள் எதையும் நாம் அறிவிக்கவில்லை. எந்த உடை அணிவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதே அரசின் நிலைப்பாடு.

உடை அணிவது பற்றிய எச்சரிக்கைகளுடன் சில அறிவிப்பு பலகைகள் குறிப்பிட்ட சில நகரங்களில் யாராலோ வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்
கிடைத்துள்ளது. அந்த அறிவிப்பு பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாக்தாத்தில் உள்ள ஷீட்டி பிரிவு மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “பேஷன் போலீஸ் நடமாட்டம் பற்றி
நாமும் அறிந்தோம். அது, எமது மதப் பிரிவால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதைதான் என்னால் கூறமுடியும்.
பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடை அணியும் சுதந்திரம் உள்ளது என்பதே, எமது பிரிவின் கொள்கை.

ஆனால், மத முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், மத சடங்குகள் நடைபெறும் இடங்களுக்கும் பெண்கள் கலாசார
உடை அணிய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இஸ்லாம் மட்டுமன்றி, மற்ற மதங்களும் அதைதான் சொல்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நகரங்களிலும் உள்ள நிலைமை பற்றி குறிப்பிடும் மதகுரு ஷேக் மாஜின் ஷாடி, “அந்த நகரங்களை சேர்ந்த பெண்கள், கலாசார உடைகளை அணியத் துவங்கியுள்ளார்கள் என அறிகிறோம். காலப்போக்கில் அனைவரும் காலாசார உடை அணிபவர்களாக இருப்பார்கள். அரசால் அதை தடுக்க முடியாது என்பதே அங்குள்ள நிலைமை” என்கிறார்.

யார் என்ன சொன்னாலும் பெண்கள் எப்படி உடை அணிவது என்பதை பெண்கள் தான் தீர்மானிக்கவேண்டும் .மதவாதிகள் அல்ல என்பதே எனது கருத்து .

Thursday, August 30, 2012

அப்பாவுக்கு என்ன தெரியும்?---தந்தையைப் பற்றி மகன் சொல்கிறார்!!!

 

சில தினங்களுக்கு முதல் என்றொரு விபரம் ஒன்றை பெறுவதற்காக எனதுபழைய டயரியை புரட்டினேன்.தேடிய விபரம் கிடைத்ததுடன் நான் அதில் எழுதி வைத்திருந்த சில விடயங்களையும் காணமுடிந்தது.டயரி எழுதுவது என்றால் ஒவ்வொரு வருடமும் டயரி வாங்கி ஒவ்வொரு நாளும் எழுதி வந்திருக்கும் ஒரு நல்ல ஒரு மனிதராக என்னை கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல .2000 ம் ஆண்டில் வாங்கிய டயரி. முக்கியமான விடையங்கள் .திகதிகள் , முக்கியமான்வ்ர்களின் பிறந்த நாட்கள் .சில வங்கி விபரங்கள் இவையே அதில் உள்ளவை அத்துடன் நான் ரசித்த சில குறிப்புக்கள்,பெரும்பாலும் பத்திரிகைகளில் வந்தவை .

அப்படியான ஒரு குறிப்புதான் . இப்பொது நான் குறிப்பிடப்போவது .பொதுவாக தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுகள்தான் பொதுவாக எல்லோராலும் குறிப்பிடப்படும் .அரிதாகவே தகப்பனுக்கும் மகனுக்குமான உறவுகள்  பேசப்படும்.

அப்படிபட்ட  சிலருக்கு வரும் ஒரு உணர்வே இது படித்து விட்டு சொல்லுங்கள்

 


5 வயது

என் தந்தையால் செய்ய முடியாது ஒன்றும் இல்லை

7 வயது

என் தந்தைக்கு பல விடையங்கள் பற்றி நன்கு தெரியும் 

10 வயது

என் தந்தைக்கு எல்லா விடயங்களைப பற்றியும் தெரியாது 

12 வயது

என் தந்தைக்கு ஒன்றுமே தெரியாது

14 வயது

அவரா!  அவருக்கு காலம் மாறியது எங்கே புரிகிறது?

21 வயது

கிடக்கிறது கிழம்.  அவரிடம் போய் யோசனை கேட்பதா?

30 வயது

எதோ கொஞ்சம் தெரியும் .


40 வயது

அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில்
தப்பில்லை

55 வயது
 
அவரின் யோசனைகளை கேட்டு பின் முடிவு
எடுக்கலாமே .

60 வயது

என் தந்தையர் இது போன்ற விடையங்களில் எவ்வளவு சிறப்பாக தீர்மானம் எடுப்பார் தெரியுமா?

65 வயது

அவர் இல்லாதது உண்மையிலே பெரிய கஷ்டமாக இருகிறது .அவரின் ஆலோசனையைக் கேட்க முடியாமல் போனது பெரிய நஷ்டம்.

70 வயது

அவருடைய அறிவும் அனுபவமும் எங்கே? நான் எங்கே?

நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனப்பாங்கு எனக்கு ஒரு காலத்திலும் வந்ததில்லை .அதற்கு எனது தந்தையின் படிப்பு ,உத்தியோகம் ,வசதி அந்தஸ்து.அனுபவம் ,உலக அறிவு காரணமாக  இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .மேற்படி காரணிகள் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட எண்ணம் எனக்கும்  வந்திருக்குமோ?

கடந்த தந்தையர் தினம் ,இங்குள்ள வானொலி ஒன்றில தந்தையர் தின சிறப்பு நிகழ்வாகக் நேயர்கள் வந்து தமது தந்தை எப்படி தமக்கு ஒரு வழிகாட்டியாகக் இருந்தார் என்று  தமது கருத்துக்களை சொல்லி தந்தைக்காக பாடலகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு நேயர் வந்தார் .அறிப்பாளர் கேட்டார் உங்ககள் தந்தைபற்றி சொல்லுங்கள்  என்று.நேயர் சொன்னார் .எது என்றாலும் போட்டு அடி அடி என்று அடிப்பார் என்றார்.துணுக்குற்ற அறிவிப்பாளர் சொன்னார் குழப்படி என்றால் உங்களை திருத்த தந்தை தண்டித்திருப்பார்.அதற்கு அந்த நேயர் சொன்னார் அபப்டி அல்ல எதுவென்றாலும் போட்டு விளாசு விளாசு என்று விலாசிவிடுவார் என்று .இப்படி ஒரு தந்தையர் தின உரையாடலை எதிபாராத அறிவிப்பாளர் கேட்டார் .சர இப்பொது உங்கள் தந்தை எங்கே என்று?

மிகவும் வெறுப்பான தொனியில் வந்தாது பதில் ,வேறு வழியில்லாமல் இப்பொது வந்து என்னோடுதான் இருக்கிறார்.என்று.

உண்மையில் அறிவிப்பாளர் மட்டும் அல்ல நானும் திடுக்குறேன் அன் நேயர் பதில் கண்டு .அன்று  நித்திரை வரவில்லை ,ஒரு மகன் தனது தந்தையை பற்றி தந்தையர் தினநிகழ்வில் இப்படி கதைப்பாரனால் எவ்வளவு வெறுப்பு இருக்க வேண்டும் தந்தைமேல் ,இங்கு யார் மேல் பிழை ,யார் சரி என்றுஎன்னால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை.அனால் அன்று இரவு முழுவதும் அர்த்த நேயரின் அந்த வெறுப்பை கக்கும் குரல் என்னை துங்க விடவில்லை என்பதே நிஜம்.

மீண்டும் சந்திப்பேன்.

Friday, August 24, 2012

மைக்ரோசொப்ட் தனது லோகோவை மாற்றியது!!!!

 
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினை தெரியாதவர்களே இருக்கமுடியாது. விண்டோஸ் முலம மிகவும் பிரபல்யம் அடைந்த இந்த  software நிறுவனம் ஓகஸ்ட் 23ந திகதிமுதல் புதிய சின்னத்தை(லோகோ) அறிமுகம் செய்தது.


இதற்கு முன் பறக்கும் கொடி போல நான்கு நிறங்களின் தனித்தனி சதுரங்கள் மைக்ரோசாப்ட் நிறுவன லோகோவாக இருந்தது.
இப்போது சிவப்பு, பச்சை, நீலம், பழுப்பு ஆகிய நான்கு கட்டங்கள் ஒரே அளவுடன் இருப்பது போல எளிமையாக லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
new-microsoft-logo-2
மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு 37 ஆண்டுகள் ஆகின்றன.(1975) அப்போது முதல் 5வதாக வெளியிடப்படும் புதிய லோகோ இது.
எனினும் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் புதிய லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பொது நிறுவனம் ஆனபின்பு .
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மென்பொருள் கண்டுபிடிப்புகளில் புதிய அத்தியாயத்துக்குள் நுழைவதை குறிக்கும் வகையிலும், நவீன வர்த்தக உலகில் எளிமையாக அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று மைக்ரோசொப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாறி வரும் உலகிற்கு ஏற்றமாதிரி அண்மையில் புதிய ஈமெயில் சேவை ,விண்ட்டோஸ் 8 இப்படி பல தரும் மைக்ரோசொப்ட் தனது லோகோவினையும் நவீன்ப்டுத்தி சுருக்கமாக சொன்னால் எளிமைபடுத்தி இருக்கிறது.
இது காலம் கடந்து வந்திருக்கும் ஞானோதயம்,எளிமை இதைத்தானேக் google பின்பற்றி சாதனை படைகிறது








Sunday, August 12, 2012

பிளாக்பெரி போன் : சோகத்தில் ஒரு கனேடிய நகரம்!

 

 பிளாக்பெரி போன்களின் தாயகம் கனடா என்பது பலருக்கு தெரியாத விடையம்.பிளாக்பெரி போன்களை தயாரிக்கும் RIM  research in mortion நிறுவனம்  இருபது வருடங்களுக்கு  முன்பு வோட்டலூ என்ற நகரத்தில் தான் தனது முதலாவது ஸ்மார்ட்போன் ஆன பிளாக்பெரி  தயாரிப்பை தொடங்கியது

வோட்டலூ நகரம் என்பது ரொரன்டோ நகரத்தில் இருந்து 100 km தொலைவில்அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரம் ,சனததொகை அண்ணளவாகஒரு லட்சம் பேர்.

.ஒரு பல்கலைக்கழகமும அங்கு அமைத்திருக்கிறது .20ஆண்டுகளுக்கு முன் 1992ஆம் ஆண்டில் மைக் லசாரிடிஸ், ஜிம் பால்சிலி எனற இருவரின் முயற்சியால் வாட்டர்லூ நகரம், உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி நகரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி. எங்கு திரும்பினாலும்
பிளாக்பெரி ஸ்மார்ட்போன் போஸ்டர்கள், பேனர்கள்.

சொந்த கட்டிடங்களும், வாடகை கட்டிடங்களுமாக ரிம் நிறுவனத்தின் அலுவலகங்கள், போன் தொழிற்சாலைகள்தான் நகரின் மூலை
முடுக்குகளில் எல்லாம் வியாபித்திருந்தன.நகரத்துகே தனி மரியாதை

உலகம் முழுவதும் பரந்து விரிந்தது அதன் போன் சாம்ராஜ்யம். உள்ளூர் தொழிலதிபர் முதல் அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா வரை பிளாக்பெரி போன் வைத்திருப்பதை கவுரவமாக கருதியதுண்டு.

10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 16,500 ஊழியர்கள். அதில் வாட்டர்லூ நகரில் மட்டும் 9,000 பேர். இப்படி
உலா வந்த பிளாக்பெரி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 3 மாதத்தில் நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கு காரணம் ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகை. மற்றும் அவை பெற்றுள்ள வரவேற்பும் . கடந்த ஆண்டில் மொத்த
ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீதமாக இருந்த பிளாக்பெரி, கடந்த 3 மாதங்களில் 5 சதவீதமாக இறங்கி விட்டது.
இதனால் 6,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.ஆனால்   இந்தமாதம் அறிமுகப்படுத்த உள்ள  4G LTE BLACK BERRY PLAYBOOK ஆனது நிலைமையை ஒரளவு சமாளிக்கும் என எதிர்பாகிறது நிறுவனம் .

இந்தியாவிலும் பிளாக்பெரி போன்களின் விற்பனை  சரிவதாக அண்மையில் புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன .

எல்லாம் சரி.இந்த வோட்டலூ என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது என்று  யோசிக்கிரிகளா? நெப்போலியனின் சரித்திரம் படித்தவர்களுக்கு தெரியும்.மேற்படி பிளாக்பெரி போன்களின் சரிவுக்கு இந்த நகரத்தின் பெயரும் கூட கரணமாக இருக்கலாம் .

 ஆம், வாட்டர்லூ என்றால் மோசமான தோல்வி என்றும் பொருள்.

Tuesday, July 31, 2012

குளிர்பானம் குடித்த இருவருக்கு அடி, உதை: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் கூல்டிரிங்ஸ் குடித்த 2 பேரை பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்து கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் டமானிகோ என்ற சுற்றுலா தலத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இங்குள்ள உயரமான பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நகரின் அழகை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அன்வர் அப்பாஸ், மாலிக் சயீத் என்ற 2 இளைஞர்கள் காரில் அமர்ந்து கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆத்திரம் அடைந்து இருவரையும் தாக்கினார். ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அந்த நேரத்தில் கூல்டிரிங்ஸ் குடித்ததால் இருவரையும் பொலிஸ் அதிகாரி கைது செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பொலிஸ் கமிஷனர் பானியாமின் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து கைது செய்யப்பட்ட அப்பாஸ் கூறுகையில், நான் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கவில்லை. எனினும், மக்கள் முன்னிலையில் கூல்டிரிங்ஸ் குடிப்பது தார்மீக அடிப்படையில் தவறு என்பதை அறிவேன்.
அதற்காகதான் யாரும் இல்லாத இடத்தில் கூல்டிரிங்ஸ் குடித்தேன். அதை ஏற்காமல் அதிகாரி தனது பெல்ட்டை கழற்றி அடித்தார். பின்னர் அங்கிருந்து துரத்திவிட்டார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டு புகாரை வாபஸ் பெற வேண்டுகோள் விடுத்தனர் என்றார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத் பார் அசோசியேஷன் முன்னாள் பொதுச் செயலாளர் ரியாசட் அலி ஆசாத் கூறுகையில், பொது இடங்களில் உண்பதற்கு தடை எதுவும் பாகிஸ்தான் சட்டத்தில் இல்லை.
எனினும் ரம்ஜான் மாதத்தில் தார்மீக அடிப்படையில் பொது இடங்களில் உண்ண கூடாது என்று வேண்டுகோள் விடுக்கலாம். அதற்காக தாக்குதல் நடத்துவதற்கு பொலிசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
tamilwin

Tuesday, June 19, 2012

லண்டன் ஒலிம்பிக்சின் தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறப்போகும் இசைஞானி இளைஜராஜா ,மாதங்கியின் பாடல்கள்

 

உலகெங்கினும்  வாழும் தமிழர்கள் எல்லாம் மகிழக்கூடிய ஒரு செய்தி இன்று மாலை காதிலும் கண்ணிலும் கேட்க பார்க்க முடிந்தது .சரி எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம் எண்டால் கடந்த ஆறு வருடங்களாக தினமும் பார்க்கும் தமிழ்மணத்தினை  இரு தினங்களாக  காணவில்லை.கையும் ஓடவில்லை.காலும் ஓடவில்லை .எத்தனயோ விடயங்களை ஒரே நாளில் பறிகொடுத்த பரம்பரையில் வந்தவர்கள் தானே நாம் .இதுவும் கடந்து  போகும்.

சரி தலைப்பில் எதோ சொல்லிவிட்டு விடயம் எங்கே எண்டு கேளாததையங்கோ விசியதுக்கு வாறன்,


லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி.

அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன.

பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" என்ற பாடல்தான்.

கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் 1981ல் வெளியான 'ராம் லக்ஷ்மண்' என்ற படத்தில் வரும் பாடல் இது.

சடுகுடு அல்லது கபடி விளையாட்டு வீர்ர் ஒருவர் அந்த விளையாட்டின் போது பாடுவது போல் அமைந்திருக்கும், விறுவிறுப்பான இசையுடன் கூடிய இந்தப் பாடல், அந்தப் படம் வெளியான போது பெரிய அளவில் ஹிட் ஆனதாக நினைவில்லை.

ஆனால் இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிற பிரபல பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்தப் பாடலின் ஒலிக்கீற்றும் இந்த தொடக்க விழா நிகழ்வில் இடம்பெறலாம் என்று பிரிட்டிஷ் பத்திரிகைகளில் கசிந்து வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரபூர்வமாக்க் கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்லம் டாக் மிலியனேர்" போன்ற படங்களை இயக்கிய டானி போய்ல் அவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கி வருகிறார்.

அவரது மேற்பார்வையில், சுமார் 27 மிலியன் பவுண்ட் செலவில் உருவாகிவரும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் இடம்பெறும் மற்றுமொரு தமிழ்க் கலைஞர், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டனில் வாழும் மியா என்ற மாதங்கி அருள்பிரகாசம். இவரது, பிரபலமான "பேப்பர் ப்ளேன்ஸ்", (காகித விமானங்கள்) என்ற பாடல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றன.

குடியேறிகளின் அனுபவத்தைச் சொல்லும் இந்தப் பாடல் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட பாடல், அவரது இரண்டாவது ஆல்பமான "கலா" என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருந்த்து. உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இரண்டு தமிழர்களின் இசையும் இடம்பெறப்போகிறது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.

 



இதுதான் செய்தி ,செய்தியை அப்படியே தந்திருக்கிறேன்.மிகுதி விபரங்கள்

சில தினங்களில் தெரியவரும் தானே .சிந்திப்போம்  ஹி ஹி சந்திப்போம்

 


Friday, June 15, 2012

கோக் vs பெப்சி:- குடிக்கலாம்- இரசிக்கலாம்

 


மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் காணும் கட்டடத்தின்,இரண்டாவது மாடியில் கொக்கா கோலா மென்பான நிறுவனத்தினர் தமது அலுவலகத்தினை அமைத்தனர்.தமது விளம்பரப் பலைகையினையும் நாட்டினார். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவர்களின் விளம்பரப்பலகையின் கீழே பெப்சி கம்பனி தனது விளம்பரப் பலகையை நிறுவியது அதிரடியாக.அதிலே இடம் பெற்ற வாசகங்களை படத்தினைப் பார்த்துப் படித்துகொள்ளுங்கள்.சரியான நெத்தியடி கோக்கிற்கு.


சரி இந்த சம்பவம் எங்கு நடந்தது? படத்தில் தெரியும் தமிழ் எழுத்துக்கள்,ஆட்டோ,பெண் போன்றவற்றினை வைத்து பார்த்தால் எங்கு நடந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? கோக்கிற்கும் பெப்சிக்கும் இடையில் இப்படி ஆரோக்கியமான விளம்பர போட்டிகள் அடிக்கடி நடப்பது எல்லோரும் அறிந்ததே.மேலே குறிப்பிட்டதை போல பெப்சிக்கும் கோக்கிற்கும் இடையில் நடைபெற்ற மற்றுமொரு சுவாரசியமான விளம்பரப் போட்டி.


ஒரு முறை கோக் கம்பனியின் விளம்பரம் இப்படி இருந்தது.ஒரு குரங்கு ஒரு பெரிய மரப்பலகையினை ஒவ்வொரு ஆணிகளாக எடுத்து சுத்தியல் மூலம் அறைந்து கொண்டு இருந்தது.கருமமே கண்ணாக ஒவ்வொரு ஆணியாக அறைந்துகொண்டிருந்த குரங்கின் அருகில் கோக் போத்தல்கள்.உடனே தொலைக்காட்சி திரையில் இந்தவாசகங்கள்.
"கடமையே கண்ணாக இருப்பவர்கள் அருந்துவது கோக்"


பார்த்தார்கள் பெப்சி கம்பனிகாரர்கள்.உடனேயே அவர்களும்கொண்டுவந்தார்கள் பதிலடியாக ஒரு விளம்பரம்.ஒரு கடற்கரை, குளியல் உடையில் ஆண்கள் பெண்கள்.ஒரு ஜீப் வருகிறது.அதில் நீச்சல் உடையில் இளம்பெண்கள்அமர்ந்திருக்க அவர்களின் மத்தியில் தொப்பி அணிந்தபடி கோக் விளம்பரத்தில் வந்தது போல ஒரு குரங்கு அதிரடி இசை ஒலிக்க. இப்போது திரையில் தெரிந்தன இந்த வாசங்கள்
"வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள் அருந்துவது பெப்சி"


இது எப்படி இருக்கு? நான் பார்த்தவரையில் கோக்கின் தோற்றம் ,விளம்பரம் போன்றவற்றினை பார்த்தால் 35 வயது பெண்ணை பார்ப்பது போல ஒர் பிரமையும்.பெப்சியின் விளம்பரங்களை பார்த்தால்16 பெண்ணைபார்ப்பது போல் ஒரு பிரமையும் தெரிகின்றது.
ஹி.ஹீ,ஹீ . உங்களுக்கு எப்படி?


காதைக் கிட்ட கொண்டு வாங்கோ ஒரு ஜோக்.


ஒரு ஆராச்சியாளர் அடிக்கடி ஆராய்சிக்காக வடதுருவத்துக்கு போவார்.ஆனால் தனது உதவியாளார்கள் இருவரை மட்டும் அழைத்துப் போவார்.அதில் ஒருவர் 50 வயது பெண். கடிகாரம்,கலண்டர் எதுவும் எடுத்துப்போகமாட்டார் பேராசிரியார்.ஆனால் சரியாக ஆறாவது மாதம் தனது ஆராய்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி விடுவார்.இப்படி அடிக்கடி நடக்க ஆச்சரியம் தாளாத ஆராச்சியாளரின் நண்பர் கேட்டார்.என்னப்பா நீ கலண்டர் ,கடிகாரம் கொண்டு போவதில்லை ஆனால்எப்படி சரியாக 6வது மாதம் வீடுதிரும்ப முடிகிறது என்று?ஆராச்சியாளர் சொன்னார் எல்லாம் அந்த 50 வயது பெண் உதவியாளார் மூலம் தான் என்று. நண்பருக்கு சந்தோஷம் தாளமுடியவில்லை.ஒரு கிளுகிளுப்பான கதை கிடைக்கப்போகிறதே என்று?ஆராச்சியாளார் சொன்னார் நண்பனே எப்போது அந்த 50வயது பெண் அழகாக எனக்கு தெரிகிறாளோ அப்போது நான் முடிவு செய்து கொள்வேன்,எனது ஆராய்ச்சியை முடித்து வீடு திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது என்று.

Friday, June 01, 2012

சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே?—ஈழத்து பாடல்கள்.

 

னது பதின்ம கால இராத்திரி கனாக்களை எப்படி பருவப் பெண்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களோ அதே போல எனது பதின்ம வயதின் மற்றைய பொழுதுகளில் என்னை ஆட்கொண்டது இந்தப் பாடல். இன்று எனது வயதில் இருக்கும் பலரின் பால்யகாலத்தில் அவர்களின் மனதில் ரீங்காரமிட்டதும் இந்தப் பாடலாகவே இருக்கும். இதைப் போலவே பல பொப்பிசைப் பாடல்கள் (பைலா பாடல்கள்).
சின்னமாமியே பாடல் இப்படி என்னில் கூடி தாக்கம் செலுத்த காரணம் உண்டு. எனக்கும் ஒரு சின்னமாமி இருந்தார்.அவருக்கும் ஒரு சின்ன மகள் இருந்தார்.இப்போது சொல்லுங்கள் இந்த பாடல் எனக்கு பிடித்துவிட இதை விடவா வேறு காரணம் வேண்டும்.Open-mouthed smile


1977-,83 காலப் பகுதிகளில் இலங்கையின் எங்கும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தவை இந்த பாடல்கள்.இலங்கை வானொலி மூலம் பிரபல்யம் ஆகி இலங்கை தாண்டி இந்தியாவிலும் பிரபல்யமானது இந்த "பொப்பிசை பாடல்கள்". தமிழ் நாட்டு சினிமா பாடல்கள் இலங்கையில் செலுத்திவந்த தாக்கத்தினையும் மீறி பிரபலமாகியது ஒரு சாதனை என்பதை மறுக்க முடியாது. ஆங்கிலத்தில் வெளிவருகின்ற "ராப்" பாடல்கள் போல' ஏன் தமிழில் வந்த கானாப் பாடல்கள் போல சாதாரண மக்களின் தரத்திற்கு இறங்கி இங்கே சாதாரண மக்கள் என்று நான் சொல்லுவது ஈழத்து மக்களின்,அவர்களின் மொழியில்,அவர்களின் நடையில், அவர்களின் பேச்சு வழக்கில் துள்ளிசையுடன் இப் பாடல்கள் வெளிவந்த போது மக்களிடம் பெருவரவேற்பு பெற்றதில் ஆச்சரியம் இல்லைத்தானே.


Image hosted by Photobucket.com


அத்துடன் அந்த காலகட்டத்தில் தான் ஜ.தே.க கட்சி ஆட்சி பீடம் ஏறி இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்திய காலம் புதிய நாகரீகங்கள் வெள்ளமென பாய்ந்த நேரம். எல்லாவற்றினையும் அனுபவிக்க துடித்த மக்கள், இந்த நேரத்தில் வெளிவந்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அப்பாடல்களைப் பாடிய பாடகர்களை புகழின் உச்சியில் கொண்டு போய்வைத்தது.


Image hosted by Photobucket.com
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்கு சென்றாளோ,படிக்க சென்றாளோ .........
கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்..............
இந்தப் பாடல்களுக்கு (குரலுக்கு) சொந்தக்காரர் யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம். யாழ்பாணம் எப்படி பனைகளுக்கு பெயர் போனதோ அப்படி கள்ளுக்கும் பெயர் போனது. அந்தக் காலகட்டத்தில் பெரும் பாலானவர்கள் கள்ளு அருந்துவது வழமை.படித்தவர்,பட்டம் பெற்றவர், படியாதோர் என வித்தியாசம் இல்லாமல் எல்லொரும் ஒன்றாக கூடும் இடம் கள்ளுத் தவறணை யாக இருந்தது. எனது நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான் சமரசம் உலாவும் இடம் எது என்றால் மயானமும்,கள்ளுத்தவறணையும் தான் என்பான்.சரி விடயத்துக்கு வருகிறேன்.இதில் பலர் கள்ளுக்கு அடிமை. இது அந்தக் காலத்தில் ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக இருந்தது. இதனைப் பிரதிபலித்த பாடல் தான் கள்ளுக்கடை பக்கம் போகாதே.பாடல்களில் ஒரு வரி இப்படி வரும் "கடவுள் செய்த பனை மரங்கள் தானடா,கடவுள் கள்ளை தொட்டதுண்டோ கேளடா" எங்கேயோ போய் விட்டேன் விடயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாட்டில் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக திரு எம்.ஜி.ஆர் அவர்களால் இப் பாடல் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நித்தி கனகரத்தினைத் தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன். அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன். வி.முத்தழகு,ஸ்டெனி சிவாநந்தன்,அன்சார்.என்.இமானுவேல் போன்றோர் ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வர பொப்பிசை வளரத்தொடங்கியது பல இசைக் குழுக்களும் இதில் தடம் பதிக்க பல பாடல்கள் வெளிவரத்தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம்.
சுராங்கனி பாடல் மூலம் ஏ.ஈ மனோகரன் புகழ் பெற்று பொப்பிசை சக்கரவர்த்தி என்னும் பட்டம் கூட அவருக்கு கிடைத்தது. எத்தனையோ மனதுமறக்காத பாடல்கள். இப்படி புகழடைந்த பொப்பிசை பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து 83 இனக் கலவரத்துடன், பாடகர்கள்,மக்கள் எல்லோரினதும் இடப்பெயர்வுகள் காரணமாக கிட்டத்தட்ட மறைந்தே போயிற்று.


சில பொப்பிசைப்பாடகர்களின் நடவடிக்கைகளும் இந்த பாடல்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதையும் இங்கு சொல்லவேண்டும். இன்றும் கூட இவ் இசையினை ரசிக்க பலர் இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் கூட அமுதன் அண்ணாமலையின் பொப்பிசை நிகழ்ச்சி ஒன்று ரொரன்றோ மண்ணில் நடைபெற்றது.
ஏ.ஈ மனோகரன் என்றால் சிலருக்கு புரியாது "சிலோன் மனோகர்" என்றால் புரியும் என நினைக்கிறேன். இப்போது சென்னையில் வசிக்கும் இவர் இடையிடை சில பொப்பிசை பாடல் இசைவட்டு (அதுதாங்க சீடி)வெளியிடுகிறார்.அத்துடன் சில மேடை நிகழ்சிகளிலும் பங்கு கொள்கிறார். அண்மையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்திருக்கிறார்.படத்தின் பெயர் மறந்து விட்டது.
அவுஸ்திரேலிய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் நித்தி கனகரத்தினம் இடையிடையே மேடைகளில் எப்போதாவது பாடுவதுடன்
சரி. இப்படி ஈழத்திலிருந்து வெளிவந்த பொப்பிசை பாடல்களின் கதி இப்படி ஆகிவிட்டது.பின்னாளில் சிலர் ஈழத்து மெல்லிசையில் பிரபல்யம் ஆகஇருந்து வருகின்றனர்.


தனித்தன்மையுடன் இருந்த ஈழத்து மெல்லிசைகூட தற்போது இந்திய தமிழ் சினிமா பாடல்களை ஒற்றி வர ஆரம்பித்து இருக்கிறது.அண்மையில்
சில ஈழத்து மெல்லிசை பாடல்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்பது போல இருந்தது.மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பொப்பிசையும் போயிற்று. ஈழத்து திரைப்படங்களும் போயிற்று. மிஞ்சியிருந்தது மெல்லிசை.அதுவும்தமிழ் சினிமாப்பாடல்கள் போல போய்க் கொண்டிருக்கிறது.
சரி புலம் பெயர்ந்த நாடுகளில் சிலர் முயற்சி செய்கிறார்கள் தானே என்றால் அவர்களுக்கும் தேவைப்படுவது தமிழ்சினிமா பாடகர்கள்,அவர்கள் தரும் இசை கூட தமிழ் சினிமா இசையினை ஒத்தே இருக்கிறது. வியாபாரம் தான் இந்த சமரசத்திற்கு காரணமாக இருப்பதாக சொல்வார்கள்அவர்களினை கேட்டால்,
தற்போது ஓரளவுக்கு நம்பிக்கை தருவது இலங்கையின் வடக்கு கிழக்கில் இருந்து வரும் பாடல்கள்.அவை மண்வாசனையுடன்தனித்தன்மையுடன் வருவதால் மனதில் இலகுவாக இடம் பிடித்து விடுகின்றன.தற்போது ஓரளவு நம்பிக்கை அளிப்பவை அப்பாடல்கள் தான்.

எ.ஈ மனோகரனின் சில பாடல்கள் இங்கே உள்ளன. இவை பிற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல இருக்கிறது. பழைய பாடல்கள் கேட்க வேண்டும் என்றால் கூல்கூஸ் இணைய தளத்திற்கு செல்லவும் சில பாடல்கள் அங்கு இருக்கின்றன.
இங்கே நான் இன்னுமொன்றினையும் சொல்ல வேண்டும்.இலங்கைக்கு இந்த பொப் எனப்படும் பைலா இசையினை அறிமுகப்படுத்தியவர்கள் இலங்கையினை கைப்பற்றி ஆட்சி செய்த போர்த்துக்கீசர் என்றே சொல்லப்படுகிறது. இதனைப் பற்றி மேலதிக தகவல் தெரிந்தோர் பகிர்ந்து கொள்ளலாமே
சிங்கள மொழியில் இந்த பைலா பாடல்கள் மிகவும் பாரிய வளர்ச்சியினைக் கண்டிருக்கிறது. சிங்களவர்களால் பெரிதும் ரசிக்கப்படுவதுடன் மதிக்கப்படுவதும் இவ் பைலா பாடல்களே.


இது மே 12 ,2005  இல் என்னால் எழுதப்பட்ட ஒரு பதிவு .கிட்டதட்ட  ஆறு  வருடங்களின் பின்பு இப்போது இப்பதிவினை  மீளவும் இடுகிறேன் .இப்போது உள்ள பலருக்கும இது பற்றி தெரியவேண்டும் என்பதால் . அத்துடன் யாழ் ஜனா எழுதிய ஒரு பதிவினையும் இத்துடன் தந்திருக்கிறேன். இத்துடன் சில பாடல்களையும்   இணைத்திருக்கிறேன்