Monday, October 22, 2012

நகைச்சுவை புயல் வடிவேலையே மிஞ்சிய நபர் !!

 

என்ன படம் என்று நினைவினில் இல்லை .ஒரு படத்தில் வடிவேல் கிணற்றி னை  காணவில்லை என்று போலீசில் புகார் கொடுப்பதும் போலிஸ் அதனை கேட்டு குழப்பம்  அடைவ்துமாக ஒரு கொமடி வரும் .அதனை பார்த்து அனைவரும் சிரித்திருப்போம் .அதனை தூக்கி சாப்பிடும் விதமான ஒரு சம்பவம் அண்மையில் போஸ்னியா நாட்டில நடைபெற்றுள்ளது .

அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்த  ஒரு பாலம் காணாமல் போய்விட்டது .என்ன பாலம் காணமல் போய்விட்டது என்கிறீர்களா?ஆம் ஒரு பாலம் தான் காணாமல் போய்விட்டது .விவசாயக் கிராமான அப்பகுதிமக்கள்

ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து பார்த்தபோது அப்பகுதி ஆற்றைக்கடக்க அமைக்கப்பட்ட சிறிய பாலத்தினை காணவில்லை .ஊரெல்லாம் ஒரே பரபரப்பு  எப்படி பாலம் காணமல் போகும் என்று ? கடைசியில் போலீசில் புகார்  கொடுக்கப்பட்டது .போலிசுக்கு வழமையாக கழிவு நீர் கால்வாயின் இரும்பு முடிகளை திருடும் ஒரு நபரின் மீதே சந்தேகம் .அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பாதிபாதியாக உடைக்கப்ட்ட நிலையில் பாலம்  அவரின் வீட்டு முற்றத்தில் காணப்பட்டது .

சிறுக சிறுக திருடி சம்பாதிப்பதை விட பெரும் தொகையில் சம்பாதிக்கலாம் என் ஆசைப்பட்ட இந்த முட்டாள் திருடன் கடைசியில் கம்பி எண்ணியது தான் மிச்சம் .இச்சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பினை ஏற்படுத்தி விட்டுள்ளது .

வைகைப்புயல் பற்றி ஒரு செய்தி .வடிவேல்  மீண்டும் திரையில் முகம் காட்டப்போகிறார்  இம்சைஅரசன் இருபத்திமுன்றாம் புலிகேசி இரண்டாம் பாகம் மூலம் தமிழ திரைக்கு மீண்டும் வரும் வடிவேல் மின்டும் ஒரு ரவுண்டு வரவேண்டும்.தமிழ் திரையுலகில் ஏற்பட்ட நகைச்சுவை பஞ்சத்தினை  போக்க வேண்டும் .அப்ப சந்தானம் என்கிறிர்களா .வடிவேலுக்கு முன்னால் சந்தானம் ஒரு தூசி .யானை படுத்திருந்தால் பூனை ஆட்டம் போடுமே அதுதான் .

சந்தானத்தின் கொமடிக்கு சிரிப்பு வருதா என்ன ?

7 comments:

Robin said...

வடிவேலுவின் இடத்தை யாராலும் எட்டிப் பிடிக்கமுடியவில்லை என்பது உண்மைதான்.

கரிகாலன் said...

வடிவேலுவிண் இடத்தினை யாரும் எக்காலத்திலும் நிரப்ப முடியாது .நல்ல தொரு கலைஞன் அரசியலுக்கு பலியானது எமது துர்அதிர்ஷ்டமே .
நன்றி ரொபின்

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவெல்லாம் நடக்கிறது....!?!

நன்றி...
tm3

அருணா செல்வம் said...

வடிவேலுவின் நகைச்சுவை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவர் போன பிறகு நீங்கள் சொன்னது போல் வேறு யாரும் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை தான்.

திறமையின் கையை எவ்வளவு நாள் அரசியலால் கயிற்றால் கட்டிப் போட்டு விட முடியும்...?
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

Tamil Advertisements said...

அனைத்து தொலை காட்சி சேனல்களிலும் வடிவேலு நகைச்சுவையே போடுகிறார்கள்.
மக்கள் இன்னும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள்.

Unknown said...

VADIVELU IPHO NADIKKAMAL IRUPPATHAL NAN TEATERKU PADAM PARKHA POVATILLAI...EN PASI TEERKUM TAAI POLE TIRUMBAVUM VANTHU ENAGAL PASI TEERPAR ENGAL VADIVELU...AVARKAGE NAN KADAVULAI PIRARTIKHIREN...VADIVELU IS GREAT ALWAYS...SOTHANAI THANDIYE SATHANAI VELVAR AVARTHAN ENGAL VADIVELU....I LOVE U SOO MUCH VAIGAI PUYAL VADIVELU...

Unknown said...

ENAGAL PASI TEERKHA VARUVAR ENGE KARUPPU SINGAM VADIVELU...VADIVELU ILLATHE CINEMA SINGAM ILLATHE KAADU MATHIRI IRUKKU...IPELAM PADAM PARKHEVE BORE ADIKUTHU...CINEMA ULAGAME ORU KALAGALAPPU ILLAME VIRUCHODI KIDAKKU....ENGA VADIVELU MEENDUM VANTHU ENGALUKKU AATMA TIRUPTHI KODUPPAR ITHU NIJAM...VALGA VADIVELU PUGAL....AVARKAGA NAN KADAVULAI PIRARTHIKKIREN....