Sunday, November 04, 2012

முஸ்லிம்களின் சாபமா சான்டி புயல் ???

 

ட்வீடரில் கருத்து தெரிவித்துள்ள சில முஸ்லிம் மதப்பெரியவர்கள் அமெரிக்காவை தாக்கிய சாண்டி சுறாவளி முஸ்லிம்களின் சாபம் எனவும் அல்லாவை அவமதித்ததால் தான் சான்டி அமெரிக்காவை தாக்கியதாக கருத்து வெளியிட்டுள்ளனர் .

ஏற்கனவே அல்லவை பற்றி படம் எடுத்து அதனால் உலகெங்கும் அமெரிக்கா வினை எதிர்த்து கலவரங்கள் ஏற்பட்டதும் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதும் கடந்தகால சம்பவங்கள். இதனை மனதில் வைத்து சில மதப்பெரியவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளனர் ட்விட்டரில் .

எகிப்தை சேர்ந்த மத தலைவர் வாக்தி கொனீமின் : அமெரிக்காவை ஏன் புயல் தாக்கியது என்று சிலர் வியக்கின்றனர்,ஆச்சரியப்படுகின்றனர் . நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதால் தான் இறைவன் அமெரிக்கவை பழிவாங்கினான்?? என்பதே எனது கருத்து.

இவரது டுவீட்டுக்கு ஒருவர்  பதில்  தெரிவிக்கையில், பாவப்பட்ட தேசத்தை அழிக்கவும், நியூயார்க்கில் உள்ள ஐ.நா கட்டிடத்தை அழிக்கவும் இறைவன் அனுப்பியது தான் சான்டி என்னும்  இந்தப் புனிதப் புயல்??? என்று கூறியுள்ளார்.

அநீதி, ஊழல், கொடுங்கோன்மை ஆகியவற்றுக்கு பெயர் போன ஐ.நா சபையின் கட்டிடத்தை அழிக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம். எனவும் அவர் அந்த ட்வீட்டில் சொல்லியிருக்கிறார் .இனி இன்னொரு மத குருவின் செய்தி

சவுதியை   சேர்ந்த மத குரு சல்மான் அல் அவ்தா கூறுகையில், இஸ்லாத்தை தழுவ இது தான் நேரம் ?என்பதை அமெரிக்கர்களுக்கு நினைவுபடுத்தவே சான்டி புயல் வந்தது என்று தெரிவித்துள்ளார்.ஆனால்  அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலில் சிக்கி இறந்தவர்களில் முஸ்லிம்களும் அடக்கம் என பல முஸ்லிம்கள் இதற்கு பதில்  தெரிவித்துள்ளனர்.அத்துடன் அடுத்தவர்களின் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாது, என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதப்பெரியவர்களா?.

6 comments:

Anonymous said...

please attch the link

Anonymous said...

திருந்தவே மாட்டார்கள் இவர்கள், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் மாண்டனர், சேதம் ஏற்பட்டது, உதவியது அமெரிக்கா தான், அல்லா அல்லவே !

Anonymous said...

இப்படியும் சொல்லலாம் கர்னாடக மும்பை இலங்கை போன்ட்ற இடன்கலில் தமிழர்கல் தாக்கப்படுவர்க்கு காரணம் தமிழ்னாட்டில் ப்ராமனர்கலை திராவிடகட்சிகள் திட்டுவதால் தான்

ராஜ நடராஜன் said...

கூட பணிபுரியும் பெண் சொன்னது.
“சாண்டி வந்ததால் டெரரிஸ்டுகள் மகிழ்ச்சியடைவார்கள்”

வேகநரி said...

இஸ்லாமிய பாக்கிஸ்தான்,ஈரானில் அமெரிக்காவில் நடந்ததை விட எத்தனையோ மடங்கு பெரிய பேரழிவுகளை உயிர் இழப்புக்களை ஏற்படுத்தி எதற்காகவாம் அல்லா தண்டித்தார்? இஸ்லாமிய மத தலைவர்கள் உளறுவதை நம்புறதிற்க்கு அந்த நாடுகளில் பெருங் கூட்டமே இருக்கு.

கரிகாலன் said...

மேற்படி செய்திக்குரிய இணைப்புகள்
.
http://abcnews.go.com/International/wireStory/muslim-clerics-sandy-gods-punishment-17621691#.UJdS8sVZK1w

http://www.dailymail.co.uk/news/article-2226642/Muslim-clerics-say-Sandy-Gods-way-punishing-America-anti-Muhammed-film.html

http://www.independent.co.uk/news/world/americas/muslim-clerics-say-superstorm-sandy-is-gods-punishment-for-film-that-mocked-prophet-mohammad-8276747.html

http://times247.com/articles/muslims-on-sandy-revenge-for-beloved-prophet