Tuesday, April 09, 2013

யாருமே ஏழை இல்லை --- ஜென் கதை

 

ரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்ப்பதற்காக போய் இருந்தான் .அவரிடம்  “குருவே நான் ஒரு ஏழை .என்னிடம் என் உயிரைத்தவிர வேறு எந்த சொத்தும் இல்லை .நான் வசதியுடன் வாழ வழிசொல்லுங்கள்” என்று கேட்டான் .அதற்கு அந்த குரு “நான் ௫௦௦௦ தருகிறேன்  உன் கைகளை வெட்டிக்கொடு”  என்றார் .அதற்கு அவன் என்னால் 5000 ரூபாவுக்காக  கைகளை வெட்டிக்கொடுக்க முடியாது என்றான்.

“சரி நான் உனக்கு 15000 ருபாய் தருகிறேன் உன் கால்களை எனக்கு கொடு என்றார் .அதற்கும் அவன்  ஒப்புக்கொள்ளவில்லை “வேண்டும் என்றால் 50000 ருபாய் தருகிறேன் உன் கண்களையாவது கொடு”என்று கேட்டார் அதற்கும் அவன் முடியாது என்றான் .உனக்கு இருபது இலட்சம் வேண்டுமானாலும் தருகிறேன் ,உன் உயிரைக்கொடு” என்றார் .அதற்கும் அந்த ஏழை நீங்கள் சொல்வதை என்னால் செய்யமுடியாது என்றான் .

அதைக்கேட்ட அந்த குரு அவனிடம் “உன்னிடம் உன் உயிரைத்தவிர வேறு எந்த சொத்தும் இல்லை மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் ,கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரைக் கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும் .ஆகவே முயற்சி செய் ,உழைத்து முன்னேறு என்றார் .

No comments: