Saturday, March 30, 2013

ஜென் கதை ---செயலின் பிரதிபலன் !

 

ண்மையில் நான் படித்த ஒரு ஜென் கதை /இதில் இருக்கும் நீதி உனக்கு மரியாதை மற்றவர்கள் தர வேண்டும் என்றால் நீ மற்றவர்களுக்கு மரியாதை தர வேண்டும்.நீ நேசிக்கப்பட வேண்டும் என்றால் நீ மற்றவர்களை நேசிக்க வேண்டும்.

மனைவி உன்னை நேசிக்கவேண்டும் என்றால் நீ மனைவியை நேசிக்க வேண்டும் .அதாவது நாம் எதனை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோமோ அதனை நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் அது எமக்கு தானே கிடைக்கும் .இது தொடர்பான ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது,ஜென் கதை என்றுவிட்டு கதை சொல்கிறாரே கரிகாலன்  என்கிறவர்கள் கொஞ்சம் பொறுமை கொள்ளவும் .

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தாராம் .ஊரில் என்ன நல்லது கெட்டது நடந்தாலும் வீடுகளுக்கு அவர் போகமாட்டாராம் .அவரின் சார்பாக அவரின் கைத்தடியினை தான் அனுப்பிவருவாராம்.அதற்குதான் எல்லோரும், மரியாதை தருவார்களாம் ஒரு நாள் பெரிய மனிதர் இறந்து விட்டார் ,நிறைய பேர் வருவார்கள் என்று பார்த்தால் நிறைய கைத்தடிகள் தான் வந்தனவாம் அஞ்சலி செலுத்த.

சரி இனி கதைக்கு போவோமா?

ஒரு ஜென் துறவி அவ்ரகுடு சீடர்களுக்கு அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விபரித்து கொண்டிருகையில் அதனை ஒரு கதையின் மூலமாக  விளக்க எண்ணி ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார் .

ஒரு விவசாயி ஒரு பவுண்டு வெண்னையினை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார் .

ஒரு நாள் அந்த பேக்கரிகாரர் விவசாயி கொடுக்கும் வெண்ணை  ஒரு பவுண்டு சரியாக இருக்கிறதா என எடை போட்டு பார்த்தார் .அப்போது எடை குறைவாக் இருப்பதை கண்ட பேக்கரிகாரர் விவசாயி மீது கடும் கோபம கொண்டார் .

நீதிமன்றத்துக்கு இப்பிரச்சனையை கொண்டு  சென்றார் பேக்கரிகாரர் .அப்போது நீதிபதி  ,விவசாயியை பார்த்து வெண்ணையை அளந்து பார்க்க என்ன முறையினை அல்லது கருவியினை உபயோகிக்கிறாய் என கேட்டார் .அதற்கு அந்த விவசாயி “நியாயம் “என்று பதில் உரைத்தான்.பின்பு நீதிபதியிடம் நான் பழங்காலத்தவன் என்னிடம் சரியான எடை அளக்கும் கருவி இல்லை ,ஆகவே நான் ஒரு அளவு கோல் கொண்டு அளவு செய்வேன் என்றான் .

உடனே நீதிபதி விவசாயினை பார்த்த்து வேறு எப்படி வெண்னையினை அளவு செய்தாய் என்றார் .

அதற்கு அந்த விவசாயி “ஜயா பேக்கரிகாரர் என்னிடமிருந்து நீண்ட காலமாக வெ ண்னையினை வாங்கி வருவது வழக்கம் .நானும் அவரிடம் இருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன் ஒவ்வொரு நாளும் அந்த ரோட்டியை வாங்கி வந்ததும் அதே அளவுக்கு வெண்னையினை வெட்டி பேக்கரிக்காரருக்கு கொடுத்து வந்தேன் .ஆகவே குறை குற்றம் ஏதும் இருந்தால் அது என் குற்றம் இல்லை .அது பேக்கரிகாரரின் தவறுதான் .இது முற்றிலும் பேக்கரிக்காரை சார்ந்தது ஏன்று  சொன்னார்;என்று  சொல்லி கதையினை முடித்தார் துறவி .

பின்பு சீடர்களுக்கு “நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ அதே தான் எமக்கும் விதிக்கப்படும் என்  சொல்லி அறிவுரையினை முடித்துக்கொண்டார்.

Friday, March 29, 2013

ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா

 

புதினப்பலகை இணையதளத்தில் வெளிவந்த   கட்டுரை இது .நன்றியுடன் இங்கே பயன்படுத்தி இருக்கிறேன் .நட்பு நாடு ,நட்பு நாடு என்கிறார்களே நட்பு நாட்டின் இலட்சணத்தை பார்திர்களா?

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது.
இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளதால், கடந்த ஆண்டைப் போலவே அது மோட்டார் வாகனத்துறையில் எதிர்விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று இந்திய உற்பத்தியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான தீர்வையை 120 தொடக்கம் 291 வீதத்தில் இருந்து 200 தொடக்கம் 350 வீதமாக அதிகரித்தது சிறிலங்கா.


அதுபோலவே,முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதித்தீர்வை 51 தொடக்கம் 61 வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
இருசக்கர வாகனங்களுக்கான இறக்குமதித் தீர்வையும் 61வீதத்தில் இருந்து 100 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னர் சுங்க வரியையும் சிறிலங்கா அதிகரித்தது.
இந்தியாவின் டாடா மோட்டோர்ஸ், மகிந்திரா அன் மகிந்திரா, ரிவிஎஸ், ஹீரோ மோட்டோர் கோர்ப்பரேசன், பசாஜ் ஓட்டோ அன் மாருதி சுசுகி, போன்ற நிறுவனங்கள் சிறிலங்காவை தமது முக்கிய ஏற்றுமதிச் சந்தையாக கொண்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி தீர்வையை அதிகரித்ததால், இந்திய வாகனங்களின் விலை அதிகரித்து அவற்றுக்காக கேள்வி குறைந்துள்ளது.
ஏற்றுமதித் தீர்வை அதிகரிக்கபட்டதால், டாடா நனோ கார் ஆரம்பத்தில் விற்கப்பட்ட விலையை விட இரட்டிப்பாக அதிகரித்தது.
சிறிலங்காவில் ஆரம்பத்தில் 9.25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு விற்கப்பட்ட நனோ கார், தீர்வை அதிகரிப்பினால், 15.5 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.
இதுபோலவே, 14 இலட்சம் ரூபாவாக விற்கப்பட்ட டாடா 207 கார், 25 இலட்சம் ரூபாவாக அதிகரித்தது.


சிறிலங்காவின் தீர்வை அதிகரிப்பினால் இந்திய வாகனங்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த நிதிஆண்டின் இறுதிக் காலாண்டில் 20 ஆயிரம் தொடக்கம் 22 ஆயிரம் வரையாக இருந்த ஒரு மாதத்துக்காக பஜாஜ் வாகனங்களின் இறக்குமதி, இந்த நிதிஆண்டின் முதல் காலாண்டில் மாதம் ஒன்றுக்கு 8 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையாக குறைந்து விட்டது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிறிலங்காவின் வாகனச்சந்தையில் இந்தியா மிகப்பெரிய பங்கை வகித்து வருகிறது.
அதில் பஜாஜ் நிறுவனம் மட்டும் 60 வீத பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 6 பில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை ஏற்றுமதி செய்தது.


இதில் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி 800 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.