Monday, April 14, 2014

சொல்லுராங்கப்பா! சொல்லுராங்கப்பா! நோட் பண்ணிக்கங்க !

 

இந்திய அரசியலை அரசியல் வாதிகளை தொடர்ந்து கவனித்து வருபவன் நான் .மக்களை அடிமுட்டாள்கள் என் நினைக்கும் வகையில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில உள்ளன,இடதுக்கு இடம் மதத்துக்கு மதம் ஜாதிக்கு ஜாதி ,மாநிலத்துக்கு மாநிலம் அர்களின் கருத்துக்கள் மாறுபடும்..சில தினங்களுக்கு முன்னர் இங்கு கனடாவில் இருந்து வெளிவரும் குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில் இந்திய தேர்தல் பற்றி இரு பக்கங்களில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது.அதிலும் இவ்விடயம் பற்றியும் எழுதி இருந்தார்கள் .

தமிழ்நாட்டினை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டினை சீரழித்த பெருமை இரு திராவிட கட்சிகளையே சேரும் ,ஆடம்பரம் ,பிரியாணி ,குவாட்டர் ,ஓட்டுக்கு பணம் ,கட்டவுட் ,காலில் விழும் கலாச்சாரம்,அதிகார துஷ்பிரயோகம்,ஊழல் இப்படி பலவற்றினை அறிமுகப்படுதிய பெருமை இரண்டு பெரிய திராவிட கட்சிகலையே சாரும் .கருனாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவர் மற்றவர் மேல் குற்றம் சுமத்த எந்த அருகதையும் இல்லாதவர்கள் ,இருவரும் செய்த ஊழல்கள் பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை .மற்றைய திராவிட வழிவந்த அரசியல் வாதிகளும் இவற்றில் குறைந்தவர்கள் அல்லர்.

விஜயகாந்த் அரசியலுக்கு வரும் பொது ஒரு எரிபார்ப்பு இருந்தது ஆனால் அதுவும் புஸ்வானம் ஆகிவிட்டது .

சரி அரசியல் வாதிகளின் சில் கருத்துக்களை பார்க்கலாமா?

சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம் கான்,

  சஞ்செய் காந்தியின் கட்டாய மலட்டுத்தன்மை திட்டத்துக்காக, பாபர் மசூதியின் நுழைவு வாயிலை திறந்து விட ராஜிவ் காந்தி உத்தரவிட்டார்.இவை காரணமாக இருவருக்குமே அல்லா தண்டனை வழங்கினார் என்று கூறியுள்ளார்.

 

தமிழக முதலமைச்சர் ஜே .ஜெயலலிதா :-

தமிழகத்தில், மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமும் இப்படி மின் உற்பத்தி நிலையங்களில், பழுது ஏற்படுகிறது என்றால், இது திட்டமிட்ட சதி தானோ என்று தோன்றுகிறது.எனவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து, இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு, யார் காரணம் என்பதை நிச்சயமாக, கண்டுபிடித்தே தீருவோம்.மக்களின் துன்பத்தை பற்றி கவலைப்படாமல், மின்வெட்டு என்ற துன்பத்தை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், வேண்டும் என்றே, இப்படி நாச வேலையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மின் நிலைமை சீர் செய்யப்படும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

 

சமாஜ்வாதி  கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்,

'ஆம்பள பசங்கன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வர்; கற்பழிக்கவும் செய்வர்; அதற்காக அவர்களை துாக்கில் போடுவதா...'

 

மகாராஷ்டிர மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி,

முலாயமை விட ஒருபடி மேலே போய், ''திருமணத்திற்கு முன்னோ அல்லது பிறகோ, பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களையும் துாக்கிலிட வேண்டும்,'' என கூறி, பரபரப்பை அதிகரித்துள்ளார்.

 

அரவிந்த் கெஜ்ரிவால்

:டில்லி மக்களுக்காக பல வாக்குறுதிகளை அளித்திருந்தேன். அவற்றை நிறைவேற்றாமல், 49 நாட்களில் முதல்வர் பதவியிலிருந்து விலகியது, மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.நான் ராஜினாமா செய்ததற்கான காரணத்தை மக்கள் புரிந்து கொள்வர் என நினைத்தேன். பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் சரி என்றாலும், அதை மக்களுக்கு தெளிவுப்படுத்தி இருக்க வேண்டும். இது, நான் செய்த மிகப்பெரிய தவறாக கருதுகிறேன்.அதனால் தான், பொது இடங்களில் மக்கள் தங்கள் கோபத்தை என் மீது காட்டுகின்றனர்

 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

ராசா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சக்திகள் அவரை பழி வாங்குவதற்காக வீன் பழி சுமத்தியுள்ளனர், என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.  : வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவே நீலகிரியை திரும்பி பார்க்கும் தேர்தலாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஆ.ராசாவை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் விடுதலை ஆன போது அவரது சொந்த ஊர் பெரம்பலூருக்கு கூட செல்லாமல் முதன் முதலாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் உங்களை காண வந்தார். அவர் உங்களின் உடன் பிறந்த சகோதரனாக வாழ்கிறார். அவர் ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார். அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டு உள்ளது. தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களாகிய நீங்கள் நீதி வழங்க வேண்டும். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதிக்க சக்திகள் அவரை பழி வாங்குவதற்காக குற்றம் சுமத்தி வருகின்றன.

 

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி

60 ஆண்டாக நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பை 60 மாதங்களில் சரிசெய்ய வாய்ப்பளிக்கும்படி பீகாரில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டுக்கு தலைமை தாங்குபவராக நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் தற்போது நாட்டுக்கு தேவை நிர்வாகிகள் இல்லை என்று மோடி கூறினார். சிறந்த சேவகரே நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றை கேட்டவுடன் உங்கள் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஏற்படுகிறதோ அதே  தான் .எனக்கும் ஏற்படுகிறது ,தேர்தல் திருவிழாவை சந்தோஷமா அனுபவியுங்கள் .இதுக்கே ரென்சன் ஆனால் எப்படி ? இன்னும் நிறைய வரும்

கரிகாலன்