Sunday, December 07, 2014

கதவினை திறவுங்கள் கரிகாலன் வரட்டும்.

கதவினை திறவுங்கள் கரிகாலன் வரட்டும்.

நீண்ட நாட்களின் பின்னர் எழுத வந்திருக்கின்றேன்,இனி தொடர்ந்து எழுதலாம் என் எண்ணியுள்ளேன்.
ஆடின கால்களும் பாடிய வாயும்.எழுதிய கரங்களும் சும்மா இருந்ததாக  சரித்திரம் இருக்கிறதா என்ன?

நீண்ட நாட்கள் எழுதாவிட்டாலும் தமிழ்மணத்தினை நுகர தவறுவதில்லை.புதிய வலைப்பதிவர்கள்  நிறையப்பெர் எழுத வந்திருக்கின்றனர்,இங்கு எழுதும் பலரும் புகழ் பணத்துக்காக எழுதவரவில்லை.ஒரு ஆத்மதிருப்திக்காகவே எழுதுகின்றனர்.ஒரு சிலர் விதி விலக்கு என்றாலும் இதுதான் உண்மை.
என்னைப் பொறுத்தவரையிலும் அதுதான் உண்மை,

தினமும் பதிவிட்ட பலரை  பல நாட்களாக காணவில்லை,இடையிடை பதிவிடும் பலர் பல நாட்களாக தொடர்கின்றார்,எதற்கும் அடிமையானால் அதன் பாதிப்பு எமக்கு தான்,இது புகழ் ,பணம்,மது ,மாது முதல் தொடங்கி இணையம்,தொலைக்காட்சி ,வந்து இப்பொது செல்பேசியில் நிற்கிறது,படுக்கை அறையில் கூட செல்பேசி விளைவு  குடும்பங்களில் பல குழப்பங்கள்,

இன்னும் சில வாரங்களில் புது வருடம் பிறக்க இருக்கின்றது,இங்கு கனடாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
களை கட்ட ஆரம்பித்து விட்டன.ஜனவரி மட்டும் இனி கொண்டாட்டங்கள் தான் ,வர்த்தகர்களுக்கு கூட கொண்டாடங்கள் தான்.காஸின் விலை (பெற்றோலின்) குறைந்து $1.07.99 அக இருக்கிறது. யாவருக்கும் மகிழ்ச்சி.எல்லாம் பெரிய அண்ணனின் வேலைதான்,

கதம்பம் அல்லது கனடா கதம்பம் என்னும் பெயரில் எனது எழுத்துக்கள் வரும். சிறு சிறு துணுக்களாக எழுதலாம் என எண்ணியிருக்கின்றேன்,சுவாரசியமாக என்னால் முடிந்தை தருவேன்.அரசியல் முதல் ஆசிரமம் வரை எழுதுவேன் (அந்தப்புரம் என எழுதத்தானென்னினேன் அனால் இன்றைய நிலையில் இரண்டும் எறக்குறைய ஒன்றுதானே)

கண்டதையும் படித்து பண்டிதன் ஆனான் என எனது தமிழாசிரியர் சொல்வார்.நான் கண்டதையும் எழுதி பண்டிதன் ஆக முயற்சிக்கிறேன்?அப்பொழுது உங்கள் கதி

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வலைபதிவை படிக்க நேர்ந்தது அமெரிக்காவுக்கு வந்து விட்டு தாயகம் திரும்பி இருந்த அவர் ஆபிரிக்க அமெரிக்கர்தான் அமெரிக்காவின் ஆதிகுடிகள் என்ற ரீதியில் அள்ளிவிட்டிருந்தார்,இதுக்குதான் சொல்லுறது கண்டதையும் படிக்கவேண்டும் என்று.

நீண்ட நாட்களாய் கடையை சாத்தியிருந்த பதிவர்" நம்பள்கி"மீண்டும் கடையை திறந்து விட்டார் .இடையில்
எங்காவது ஆசிரமத்தில் கடையை விரித்திருந்தாரொ தெரியவில்லை.ஆசிரமவாசனை தூக்கலாக இருக்கு.
வாயிலை நன்கு திறவுங்கள் காற்று வரட்டும்.


மீண்டும் சந்திக்கிறேன்
கரிகாலன்