Monday, June 08, 2015

கொத்துரொட்டி 005

ன் தொலைகாட்சி  ஊடக வலையமைப்பு பற்றி வரும் செய்திகள் ஒரே ஒரு கருத்தை மட்டுமே எனக்குள் எழுப்புகின்றன .இன்று தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சிதான் அனால் இந்த இடத்திற்கு வருவதற்கு மாறன் சகோதரர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடையம்தான் .தங்கள் தொலைக்காட்சியை முன்னேற்றி கொண்டே  மற்றைய  சானல்களை எல்லாம் தலைதூக்க  விடாமல்  பல அடாவடிகளை செய்தார்கள் .

அரசியல் ,அதிகாரம் ,பணபலம் .அடியாட்கள்.குழிபறிப்பு  என வழிகளில் மற்றைய சானல்களை எல்லாம் "தூக்கி அடித்தார்கள் "திமுக பதவியில் இருக்கும் வரை அவர்களின் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பலவருடங்களின் முன்பு ஒரு சனலின் பொங்கல் ஒளிபரப்பினை நிறுத்த தெருவைக்
கிண்டி கேபிள்களை எல்லாம் துண்டித்து தங்கள் பராக்கிரமத்தை காட்டியவர்கள் .சுமங்கலி கேபிள்விசன்  தொடங்கிய கதை ,வளர்ந்த கதை,மற்றைய சானல்களை எல்லாம் ஒதுக்கிய கதை  எல்லாம் பழங் கதை .

ஆசியாவில் இன்று அவர்கள் பெரும் பணக்காரர்கள் .ஆனால் இன்று
அவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.வானொலிகளுக்கு அனுமதி மறுப்பு இப்போது தொலைக்காட்சிக்கும்   வந்து விட்டது .ஏற்கனவே சொத்து முடக்கம் .இனி என்ன நடக்கப்போகிறது  .பணம் பாதாளம் வரை பாயப்போகிறதா ? அல்லது நடுவண் .அரசு  நேர்மையுடன் நடந்து கொள்ளுமா? பொறுத்திருந்து பார்க்கலாம் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



இன்றைய தினம் இங்குநான் வசிக்கும்  ரொரன்ரோ மாநகரில் ஒரு இசை வெளியீடு நடைபெறுகிறது .‘காற்றுக்கென்ன வேலி’ மற்றும் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல் குதிரைகள்.’  தமிழகத்தின் கடைக்கோடி கடலோர கிராமங்களில் ஒன்றான இடிந்தகரை. அங்குள்ள பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளின் விளையாட்டுத் திறனையும், அந்த ஐவரில் ஒருவரான கிருஷாந்தி குமாரசாமியின் ஈழத்துப் பின்னணியையும் சுற்றிச் சுழல்கிறது கடல் குதிரைகள்.

 ஈழத்து பெண்ணான  கிருஷாந்தி, இடிந்தகரைக்கு வந்து சேர்ந்த கதையை துயரத்துடன் சித்தரிக்கும் கடல் குதிரைகள் படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கனடா வருகை தந்துள்ளதாகவும் அறியமுடிகிறது

இசை வெளியீட்டு விழாவில், ‘கூண்டுக்குள்ள விடுதலையை அடைக்க முடியுமா’ பாடலை,சுப்பர் சிங்கர் புகழ்  செல்வி ஜெசிகா ஜுட் நேரடியாகப் பாட இருப்பது குறிப்பிடத்தக்கது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மகி நூடில்ஸ் விவகாரம் இந்தியாவில் ஒரு பெரிய பிரச்னையாக  உருவெடுத்து இப்போது ஒரு நிலைக்கு வந்துவிட்டது .இங்கு  இந்திய ,இலங்கை கடைகளில் டொலருக்கு நாலு மகி நூடில்ஸ் என விற்பதை சில காலங்களுக்கு முன்னர் கடைகளுக்கு போனபோது கண்டு இருக்கிறேன்

.இப்போது எப்படியும் கடையில் இருந்து அகற்றி இருப்பார்கள் .அது அல்ல நான் சொல்ல வந்த விடயம் .சாராயம் ,சிகரெட் என்பவற்றில் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்  என எழுதி  விற்பது போல மகி நூடில்ஸ் பக்கற்றின் மீதும் இதை சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கலாம் என பொறித்து விற்காமல் விட்டார்களே என எண்ணி சந்தோசம்
அடைகிறேன் .என்ன சொல்கிறீர்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கனடாவை   இன்று ஆளும் அரசாங்கம் ஆனது பாதுகாப்பு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .இதில் ஒரு அங்கமாக இனி நாட்டுக்குள் வருபவர்கள்
விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது  பயணிகள் பயோமற்றிக் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையானது குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது  . இந்த பயோமற்றிக் சோதனை ஒரு உடலியல் சார்ந்த சோதனைகளை உள்ளடக்கியதாக அமையும். கைரேகை பதிவு, முக அடையாளம், கை வடிவியல், கருவிழி அங்கீகாரம், விழித்திரைக்குரிய ஸ்கான் போன்ற பல இதற்குள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து உள்ளிட்ட 30 நாடுகளின் பயணிகளிற்கு இந்த சோதனை நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எனினும்  மேலதிகமாக 148 நாடுகள் இந்த வரிசையில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோமற்றிக் சோதனை ஒருவர் கனடாவிற்குள் நுழைய முன்னர் செயற்படுத்தப்படும் எனவும் விசாக்களுடன் வரும் வெளிநாட்டு பிரசைகளிற்கு மாத்திரமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா வர வேணும் என்றால் முகத்திரையை கழட்டித்தனே  தீரவேண்டும் 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் இந்தியாவுக்கு வந்த நாட்களில் எனக்கு ஆச்சரியம் அளித்த பல விடையங்கள்  இருந்தன .அதில் ஒன்று அப்போதெல்லாம் நான் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்.நான் படித்தது வசித்து எல்லாம் பெரும்பாலும் திருச்சிதான் .காலேஜில் படித்த காலங்களில் எல்லாம் நண்பர்களிடம் படங்கள் பற்றி விமர்சனம் கேட்டல் உடனடியாகவே ஒரு பதில் வரும் பாருங்கள் "ஒரு வாட்டி பார்க்கலாம் " 

அப்போது எல்லாம் நான் எண்ணிக்கொள்வேன் ஒரு படத்தை  ஒரு வாட்டிதானே பார்ப்பது எதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று .பின்னர் தான் எனக்கு விளங்கியது ஒரே படத்தினை பலதடவைகள் பார்க்கும் நபர்களும் இருக்கிறார்கள் என்று .உண்மையில் "அந்த "ஒரு வாட்டி பார்க்கலாம்" என்பதன் அர்த்தம் தான் என்ன ? இன்று ஆளும் வளர்ந்து அறிவும் வளர்ந்துவிட்டது தமிழ் படங்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதாகிவிட்டது என்னைப் பொறுத்தவரையில் .இப்போது எல்லாம் "ஒரு வாட்டி பார்க்கிறமாதிரி படம் எடுக்கிறார்களா என்ன ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இளையராஜாவை பற்றிய சர்ச்சை ஓய்வுக்கு வந்தபின்னர் நான் எழுதுகிறேன் .உண்மையில் தப்பும் தவறுமா நாம் எழுதும் பதிவுகளையே !!!!!!! மற்றவர்கள் சுடும்போது எமக்கே கோபம் வரும் போது தான் இசையமைத்த பாடல்களை மற்றவர்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தும் போது படைப்பாளிக்கு வரும் கோபம் தார்மிக அடிப்படையில் நியாயம் ஆனதே .முன்னைய காலங்களில் விபரம் இல்லாமல் தான்   செய்த காப்புரிமை தவறுகளை இப்போது இளையராஜா சீர் செய்வதில் எந்த தவறும் இல்லை .தற்கால இசையமைப்பாளர்கள் புத்திசாலிகள் விபரமாக இருக்கிறார்கள் .சரி வேண்டுமானால் எம் .ஸ் .விசுவநாதனிடம் கேளுங்கள்  இளையராஜாவினைவிட பெரிய ஒரு பெரு மூச்சினை விடுகிறாரா இல்லையா பாருங்கள் ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ராகுல் காந்தி புதுக்கச்சையோடு பாஜகா எதிராக களத்தில் குதித்திருக்கிறாராம் .உண்மையில் இந்தியாசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பெரும்பாலான காலங்களில் ஆட்சியில் இருந்தது கொங்கிரஸ் கட்சிதானே .இந்தியா இன்று இப்படி இருக்கிறது ,அப்படி இருக்கிறது என்று சொல்லும் ராகுல் காந்தி இந்த நிலைக்கு தனது
கட்சிதான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வாரா ? காந்தி சொன்னபடி கட்சியை கலைத்திருந்தால் இன்று இந்தியா இப்படி இருந்து இருக்குமா ஊழலை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தே உங்கள் கட்சிதானே  அய்யா ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


அண்மையில் ஒரு அன்பர் என்னை கேட்டார் கொத்துரொட்டி என்றால் என்ன என்று ஈழத்தில் கொத்துரொட்டி என்பது தமிழகத்தில் கொத்து பரோட்டா .விளக்கம் சரியா 
ஆனால் காரம் மிக அதிகமாக இருக்கும் .சில வருடங்களுக்கு முன்னர் தாம்பரம் பகுதியில் ஒரு கடையில் இலங்கை சுவையில் கிடைத்தது.கடைக்கு வெளியே 
விளம்பரம் இருக்கும் சிலோன் கொத்து பரோட்டா என்று இப்பொது இருக்கிறதா என்று  தெரியவில்லை .திருச்சிக்கு சென்றால் சிறீனிவாச நகர் ,சுந்தர் நகர் பகுதிகளில் ஈழத்தவர்களின் கொத்துரொட்டி கடைகள் இப்போதும் இருக்கின்றன .சாப்பிடலாம் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள் .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி  மீண்டும் சந்திப்பேன் .புதுப்பதிவுடன் !

5 comments:

Unknown said...

பதிவு கார சாரமாக உள்ளது!

கரிகாலன் said...

உங்கள் கருத்துக்கு நன்றி .அரசியல் என்றாலே காரசாரமாக்தானே இருக்க முடியும் புலவர் அய்யா .

வேகநரி said...

நீங்க இந்தியாவில் வாழ்ந்தவரா!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே மீண்டும் சந்திப்போம்

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே மீண்டும் சந்திப்போம்