Wednesday, June 10, 2015

கொத்துரொட்டி --006

ண்மையில் சாருநிவேதிதாவின் நாவல்கள் சிலவற்றை  அண்மையில் தெரியாதனமாக படித்து தொலைத்துவிட்டேன் .நாவல்களை  படித்து முடித்ததும் உண்மையிலேயே கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது .எப்படி இவரின் நாவல்களை எல்லாம் படிக்கிறார்கள் .கிட்டத்தட்ட ஆபாசத்தின் எல்லை எதுவோ அதை தொட்டுவிடுகிறார் .நாவல்களில்

இடையிடையே உலகில் இருக்கும் பெயர் தெரியாத நாவலாசிரியர்கள் அல்லது இசைஅமைப்பாளர் அல்லது இசைக்கலைஞர்கள் இவற்றில் எதோ ஒன்று அல்லது எல்லாவற்றையும் பற்றி சொல்கிறார் .நாவலை படித்து முடித்ததும் ஒரு வெறுமையே மனதில் நின்றது .இவரின் எழுத்து புகழ் பெற்றது ஆபாசத்தினாலா  அல்லது அதில் சிறிதளவில் இருக்கும் விடயத்துக்காகவா?

இவரின் சில நாவல்களை  படித்தபின்னர்  எனக்கும் மனதினில் ஒரு தெம்பு நானும் ஒரு எழுத்தாளராக வரலாம் என்று .சரி நான் இங்கு சொல்லப்போவதை கவனமாக படியுங்கள் .ஒரு நாவலில் சொல்கிறார் தமிழ்நாட்டில்  பெரும்பாலான ஆண்களுக்கு சர்க்கரை வியாதி .பிரஷர் இரண்டுமே இருக்கிறது  அப்போது  எப்படி அவர்களின் மனைவிமார்கள் பாலியலில்  திருப்தி அடைவார்கள் என்று கேட்கிறார்  .என்ன செய்வது இந்திய பெண்கள் என்பதால் மனதினில் குமைந்தாலும் அவர்கள் வெளியில் அதுபற்றி கதைப்பதில்லை என்கிறார். எந்த நாவல் என்று மறந்துவிட்டேன் ,சாருவின் மூளை  எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சில தினங்களுக்கு முன்னர் நானும் நண்பரும் "ரிம் ஹோட்டனில்" இருந்து கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் .ரிம் ஹோட்டன் என்றால் புரியாதவர்களுக்காக இது    ரிம் ஹோட்டன் என்பது கனடாவின் பிரபல்யமான "காப்பி சாப்". கனடாவில் அமெரிக்காவின் ஸ்ரார் பக் எல்லாம் இதற்கு கிட்ட வரமுடியாது  .ஒவ்வொரு சந்திக்கு சந்தி இக்கடை இருக்கும்.பொதுவாகவே கனேடியர்கள் கோப்பி பிரியர்கள் விளக்கம் போதுமா .

இனி விட்ட இடத்தில இருந்து நாங்கள் இருவரும் கோப்பி குடித்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன் அல்லவா ?இப்படி இருக்கும் போது எமக்கு பக்கத்து மேசையில் மூன்று பேர்  வந்து அமர்ந்தார்கள் .மூவரும் இங்கு கனடாவில் இயங்கும் ஒரு வானொலி நிலையத்தினை சேர்ந்தவர்கள் .ஒருவர் அதில் அறிவிப்பாளர் மற்றவர்கள் அதன் உயர் அதிகாரிகள் .அவர்களின் வானொலி நிலையத்துக்குரிய வாகனம்  வெளியே நிற்பதையும் அவதானிக்க முடிந்தது

.முன்று பேரும்  சான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு  கோப்பியும் அருந்தியவாறு
அளவளாவிக்கொண்டிருந்தார்கள்.இதில் மறைய இருவரும் இயல்பாக இருக்க இந்த அறிவிப்பாளர் மட்டும் அடிக்கடி எம்மைப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது .

அவரால் இயல்யாக இருக்கவே முடியவில்லை .அவர்களுடன் கதைப்பது அடிக்கடி எம்மைப்பார்ப்பது இப்படியே போகவே அவரின் மனநிலை எனக்கு தெளிவாகவிளங்கியது .என்னடா எதிரில் இரண்டு தமிழர்கள் இருந்தும் பிரபல்யமான தன்னை கண்டு கொள்கிறார்கள் இல்லையே  என்பது தான் அவரின் பிரச்சனை .புகழ்பெற்ற
பலரின் பிரச்சனையும் அதுதான் .மற்றவர்கள் தம்மை கவனிக்கிறார்களா ,அங்கீகாரம் தருகிறார்களா என்பதை கவனிப்பதே அவர்களின் வேலை .இதில் முன்னாள் பிரபலங்கள் என்றால் இந்த பிரச்னையின் வேகம் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் .அறிவிப்பாளருக்கு ஒரு ஹாய் சொன்னதோடு சிரித்தும் வைத்தேன் .அதன் பின்னர் தான் அவரால் இயல்பாய் இருக்க முடிந்தது .

நடிகை பத்மினி ரொறன்ரோவில் வந்த போது நடந்த சம்பவங்களை வைத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் .படிக்காதவர்கள் படித்துப்பாருங்கள்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இது  கடந்தவாரம் இலங்கையில் நடந்த சம்பவம் .
தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் ஒரு நபர் தனது  மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி  சண்டை பிடிப்பாராம் .இப்படியான சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் அவர்களின் வளர்ப்பு  நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டிம்  வந்துள்ளதாம்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் இந்த நபர்   மனைவியுடன் சண்டைபிடித்ததுடன் மனைவியை பலமாக தாக்கினாராம் இந்நிலையில்  குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது.
படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபரின் உடலில் 35 இடங்களில் நாய் கடித்துக்குதறிய காயங்களுடன், கீறல் காயங்களும் உள்ளதாக தெரிய வருகிறது .

இதனால் ஆகப்பட்டது நண்பர்களே .மனைவியுடன் ண்டைபோடும் அன்பர்களே நாய் மேல் கவனம்.முக்கியமாக கட்டி இருக்கிறதா என சண்டைக்கு முதல் உறுதிப்படுத்திக்கொண்டு சண்டை தொடங்கவும் .இரண்டாவதாக நாய்க்கு மனைவிதான் உணவு வைப்பார்கள் என்றால் இன்னும் கவனம் தேவை நல்ல சங்கிலியால் கட்டவும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துகொள்ளவும்.முக்கியமாக் இப்படியான செய்தியை மனைவியின் கண்களில் படாமல் மறைத்து வைக்கவும் .நல்ல காலம் எங்கட வீட்டில் நாய் இல்லை .ஒரு முறை மகன் கேட்டதுக்கு மனைவி  சொன்ன பதில் ஒன்றை வளக்குறது காணாதோ?



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


டெல்லியில்  ஒரு அமைச்சரை கைது செய்திருக்கிறார்கள் .போலியாக
 சான்றிதழ் கொடுத்ததுக்காக இங்கு கைது செய்தது  சரிதான் என்றாலும் எனது மனதில் ஒரு கேள்வி இந்தியாவில் அல்லது இலங்கையில் வேலைக்கு விண்ணப்பித்தால்  அடிப்படை தகுதி இருக்கவேண்டும் ,சான்றிதழ் காட்டவேண்டும் .ஆனால் அதே இலங்கை ,இந்தியாவில் ஒரு அரசியல்வாதி பாராளுமன்றம் ,அல்லது சட்டசபை  செல்ல  அல்லது அதற்கும் மேலே ஏதும் பதவி வகிக்க எந்த அடிப்படை தகுதியும் இருக்கவேண்டியதில்லை .(இங்கு கனடாவில்  பட்டதாரியாக இருக்கவேண்டும்) .ஏன் இப்படியான பதவிகளுக்கு வருபவர்களுக்கு (இலங்கை இந்தியாவில் ) அடிப்படை தகுதியை  நிர்ணயம்
செய்யக்கூடாது . எனது கேள்வி என்னவென்றால் அடிப்படை தகுதி தேவை இல்லை என்ற நிலையில் என் டெல்லி அமைச்சர்  போலி சான்றிதழ் கொடுத்து மாட்டிக்கொண்டார் ? வெறும் சவுடாலுக்கா ?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கீழே இருக்கும் இந்த வீடியோவை பாருங்கள் .ஆங்கிலேயனுக்கே ஆங்கிலம் படிப்பிக்கும் இந்த நபரை பாருங்கள்  சிரித்துவிட்டு வயிற்று வலிக்கு மாத்திரை அனுப்பவும் என்று எனக்கு பின்னூட்டம் இடக்கூடாது .இப்பவே சொல்லிப்போட்டேன் .இது உண்மையில் சிரிப்புக்கிடமாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அந்த நபரின் முயற்சியை,திறமையை ,துணிவை பாராட்டுகிறேன் .ஆங்கிலம் தெரியாது என தயங்காமல் தெரிந்தவரையில் கதைக்கும் அவரது துணிவுக்கு ஒரு பாராட்டு .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்துரொட்டி பலருக்கும்  ரசிக்கும்படியாக இருக்கிறது என நினைக்கிறேன் .
மீண்டும் சந்திக்கிறேன் .உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
மேலும் விடையங்களுடன்  சந்திக்கறேன்




3 comments:

நெல்லைத் தமிழன் said...

நாய் கதை அருமை. அதுவும், மனைவி நாய்க்குச் சோறிடுகிறாள் என்றால் இன்னும் கவனம் தேவை என்பது நல்ல புத்திமதி.

நான் பத்து வருடம் முன்பு, ஜேப்பியார் கல்லூரி ஃபங்க்ஷனில் ஜேப்பியார் பேசிய ஆங்கிலத்தைத் தொலைக்காட்சியில் கேட்டிருக்கிறேன். அதை எண்ணும்போது, ராஞ்சி நபரின் ஆங்கிலம் அவ்வளவு சிரிப்பை உண்டாக்கவில்லை. பெண்ணிடம் கம்பெனி கிளைமேக்ஸில் வருவேன் என்று சொன்னது தைரியம்தான். இருந்தபோதும், இந்த இன்டர்வியூ எடுக்கும் நபர் எவ்வளவு தன்மையாக நடந்துகொண்டார் என்பதை அறியும்போது, அவரைப் பாராட்டத் தோன்றுகிறது.

நல்ல வேளை, நான் சாருவின் நாவல்களைப் படித்ததில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே நாயின் குணம் அத்தகையது நண்பரே

கரிகாலன் said...

கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே