Saturday, September 19, 2015

போலி அரிசியைத் தொடர்ந்து போலி முட்டை - சீனர்களின் கைவரிசை

பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து வந்த சீனர்கள் தற்போது போலியான கோழி முட்டைகளையும்  உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர்.
போலி முட்டை தயாரிக்க 7 வித இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின் போன்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன.
போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே இருப்பதையும் படத்தில் காணலாம்.

               

ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சள் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது.
சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது. பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டையின் மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

கவலைப்படாத வாடிக்கையாளர்கள்

இந்த போலி முட்டை ஓடு, நிஜமான  கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை.நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அரை அவியல் தயார் செய்யும்போது மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறது. மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

                    
                  

பாதிப்புக்கள் 

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் உணவுத்துறை  வல்லுனர்கள்  எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.இருந்தும்  சீனர்கள் எதையும் பற்றி கவலைப்படாமல்  இதை ருசித்து வருகின்றனர் .

நன்றி 


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனையாக இருக்கிறது நண்பரே
என்னஉலகம் இது

Anonymous said...

சீனர்கள் எதையும் சாப்பிடுவார்கள்