Saturday, November 21, 2015

நகைக் கடைகளின் ஏமாற்று வேலைகள்.(ரொறன்ரோ பதிப்பு )

முகுந்த் அம்மா  என்னும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வலைப்பதிவர் வித்தியாசமான பல விடையங்களை எழுதுபவர் .அவருடைய பல பதிவுகளை  படித்து வருபவன் .ஊசி போட தெரியாவிட்டாலும் பெயருக்கு அருகில் ஒரு டொக்டர் பட்டம்  இருப்பதாக குறிப்பிட்டு இருந்தவர்.இருந்தவர் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்பொழுது அந்த வரியை காணவில்லை என நினைக்கிறேன்   

ஒரு பெண்மணியான அவர் இன்றைய தினம் எழுதி இருக்கும்  குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைகடைகளின் பம்மாத்து ஏமாற்று வேலை! எனும் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்  விடையம் முக்கியமாக பெண்களால்  கவனிக்க பட வேண்டிய ஒரு விடையம்.அனால் இந்த விடையத்தினை மட்டும் பெண்கள் முக்கியமாக மறந்து விடுகிறார்கள் வசதியாக என்றும் 
எடுத்துக் கொள்ள(ல்ல)லாம் 

(அதுசரி முகுந்த் அம்மா ,பம்மாத்து என்பது ஏமாற்றுதல் என்றுதானே பொருள்படும் பின்பு ஏன்  மீண்டும் ஏமாற்று என்று ஒரு சொல் ?அத்துடன் நகைக்கும் கடைக்கும் இடையில் "க்" வரவேண்டும் .)
என்னம்மா இப்படி பண்ணிறிங்களே அம்மா ?


                                                                                       

சரி விடையத்துக்கு வருகிறேன் .சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் மாமன் வீட்டு விசேடத்துக்கு நகை பரிசளிக்கவேண்டிய தேவை வந்தது .சரி  வெளிக்கிடுங்கோ நகைக்கடைக்கு போய்  ஒரு ஆரம் வாங்குவோம் என்று கதைத்தபோது  மனைவி சொன்னார் எனது சில நகைகள் பாவிக்காமல் இருகின்றன .அவற்றையும் கொடுத்துவிட்டு, மிகுதிக்கு பணத்தினையும் கொடுப்போம் என்று சொன்னார் .சரி என்று தலையாட்டிக்கொண்டு ரொறன்ரோவில்  பிரபல்யமான  ஒரு நகைக்கடைக்கு போனால் ஒரு ஆரம் ஒன்று மனைவிக்கு பிடித்து விட்டது .கதைத்து பேசி ஒருவழியாக   விலை சொன்னார் விற்பனையாளர். சரி  என்று  சொல்லிவிட்டு மனைவி  சொன்னார் இரண்டு  நகைகள் இருக்கின்றன அதை ஒரு விலைபோட்டு எடுங்கோ மிகுதிக்கு பணம் தரலாம் என்று

கடைக்காரர்  இரண்டு நகைகளையும் பரிசோதித்து விட்டு ஒரு நகையை காட்டி சொன்னார்  இது நல்ல தங்கம் இதுக்கு அதிக விலைதருகிறேன் என்றதுடன்  மனைவி கொடுத்த இரண்டாவது நகையை காட்டி இது தங்கம் கொஞ்சம்  தரம் சரியில்லை எனவே இதுக்கு விலை குறைவாகத்தான் தருவேன் என்றார் .நான் சொல்ல  வாய் எடுப்பதற்கு முன்னர் மனைவி சொன்னார் 

சரி முதலாவது நகையை எடுத்துக்கொள்ளுங்கள் மிகுதிக்கு பணம் தருகிறோம் என்று சொன்னதுடன் எனக்கு கண்ஜாடை காட்டினார் கதைக்கவேண்டாம் என்று.
பணத்தினை செலுத்தி நகையை வாங்கிக்கொண்டு வெளியில் வரும்போது மனைவியை  கேட்டேன் ஏன் நீங்கள் கொஞ்சம் விலை குறைவென்றாலும் இரண்டாவது நகையை  கொடுத்திருக்கலாம் தானே நீங்கள்  அந்த நகை போடப்போவது இல்லை என்றால் வைத்திருப்பதில் என்ன பிரயோசனம் என்று. நான் கேட்ட கேள்விக்கு  பதில் கூறாத மனைவி  கேட்டார் நான் ஒரு தோடு எடுக்கட்டோ என்று . தேவை என்றால் எடுங்கோ என்று நான் சொன்னேன் .இப்போது  இருவரும் ரொறன்ரோவின் பிரபல்யமான  இன்னுமொரு நகைக் கடையில், மனைவி ஒரு தோட்டை தெரிவு செய்து விட்டு முன்னர் போலவே பழைய நகை ஒன்று இருக்கிறது என்று சொல்ல 
வாங்கிப்பார்த்த கடைக்காரர் சொன்னார் 

இது நல்ல தரமான நகை என்றதுடன் முந்தைய கடைக்காரர் அதே நகைக்கு  சொன்ன விலையை விட சில டொலர்கள் அதிகமாகவே சொன்னார் . பழைய நகையை யும் கொடுத்து மிகுதிக்கு பணத்தினையும் கொடுத்து தோட்டை வாங்கிகொண்ட   மனைவி என்னைபார்த்த பார்வையில் ஒரு வெற்றிப் புன்னகை இழை ஓடியதை என்னால் உணர முடிந்தது.சரி சரி இதுக்குதானே அம்மா அப்பா மிகவும்கஸ்டப்பட்டு தேடி உங்களை எனக்கு கட்டி வைத்தவர்கள் என்பதுடன் நிறுத்திக்கொண்டேன் நான்.இதுக்கு மேலே கதையை  வளர்த்த நான் என்ன முட்டாளா?

என்னுடைய மனைவி கொஞ்சம் புத்திசாலி என்பதால் இதனை கண்டு பிடித்தார் .ரொறன்ரோவில் பெரும்பாலான கடைகளில் இப்படிதான் செய்கிறார்கள் ,நாங்கள் பிறகும் ஒரு முறை இந்த நடைமுறையை செய்து பார்த்தோம் .ஒரு முறை போன கடையிலேயே சில காலத்தின் பின்னர் போனபோது அதிக விலை சொன்னார்கள் 

முன்பு எல்லாம் எனது மனைவி அடிக்கடி நகை வாங்குவார் ,அந்த பாசன் போய்விட்டது இந்த பாசன் வந்துவிடடது என்று .இப்போது அவரின் நகை மோகம் பெருமளவில் குறைந்துவிட்டது. வருடத்தில்  350 நாளும் நகைகள் வைப்பகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் தானே  தூங்குகிறது ஆத்திர அவசரத்துக்கு கூட எடுத்து அழகு பார்க்க முடிவதில்லை என்ற ஏக்கம் காரணமாக இருக்கலாம் அல்லது பிள்ளைகள் நகைகளில் துளியும் அக்கறை காட்டாதால் இருக்கலாம்  அல்லது  கனடாவில் ஒரு வர் பணக்காரா  அந்தஸ்து உள்ளவரா எனக்  கணிப்பிடும் காரணிகளில் நகை இல்லாமல் போனதால் இருக்கலாம் .

எப்படியும் நகை என்றவுடன் வலையுலக பெண் -மணிகள்  எல்லோரும் இங்கு வந்திருப்பீர்கள் ,அதனால் என்னால் ஆன  சில நகைகளை பேணும் குறிப்புக்கள் .

முத்து நகைகள்:
* முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.
* முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.
* முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கி விடும்.
வெள்ளி நகைகள்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.
* அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி கருத்து விட்டதா? கவலை வேண்டாம். வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
தங்க நகைகள்:
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.
* தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.
* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.
எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.
கற்கள் பதித்த நகைகள்:
* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.
இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இணையத்தில் சுட்டது  .நன்றி 

2 comments:

முகுந்த்; Amma said...

Thanks for writing and introducing about myblig post in your blog. Yes, I have deleted the sentence introducing me as a doctorate.

I will correct your suggestion about heading as well..
Thanks once more

கரிகாலன் said...

உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரி