Sunday, December 06, 2015

கலைஞர் டி.வி – ஜெயா டி .வி! - இதுதாங்க வித்தியாசம்!!!

“அப்பா, சண்டே என்னையும் அண்ணாவையும் மாலுக்குக் கூட்டிட்டுப் போறீங்களா?’’ பள்ளி திறந்த சோகத்தில் சின்னவன் என்னிடம் கேட்டான்.
“இல்ல கண்ணு, சென்னை பூரா மழை பேஞ்சு கழுத்தளவு தண்ணி நிக்குது. சாப்பாடு, தண்ணி எதுவுமே கிடைக்கலை. நியூஸ் பார்க்கலியா நீ?’’ என்று கேட்டுவிட்டு, ஆதாரம் காட்ட, கலைஞர் செய்திகள் வைத்துக் காண்பித்தேன். இடுப்பளவு நீரில் சென்னை மக்கள் அங்கும் இங்கும் துன்பப்படும் செய்திகளைப் பார்த்ததும், என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி, “இந்த சானல் பாருங்கப்பா…’’ என்று ஜெயா நியூஸ் வைத்தான்.     
    
அம்மா படத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்கார்ந்திருக்க, `இதைவிட எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னைக்கு ஒரு துளிகூட பாதிப்பே இல்லை. தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது’ எனச் செய்தி சொல்லி சென்னை சாலை களைக் காண்பித்தார்கள், படுசுத்தமாக காய்ந்துபோய், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சிங்காரச் சென்னை.             
“எந்த மாலுக்குப் போகலாம்னு டிசைட் பண்ணி வைங்க. ஈவினிங் ஸ்கூல்லேர்ந்து வந்த உடனே எனக்கு சொல்லணும்’’ என்று கட்டளையிட்டுச் சென்றிருக்கிறான்.
கார்ட்டூன் மட்டும் பார்த்திட்டிருந்த புள்ளப்பூச்சிங்களுக்கெல்லாம் கொடுக்கு முளைக்க வெச்சிட்டீங்க ளேய்யா!
முகநூலில் சுட்டது .

1 comment:

Anonymous said...

nalla padivu