Saturday, November 21, 2015

நகைக் கடைகளின் ஏமாற்று வேலைகள்.(ரொறன்ரோ பதிப்பு )

முகுந்த் அம்மா  என்னும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு வலைப்பதிவர் வித்தியாசமான பல விடையங்களை எழுதுபவர் .அவருடைய பல பதிவுகளை  படித்து வருபவன் .ஊசி போட தெரியாவிட்டாலும் பெயருக்கு அருகில் ஒரு டொக்டர் பட்டம்  இருப்பதாக குறிப்பிட்டு இருந்தவர்.இருந்தவர் என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்பொழுது அந்த வரியை காணவில்லை என நினைக்கிறேன்   

ஒரு பெண்மணியான அவர் இன்றைய தினம் எழுதி இருக்கும்  குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைகடைகளின் பம்மாத்து ஏமாற்று வேலை! எனும் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்  விடையம் முக்கியமாக பெண்களால்  கவனிக்க பட வேண்டிய ஒரு விடையம்.அனால் இந்த விடையத்தினை மட்டும் பெண்கள் முக்கியமாக மறந்து விடுகிறார்கள் வசதியாக என்றும் 
எடுத்துக் கொள்ள(ல்ல)லாம் 

(அதுசரி முகுந்த் அம்மா ,பம்மாத்து என்பது ஏமாற்றுதல் என்றுதானே பொருள்படும் பின்பு ஏன்  மீண்டும் ஏமாற்று என்று ஒரு சொல் ?அத்துடன் நகைக்கும் கடைக்கும் இடையில் "க்" வரவேண்டும் .)
என்னம்மா இப்படி பண்ணிறிங்களே அம்மா ?


                                                                                       

சரி விடையத்துக்கு வருகிறேன் .சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் மாமன் வீட்டு விசேடத்துக்கு நகை பரிசளிக்கவேண்டிய தேவை வந்தது .சரி  வெளிக்கிடுங்கோ நகைக்கடைக்கு போய்  ஒரு ஆரம் வாங்குவோம் என்று கதைத்தபோது  மனைவி சொன்னார் எனது சில நகைகள் பாவிக்காமல் இருகின்றன .அவற்றையும் கொடுத்துவிட்டு, மிகுதிக்கு பணத்தினையும் கொடுப்போம் என்று சொன்னார் .சரி என்று தலையாட்டிக்கொண்டு ரொறன்ரோவில்  பிரபல்யமான  ஒரு நகைக்கடைக்கு போனால் ஒரு ஆரம் ஒன்று மனைவிக்கு பிடித்து விட்டது .கதைத்து பேசி ஒருவழியாக   விலை சொன்னார் விற்பனையாளர். சரி  என்று  சொல்லிவிட்டு மனைவி  சொன்னார் இரண்டு  நகைகள் இருக்கின்றன அதை ஒரு விலைபோட்டு எடுங்கோ மிகுதிக்கு பணம் தரலாம் என்று

கடைக்காரர்  இரண்டு நகைகளையும் பரிசோதித்து விட்டு ஒரு நகையை காட்டி சொன்னார்  இது நல்ல தங்கம் இதுக்கு அதிக விலைதருகிறேன் என்றதுடன்  மனைவி கொடுத்த இரண்டாவது நகையை காட்டி இது தங்கம் கொஞ்சம்  தரம் சரியில்லை எனவே இதுக்கு விலை குறைவாகத்தான் தருவேன் என்றார் .நான் சொல்ல  வாய் எடுப்பதற்கு முன்னர் மனைவி சொன்னார் 

சரி முதலாவது நகையை எடுத்துக்கொள்ளுங்கள் மிகுதிக்கு பணம் தருகிறோம் என்று சொன்னதுடன் எனக்கு கண்ஜாடை காட்டினார் கதைக்கவேண்டாம் என்று.
பணத்தினை செலுத்தி நகையை வாங்கிக்கொண்டு வெளியில் வரும்போது மனைவியை  கேட்டேன் ஏன் நீங்கள் கொஞ்சம் விலை குறைவென்றாலும் இரண்டாவது நகையை  கொடுத்திருக்கலாம் தானே நீங்கள்  அந்த நகை போடப்போவது இல்லை என்றால் வைத்திருப்பதில் என்ன பிரயோசனம் என்று. நான் கேட்ட கேள்விக்கு  பதில் கூறாத மனைவி  கேட்டார் நான் ஒரு தோடு எடுக்கட்டோ என்று . தேவை என்றால் எடுங்கோ என்று நான் சொன்னேன் .இப்போது  இருவரும் ரொறன்ரோவின் பிரபல்யமான  இன்னுமொரு நகைக் கடையில், மனைவி ஒரு தோட்டை தெரிவு செய்து விட்டு முன்னர் போலவே பழைய நகை ஒன்று இருக்கிறது என்று சொல்ல 
வாங்கிப்பார்த்த கடைக்காரர் சொன்னார் 

இது நல்ல தரமான நகை என்றதுடன் முந்தைய கடைக்காரர் அதே நகைக்கு  சொன்ன விலையை விட சில டொலர்கள் அதிகமாகவே சொன்னார் . பழைய நகையை யும் கொடுத்து மிகுதிக்கு பணத்தினையும் கொடுத்து தோட்டை வாங்கிகொண்ட   மனைவி என்னைபார்த்த பார்வையில் ஒரு வெற்றிப் புன்னகை இழை ஓடியதை என்னால் உணர முடிந்தது.சரி சரி இதுக்குதானே அம்மா அப்பா மிகவும்கஸ்டப்பட்டு தேடி உங்களை எனக்கு கட்டி வைத்தவர்கள் என்பதுடன் நிறுத்திக்கொண்டேன் நான்.இதுக்கு மேலே கதையை  வளர்த்த நான் என்ன முட்டாளா?

என்னுடைய மனைவி கொஞ்சம் புத்திசாலி என்பதால் இதனை கண்டு பிடித்தார் .ரொறன்ரோவில் பெரும்பாலான கடைகளில் இப்படிதான் செய்கிறார்கள் ,நாங்கள் பிறகும் ஒரு முறை இந்த நடைமுறையை செய்து பார்த்தோம் .ஒரு முறை போன கடையிலேயே சில காலத்தின் பின்னர் போனபோது அதிக விலை சொன்னார்கள் 

முன்பு எல்லாம் எனது மனைவி அடிக்கடி நகை வாங்குவார் ,அந்த பாசன் போய்விட்டது இந்த பாசன் வந்துவிடடது என்று .இப்போது அவரின் நகை மோகம் பெருமளவில் குறைந்துவிட்டது. வருடத்தில்  350 நாளும் நகைகள் வைப்பகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் தானே  தூங்குகிறது ஆத்திர அவசரத்துக்கு கூட எடுத்து அழகு பார்க்க முடிவதில்லை என்ற ஏக்கம் காரணமாக இருக்கலாம் அல்லது பிள்ளைகள் நகைகளில் துளியும் அக்கறை காட்டாதால் இருக்கலாம்  அல்லது  கனடாவில் ஒரு வர் பணக்காரா  அந்தஸ்து உள்ளவரா எனக்  கணிப்பிடும் காரணிகளில் நகை இல்லாமல் போனதால் இருக்கலாம் .

எப்படியும் நகை என்றவுடன் வலையுலக பெண் -மணிகள்  எல்லோரும் இங்கு வந்திருப்பீர்கள் ,அதனால் என்னால் ஆன  சில நகைகளை பேணும் குறிப்புக்கள் .

முத்து நகைகள்:
* முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.
* முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.
* முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கி விடும்.
வெள்ளி நகைகள்:
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.
* அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி கருத்து விட்டதா? கவலை வேண்டாம். வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
தங்க நகைகள்:
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.
* தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.
* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.
எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.
கற்கள் பதித்த நகைகள்:
* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.
இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.
இணையத்தில் சுட்டது  .நன்றி 

Friday, November 20, 2015

எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை?

லண்டனில் இருந்து வெளிவரும் பி.பி.சி இணையதளத்தின் தமிழ் பதிப்பு இன்றைய தினம் வெளியிட்டிருபதே   இக் கட்டுரை ஆகும்  உங்கள் வாசிப்புக்காக இங்கு தந்திருக்கிறேன் .பி.பி.சி தமிழுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக 
ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

Image copyrightGetty

இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள்.
ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
நைஜீரியாவிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுவான, பொக்கோ ஹராமிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், இந்த புர்கா பயன்பாடு குறித்து மேலும் கடுமையான விதிகள் கொண்டுவரப்படவேண்டும் என்று செனகோலின் உள்துறை அமைச்சர் அப்துலாயே தாவுதா முயற்சி செய்துவருகிறார்.
இந்த ஆலோசனகள் இஸ்லாத்துக்கு விரோதமானதாகப் பார்க்கப்படக்கூடாது என்று செனகோல் அரசு கூறுகிறது.

Image copyrightAFP
Image captionபுர்காவுக்கு தடை குறித்து செனகோல் பரிசீலனை

செனகோல் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு. ஆனால் , தனிமனித சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவைகளின் அடிப்படையில் இந்த உடையை அணிய பெண்களுக்கு இருக்கும் உரிமையை முன்வைக்கும் பலர் இந்த விவாதங்களால் சீற்றமடைந்திருக்கிறார்கள்.
ஆனால் செனகோல் மட்டுமே இந்த உடையை தேசப்பாதுகாப்பு என்ற காரணத்தினால் தடை செய்ய முயலவில்லை. வேறு நான்கு ஆப்ரிக்க நாடுகளும் இதைப் போல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.
பொக்கோ ஹராமின் நிழல்
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள மூன்று நாடுகள் சமீபத்தில் புர்காக்கள் அணிவதை நாடெங்கிலும் தடை செய்திருக்கின்றன. சாட், கேபோன் மற்றும் காங்கோ ப்ரேஸ்ஸவில் ஆகிய நாடுகள்தான் இந்த உடையை நாடளாவிய அளவில் தடை செய்த நாடுகள். கேமரூன் நாடு அதன் வட கோடி பகுதியில் இந்த உடைக்கு கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.
ஜூன் மாதம் சாட் நாட்டின் மிகப்பெரிய நகரான , என்'ஜமெனாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றில் 33 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் அரசு இந்த உடைக்குத் தடை விதித்தது.

Image copyrightAFP
Image captionகேமரூனின் வட பகுதியில் புர்காவுக்குத் தடை

இதையடுத்து, காங்கோ-ப்ரேஸ்ஸவில் மற்றும் கேபோன் ஆகிய நாடுகளும் பின்னர் கேமரூனில் நடந்த ஒரு தாக்குதலை அடுத்து இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. கேமரூன் சம்பவத்தில், இரண்டு புர்கா அணிந்த பெண் தற்கொலை குண்டுதாரிகள் , நைஜீரிய எல்லையில் , ஃபோட்டோகொல் என்ற இடத்தில் தங்களை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போது செனகோல் அந்த நாடுகளைப் பின்பற்றி அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கலாமா,வேண்டாமா என்று யோசித்து வருகிறது.
செனகோலில் இது போன்ற ஒரு தாக்குதல் நடைபெற்றதில்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாட்டில் முதன் முறையாக, பயங்கரவாதம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் இது குறித்து எச்சரித்தனர்.
ஆனால் ஆப்ரிக்காவில் மட்டும் இந்த புர்கா தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.
நவநாகரீக பிரான்ஸ் விதித்த தடை
கடந்த 2010ம் ஆண்டில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிரான்ஸ் பொது இடங்களில் புர்காவுக்குத் தடை விதித்தபோது அதற்கெதிராக பெரும் சீற்றம் எழுந்தது.

Image copyrightAFP
Image captionஇஸ்லாமிய முக்காடு , முகத்திரையின் பல்வேறு வடிவங்கள்

பிரெஞ்சு செனட், முகத்தை மட்டுமோ அல்லது முழு உடலையுமோ மூடும் புர்க்காக்களை மட்டுமல்லாமல், ஒரு தனி நபரின் அடையாளத்தை மறைக்கும், முகமூடிகள், பலக்ளாவாக்கள் , தலைக்கவசங்கள் அல்லது தலைமறைப்புகள் ஆகியவற்றையும் தடை செய்யும் ஒரு சட்டத்துக்கு ஏறக்குறைய ஏகமனதான ஆதரவுடன் வாக்களித்தது.
மேற்கு ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக, பிரான்சில்தான் முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். அங்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 50 லட்சம். அவர்களில் சுமார் 2,000 பெண்கள்தான் புர்காக்களை அணிகிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.
அப்போதிருந்த பிரெஞ்சு அதிபர் நிக்கொலாஸ் சார்க்கோஸி, முகத்திரை பிரெஞ்சு மண்ணில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
அது "ஒற்றுமை மற்றும் அதனுடன் இணைந்த மதச்சார்பின்மை" ஆகியவைகளுக்கான பிரெஞ்சு தேசிய முன்மாதிரியுடன் ஒத்துப்போகாதது என்று அவர் கருதினார்.
இந்த விழுமியங்கள் 2004ல் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்றின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தின் மூலம் எந்த ஒரு மதச் சார்பையும் வெளிப்படுத்தும் குறியீடுகளையோ அல்லது உடைகளையோ அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்சின் புர்கா தடை சட்டத்தின் மூலம் முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பதை அறிமுகப்படுத்தியிருந்தது. புர்கா அணியும் பெண்களுக்கு 32,000 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.

Image copyrightAFP
Image captionபிரான்ஸின் போலிஸ் நீதிமன்றத்தில் முகத்திரை தடையை மீறி அணிந்ததற்காக இரு பெண்கள் அபராதம் விதிக்கப்படும் நிலையில்

இந்தத் தடை முஸ்லீம் பெண்களை இலக்கு வைப்பதாக விமர்சிக்கப்பட்டு , 2014ல் இதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் அந்த நீதிமன்றம் இந்த சட்டத்தை சட்டபூர்வமானதென்று கூறிவிட்டது.

Image copyrightGETTY
Image captionபெல்ஜியத்தில் புர்கா தடைக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிற நாடுகள்
கடந்த 2012ல் பெல்ஜியம் இதைத் தொடர்ந்து பொது வெளியில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் எந்த ஒரு ஆடையையும் அணிய, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தடை விதித்தது.
2007ம் ஆண்டிலேயே முழுத்திரைக்கு தடை விதித்திருந்த நெதர்லாந்து பின்னர் இத்தடையை , பொதுப் போக்குவரத்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்கள் என்று வேறு பல துறைகளுக்கு விஸ்தரித்தது.
உதாரணமாக நீதிமன்ற ஊழியர்கள் "அரச பக்கசார்பின்மை " என்ற அடிப்படையில் இது போன்ற ஆடைகளை அணியத் தடைவிதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் அவர்களது அன்றாட வேலையில் , வருபவர்களுடன் முகத்துக்கு முகம் உரையாட வேண்டிய தேவை இருந்தால், இந்த மாதிரியான ஆடைகளை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மூன்றில்தான் நாடளாவிய புர்கா தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகள் பிராந்திய அளவில் தடைகளை விதித்திருக்கின்றன.
ஸ்பெயினின் பார்சிலோனா நகர் 2010லிருந்து சந்தைகளிலும், பொதுக் கட்டிடங்களிலும், முழு முகத்திரைகள் அணிந்து வருவதைத் தடை செய்திருக்கிறது. டென்மார்க்கில் நீதிமன்ற அறைகளை இந்த ஆடைகள் அணிந்து வரத் தடை இருக்கிறது.
ஜெர்மனியின் ஹெஸ் மாகாணம் முழுமையிலும், இத்தாலியின் பல நகரங்களிலும் தடைகள் இருக்கின்றன. இத்தாலியத் தடைகள் 1970களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன.

Image copyrightGETTY
Image captionஇத்தாலியின் வரெலோ நகரில் முகத்திரை மற்றும் உடல் முழுவதையும் மறைக்கு நீச்சல் உடைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது

சில நாடுகள் வேறு திசையில்
ஆனால் அதே வேளை, சில நாடுகள் தடை என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகிச் சென்றுள்ளன. பல ஆண்டுகளாக இருந்த தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
துருக்கி பல தசாப்தங்களாக அமலில் இருந்த முகத்திரைத் தடையை 2013ம் ஆண்டில் விலக்கிக்கொண்டது. கல்வி மற்றும் பொதுத்துறைகளில் மத விதிமுறைகளைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு இந்த முகத்திரைத் தடை தடையாக இருக்கிறது என்ற கவலைகள் எழுந்த நிலையில், ஆளும் ஏ.கே கட்சி இந்த முடிவை எடுத்தது.
ஆனால் துருக்கியில் அதிகார மையமாக இருக்கும் மதச்சார்பற்ற குழுக்கள் இது குறித்து கவலைகளைத் தெரிவித்தன. இது பாரம்பரியமாக மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்திருக்கும் துருக்கியை இஸ்லாம் ஆள்வதற்கு வழிவகுக்கும் முதல் நடவடிக்கை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் அவர்களின் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட்டு , விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தலையை மட்டும் மறைக்கும் துணி ( அல்லது ஹிஜாப்) போடுவது அனுமதிக்கப்பட்டது. ஆனால் முழு உடலையும் மறைக்கும் ஆடைகள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன.

Image copyrightGETTY

சிரியாவும் 2011லிருந்து ஆசிரியைகளை முகத்தை மறைக்கும் நிக்காப் என்ற திரை அணிய அனுமதித்திருக்கிறது. இதற்கு முன்பு, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற கவலை அதிகரித்து வந்த நிலையில் , உயர்கல்வி அமைச்சர் நாட்டின் பல்கலைக்கழகங்களில் இது போன்ற முகத்திரைகளுக்குத் தடை விதித்திருந்தார். அது இப்போது ரத்து செய்யப்பட்டது.
துனிசியாவும் 2011 ஜனவரியிலிருந்து தலையங்கி அணிவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொண்டது.
அதற்கு முன்னர் வரை, ஹிஜாப்புகள் அணிவதற்கு எதிராக வீதிகளிலேயே கடுமையான பிரசாரம் இருந்தது. ஹிஜாப் அணிந்த பெண்கள் போலிசாரால் தடுக்கப்பட்டு , தலையங்கிகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டனர். இது மாதிரி அங்கிகள் 'மதக்குழு'வாதத்தைக் காட்டுவதாக அரசால் கருதப்பட்டது.
b.b.c /tamil