Tuesday, January 19, 2016

நாவடக்கம் எப்போது அவசியம்?-குட்டிக்கதை

சிலர் இருக்கிறார்கள் எப்போதும் ஏதாவது தொணணத்துக்கொண்டிருப்பார்கள். சிலர்  கதைப்பதையே மிகவும் குறைவாக செய்வார்கள் அதாவது பெரும்பாலும் மவுனமாக இருப்பார்கள் .இரண்டுமே சங்கடம்தான் அளவுக்கு அதிகமாக கதைப்பது எவ்வளவு சங்கடமோ அதேபோல தேவையானவற்றை கதைக்காமல் இருப்பதும் சங்கடம் தான் .பெரும்பாலும் திருமணம் ஆனவர்களுக்கு மிகவும் நன்றாக விளக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று .பெரும்பாலும் பெண்கள் பல விடையங்களில் கோடு தான் காட்டுவார்கள் நாங்கள் தான் புரிந்து கொண்டு ரோடு போடவேண்டும் .




மனைவி சமைக்கிற நேரத்தில் தலையிடிக்குது ,இயலாமல் இருக்குது என்றால் நீங்கள் உடனே கடையில் எடுப்பம் நீங்கள் ஓய்வு எடுங்கள் என்று சொல்லவேண்டும் இதைவிடுத்தது ஒரு குளிசையை போட்டிட்டு சமையுங்கள் என்றால் உங்களுக்கு முன்னால் சனி வந்து நின்று நாட்டியம் ஆடுகிறான் என்று அர்த்தம்.எதோ சொல்ல வந்து .... உண்மையில் சரியான சந்தர்ப்பத்தில் ,சரியாக கதைப்பவனும் மெளனமாக இருக்கவேண்டிய நேரத்தில் பேசாமல்  இருப்பவர்களுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்
இப்படியும் சொல்லலாம் பேசவேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பதும் மெளனமாக இருக்கவேண்டிய சமயத்தில் பேசுவதும் கூட மனிதர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது 

பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த கலையை திறம்பட கற்றுவைத்திருக்கிறார்கள்,அதனால் தான் அவர்கள் அரசியலில்   வெற்றி பெறுகிறார்கள். வாழ்க்கையில் எதோ  ஒரு வகையில் வெற்றிபெற்ற பலரைப் பார்ப்பீர்கள்  அவர்களில் பலர் இக்கலையை திறம்பட கற்று வைத்திருக்கிறார்கள் .மேலாண்மை துறையில் படித்தவர்கள் பலருக்கு இது பற்றி பாடங்கள் படித்த நினைவு வருகிறதா? 
.சரி நான் ஒரு கதையை தருகிறேன்  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தருவீர்களா ?


நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்...
விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்...
அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
மருத்துவரைக் கண்டதும் கோபமாக, 
"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்...
ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்?
உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" 
என்று கதறினார்.

மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், 
நான் மருத்துவமனையில் இல்லை... 
எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் 
இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" 
என்று கூறினார்.

"பொறுமையாக இருக்கவா?" 
அந்த தந்தை மேலும் ஆத்திரத்துடன், 
"உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் 
நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? 
உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்"
என்று கொந்தளித்தார்.

மருத்துவர் சிரித்த முகத்துடன், 
"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், 
நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார்.

"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது" தந்தை முனுமுனுத்தார்.

அறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...
மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், 
"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்" 
என்று சொன்னபடி,
"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்" 
என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.

சற்று நேரத்தில் வந்த செவிலியரிடம், 
"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா? 
என் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட அவருக்கு நேரமில்லையா?" 
என்று நொந்துகொண்டார் தந்தை.

அதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, 

"அந்த மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...
இன்று, 
அவர் மகனை அடக்கம் செய்யும் காரியங்களில் ஈடுபட்டிருந்தார்... 
உங்கள் மகனுக்காக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் 
என்று அழைத்தவுடன் 
அந்த வேலையை ஒத்தி வைத்துவிட்டு ஓடி வந்து உங்கள் மகனையும் காப்பாற்றிவிட்டார்...
இப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்"
என்று கூறினாள்.

"பேசவேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பதும் மெளனமாக இருக்கவேண்டிய சமயத்தில் பேசுவதும்  மனிதர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வருகிறது"



2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

கேள்விப்பட்ட செய்திக்கதைதான். என்றாலும்...
முடிக்கவேண்டிய இடத்தில் அழகாக முடித்திருக்கிறீர்கள்.

கரிகாலன் said...

நாகேந்திர பாரதி மற்றும் வளரும் கவிதை இருவருக்கும் எனது நன்றிகள்