Monday, February 01, 2016

அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். 
இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டலில் குறித்த பெண் தனது கணவருடன் காலை உணவிற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த கோலியின் முகாமையாளர் திடீரென “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த பெண் “ காலை உணவின் போது என்ன இல்லை ”   என வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கோலியின் முகாமையாளர்  “ படங்கள் இல்லை ” என்று கூறியுள்ளார்.
அதற்குப் பெண் “ படங்களா ??? யாருடன் ? என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட கோலி “ என்னுடன் நீங்கள் படம் எடுக்க வருவதாக அவர் நினைத்து விட்டார் ” என தெரிவித்துள்ளார். 
உடனடியாக குறித்த பெண் கோலியைப் பார்த்து “ நான் ஏன் உம்முடன் படம் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதன் போது கோலியின் முகம் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதாக பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் நிற்காது “ நீர் யார் ? நீரென்ன பிரபலமானவரா ? ..... ” என கேட்டு அவர்களை திகைக்க வைத்துள்ளார்.
இதையடுத்து கோலியும் அவரது முகாமையாளரும் மன்னிக்குமாறு தெரிவித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துள்ளனர்.
இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ள குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவி ஹோட்டல் முகாமையாளரிடம் சென்று அந்த இந்தியப் பையன் தன்னை தொந்தரவு  செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
                                                              
நன்றி --வீரகேசரி 

1 comment:

Anonymous said...

ஆகா சரியான மூக்குடைவு .ஹா..ஹா ....ஹா