Saturday, February 06, 2016

கரிகாலனின் உளறல் --001

எங்கள்  பதிவர்கள் எல்லாம்":கருத்து சித்திரம் "போட்டு கலக்கும் போது  என்னால்  முடிந்த  ஒரு முயற்சி . இந்த "கருத்து கந்தசாமி" இனி எனது வலைப்பதிவில் அடிக்கடி வந்து கருத்து சொல்லுவார் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும்தான்  என்னை மகிழ்வடைய  வைக்கும் .

எனவே மதிப்புக்குரியவர்களே  உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .நன்றி

கருத்து  கரிகாலன்  

Monday, February 01, 2016

அவுஸ்திரேலிய உணவகமொன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கை பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் காலை உணவிற்காக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உணவருந்துவதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த அவரது முகாமையளார், குறித்த இலங்கைப் பெண்ணைப் பார்த்து “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார். 
இதையடுத்து நகைச்சுவையான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி குறித்த பெண்ணின் கணவர் தனது முகப்புத்தகத்தில் நகைச்சுவையாக தரவேற்றியுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஹோட்டலில் குறித்த பெண் தனது கணவருடன் காலை உணவிற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு கோலியுடன் வந்த கோலியின் முகாமையாளர் திடீரென “ காலை உணவின் போது இல்லை ” என தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த பெண் “ காலை உணவின் போது என்ன இல்லை ”   என வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கோலியின் முகாமையாளர்  “ படங்கள் இல்லை ” என்று கூறியுள்ளார்.
அதற்குப் பெண் “ படங்களா ??? யாருடன் ? என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையில் குறுக்கிட்ட கோலி “ என்னுடன் நீங்கள் படம் எடுக்க வருவதாக அவர் நினைத்து விட்டார் ” என தெரிவித்துள்ளார். 
உடனடியாக குறித்த பெண் கோலியைப் பார்த்து “ நான் ஏன் உம்முடன் படம் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதன் போது கோலியின் முகம் அதிர்ச்சியடைந்து காணப்பட்டதாக பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் நிற்காது “ நீர் யார் ? நீரென்ன பிரபலமானவரா ? ..... ” என கேட்டு அவர்களை திகைக்க வைத்துள்ளார்.
இதையடுத்து கோலியும் அவரது முகாமையாளரும் மன்னிக்குமாறு தெரிவித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்துள்ளனர்.
இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் தரவேற்றியுள்ள குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவி ஹோட்டல் முகாமையாளரிடம் சென்று அந்த இந்தியப் பையன் தன்னை தொந்தரவு  செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
                                                              
நன்றி --வீரகேசரி 

சகாயம் ஐ.ஏ.எஸ். சொன்னது !!

''மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன். கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன். 

'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.                               

நான் அதிர்ந்துபோனேன். 'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். 

வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம். வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது. தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்"

இதில் நான் சொல்ல என்ன இருக்கு ? சிந்திப்பீர் ,செயற்படுவீர்


மேலும் சில தகவல்கள்..............................

01)வறுமையில் வாடும் வா.உ.சி  பரம்பரை 

02)இறப்புக்கும் பிறகும் புறக்கணிக்கப்பட்ட வா.உ.சி 

03)கப்பலோட்டிய தமிழன் - வீதியோரத்தில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி, பேரன்!

04)வ.உ.சி யின் பணத்தை மகாத்மா காந்தி மோசடி செய்தாரா?