இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம் , அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே…
ஜேசன்
மிக அன்பான நாடு என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இத்தனை இனவெறியை நான் இந்தியாவில் எதிர்பார்க்கவில்லை. எங்களை பார்த்தவுடன் கைக்குட்டையினால் முகத்தை மூடி கொள்கிறார்கள். எங்களுக்கு தீராத நோய் இருப்பதை போல, எங்களிடம் துர்வாடை வீசுவதை போல. ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல, ஒன்றுகூடி நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஜேனதன்
மெட்ரோ ரயிலில் நாங்கள் அமர்ந்தால், அருகிலிருப்பவர் சட்டென்று வேறு இடத்திற்கு மாறி விடுகிறார். அது மட்டுமல்லாமல், வேறு திசையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முறை சொன்னார் “ஆப்பிரிக்கர் என்று தெரிந்தாலே போதும். அவன் குற்றம் செய்யாவிட்டாலும் கூட அவன் மீதுதான் குற்றம்சாட்டப்படும் என்று. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், என்ன ஏது என்று விசாரிக்காமலே ஏராளமான மக்கள் ஒன்று கூடி தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது.
ஒரு மாலில், தன்னை மிகவும் தொந்தரவு செய்த குழந்தையை, என்னை காண்பித்து ஒரு தாய் மிரட்டினார். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
என்ன மாதிரியான வளர்ப்பு இது ? இந்த குழந்தை வளரும்போது எந்த கருப்பு நிற மனிதனுடனும் பழக விரும்பாது இல்லையா ???
ஜோனதன்:
எங்களை பார்த்தாலே ஓடுகிறார்கள். நட்பு வேண்டி, நாங்களே வலிய போய் பேசினால் கூட “உங்களிடம் என்னால் நட்பாக முடியாது” என்று சொல்லுகிறார்கள். நாங்கள் ஏதாவது எதிர்செயல் புரிய வேண்டும் என்று தூண்டுகிறார்கள். ஒருவேளை, நாங்கள் எதிர்த்தால், கும்பலாக கூடி அடிக்கிறார்கள்.
நுரா
எங்களை முகத்திற்கு நேராக பார்த்து, உரக்க சிரிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்கர்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறார்களா என்ன ???. எங்களை பார்த்தவுடன் “சிகரட், கஞ்சா” இருக்கிறதா என்று கூசாமல் கேட்கிறார்கள்.
ஏனா
பொது இடத்துக்குச் சென்று உணவருந்த முடியவில்லை. மொத்தக் கூட்டமும் எங்களைப் பார்த்து சிரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். its Just Bad
டெமிடோப்
என்னுடைய தோழிகள் சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் சென்ற போது, சில இந்திய ஆண்கள் அவர்களிடம் “ஒரு நாள் இரவுக்கு எவ்வளவு ரூபாய்” என்று கேட்டிருக்கிறார்கள். சிலர் எங்களைப் பார்த்த உடனே , காறித் துப்புவார்கள்.
இந்தியாவில் உங்களை அவமானபடுத்திய நபர்கள் , உங்கள் நாடுகளுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ? என்று, மேலே பேசிய ஆப்பிரிக்க மக்களிடம் பேட்டி எடுத்தவர்கள் கேட்டிருக்கிறார்கள் .
அதற்கு அவர்கள் இப்படி பதில் அளித்திருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடு அவர்களுக்கு அளித்து கொண்டிருக்கிறது.
நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே.
நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நிறங்களை மறந்து விடுங்கள்.
காரில் ஜெயலலிதா சிலை: கவனம் ஈர்க்கும் அதிமுக தொண்டர்
சென்னை, மெரீனா கடற்கரை சாலை. கொதிக்கும் வெயிலில் கூலாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. ரெஜிஸ்ட்ரேஷனுக்காகக் காத்திருந்த காரின் அமைப்புகள் அனைத்திலும் 'ஜெ.' மயம்.
வெள்ளை நிற வோல்ஸ்வேகனின் அனைத்துப்புறங்களிலும் முதல்வரின் படம். பின்னால், 'நடமாடும் உலக அதிசயமே' என்ற வார்த்தைகளோடு 234 என்ற குறியீடு. எல்லாவற்றுக்கும் மேலாக (நிஜமாகவே மேலேதான்) ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை. அந்தக் காருக்குச் சொந்தக்காரரான அதிமுக தொண்டரின் பெயரும் வித்தியாசமாகத்தான் இருந்தது. பிஸ்கட் பாபு.
போனில் அழைத்தால், 'நாளை உலகை ஆள வேண்டும்; உழைக்கும் கரங்களே!' என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கிறது.
யார் அவர்? அவரே சொல்கிறார்.
''என்னோட பேர் பிஸ்கட் பாபுங்க. அப்பா பேக்கரி பிஸினஸ் பண்ணிட்டு இருந்தார். அதனால என்னை பிஸ்கட் பாபுன்னு கூப்ட ஆரம்பிச்சாங்க. பொறவு அதுவே நிலைச்சுடுச்சு. சென்னைல கார்கள வாங்கி, வேலூர்ல விக்கறதுதான் என்னோட பிஸினஸ். அப்பா, தீவிர தி.மு.க.காரர்; 2001-ல இறந்துட்டார்.
ஆனா எங்க குடும்பத்துல எல்லோருமே அதிமுகதான். முதல்வர் அம்மா மேல அளவில்லாத பாசம் இருக்கறதால, அவங்களுக்காக எதாவது செஞ்சுகிட்டே இருப்பேன். முதல் முறையா, 'அம்மா' பிறந்த நாளுக்கு 58 அடி நீள கேக் வெட்டினேன், நாலு வருஷம் முன்னாடி, 'அம்மா'வோட 63 வது பிறந்தநாள் அன்னிக்கு, நகர செயலாளர், வட்டச் செயலாளர் முன்னிலைல 630 அடில கேக் வெட்டினோம். அம்மாவோட போன பிறந்தநாளுக்கு சாய்பாபா சிலையை அவங்க வீட்டுக்கு அனுப்பினேன்.
'அம்மா'வோட கொள்கைகள், கோட்பாடுகள் மேல பெரியளவுல எனக்கு நம்பிக்கை உண்டு. அவங்க ஒரு 'நடமாடும் உலக அதிசயம்'. அவங்க புகழை பரப்பத்தான் வண்டி வாங்கி இருக்கேன்''.
சரி, காரின் டாப்புல சிலை வைக்கணும்னு யோசனை எப்படி வந்தது?
" 'அம்மா' மாதிரி யாரும் பிறக்கப்போவது இல்லை. இந்தியாவுக்கு இன்னொரு 'அம்மா' வரப்போறதும் இல்லை. எங்க எல்லோருக்கும் அம்மாவைத் தெரியும்னாலும், வருங்கால சந்ததிக்கும் அம்மாவைப் பத்தி நல்லாத் தெரியணும். என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போதான் சிலை வைக்கற ஐடியா வந்துது.
'அம்மா' சிலையை வைக்கறதுக்காகவே, 8.5 லட்ச ரூபாய்க்கு புது வோல்ஸ்வேகன் காரை வாங்கினேன். அது மேல சுவாமி மலைல பண்ணிய, 18 கிலோ 'அம்மா வெண்கல சிலை'யை வச்சுருக்கேன். இதை தயார் பண்ண 80 ஆயிரம் ரூபாய் ஆச்சு''.
சிலை காரை வச்சு என்ன பண்ண போறீங்க?
''தேர்தல் வேலைக்காக பயன்படுத்தப் போறேன். அம்மா நலத்திட்ட உதவிகளை, தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணனும்''.
எதுக்காக இதெல்லாம்?
''காரணம் எதுவுமில்லை. எல்லாமே அம்மாவுக்காகத் தான். வேலூர்லயும் அணைக்கட்டுலயும் எம்.எல்.ஏ, சீட் கேட்டிருக்கேன். மூணாவது தடவையா பணம் கட்டுறேன். இந்த தடவை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருக்கு. அதிமுகவுல தொண்டனா இருக்கறதே மகிழ்ச்சி. 234 தொகுதிகளிலும் அம்மா ஜெயிக்கணும். அவ்ளோதான்''.
நேற்று தமிழ்மணத்தில் புதுப்பிப்பதில் ஏற்பட்ட கோளாறால் நான் எழுதிய இந்த பதிவு காணாமல் போய் விட்டது .எனவே மீண்டும் இங்கு பதிந்திருக்கிறேன் .
பயணங்கள் முடிவதில்லை தொடர்பதிவில் யாரும் அழைக்காமல் கலந்து கொள்ளும் முதல் ஆளும் நான்தான் கடைசியாக இணைந்து கொள்ளும் ஆளும் நான் தான் என நினைக்கிறேன் .
உண்மையில் இங்கு கனடாவில் கோடைகாலம் வந்து விட்டால் பயணங்களுக்கு குறைவேதும் இல்லை .உண்மையில் இயந்திரமயமான இந்த வாழ்க்கையில் மனிதர்களிடத்து "மனிதத்தை" மீட்டுக் கொடுப்பதே இந்த பயணங்கள் தான்.பெரும்பாலான .வெள்ளையர்கள் ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டுக்கோ பயணம் மேற்கொள்வார்கள் .ஒரு பயணம் முடிந்த உடனே அடுத்த பயணத்துக்கு நாள் குறித்துவிட்டு அதுக்காண பணத்தினை சேமிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
.இப்பொழுது நம்மவர்களும் இப்படி நடந்துகொள்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது .ஆனால் நம்மவர்கள் பெரும்பாலும் பயணம் செய்வது உறவினர்கள் ,நண்பர்கள் இருக்கும் நாட்டுக்கு அல்லது இடத்துக்கு தான் .வேறு என்னத்துக்கு தங்கும் இடத்தினை மிச்சப்படுதத்தான்.
சரி இனி விடையத்துக்கு வருகிறேன் ,இந்த தொடர் பதிவை முதன் முதலில் தொடங்கிவைத்த மைதிலிக்கு நன்றிகள் உரித்தாகட்டும். எனது பயண அனுபவங்களை கிழே படிக்க போகின்றீர்கள் .
1)பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
எப்போதும் பெரும்பாலரின் மறக்க இயலாத பயணத்தில் ரயிலுக்கு முக்கிய இடம் உண்டு .எனக்கும் முதல் ரயில் பயணம் நினைவில் இருக்கிறது பசுமரத்து ஆணிபோல. ஆனால் அந்த நாட்களிலும் சரி இன்றைய நாட்களிலும் சரி மனதில் நினைக்கும்போதே வேதனை தரும் .அப்போது பொறியியலாளரான எனது தந்தை வேலை செய்தது புத்தளம் எனும் ஊரில்.
அரசு ஊழியர் என்பதால் வருடத்தில் ஒருமுறை குடும்பத்துடன் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்தது .நீண்ட பாடசாலை விடுமுறை காலங்களில் நாங்கள் யாழ்பாணம் போவோம் எங்கள் அம்மம்மா வீட்டுக்கு.,பெரும்பாலான உறவினர்கள் அங்குதான் இருந்தார்கள் .புத்தளத்தில் இருந்த நாங்கள், அங்கு இருந்து பேருந்து ஏறி அநுராதபுரம் எனும் ஊருக்கு வந்து, கொழும்பில் இருந்து வரும் "யாழ்தேவி" ரயிலைப் பிடிக்கவேண்டும்.
இந்த யாழ்தேவி ரயிலே இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்து யாழ்பாணத்தில் இருக்கும் காங்கேசன்துறை வரைக்கும் செல்லும்.இதில் நான் குறிப்பிடும் இந்த அனுராதபுரம் என்னும் இடம் தமிழர்கள் மீதான வன்முறைக்கு பெயர் போன இடம் அத்துடன் முற்றுமுழுதாக சிங்களவர்கள் வசிக்கும் இடம் .நான் இங்கே குறிப்பிடும் காலகட்டங்களில் இந்த ஊர் வழியே போய்வருவது என்பது உயிர் போய் திரும்பிவருவது போன்றது.
புத்தளத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எனது தாயார் நெற்றில் இடப்பட்டிருக்கும் "பொட்டை" அழித்து விடுவார் ,"தாலிக்கொடியை" கழற்றி கைப்பையில் வைத்துவிடுவார் .எங்களுக்கு சொல்லப்படும் தேவையில்லாமல் கதைக்கக்கூடாது .அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நிற்கும் போது கண்டிப்பாக தமிழில் கதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். எனது தந்தையும் ,தாயும் சிங்களம் சரளமாக கதைக்கக்கூடியவர்கள் எனவே பிரச்சனை இல்லை .நாங்கள் அப்போது சிறு பிள்ளைகள் எங்களுக்கு சிங்களம் ஓரிரு சொல்லுதான் தெரியும் .தவறுதலாக அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் தமிழில் கதைத்தால் தலையில் ஒரு குட்டு விழும்.
அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் நிற்கும் போது போய் வருகின்ற யாரைப்பார்த்தாலும் எங்களை வெட்டவோ ,கொல்லவோ வருகின்றவர்கள் மாதிரி தான் தோன்றும் .யாழ்தேவி ரயிலில் ஏறினாலும் கூட யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான வவுனியா வரும் வரையில் எங்களுக்கு மட்டும் அல்ல பெரும்பாலான தமிழ்பயணிகளுக்கு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும் ரெயில் வவுனியாவுக்குள் நுழைந்தவுடன்தான் தமிழர்கள் நிம்மதிபெருமூச்சு விடுவார்கள் .
என் தாயின் கழுத்தில் "தாலியும்" நெற்றியில் "பொட்டும்" மீண்டும் குடியேறும் .இதுதான் எனது முதல் ரெயில் பயண அனுபவம்.ரெயில் பயண காட்சிகளைவிட இன்றைய நாள் வரையில் மனதில் பதிந்தது இந்த சம்பவம்தான்
இலங்கையின் புகையிரத வரைபடம்
2). மறக்கமுடியாத பயணம் எது?
1983 ம் ஆண்டு தமிழர் மீதான இனவன்முறை ஆரம்பித்த போது நாங்கள் கொழும்பில் இருந்தோம் .வன்முறைகள் ஆரம்பித்த போது உடுத்த உடையுடன் அப்பாவின் ஒரு சிங்கள நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்தோம் ,இரு தினங்கள் அவரின் வீட்டில் இருந்துவிட்டுமேலும் அவர் வீட்டில் இருப்பது எமக்கும் அவருக்கும் பாதுகாப்பு இல்லை என்றபடியால் அரசாங்கம் அறிவித்தபடி இந்துக்கல்லூரியில் தஞ்சம் அடைந்தோம் .
பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தமிழர்கள் எல்லோரையும் யாழ்ப்பாணம் அனுப்ப அரசாங்கம் தீர்மானித்து தரைவழியாக அனுப்ப பாதுகாப்பு இல்லாதபடியால் கடல் வழியாக கப்பல் மூலம் அனுப்பிவைத்தார்கள் .கப்பல் என்றவுடன் சொகுசு கப்பல் என்று எண்ணக்கூடாது .சரக்கு கப்பலில் கொழும்பு துறைமுகத்தில் எல்லோரையும் ஏற்றி யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கொண்டுவந்து இறக்கினார்கள் .ஒருநாள் முழுவதும் பயணம் .கப்பலின் மேல்தளம் முழுவதும் நாங்கள் .வாந்தி எடுப்போர் ஒருபுறம்,இறந்தவர்களை நினைத்து அழுவோர் ஒருபுறம் .எதிர் காலத்தினை நினைத்து கலங்கியபடி சிலர் .
வெயில் ஏற ஏற கப்பலின் மேல் தளம் கொதிக்க தொடங்க அதற்கும் குறைவில்லாதபடி கொதிக்கும் மனதோடு பலர் .இதற்குள்ளும் தங்கள் செல்ல நாய்க்கு ஒழுங்காக சாப்பாடு இல்லையே என்று கவலைப்படும் சிலர் இப்படியாக தொடங்கிய பயணம் .காங்கேசன்துறை வரும் வரையில் கடலையும் கடல் அலையையும் பார்த்தபடி கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட தமிழனாக பிறந்த எங்களுக்கு ஏன் இல்லை என்று சிந்தித்தபடி நான் .
காங்கேசன்துறை வந்தடைந்ததும் எமது தந்தையின் பெயரை அறிவித்து உறவினர்களிடம் ஒப்படைத்ததும், மாமாக்கள் ,சித்தப்பாக்கள் ,உறவினர்கள் எம்மை கட்டிபிடித்து அழுததும்,அம்மா மயங்கி விழந்ததும் கரிகாலனின் உயிர் கட்டையில் ஏறும் வரையில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்று .இதைபோல வேறு சில பயணங்களும் இருந்தாலும் சிறு வயதில் உயிர் வரை "உறைத்தது" இது ஒன்றுதான் .
3). எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
இங்கு கனடாவில் எனக்கு எனது வாகனத்தில் பயணம் செய்யவே பிடிக்கும் .நீண்டதூரம் என்றால் நானும் எனது மனைவியும் மாறி மாறி ஓட்டுவோம்.பெரும்பாலும் எனது குடும்பம் மட்டும்தான் மற்றவர்களை சேர்த்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும் .இது சிலவேளை அது எமக்கு தொந்தரவு தருவதாக இருக்கும். எனவே பெரும்பாலும் தனிப் பயணம்தான்.
மனைவியிடம் வாகனத்தினை ஓட்ட கொடுத்துவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு சுடச்சுட "ரிம் ஹோட்டனிலோ" அல்லது "ஸ்ரார் பக்சிலோ" "டபிள் டபிள்" "கோப்பி" வாங்கி குடித்துக்கொண்டு "பக்கோடா" பொட்டலத்தில் இருக்கும் "பக்கோடா" வையும் எடுத்து கடித்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகளை ரசித்துகொண்டிருக்க, உள்ளே ஒலிபெருக்கி வழியாக "ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சைக் கூசுதே பிபிசி செய்தி எல்லாம் நம்மைப் பேசுதே" என ஹரிகரனும் பவதாரனியும் குழையும் குரலால் காதை வருட இப்படி பயணிக்கதான் பிடிக்கும் என சொல்ல எனக்கு என்ன தயக்கம் ?
4.) பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
குத்துப்பாட்டு ,கானா பாடல்கள்,ஆங்கிலப்பாடல்கள்,
பக்திப்பாடல்கள்.புரட்சிபாடல்கள் ஏன் சிங்களப் பாடல்கள் கூட கேட்பேன் பலதரப்பட்ட இசை வடிவங்களை கேட்பதில் ஆர்வம் உடையவன் நான்.யாருடைய பாடல்கள் நன்றாக் இருந்தாலும் கேட்பேன்.மனநிலைக்கு ஏற்றவாறு பாடல்கள் கேட்டாலும் பெரும்பாலும் எனது நீண்ட தூர பயணங்களில் ஒலிப்பது இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும், தொண்ணுறுகளில் வெளிவந்த தேவா இசையில் ஹரிகரன் பாடிய பாடல்களுமே ஆகும் . பொதுவாக ஹரிகரனின் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் .. மெலோடி ரக பாடல்கள் அதிகம் பிடிக்கும் .அத்துடன் போக்குவரத்து தகவல்களுக்காக இடையிடையே செய்திகளும் கேட்பேன் .
5). விருப்பமான பயண நேரம்?
விருப்பமான பயண நேரம் அதிகாலை. இரவு நங்கை தனது ஆடைகளை களைந்து வெளிச்சத்தை மெல்லமெல்ல போர்த்திக்கொள்ளும் தருணங்களில் காற்று தலையை கோத புத்துணர்ச்சியுடன் பயணத்தினை ஆரம்பிக்க மிகவும் பிடிக்கும் கோடை காலங்களை விட பனி பொழியும் காலங்களில் பயணம் செய்யவும் மிகவும் பிடிக்கும்.
6.) விருப்பமான பயணத்துணை. ?
இப்படி ஒரு விடையத்தினை இதுவரையில் நான் சிந்தித்து இல்லை . இருந்தாலும் எனது மனைவி ,பிள்ளைகள் இல்லாத பயணங்கள் இனிப்பாய் இருந்ததில்லை. எல்லமே சரியாக இருந்தால் எனது மனைவியின் காந்த கண்களில் தெரியும் கோலங்களை ரசித்துகொண்டே இயற்கையையும் ரசிக்க பிடிக்கும் .
7) பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
சிறு வயதில் இருந்து பயணங்களில் படிப்பது கண்களை பாதிக்கும் என்ற பெற்றோரின் சொல்லுக்கு இணங்க இன்றைய பொழுதுவரை புத்தகம் படிப்பதில்லை. வெளியே பார்ப்பது .அல்லது வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்களை பார்ப்பது .(ஹி..ஹி ...)
8.) விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
கோடையில் இரண்டு மாதம் இரவே இல்லாத பொழுதுகளைக் கொண்டதும். பனிக் காலத்திலே பகலே இல்லாத ஒரு ஒரு மாதத்தினை கொண்டதுமான கனடாவின் வட மாநிலங்களுக்கு வாகனத்திலேயே தரை மார்க்கமாக போய் தங்கி வரவேண்டும் மனைவி பிள்ளைகளுடன் .
9). பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பயணம் ...பயணம் ..ஆரம்பம் பள்ளிக்கு பயணம் .....
நடந்தால் இரண்டடி இருந்தால் நாலடி ........
தென்பாண்டி சீமையிலே ....
ஆல்ப்ஸ் மலைக் காற்று வந்து ......
நான் தேடும் செவ்வந்திப்பூ இது .......
தென்மதுரை வைகைநதி ...........
குமுதம் போல் வந்த குமரியே .....
அந்தி நேர தென்றல் காற்று .....
கல்யாண தேன் நிலா காய்க்காத . பால் நிலா ......
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி .....
நீ காற்று நன் மரம் என்ன சொன்னாலும் .....
கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா ...?
மெரசாலாயிற்றேன் மெரசாலாயிற்றேன் நான் ......
தென்றல் வந்து தீண்டும் நேரம் என்ன வண்ணமோ ....?
ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன் ............
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் .....
10). கனவுப் பயணம் ஏதாவது?
"இப்படி" ஒரு பயணம் சைக்கிளில், "இப்படி" ஓரு இடத்துக்கு போகவேண்டும் .முடியாவிட்டால் எனது வாகனத்தில் ஆவது போகவேண்டும் .முடியுமா என்பது தெரியவில்லை .பார்க்கலாம் .நம்பிக்கையில் தானே வாழ்க்கை நகர்கிறது . கிழே தந்திருக்கும் வீடியோவை பாருங்கள் .இப்படியும் மனிதர்கள்
பயணங்கள் முடிவதில்லை தொடர்பதிவில் யாரும் அழைக்காமல் கலந்து கொள்ளும் முதல் ஆளும் நான்தான் கடைசியாக இணைந்து கொள்ளும் ஆளும் நான் தான் என நினைக்கிறேன் .
உண்மையில் இங்கு கனடாவில் கோடைகாலம் வந்து விட்டால் பயணங்களுக்கு குறைவேதும் இல்லை .உண்மையில் இயந்திரமயமான இந்த வாழ்க்கையில் மனிதர்களிடத்து "மனிதத்தை" மீட்டுக் கொடுப்பதே இந்த பயணங்கள் தான்.பெரும்பாலான .வெள்ளையர்கள் ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டுக்கோ பயணம் மேற்கொள்வார்கள் .ஒரு பயணம் முடிந்த உடனே அடுத்த பயணத்துக்கு நாள் குறித்துவிட்டு அதுக்காண பணத்தினை சேமிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
.இப்பொழுது நம்மவர்களும் இப்படி நடந்துகொள்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது .ஆனால் நம்மவர்கள் பெரும்பாலும் பயணம் செய்வது உறவினர்கள் ,நண்பர்கள் இருக்கும் நாட்டுக்கு அல்லது இடத்துக்கு தான் .வேறு என்னத்துக்கு தங்கும் இடத்தினை மிச்சப்படுதத்தான்.
சரி இனி விடையத்துக்கு வருகிறேன் ,இந்த தொடர் பதிவை முதன் முதலில் தொடங்கிவைத்த மைதிலிக்கு நன்றிகள் உரித்தாகட்டும். எனது பயண அனுபவங்களை கிழே படிக்க போகின்றீர்கள் .
1)பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
எப்போதும் பெரும்பாலரின் மறக்க இயலாத பயணத்தில் ரயிலுக்கு முக்கிய இடம் உண்டு .எனக்கும் முதல் ரயில் பயணம் நினைவில் இருக்கிறது பசுமரத்து ஆணிபோல. ஆனால் அந்த நாட்களிலும் சரி இன்றைய நாட்களிலும் சரி மனதில் நினைக்கும்போதே வேதனை தரும் .அப்போது பொறியியலாளரான எனது தந்தை வேலை செய்தது புத்தளம் எனும் ஊரில்.
அரசு ஊழியர் என்பதால் வருடத்தில் ஒருமுறை குடும்பத்துடன் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்தது .நீண்ட பாடசாலை விடுமுறை காலங்களில் நாங்கள் யாழ்பாணம் போவோம் எங்கள் அம்மம்மா வீட்டுக்கு.,பெரும்பாலான உறவினர்கள் அங்குதான் இருந்தார்கள் .புத்தளத்தில் இருந்த நாங்கள், அங்கு இருந்து பேருந்து ஏறி அநுராதபுரம் எனும் ஊருக்கு வந்து, கொழும்பில் இருந்து வரும் "யாழ்தேவி" ரயிலைப் பிடிக்கவேண்டும்.
இந்த யாழ்தேவி ரயிலே இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்து யாழ்பாணத்தில் இருக்கும் காங்கேசன்துறை வரைக்கும் செல்லும்.இதில் நான் குறிப்பிடும் இந்த அனுராதபுரம் என்னும் இடம் தமிழர்கள் மீதான வன்முறைக்கு பெயர் போன இடம் அத்துடன் முற்றுமுழுதாக சிங்களவர்கள் வசிக்கும் இடம் .நான் இங்கே குறிப்பிடும் காலகட்டங்களில் இந்த ஊர் வழியே போய்வருவது என்பது உயிர் போய் திரும்பிவருவது போன்றது.
புத்தளத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எனது தாயார் நெற்றில் இடப்பட்டிருக்கும் "பொட்டை" அழித்து விடுவார் ,"தாலிக்கொடியை" கழற்றி கைப்பையில் வைத்துவிடுவார் .எங்களுக்கு சொல்லப்படும் தேவையில்லாமல் கதைக்கக்கூடாது .அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நிற்கும் போது கண்டிப்பாக தமிழில் கதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். எனது தந்தையும் ,தாயும் சிங்களம் சரளமாக கதைக்கக்கூடியவர்கள் எனவே பிரச்சனை இல்லை .நாங்கள் அப்போது சிறு பிள்ளைகள் எங்களுக்கு சிங்களம் ஓரிரு சொல்லுதான் தெரியும் .தவறுதலாக அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் தமிழில் கதைத்தால் தலையில் ஒரு குட்டு விழும்.
அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் நடைபாதையில் நிற்கும் போது போய் வருகின்ற யாரைப்பார்த்தாலும் எங்களை வெட்டவோ ,கொல்லவோ வருகின்றவர்கள் மாதிரி தான் தோன்றும் .யாழ்தேவி ரயிலில் ஏறினாலும் கூட யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான வவுனியா வரும் வரையில் எங்களுக்கு மட்டும் அல்ல பெரும்பாலான தமிழ்பயணிகளுக்கு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும் ரெயில் வவுனியாவுக்குள் நுழைந்தவுடன்தான் தமிழர்கள் நிம்மதிபெருமூச்சு விடுவார்கள் .
என் தாயின் கழுத்தில் "தாலியும்" நெற்றியில் "பொட்டும்" மீண்டும் குடியேறும் .இதுதான் எனது முதல் ரெயில் பயண அனுபவம்.ரெயில் பயண காட்சிகளைவிட இன்றைய நாள் வரையில் மனதில் பதிந்தது இந்த சம்பவம்தான்
இலங்கையின் புகையிரத வரைபடம்
2). மறக்கமுடியாத பயணம் எது?
1983 ம் ஆண்டு தமிழர் மீதான இனவன்முறை ஆரம்பித்த போது நாங்கள் கொழும்பில் இருந்தோம் .வன்முறைகள் ஆரம்பித்த போது உடுத்த உடையுடன் அப்பாவின் ஒரு சிங்கள நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்தோம் ,இரு தினங்கள் அவரின் வீட்டில் இருந்துவிட்டுமேலும் அவர் வீட்டில் இருப்பது எமக்கும் அவருக்கும் பாதுகாப்பு இல்லை என்றபடியால் அரசாங்கம் அறிவித்தபடி இந்துக்கல்லூரியில் தஞ்சம் அடைந்தோம் .
பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தமிழர்கள் எல்லோரையும் யாழ்ப்பாணம் அனுப்ப அரசாங்கம் தீர்மானித்து தரைவழியாக அனுப்ப பாதுகாப்பு இல்லாதபடியால் கடல் வழியாக கப்பல் மூலம் அனுப்பிவைத்தார்கள் .கப்பல் என்றவுடன் சொகுசு கப்பல் என்று எண்ணக்கூடாது .சரக்கு கப்பலில் கொழும்பு துறைமுகத்தில் எல்லோரையும் ஏற்றி யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கொண்டுவந்து இறக்கினார்கள் .ஒருநாள் முழுவதும் பயணம் .கப்பலின் மேல்தளம் முழுவதும் நாங்கள் .வாந்தி எடுப்போர் ஒருபுறம்,இறந்தவர்களை நினைத்து அழுவோர் ஒருபுறம் .எதிர் காலத்தினை நினைத்து கலங்கியபடி சிலர் .
வெயில் ஏற ஏற கப்பலின் மேல் தளம் கொதிக்க தொடங்க அதற்கும் குறைவில்லாதபடி கொதிக்கும் மனதோடு பலர் .இதற்குள்ளும் தங்கள் செல்ல நாய்க்கு ஒழுங்காக சாப்பாடு இல்லையே என்று கவலைப்படும் சிலர் இப்படியாக தொடங்கிய பயணம் .காங்கேசன்துறை வரும் வரையில் கடலையும் கடல் அலையையும் பார்த்தபடி கடலில் துள்ளிக்குதிக்கும் மீன்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட தமிழனாக பிறந்த எங்களுக்கு ஏன் இல்லை என்று சிந்தித்தபடி நான் .
காங்கேசன்துறை வந்தடைந்ததும் எமது தந்தையின் பெயரை அறிவித்து உறவினர்களிடம் ஒப்படைத்ததும், மாமாக்கள் ,சித்தப்பாக்கள் ,உறவினர்கள் எம்மை கட்டிபிடித்து அழுததும்,அம்மா மயங்கி விழந்ததும் கரிகாலனின் உயிர் கட்டையில் ஏறும் வரையில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்று .இதைபோல வேறு சில பயணங்களும் இருந்தாலும் சிறு வயதில் உயிர் வரை "உறைத்தது" இது ஒன்றுதான் .
3). எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
இங்கு கனடாவில் எனக்கு எனது வாகனத்தில் பயணம் செய்யவே பிடிக்கும் .நீண்டதூரம் என்றால் நானும் எனது மனைவியும் மாறி மாறி ஓட்டுவோம்.பெரும்பாலும் எனது குடும்பம் மட்டும்தான் மற்றவர்களை சேர்த்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும் .இது சிலவேளை அது எமக்கு தொந்தரவு தருவதாக இருக்கும். எனவே பெரும்பாலும் தனிப் பயணம்தான்.
மனைவியிடம் வாகனத்தினை ஓட்ட கொடுத்துவிட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு சுடச்சுட "ரிம் ஹோட்டனிலோ" அல்லது "ஸ்ரார் பக்சிலோ" "டபிள் டபிள்" "கோப்பி" வாங்கி குடித்துக்கொண்டு "பக்கோடா" பொட்டலத்தில் இருக்கும் "பக்கோடா" வையும் எடுத்து கடித்துக்கொண்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் காட்சிகளை ரசித்துகொண்டிருக்க, உள்ளே ஒலிபெருக்கி வழியாக "ஆல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சைக் கூசுதே பிபிசி செய்தி எல்லாம் நம்மைப் பேசுதே" என ஹரிகரனும் பவதாரனியும் குழையும் குரலால் காதை வருட இப்படி பயணிக்கதான் பிடிக்கும் என சொல்ல எனக்கு என்ன தயக்கம் ?
4.) பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
குத்துப்பாட்டு ,கானா பாடல்கள்,ஆங்கிலப்பாடல்கள்,
பக்திப்பாடல்கள்.புரட்சிபாடல்கள் ஏன் சிங்களப் பாடல்கள் கூட கேட்பேன் பலதரப்பட்ட இசை வடிவங்களை கேட்பதில் ஆர்வம் உடையவன் நான்.யாருடைய பாடல்கள் நன்றாக் இருந்தாலும் கேட்பேன்.மனநிலைக்கு ஏற்றவாறு பாடல்கள் கேட்டாலும் பெரும்பாலும் எனது நீண்ட தூர பயணங்களில் ஒலிப்பது இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும், தொண்ணுறுகளில் வெளிவந்த தேவா இசையில் ஹரிகரன் பாடிய பாடல்களுமே ஆகும் . பொதுவாக ஹரிகரனின் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் .. மெலோடி ரக பாடல்கள் அதிகம் பிடிக்கும் .அத்துடன் போக்குவரத்து தகவல்களுக்காக இடையிடையே செய்திகளும் கேட்பேன் .
5). விருப்பமான பயண நேரம்?
விருப்பமான பயண நேரம் அதிகாலை. இரவு நங்கை தனது ஆடைகளை களைந்து வெளிச்சத்தை மெல்லமெல்ல போர்த்திக்கொள்ளும் தருணங்களில் காற்று தலையை கோத புத்துணர்ச்சியுடன் பயணத்தினை ஆரம்பிக்க மிகவும் பிடிக்கும் கோடை காலங்களை விட பனி பொழியும் காலங்களில் பயணம் செய்யவும் மிகவும் பிடிக்கும்.
6.) விருப்பமான பயணத்துணை. ?
இப்படி ஒரு விடையத்தினை இதுவரையில் நான் சிந்தித்து இல்லை . இருந்தாலும் எனது மனைவி ,பிள்ளைகள் இல்லாத பயணங்கள் இனிப்பாய் இருந்ததில்லை. எல்லமே சரியாக இருந்தால் எனது மனைவியின் காந்த கண்களில் தெரியும் கோலங்களை ரசித்துகொண்டே இயற்கையையும் ரசிக்க பிடிக்கும் .
7) பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
சிறு வயதில் இருந்து பயணங்களில் படிப்பது கண்களை பாதிக்கும் என்ற பெற்றோரின் சொல்லுக்கு இணங்க இன்றைய பொழுதுவரை புத்தகம் படிப்பதில்லை. வெளியே பார்ப்பது .அல்லது வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்களை பார்ப்பது .(ஹி..ஹி ...)
8.) விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
கோடையில் இரண்டு மாதம் இரவே இல்லாத பொழுதுகளைக் கொண்டதும். பனிக் காலத்திலே பகலே இல்லாத ஒரு ஒரு மாதத்தினை கொண்டதுமான கனடாவின் வட மாநிலங்களுக்கு வாகனத்திலேயே தரை மார்க்கமாக போய் தங்கி வரவேண்டும் மனைவி பிள்ளைகளுடன் .
9). பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பயணம் ...பயணம் ..ஆரம்பம் பள்ளிக்கு பயணம் .....
நடந்தால் இரண்டடி இருந்தால் நாலடி ........
தென்பாண்டி சீமையிலே ....
ஆல்ப்ஸ் மலைக் காற்று வந்து ......
நான் தேடும் செவ்வந்திப்பூ இது .......
தென்மதுரை வைகைநதி ...........
குமுதம் போல் வந்த குமரியே .....
அந்தி நேர தென்றல் காற்று .....
கல்யாண தேன் நிலா காய்க்காத . பால் நிலா ......
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி .....
நீ காற்று நன் மரம் என்ன சொன்னாலும் .....
கூட்டத்திலே கோயில் புறா யாரை இங்கு தேடுதம்மா ...?
மெரசாலாயிற்றேன் மெரசாலாயிற்றேன் நான் ......
தென்றல் வந்து தீண்டும் நேரம் என்ன வண்ணமோ ....?
ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன் ............
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் .....
10). கனவுப் பயணம் ஏதாவது?
"இப்படி" ஒரு பயணம் சைக்கிளில், "இப்படி" ஓரு இடத்துக்கு போகவேண்டும் .முடியாவிட்டால் எனது வாகனத்தில் ஆவது போகவேண்டும் .முடியுமா என்பது தெரியவில்லை .பார்க்கலாம் .நம்பிக்கையில் தானே வாழ்க்கை நகர்கிறது . கிழே தந்திருக்கும் வீடியோவை பாருங்கள் .இப்படியும் மனிதர்கள்