<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7001936</id><updated>2012-02-16T20:57:24.070-05:00</updated><category term='உதவி'/><category term='கருத்தோவியம்.'/><category term='விமர்சனம்'/><category term='அரசியல்.'/><category term='அரசியல்'/><title type='text'>என் மனவெளியில்!</title><subtitle type='html'>என் மனவெளியில் சிறகடித்துப்பறக்கும்
எண்ணப் பறவைகள் யாவும்
வண்ணச்சிறகுகள் விரித்து
இணைய வலம் வருகின்றன!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>185</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7112896719837461647</id><published>2011-11-03T22:51:00.001-04:00</published><updated>2011-11-03T22:55:38.770-04:00</updated><title type='text'>சுப்பு அம்மானும் ,சுப்புக்குட்டியும்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-gyKY8QO_a_U/TrNT8NmXmWI/AAAAAAAAAD4/gadTQPFKYtQ/s1600/suppu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/-gyKY8QO_a_U/TrNT8NmXmWI/AAAAAAAAAD4/gadTQPFKYtQ/s320/suppu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670968649697433954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையே&lt;br /&gt;சந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்&lt;br /&gt;கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்&lt;br /&gt;அவர்களின் உரையாடல் இருக்கும்.எண்ணத்தில் உதித்து சில மாதங்களே&lt;br /&gt;ஆன , பதிவுலக வரலாற்றில் முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? அவர்கள் தயார். சரி ,சரி கைதட்டியது போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பல்வேறு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.அரசியல்,சினிமா,வம்பு தும்பு,நாட்டு நடப்பு இப்படி பல&lt;br /&gt;&lt;br /&gt;.இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்....................................&lt;br /&gt;என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.&lt;br /&gt;ஒரு பெயரை முன்மொழியுங்கள்.விரைவினில் சந்திப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் கரிகாலன்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7112896719837461647?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7112896719837461647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7112896719837461647&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7112896719837461647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7112896719837461647'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2011/11/blog-post.html' title='சுப்பு அம்மானும் ,சுப்புக்குட்டியும்.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-gyKY8QO_a_U/TrNT8NmXmWI/AAAAAAAAAD4/gadTQPFKYtQ/s72-c/suppu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-5854045770685557578</id><published>2011-08-20T11:50:00.002-04:00</published><updated>2011-08-20T11:57:21.419-04:00</updated><title type='text'>புதிய இணையத்தள வானொலி!</title><content type='html'>ரொரண்டோவிலிருந்து மேலும் ஒரு புதிய  இணையத்தள வானொலி உதயமாகிறது.&lt;br /&gt;பாடல்கள்,நகைச்சுவை விருந்துகள்,தகவல்கள் இவற்றுடன் நேயர்களுக்கு பரிசில்களும்&lt;br /&gt;வழங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.velicham.fm"&gt;www.velicham.fm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-5854045770685557578?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/5854045770685557578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=5854045770685557578&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5854045770685557578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5854045770685557578'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2011/08/blog-post.html' title='புதிய இணையத்தள வானொலி!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7664015134476022527</id><published>2011-01-20T19:02:00.002-05:00</published><updated>2011-01-20T19:16:01.343-05:00</updated><title type='text'>testing</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_9UKPXrzV184/TTjQIgj__CI/AAAAAAAAADY/6Jg82XFEtBk/s1600/36.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_9UKPXrzV184/TTjQIgj__CI/AAAAAAAAADY/6Jg82XFEtBk/s320/36.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564426184214707234" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7664015134476022527?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=b07db3b6af4fa944&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7664015134476022527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7664015134476022527&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7664015134476022527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7664015134476022527'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2011/01/test.html' title='testing'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9UKPXrzV184/TTjQIgj__CI/AAAAAAAAADY/6Jg82XFEtBk/s72-c/36.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-6797959337249300983</id><published>2010-04-19T18:20:00.002-04:00</published><updated>2010-04-19T18:29:39.864-04:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு: மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கான தாக்கத்தையாவது உருவாக்குமா?</title><content type='html'>இதில் வெட்கப்பட எதுவுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம், &lt;br /&gt;&lt;br /&gt;வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மொழியும், அதனைப் பேசுகின்ற இனமும் பாரம்பரியம் மிக்க வரலாற்றைத் தன்னகத்தே கொண்டதென்பது கூடுதல் சிறப்பம்சமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழ்மொழி விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய மொழி, பெருமைப்படுத்தப்பட வேண்டிய மொழி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே உலக செம்மொழி மாநாடு நடைபெறுவதில் நமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், ஆயிரம் கவிஞர்கள், ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகள், &lt;br /&gt;&lt;br /&gt;ஐநூறுப்பக்கங்களில் சிறப்பு மலர், தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடனங்கள், &lt;br /&gt;&lt;br /&gt;இலட்சக்கணக்கில் பார்வையாளர்கள் என உலக செம்மொழி மாநாடு களைகட்டத் தொடங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழுக்கு நான்காம் தமிழான கணினித் தமிழும் அணி செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திருவிழாவுக்கு இடையில் தமிழ்மொழியை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தாயின் நேரடி வாரிசுகளாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் அரியணையில் அமர்ந்து நாற்பத்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடி விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில், பேச்சில், வசனத்தில், கவிதையில் எங்கும் தமிழ்வாசம் மணக்க மணக்க காட்சிகள் அரங்கேறின. &lt;br /&gt;&lt;br /&gt;'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி' எனும் வசனம் காலங்காலமாய் எதிரொலித்துக்கொண்டே வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய வரலாற்றை உள்ளடக்கிய நம் தமிழ்மொழி எங்கெல்லாம் இருக்கிறதெனக் கேள்வி எழுப்பிப் பார்த்தால் எஞ்சி நிற்பது வேதனை மட்டுமே தான்! &lt;br /&gt;&lt;br /&gt;நீதி மன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை? கடவுளின் சன்னதியில் பூசிக்கும் மொழியாகத் தமிழ் இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt;கடைப்பலகைகளில் தமிழ் இல்லை? பாட சாலைகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt;கணிப்பொறியில் தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழியாகத் தமிழ் இல்லை? &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை? இப்படி இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் தமிழ் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேடைகளில் புகழ் மாலைகளில் தமிழ் தாராளமாய்க் கொஞ்சி விளையாடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்து நூல்கள் பதிப்பிக்கும் உரிமை நம் கைக்கு வந்து சுமார் எழுபது ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம்மிடம் கால வரிசைபடி தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியம் உள்ளிட்ட நமது பழம் இலக்கியங்களின் ஆய்வியல் நோக்கிலான வரலாறு நம்மிடம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நமது இலக்கியங்கள் உருவான காலம் குறித்த பரந்து பட்ட ஆய்வுகள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மொழியை உலக மொழிகளோடு ஒப்பாய்வு செய்யும் ஆய்வு மையங்கள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான முயற்சிகள் கூட இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் செய்து முடித்து விட்டு தான் விழா எடுக்க வேண்டுமா? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதைக்கூட செய்ய முடியாத நாம் விழா எடுத்து என்ன செய்து விடப்போகிறோம் என்பது தான் நம் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தமிழின் உரிமைகள் நிலைநாட்டப்படாத சூழல் மட்டுமல்ல, தமிழரின் உரிமைகளும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பது குறித்தும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் ஆற்று நீர் உரிமை காவிரியில் தொடங்கி, முல்லைப்பெரியாற்றில் வேகம் பிடித்து கிருட்டிணாவில் வந்து நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை கடலில் மட்டும் சிக்கலில்லை என நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கோ இலட்சோப இலட்சம் மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கான உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் வெட்கப்படாமல் விழா எடுக்க முனைந்துள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கு விழா எடுக்கும் உரிமை நமக்கு மட்டும் சொந்தமானதா? என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூமிப்பந்திலுள்ள எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் தமிழ்மொழி வனப்புடன் உலா வருவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் காரணம் என்பதனை மறுக்க இயலுமா? &lt;br /&gt;&lt;br /&gt;மொழி மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை மறைக்க இயலுமா? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மொழியை உலக மக்கள் அறிந்திட ஏதுவாக தமிழ்மொழியின் சிறப்பை இணையத்தில் ஆங்கிலத்தில் தொகுத்து வருவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தானே? &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் என்பது தமிழ்நாட்டுத் தமிழரின் தனிச்சொத்து அல்ல.நாம் மட்டும் முடிவு செய்து கொண்டாடுவதற்கு நமது குடும்ப விழாவும் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் மீளாத்துயரிலிருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நமது உறவுகள் துயரத்தில் தவிக்கையில் விழா எடுப்பது க ல் நெஞ்சம் கொண்டோரையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்வல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக பழம் பெருமை பேசுவதிலேயே சுகம் கண்டு போன சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மாறிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இனம் இப்படியே இருக்க வேண்டுமென இனப்பகைவர்கள் மட்டுமல்ல நம்மை ஆள்வோரும் நினைக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் கேளிக்கைகளில் மூழ்கடிக்கப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;போரைக்கூட வேடிக்கைப்பார்கின்ற நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கானத் தாக்கத்தையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குருதி காயும் முன்பு இப்படி ஒரு மாநாடு தேவையா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா ஆரவாரத்தில் இந்தக்கேள்வி ஆள்வோர் காதுகளில் விழாது தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஈழக்கொலைகள் தொடர்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறலை இன்னமும் விடாமல் எழுப்பிக்கொண்டே உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வதை முகாமிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீளவே இல்லை, காணமல் போனோர் தொடர்பில் தகவலே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் மொழிக்கு மாநாடு கூட்டுகிறோம். அதில் உலகெங்குமிருந்து கவிதைகளோடும், ஆய்வுக்கட்டுரைகளோடும் புறப்பட்டு விட்டான் மறத்தமிழன். &lt;br /&gt;&lt;br /&gt;போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைப் பன்னாட்டு நீதிமான்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் தமிழுக்கு விழா எடுப்பதில் ஆர்வமாக உள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதனையெல்லாம் வருங்கால தலைமுறை மன்னிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, நிகழ்காலம் நிச்சயம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மொழி பேசும் தமிழ்நாட்டு தமிழனின் வாழ்விலும் மகிழ்ச்சியில்லை,புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வாழ்நிலையிலும் ஏற்றமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மொழி பேசும் நா பற்றி கவலைபடாமல் மொழியைப்பாதுகாக்க போர் மறவர்கள் களம் கண்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அறிவார்ந்த மொழி வளர்ச்சியை உலகில் வேறெந்த இனமும் முன்னெடுத்திருக்குமா? என்பது சந்தேகம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன நீரோமன்னர்கள் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புலவர் படை பரிசில் பெற வசனங்களோடும், கவிதைகளோடும் செம்மொழி மாநாட்டில் அணி திரள இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வெட்கப்பட எதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'புதினப்பலகை'க்காக மாரியப்பன் மலர் வண்ணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-6797959337249300983?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/6797959337249300983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=6797959337249300983&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6797959337249300983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6797959337249300983'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2010/04/blog-post.html' title='செம்மொழி மாநாடு: மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கான தாக்கத்தையாவது உருவாக்குமா?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-6217603029306095249</id><published>2010-02-14T09:55:00.000-05:00</published><updated>2010-02-14T10:01:18.870-05:00</updated><title type='text'>test</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_9UKPXrzV184/S3gQGoV-4dI/AAAAAAAAAC0/1M21wUp-YaY/s1600-h/amman-temple.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_9UKPXrzV184/S3gQGoV-4dI/AAAAAAAAAC0/1M21wUp-YaY/s320/amman-temple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438114256144753106" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-6217603029306095249?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/6217603029306095249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=6217603029306095249&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6217603029306095249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6217603029306095249'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2010/02/test.html' title='test'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9UKPXrzV184/S3gQGoV-4dI/AAAAAAAAAC0/1M21wUp-YaY/s72-c/amman-temple.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-8909844426057545433</id><published>2009-06-07T18:24:00.001-04:00</published><updated>2009-06-07T18:29:15.504-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி</title><content type='html'>இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரம் வழங்க மாட்டோம். ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதை விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் அறிந்துதான் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி- &lt;a href="http://www.puthinam.com/full.php?2b24OOy4b33q6Dre4d45Vo6ca0bc4AO24d3SSmA2e0dM0MtRce03f1eW0cc3mcYAde"&gt;புதினம் இணையத்தளம்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-8909844426057545433?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/8909844426057545433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=8909844426057545433&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8909844426057545433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8909844426057545433'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2009/06/blog-post.html' title='எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-8590911098063043466</id><published>2008-10-26T20:04:00.002-04:00</published><updated>2008-10-26T20:09:52.716-04:00</updated><title type='text'>சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/SQUGIVvAhHI/AAAAAAAAACY/jG-yh7p2Op0/s1600-h/eekan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 217px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/SQUGIVvAhHI/AAAAAAAAACY/jG-yh7p2Op0/s320/eekan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5261618479995323506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர். &lt;br /&gt;நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது, &lt;br /&gt;&lt;br /&gt;"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, ஜேர்மன் மற்றும் டென்மார்க் நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;தமிழ்வின்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-8590911098063043466?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/8590911098063043466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=8590911098063043466&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8590911098063043466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8590911098063043466'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/10/blog-post_8846.html' title='சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/SQUGIVvAhHI/AAAAAAAAACY/jG-yh7p2Op0/s72-c/eekan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7401148184099696294</id><published>2008-10-26T18:49:00.002-04:00</published><updated>2008-10-26T18:57:21.454-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வைகோ கைது: கலைஞரின் உபாயம்</title><content type='html'>சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே; பார்ப்பனனைக்கொல்" எனப் பெரியார் கூறி இருந்தார். பிராமணரான ஜெயலலிதாவை ஆட்சிக்கதிரையில் நிரந்தரமாக இருத்தி அழகு பார்ப்பதே இந்தப்பார்ப்பனியத்தின் இலட்சியம். துக்ளக் ஆசிரியர் சோ,சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மற்றும் பிராமணப் பத்திரிகைகளான தினமலர், ஹிந்து ஆகியவையே தமிழகத்தில் பிராமணியத்தின் எச்சமாக உள்ள 4 அம்சங்களாகும். ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் என்றால் இந்தப் பிராமண ஆதிக்கப்பீரங்கிகள் மட்டுமேதான் என்ற நிலை இருந்தது. அதாவது தமது ஆதிக்கத்தில் வாசகர்களை வைத்துப்பூட்டி வைத்து பிராமண மேலாதிக்க நிலையை பேண இவர்கள் கடுமையாக முயன்றனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் என அடுக்கடுக்காக தோன்றிய சீர்திருத்தவாதிகள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறியலாயினர். &lt;br /&gt;&lt;br /&gt;மிரண்டுபோன பார்ப்பனியம் தமிழகத்தின் பார்ப்பனர்களால் இயலாததை சாதிக்க கர்நாடகத்திலிருந்து இறக்குமதியான பார்ப்பனியமான ஜெயலலிதாவையும் அவரது சினிமாவையும் பயன்படுத்த முனைந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டனர். இன்றைய நிலையில் ஏற்கனவே இனி ஒருபோதுமே ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வரமுடியாத அவலம் உள்ளது. இது பார்ப்பனியத்தால் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் இருதடவை தேர்தல்களில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றாரே அது எப்படி என்ற கேள்வி எழலாம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆள்வது தானே வழமை என்ற கேள்வியையும் கேட்கலாம். மாறி மாறி ஆள்வது என்பது இதுவரை நடந்தது என்னவோ உண்மைதான். இனிமேல் அது நடக்கவே போவதில்லை என்பதும் உண்மையே. &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் 1991 இல் ஜெயலலிதா வென்றது ராஜீவ் கொலையில் அள்ளுண்டே. 2001 இல் வென்றது காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரித்ததால் ஆகும். அந்த தேர்தலில் தி.மு.க.வானது பிஜேபியுடன் கூட்டணி கொண்டதால் சகல நடுநிலைவாத சக்திகளும் தி.மு.க.வை வெறுக்கத் தொடங்கினர். வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் தி.மு.க.பிஜேபியுடன் உறவு கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நாஸ்திகர்களான தி.மு.க.இவ்வாறு செய்தது பல மட்டங்களில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. வீரமணி, நெடுமாறன், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், தமிழறிஞர்கள் என பலரும் தி.மு.க.வுக்கு பாடம் கற்பிக்க சபதம் எடுத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட்களோ தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியை உறுதியாக அமைத்துக் கொடுத்தனர். இவற்றின் ஒட்டு மொத்தப்பலனே 2001 தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றியாகும். மற்றப் படி ஜெயலலிதா அந்த தேர்தலில் வெல்வார் என அவர்கூட நம்பியிருக்கவில்லை. பிஜேபியின் மதவாதத்தை சகிக்க முடியாத முற்போக்கு சக்திகள் எல்லாம் தமது பிராமண எதிர்ப்பை தற்காலிகமாக கைவிட்டு; ஜெ;விடம் சரண் புகுந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு அவசரம் மதவாதத்தை ஒழிப்பதே. பிராமணர்களை அழிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இவர்கள் கருதினர். தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகைகள், திரையுலகில் உள்ள முற்போக்கு சக்திகள் சகலரும் பிஜேபியை ஒழிக்கும் ஒரே நோக்கத்துக்காக ஜெயலலிதாவை ஆதரித்தனர். அவர் இரண்டாம் முறையாக ஆட்சிபீடமேறிய பின்னணி இதுவே. மற்றப்படி ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த 2 தடவையுமே அவரது சொந்தக்காலில் வெல்லவில்லை என்பதே உண்மை. உண்மையைச் சொன்னால் இந்த 2 தடவையும் வென்ற 160,134 ஆகிய தொகுதிகளை விட 1989 தேர்தலில் ஜெயலலலிதா தனித்து நின்று பெற்ற 32 தொகுதிகளும் மிக சிறந்த சாதனையாகும். காரணம் அப்போது அரசியலுக்கு அவர் புதிது. ஜானகி ராமச்சந்திரன் அணி, மூப்பனாரின் காங்கிரஸ், தி.மு.க.கம்யூனிஸ்ட் என பலமுனைப்போட்டியில் தனித்து நின்று காங்கிரசையும், ஜானகியையும் முந்தி 2 ஆவது இடத்தைப் பிடித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார். அவரது இந்த சாதனையை பொறுக்கமுடியாத தி.மு.க.வினர் சட்டசபையில் அவரைத் துகிலுரிந்து அநாகரிகம் புரிந்தமை வரலாறு. தி.மு.க.விற்கு தான் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது மூலம் பெரும் தவறு புரிந்தோம் என்பது விளங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒரு காலத்தில் கலைஞர் இருக்கும் வரை யாராவது பிஜேபியுடன் தி.மு.க. கூட்டணி வைக்க விரும்பாது. அத்தகைய பாரிய இழப்பு கலைஞருக்கு ஏற்பட்டது. தான் தனித்து சொந்தக்காலில் 2 முறையும் ஆட்சிபீடமேறவில்லை என்பது அம்மாவுக்கும் உறுத்தலாக உள்ளது. எனவே கூடுமானவரை தனித்து நிற்கவே ஜெ சமீப தேர்தல்களில் முயன்றுள்ளார். தான் தனித்து வெல்லமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடன் சேர்வதால் ஏனைய கட்சிகளுக்கே இலாபம் என்பதை நிரூபிக்க அவர் பல தடவை முயன்றுள்ளார். ஆனால் தோற்றுத்தான் போயுள்ளார். இந்தப் பின்னணியில் இன்று தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலை நிச்சயமாக தமிழகத்தின் பார்ப்பனர்கட்கு விரோதமானது என்பது தெளிவு. இந்த எழுச்சியை அடக்க ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிகைகள் வெகுவாக முயன்றன. ஹிந்து பத்திரிகைகள் சமீபத்தில் மாலினி பார்த்தசாரதி என்பவர் எழுதிய ்சுதமிழ் ஆதிக்க வெறிஎன்ற கட்டுரைக்கு எதிர்ப்புக் காட்டி ஈழ அனுதாபிகள் ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஹிந்துவின் 3000 பிரதிகள் தீயிடப்பட்டன. சோவும் ஜெயலலிதாவை அவசரமாக சந்தித்து அவரை ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார். மறுபுறம் சுப்பிரமணியசாமி அறிக்கை மேல் அறிக்கை விட்டு வருகிறார். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையின் தேர்தல்களில் சிங்கள பேரினவாதக் கட்சிகள்தான் வெற்றி பெறும். &lt;br /&gt;&lt;br /&gt;மாற்று அபிப்பிராயம் கொண்ட விக்ரமபாகு கருணாரட்ன போன்ற சிறுபான்மை அனுதாபிகளான நடுநிலையாளர்களால் வெல்லவே முடியாது. காரணம் இனவாதம் எடுபடுவதுதான். அதேபோல்தான் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் ஜனதாகட்சி தனித்துநின்று செல்லமுடியாது. விக்ரமபாகுவும் சுப்பிரமணியசாமியும் பெரும்பான்மையான வாக்காளர்களினால் அங்கீகரிக்கப்படாத ஒரே வகையினை சேர்ந்தவர்கள். ஒரே வித்தியாசம் விக்ரமபாகு யதார்த்தமான கொள்கைகளை பின்பற்றுபவர் என்பதுதான். சுப்பிரமணியசாமி விடும் அறிக்கைகளை இலங்கைப் பேரினவாத சிங்களப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் பிரசுரிக்கின்றன. அப்படியானால் விக்ரமபாகு கருணாரட்ன வெளியிடும் அறிக்கைகளையும் முதல் பக்கத்தில் ஏன் பிரசுரிக்கக்கூடாது? விக்ரமபாகு இலங்கைத் தேர்தலில் தோற்பது சரியாயின் சுப்பிரமணியசாமி இந்திய தேர்தலில் தோற்பதும் நியாயமே. இதேவேளை, இந்திய நாட்டின் இறைமைக்கு விரோதமாக பேசியதாக வைகோவும் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்றவாரம் கைதுசெய்யப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது கலைஞரின் பழிவாங்கல் எனக் கூறப்பட்டாலும் அ.தி.மு.க.வையும் ம.தி.மு.க.வையும் சங்கடத்தில் ஆழ்த்தவே கலைஞர் பொறி வைத்துள்ளார் என கருத முடிகிறது. புலி ஆதரவாளரை கைதுசெய் என காட்டுக்கத்தல் போடும் அம்மாவுக்கு பதிலளிக்கும் விதமாக "முதலில் உன் வீட்டுகள் இருக்கும் புலியை கைதுசெய்கிறேன்" என கலைஞர் பதிலளித்துள்ளார். இப்போது ஜெயலலிதா வாயடைத்துப் போயுள்ளார். மேலும்,ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது வேறு, புலிகட்கு ஆதரவு என்பது வேறு என்பதை கலைஞர் தெளிவாக விளக்கியுள்ளார். "ஈழத் தமிழரும் புலிகளும் ஒன்றேதான் வேறல்ல" என்பது உள்ளத்தில் இருந்தாலும் வெளியே அதனைச் சொல்ல இந்திய சட்டத்தில் இன்றைக்கு இடமில்லை. எனவே, அவசரப்பட்டு புலிகட்கு வெளிப்படையாக ஆதரவு காட்டுவது சமயோசிதமல்ல. முதலில் ஈழத் தமிழரையும் தமிழக மீனவர் பிரச்சினையையும் முன்வைத்து போராட வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை அழுத்த வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் புலி ஆதரவு, புலியை ஆதரியாது ஈழத் தமிழரை மட்டும் ஆதரிப்பது, இலங்கைஅரசை எதிர்ப்பது என்ற மூன்று அம்சங்கள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்கொள்ளும் தவறை பலர் புரிகிறார்கள். உதாரணமாக, இலங்கையின் பேரினவாதிகள் ஜெயலலிதா புலி எதிரி என்பதால் தமது ஆதரவாளர் என்று முடிவு கட்டுகின்றனர். ஜெயலலிதா புலி எதிரி சரிதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக அவர் நூறு வீதம் இலங்கை பேரினவாதத்தினதும் அரசினதும் ஆதரவாளர் அல்ல. கச்சதீவை இலங்கையிடமிருந்து பெறவேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளார். அது இலங்கைக்கு சார்பான கொள்கையா என்ற கேள்வியை சிங்களப் பேரினவாதிகளிடம் கேட்க வேண்டும். "எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்" என்ற கோட்பாடு எல்லா இடத்திலும் பொருந்தாது. எனது எதிரியின் எதிரி எனக்கும் எதிரியாக இருக்கலாம். இதுதான் இலங்கை அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையோன நட்பின் நிலை. கலைஞர் தான் ஈழத்தமிழருக்கு மட்டுமே ஆதரவு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். புலிக்கு ஆதரவாக அவர் இருந்தாலும் அதை வெளியே சொல்ல சட்டத்தில் இடமில்லை. மற்ற கட்சியினர்க்கும் இதே புத்திமதியை கலைஞர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியும் இதேவிதமாக கருத்துக் கூறியுள்ளது. தமிழகத்தின் புத்திஜீவிக் கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பா.ம.க. இவ்வாறு கூறுவது சரியே. ஆனால், பிராமண ஆதரவு தமிழக பத்திரிகையான தினமலர் "பா.ம.க. ஈழப்பிரச்சினையில் திடீர் பல்டி" என தலையிட்டு இதனைக் கொண்டாடியுள்ளது. உண்மை அதுவல்ல, பா.ம.க ஈழப்பிரச்சினையில் எந்த பல்டியும் அடிக்கவில்லை. கொள்கை மாறவுமில்லை. சட்டத்திலும் மாட்டிக் கொள்ளாது சமயோசிதமாக நடந்துள்ளது; அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகத்துறை தனது தனிப்பட்ட நலன்களை முன்னிட்டு வாசகர்களை தவறாக வழிநடத்துவதற்கு இந்த தினமலர் தலைப்பு சிறந்த உதாரணமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அபிஜித் &lt;br /&gt;thinakkural&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7401148184099696294?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7401148184099696294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7401148184099696294&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7401148184099696294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7401148184099696294'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/10/blog-post.html' title='வைகோ கைது: கலைஞரின் உபாயம்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-1789758761532172959</id><published>2008-07-21T01:16:00.001-04:00</published><updated>2008-07-21T01:20:13.850-04:00</updated><title type='text'>குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் !</title><content type='html'>&lt;strong&gt;குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் &lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்காதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்கேக்க அவளுக்காக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல…….&lt;br /&gt; &lt;br /&gt;இதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுது கொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி. பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த விதப் புதினமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் 24ம் திகதி மதியம் ஒரு மணி ஏ-9 நெடுஞ்சாலையின் 155 வது மைல்கல்லில் மேற்காகப் பிரிந்து செல்லும் கிரவற் தெருவிற் பயணிக்கிறோம். குன்றும் குழியுமான அந்தப் பாதையில் ஒரு திடீர் நெரிசல். பாரதிபுரம் பாடசாலையை நோக்கிப் பார்த்திருந்தவர்களும் இறுகிய முகங்களோடு விரைகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அங்கே சென்று சேர்கையில் இருபுறமும் தென்னங்குருத்துக்களான சோகத்தைக் குறிக்கும் தோரணங்களாலும் கறுப்புத் துணியிலான கொடிகளாலும் நிறைந்திருந்த தெருவழியே இரண்டு திறந்த வாகனங்களில் எடுத்துவரப்பட்டிருந்த அந்தப் 16 உடலப் பேழைகளும் பாடசாலையின் முகப்பிலே இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;மெய்யாகவே திரண்டிருந்தவர்களின் கண்ணீரிலே தோய்ந்து போயின பேழைகள். பாடசாலைக்கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. மீளக் கட்டியெழுப்பப்படும் அக்கிராமத்தின் இதயமாக விளங்கும் பாரதி வித்தியாலய வளாகம் ஊரவர்களாலும் அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களாலும் நிறைந்திருக்கிறது. அனைவரது முகங்களிலும் ஒருவித பதைப்பைக் காணமுடிந்தது பரஸ்பரம் அவர்களால் ஒரு மெல்லிய தலையசைப்பை மட்டுமே மறுக்காகப் பரிமாறிக்கொள்ளக் கூடியதாகத் தம்மை இறுக்கிக் கொண்டிருந்தனர் பிரமுகர்கள். உடைத்துவிடக் கூடாதென்பது அவர்களது பிரயத்தனம். &lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் ஊரோ மனமுடைந்தும் வயிறெரிந்து புலம்பிக் கொண்டிருந்தது “பதினாறும் போகுதே” “பதினாறும் போகுதே” எனப் பாரதிபுரமே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தப் பொழுதில்; &lt;br /&gt;&lt;br /&gt;முறுகண்டி அக்கராயன் வீதியில் மே 23 ம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிற் பலியான பாரதிபுரம் மக்கள் 16 பேரினதும் உடலங்கள் மக்களின் இறுதியஞ்சலிக்காக கிளி. பாரதி வித்தியாலத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது காணப்படாத மேற்படி சூழலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இது உடலுழைப்பையே நம்பியிருக்கக் கிராமம் இப்படித்தான் படிப்படியாக மீளக் கட்டியெழுப்பப்படுவது நாங்களும் எங்கட பாடசாலைச் செயற்பாடுகளைப் படிப்படியாக ஒழுங்குக்குக் கொண்டு வந்து மாணவர்களின்ர உளவியலைப் படிக்கிறதுக்கேற்ற மாதிரி நிமிர்த்திக்கொண்டு வரேக்க நிகழ்ந்திருக்கிற இந்த இழப்பு எங்களை வெகுவாகப் பாதித்துப் போட்டுது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்டா ஒரு சிறிய கிராமத்தில் ஓரே நாளில் 16 பேர் இல்லாமற் போறதென்பது தாங்கிக் கொள்ளக்கூடிய விடயமல்ல. எங்கட ஐஞ்சு மாணவர்கள் இதில பலியாகியிருக்கினம். ஒரு மாணவர்களின்ர பெற்றோர் பலியாகியிருக்கினம். கொல்லப்பட்டவர்க்ள் எல்லோருமே எங்கட பிள்ளையின் இரத்த உறவுகள். எங்கட பள்ளியில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கிற அம்மாவும் இதில செத்துபோனா. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கட ஒவ்வொரு வகுப்பிலயும் இந்தச் சம்பவம் ஏதோ ஒரு பாதிப்பை இழப்பக் குடுத்திருக்கிறது. ஓண்டில் வகுப்பில் படிச்ச பிள்ளை செத்திருக்கிறது. இல்லாட்டி செத்த பிள்ளையின்ர உறவினரைப் பறித்திருந்த பிள்ளையோ படிக்கினம். இதால எல்லா வகுப்புமே எல்லாப் பிள்ளைகளுமே நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கினம். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலயிருந்து எங்கட பிள்ளைகளை மீட்டு அவையளைத் திரும்பவும் கல்வி கற்கிற மனநிலைக்குக் கொண்டுவாறதெண்டது ஒரு மிகப்பெரிய சவால் என்று தனது பாடசாலைச் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தாக்கத்தின் தீவிரத்தை விளக்கினார் திரு.க.இராஜேந்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிளைமோர் வெடிப்பு ஒரேயொரு கிளைமோர் வெடிப்பு ஏற்படுத்திய தாக்கமே இது இப்படி ஒன்றல்ல பல கிளைமோர்கள் மக்களை அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி வெடிக்கும் பகுதியாக வன்னி மாறிவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்து வெகுசில நாட்களிலேயே மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் வெடித்த மற்றொரு கிளைமோர் மேலும் 06 பொதுமக்களைப் பலியெடுத்து இவர்கள் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புதுர்ர் நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பக்தர்களாவர். இங்கேயும் இழப்பு குடும்பம் குடும்பமாக பலியெடுத்தும் காயமடைய வைத்ததுமான நெஞ்சையுலுக்கும் பதிவாகவே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;10 வயதான மு.ஜனனி வைத்தியசாலைக் கட்டிலிற் கட்டுபோட்ட காயங்களுடன் பேதலித்துப் போய் இருக்கிறாள் அவளது தந்தை கணபதிப்பிள்ளை முருகதாசும் நான்குவயது தம்பி தனுசனும் வைத்தியசாலைப் பிரேத அறையிலே கிடக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;ஜனனிக்கு அருகே வ.சித்திரா தனது ஒன்றரை வயது மகள் சுஜித்தனைக் கைகளிலே தாங்கியபடி இந்தப்பிரமை பிடித்தாற்போல் இருக்கிறார். இவரது கணவர் ஐ.வசந்தகுமார் கூடப் பயணித்த முருகதாசுடனும் தனுசனுடம் வளர்த்தப்பட்டிருக்கின்றார். ஒற்றை வெடிப்பிலே தந்தையாரை இழந்துவிட்ட இரண்டு குழந்தைகளும் கணவனை இழந்துவிட்ட ஒரு இளந்தாயும் தாங்களும் காயங்களுடன் உறைந்து போய் இருக்க நேர்ந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான உயிருறையும் நிகழ்வுகளை அடிக்கடி காணும் துயரம் கிளிநொச்சி மல்லாவி முழங்காவில் மருத்துவமனைகளின் வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் நேர்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை பற்றிய வெளியுலகக் கவனம் எந்தளவுக்கு இருக்கிறது குறைந்த பட்சம் கொழும்பின் ஊடகங்களிற்காவது இவை தெரியுமா இந்த அவலங்கள் எந்தளவுக்கு அவற்றாற் கவனத்துக்கெடுக்கப்படுகின்றதா? &lt;br /&gt;&lt;br /&gt;இநதக் கேள்விக்கான பதிலாக உதட்டை பிதுக்கித்தான் முடியுமேயன்றி வார்த்தைகளால் பதிலளிப்பது விரயமாகும் ஏனென்றால் உட்பக்கங்களில் வரும் ஒரு சிறிய செய்தியாக இவற்றை இருட்டடிப்புச் செய்துவிடுகின்றன. கொழும்பில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் சில இவற்றை புலிகளின் தாக்குதல் எனவும் கூறிவிடுகின்றன. இந்தப் போக்கு பல இணையத்தளங்களையும் பற்றிக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பின் படைத்தரப்போ பிலாத்துவதாகக் கைகழுவிடும் வார்த்தைகள் சிலவற்றை நிரந்தரமாக வைத்திருக்கிறது அது புலிகளின் பகுதி அங்கு நடக்கும் தாக்குதல்களுக்குப் புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் எங்களுடைய ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளையன்றி வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை என்பன இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் வாக்குமூலங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டுத் தரப்புகளுக்கோவெனில் இவை கண்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட வன்னியிற் செயற்படும் நிறுவனங்கள் உட்பட தமது பக்கஞ்சாரா நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றிக் கொண்டு அரசியலிற் தலையிடாமற் பேசாமல் மறுபக்கம் திரும்பிக் கொள்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது வன்னியின் நிலமை &lt;br /&gt;&lt;br /&gt;எந்தத் தாக்கத்திற்கும் சமறும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்பது நியூட்டனின் விதி. கடந்த பல மாதங்களாகத் தென்னிலங்கையிலும் இந்த விதி செயற்படுவது போலத் தெரிகிறது. அதாவது பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் இழப்புக்களுக்காகக் கண்ணீர் வடித்த கதையும் இழப்புக்களின் ரணமும் தென்னிலங்கையாலும் இரத்தமும் சதையுமாக உணரப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தென்னிலங்கையில் ஏற்படும் இழப்புக்களும் இழப்புகளின் வலியும் மனித நேயத்தின் கண்ணோட்டத்திலான சித்தரிப்புக்களாக ஊடகங்களில் பெருக்கெடுக்கின்றன. செய்திகள் படங்கள் செய்திக் கட்டுரைகள் பிச்சர்கள் லெட்டர்கள் என ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுப் பல வாரங்களுக்குப் பின்னும் இந்தச் சித்தரிப்புகள் தொடருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தோரத்தான் வேண்டும் இழப்புக்களின் வலி எவ்வளவுதான் சித்தரித்தாலும் அற்றுபோய்விடுமா என்ன ஆனால் இந்த வலி என்பது அனைவரும் பொதுவான ஒன்று என்பது உணரப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;துரதிஸ்டவசமாக அந்த உணரப்படுதல் என்பதும் அதனது வெளிப்படுத்தல் என்பதுதான் தமிழர்களைப்பொறுத்த வரையிற் கானல் நீராகவே இன்னும் இருக்கின்றது உண்மையான துயரம் அதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கணபதிப்பிள்ளை முருதாஸ் கொல்லப்படும்போது ஒருவித தாக்கமும் முதியாள்சாவே பொடி அப்புகாமி பலியாகும்போது விளைவும் ஏற்படுவதில்லையே. &lt;br /&gt;ஆனால் கொழும்பு ஆட்சிப்பீடம் அவ்வாறுதான் பார்க்கிறது கணபதிப்பிள்ளை முருகதாஸ் சென்ற கார் கிளைமோர் தாக்குதலுக்கு ஆட்படும்போது அது புலிகளின் பகுதியில் வெடித்தது எனவும் தமது படைபினர் புலிகளைத் தவிர வேறு இலக்குகளைத் தாக்குவதில்லை எனவும் கூறும் அதே அரசாங்க வட்டாரங்கள்தான கொழும்புக் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கைகளிற் குண்டு வைத்தவர்கள் யாரென்பது குறிப்பிடவில்லையெனத் தூற்றுகின்றன &lt;br /&gt;&lt;br /&gt;அரசின் இந்தப் போக்குத்தான் இப்போது எல்லாளன் படையின் எச்சரிக்கையாக வந்து முடிந்திருக்கிறது வன்னியில் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்படுமாயின் உடனடி பதிலடி தென்னிலங்கiயில் நடத்தப்படும் என்கிறது அந்த எச்சரிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து மனிதாபிமானங்களும் கொழும்பின் விசுவாசிகளும் கொதித்துப் போயிருக்கின்றார்கள். பொதுமக்களைத் தாக்குவோம் எனப் பகிரங்கமாகக் கூறுவது கீழ்த்தரமான போக்கின் வெளிப்பாடு என அவர்களின் மனக்கொதிப்பும் மனிதநேயமும் ஜனநாயக விழுமியங்களும் வர்ணிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாரதிபுரத்திலும் முள்ளிவாய்க்காலிலும் இது போலப் பலப்பல வன்னியில் ஊர்களிலும் ஆறாக ஓடும் தமிழ் மக்களின் கண்ணீர் அவர்களின் இந்த மனிதநேய நோக்குக்கு உட்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பாரதிபுரத்திலும் பிலியந்தலையிலும் ஓடுவது ஓரே கண்ணீரே. இரண்டிலும் வேறுபாடுகள் நிச்சயம் கிடையா ஆனால் ஒன்று நிற்கும்போது அடுத்ததும் நிற்கமுடியும் &lt;br /&gt;&lt;br /&gt;குரூரமானதேயெனினும் இதுதான் யதார்த்தமாகிவிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.வில்லவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-1789758761532172959?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/1789758761532172959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=1789758761532172959&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1789758761532172959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1789758761532172959'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/07/blog-post.html' title='குண்டு வெடிப்புக்களும் குரூர யதார்த்தங்களும் !'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-2669141521658328782</id><published>2008-06-08T23:50:00.002-04:00</published><updated>2008-06-08T23:52:34.826-04:00</updated><title type='text'>வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு</title><content type='html'>தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்குச் சென்ற தமது உறவுகள் மீனோடு திரும்புவரென எதிர்பார்த்து குடும்பங்கள் பசியோடு காத்திருக்க மீன்பிடிக்கச் சென்றவர்கள் இலங்கை கடற்படை சுறாக்களால் குதறப்பட்டு பிணமாகக் கரை ஒதுங்கும் சம்பவங்கள் இன்று தமிழக கடற்கரையோர கிராமங்களில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களின் இந்த அவலநிலை கண்டு அவர்கள் குடும்பங்களின் பரிதாப நிலை பார்த்து தமிழக அரசியல்வாதிகளைத் தவிர தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் துடித்துப் போய் கொதித்துப் போய் நிற்கின்றார்கள். ஆனால், அரசியலுக்காக பிணத்தையும் மணமுடிக்கும் கீழ்ப்புத்தி கொண்ட அரசியல்வாதிகள் மட்டும் இதனைப்பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மைய சில நாட்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றது. அதுதவிர பல தமிழக மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் நீதிமன்றங்களில் கூட ஆஜர்படுத்தப்படாமல் இலங்கை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களின் இந்த அவலநிலைக்கு தமிழக ஊடகங்களே முக்கிய பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகளை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் சிறுவிடயங்களைக் கூட ஊதிப் பெருப்பித்து செய்திகளை வெளியிடுவதன் பலாபலனையே தமிழக மீனவர்கள் அனுபவிக்கின்றனர். பரபரப்புக்காகவும் பணத்துக்காகவும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு இனத்திற்கே சாவுமணி அடிப்பதை தமிழக ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதக் கடத்தல், இரசாயனப் பொருட்கள் கடத்தல், பற்றறிகள் கடத்தல், எரிபொருள் கடத்தல், தமிழக கடற்பரப்பில் நுழைந்த விடுதலைப்புலிகள் கைது, தமிழகத்திற்குள் கடல்வழியாக புலிகள் ஊடுருவல், தமிழக மீனவர்கள் புலிகளுக்கு பொருட்கள் கடத்துகின்றனர் என்று எவ்வித ஆதாரமுமற்ற செய்திகளை தமிழக ஊடகங்களில் தினமும் அவதானிக்க முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான செய்திகள், தகவல்களாலேயே தமிழக மீனவர்களை தமது பரமவிரோதிகளாக இலங்கை கடற்படையினர் கருதுகின்றனர். தமிழக மீனவர்களை கடற்பரப்புகளில் வைத்து சுட்டுக் கொல்வதன் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களை, அவர்களின் ஊடுருவல்களைத் தடுத்து நிறுத்தி விட முடியுமென இலங்கை கடற் படையினர் கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போது தான் வளர்ந்துவரும் ஒரு போராட்டக்குழுவல்ல. அவர்கள் 30 வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். விமானப்படை, கடற்படையை வைத்துள்ளவர்கள். இலங்கைக் கடற்படையின் யுத்தப் படகுகளுக்கும் அதிவேக படகுகளுக்கும் ஒப்பான கடற்கலங்களை வைத்துள்ளவர்கள். கப்பல்களில் ஆயுதங்களை தருவிப்பவர்கள் . &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறானவர்கள் சிறிய மீன்பிடிப்படகுகளில் ஆயுதங்களை கடத்துகிறார்கள். அவர்களுக்கு தமிழக மீனவர்கள் உதவுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் தமிழக செய்தியாளர்களால் மட்டுமே எழுதக்கூடிய விடயம். 25 லீற்றர் டீசல் ஒருபடகில் கொண்டு செல்லப்பட்டால் கூட அது விடுதலைப்புலிகளுக்கு கடத்தப்பட்டதாக இந்த தமிழக ஊடகங்கள் கண்டுபிடித்துவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடகங்களின் ஆதாரமற்ற செய்திகளால் தாம் பல சிக்கல்களை எதிர்கொள்வதுடன், சில சம்பவங்கள், வழக்குகளின் போக்கையே தமிழக ஊடகங்கள் மாற்றி விடுவதாக சில உயர் பொலிஸ் அதிகாரிகளே விசனப்பட்ட சம்பவங்கள் பலவுண்டு. புலிகளுக்கெதிராக செயற்படுவதாக நினைத்துக் கொண்டு தமது உறவுகளுக்கே இந்த தமிழக ஊடகங்கள் கொள்ளி வைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் கூட கச்சதீவுக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவரான தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியா என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தாம் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த இலங்கை கடற்படை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பிவந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மீனவரின் படுகொலையையடுத்து இராமேஸ்வரத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவக் கிராமங்களில் கொந்தளிப்பான நிலையும் ஏற்பட்டது. மீனவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மருத்துவமனை முன்பாக திரண்ட மீனவர்கள் இலங்கை கடற் படைக்கெதிராகவும் தமிழக அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழக அரசோ மத்திய அரசோ எந்தவிதமன நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.தி.மு.க.பொதுச் செயலர் வைகோவும் அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதாவும் மட்டுமே இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். வைகோ வழக்கம் போலவே பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த மீனவர் படுகொலை தொடர்பில் சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவர் ஹம்சா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவரொருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி எமது கவனத்தை ஈர்த்துள்ளது.இது தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற்படையினரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கும் இலங்கை கடற்படைக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் பலமுறை நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த போது இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு தங்களுக்கு உதவி செய்துள்ளதாக தமிழக மீனவர்களே பலமுறை நன்றியுடன் கூறியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் சில தீய சக்திகள் சுயநலத்துக்காக தமிழக மீனவர்களிடையே இலங்கை கடற்படைக்குள்ள நற்பெயரைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் இலங்கை கடற்படை, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களையும் மனிதாபிமானத்தோடு கையாளும் தனது கொள்கையை தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடித்து வருகிறது, என்று தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கை துணைத்தூதுவர் ஹம்சாவின் அறிக்கை கடைந்தெடுக்கப்பட்ட பொய் என மீனவர்கள் கூறுகின்றனர். ஹம்சா இலங்கைக்கான துணைத் தூதுவரல்ல.அவர் ஒரு உளவாளி. தமிழக மீனவர்களுக்கு புலிச்சாயம் பூசி அவர்கள் கொல்லப் படுவதற்கு முக்கிய காரணமானவர் இந்த ஹம்சா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதில் பல சூழ்ச்சிகளை இங்கு செய்து கொண்டிருப்பவர் இந்த ஹம்சா. &lt;br /&gt;&lt;br /&gt;எம்முடன் வந்த மீனவர் சந்தியா இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் எமது கண்களால் பார்த்தோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இலங்கை கடற்படையே காரணம். வேறு எவரும் எம்மை சுடுவதில்லை. இலங்கை கடற்படை இப்படுகொலைகளை செய்வதை பல முறை எமது மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதலில் இந்த இலங்கைத் துணைத்தூதரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அந்த மீனவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களையும் கைது செய்யப்படும் மீனவர்களையும் இலங்கை கடற்படை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை துணைத் தூதுவர் சொன்ன கருத்து மிகப்பெரும் நகைச்சுவையென்கிறார் பல நாட்களாக இலங்கை கடற்படையால் தடுத்துவைக்கப்பட்டு மிகக்கொடூரமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மீனவரான அருளானந்தம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அருளானந்தம் கூறுகையில்; &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளிலும் கடற்படைத் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டு கொடூர சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே 9 ஆம் திகதி இலங்கை கடற்படை எம்மை பிடித்துச் சென்றது. எம்மில் 19 பேர் இருந்தோம். அங்கு சிறையிலடைத்தனர். கண்களைக் கட்டி உணவு வழங்காமல் சித்திரவதை செய்தனர். 6 நாட்களாக சாப்பாடு தரவில்லை. இதனால் மயக்கமடைந்தோம். பிளாஸ்டிக் பையில் பெற்றோலை ஊற்றி எமது முகத்தை அதனால் மூடி சித்திரவதை செய்தனர். துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டினர். &lt;br /&gt;&lt;br /&gt;கடுமையாகத் தாக்கினர். போனவர்கள், வந்தவர்கள் எல்லாம் எம்மை மோசமாகத் தாக்கினர். நாம் புலிகளுக்கு ஆயுதம் கடத்துபவர்களெனக் கூறியே எம்மைத் தாக்கினர். புலிகளுக்கு ஆயுதம் கடத்தும் படகுகளை காட்டிக்கொடுத்தால் எம்மை விட்டு விடுவதாகக் கூறினர். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் இந்தியக் கடற்படை எம்மைத் தேடுவதாக அறிந்து மன்னார் நீதிமன்றில் எம்மை மே மாதம் 15 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். பின்னர் 26 ஆம் திகதியே நீதிமன்றம் எம்மை விடுதலை செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எம்மைப் போல் பல மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். எனவே, அவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துவதாக இலங்கை அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றது என்று தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அவர்களை இந்திய கடற்படை சுடுவதில்லை. அவர்களை கைது செய்து மிகவும் கௌரவமாக நடத்தி ஒரு சில தினங்களுக்குள் நீதிமன்றில் கூட ஆஜராக்காமல் விடுதலை செய்துவருகின்றது. ஆனால், இலங்கை கடற்படை தமிழக மீனவரை சுட்டுக் கொல்கிறது. கைது செய்து சிறைகளில் அடைக்கிறது. கொடுமைப்படுத்துகிறது. இதனைப்பார்த்தால் இந்தியா வல்லரசா? இலங்கை வல்லரசா என்ற சந்தேகம் தமக்கு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொல்வதும் அதனை தமிழக, மத்திய அரசுகள் வேடிக்கை பார்ப்பதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் வரை தொடரத்தான் போகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக மக்கள் எதனையாவது செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து அவர்களால் காப்பாற்ற முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;கலைஞன்/thinakkural&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-2669141521658328782?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/2669141521658328782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=2669141521658328782&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2669141521658328782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2669141521658328782'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/06/blog-post.html' title='வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-1132061039077952800</id><published>2008-05-03T14:31:00.001-04:00</published><updated>2008-12-11T13:35:20.206-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஆனையிறவுக்கான விலை!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/SByxdIVrBTI/AAAAAAAAABA/iOEa-oPxqf0/s1600-h/eelam_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/SByxdIVrBTI/AAAAAAAAABA/iOEa-oPxqf0/s320/eelam_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5196223184091415858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;டந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முப்படையினரும் இணைந்த ஒரு நடவடிக்கையாக அது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் கொழும்பில் இருக்கும் படைத்துறை வட்டாரங்களில் நிலவுவதாகத் தெரிகிறது. கிழக்குத் தேர்தல் முடிந்த கையோடு அங்கிருந்தும் சில அணிகளைத் தருவிக்கும் வாய்ப்புக்களையும் சிலர் கோடி காட்டுகின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உத்தரவுகளும் விருப்பங்களும் எப்படி அமைந்தாலும் கள யதார்த்தத்திற்கு அமைவாக திட்டமொன்றைத் தீட்டுவதில் சிங்களப் படைத் தளபதிகள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளப் போவது உறுதி. &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, கிளாலி-முகமாலை-கண்டல்-நாகர்கோவில் என்று கிட்டத்தட்ட 12 கி.மீ. நீளமான அந்த முன்னரங்கு, பட்டாலியுன் கணக்கில் சிறிலங்காப் படையினரைத் தின்று தீர்த்திருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு வெளியே நின்று திட்டமெதையும் தீட்டிவிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை எந்தவொரு தனியிலக்கிற்குமான சமர்களிலும் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட, ஆனையிறவிற்காக அதன் உள்ளும் புறமும் நிகழ்ந்த மோதல்களே சிறிலங்காப் படைத்தரப்பிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற இயல்பும் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் இருதரப்பினருக்கும் உள்ளவை என்றே கொள்ளல் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகாயக் கடல் வெளிச் சமரில் விடுதலைப் புலிகள் குறித்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் சிங்களப் படைகளைக் கொன்றிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் ஓயாத அலைகள் நடவடிக்கைத் தொடரில் 2,000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிய போது சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிச் நாம் சொல்லவேண்டியதல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஓற்றைச் சமரில் ஒரு டிவிசனையே இழுத்து மூடியது சிறிலங்கா தரைப்படை என்ற தகவல் மட்டுமே அச்சமரில் சிறிலங்கா தரப்பினர் அடைந்த இழப்பின் ஏனைய பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் போதுமானது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த 'அக்கினிச் சுவாலை" நடவடிக்கையின் இழப்புக்கள் உலகப் பிரசித்தம் பெற்றன என்றால் மிகையில்லை. இறந்த தொகையைவிட இரு மடங்கானோர் களத்திற்குத் திரும்ப முடியாயாதபடி காயப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;அச்சமரில் சிறிலங்காப் படையினர் வாங்கிய அடியின் வேகம் சில காலத்திற்கு பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை எதையும் நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தில் பல மாதங்கள் கழிந்த நிலையிலேயே அந்த டிவிசன்கள் மீண்டும் முழுமையாக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நாலாம் கட்ட ஈழப்போரில் 2006 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நிகழ்ந்த மோதல்களிலும் நூற்றுக்கணக்கில் படையினர் கொல்லப்பட்டார்கள். ஒக்ரோபர் மாதச் சண்டையில் பலத்த இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அந்த முன்னரங்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பெருமெடுப்பிலான படையெடுப்புக்களை ஒத்திப்போட்டிருந்தது சிறிலங்காப் படைத்தரப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் அங்கே படையெடுத்து கையைச்சுட்டுக்கொண்டு நிற்கிறது சிங்களப்படை. இருநூறு சிப்பாய்கள் வரை உயிரிழந்தார்கள், கிட்டத்தட்ட அதே அளவானோர் களத்திற்குத் திரும்ப முடியாதபடி காயப்பட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஆனையிறவிற்காக மீண்டும் விலை கொடுப்பதற்குச் சிங்களம் கங்கணங் கட்டி நிற்பதன் மூலகாரணங்களை அலாதியானவை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படைச் செயற்பாடுகளின் அவசரமும் அதில் ஏற்பட்ட இழப்புக்களை ஒழித்து மறைக்க முயன்ற விதமும் படைய நோக்கங்களை விட அரசியல் உள்நோங்கங்களையே கோடிகாட்டுகின்ற என்று கொழும்பு ஊடகங்களில் பத்திற்கு ஒன்பது விழுக்காடானவை கருத்து வெளியிட்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அதை உண்மையாக்குவது போலவே வடபோரரங்கில் மீண்டும் மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆயினும் ஆனையிறவின் மீது போர் தொடுப்பதற்கான படைய நோக்கங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் படைய வரலாற்றில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவமாக ஆனையிறவு இழக்கப்பட்டதையே சொல்லவேண்டும். ஆனையிறவு இழக்கப்பட்டதால் குடாநாட்டின் முக்கிய கேந்திர நிலையமான பலாலி வான்தளம் புலிகளின் கணை வீச்செல்லைக்குள் வந்துவிட்டது மட்டுமல்லாது, குடாநாட்டின் மீது புலிகள் படையெடுப்பைச் செய்ய வசதியான பல கரையோர நிலைகளும் புலிகளின் வசம் வந்துவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனையிறவு புலிகளின் கைகளிலே வீழ்வதற்கு முன்பாக அங்கு வருகை புரிந்த பன்னாட்டுப் போர் விற்பன்னர்கள், அந்தத் தளத்தை வீழ்த்துவது புலிகளுக்குச் சாத்தியமில்லை என்று கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சத்தியம் செய்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மதிப்பீட்டு அறிக்கை வழங்கி ஒரு வருட காலத்திற்கு உள்ளேயே, வரலாறு அவர்களைப் பொய்யர் ஆக்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தளத்தை வீழ்த்துவதற்காகப் புலிகள் பயன்படுத்திய படைவலு, படைக்கலச் சக்தி மற்றும் உத்திகள் என்பவை பற்றிய முழுமையான ஆய்வொன்றை சிறிலங்கா படைத்தரப்போ அல்லது எந்தவொரு பன்னாட்டு விற்பன்னரோ இதுவரை செய்து முடித்ததாகத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நடைபெறுவதைப்போல தமக்குள்ளே ஆள் ஆளுக்குக் கரிபூசுதல் மற்றும் அதிகாரிகளுக்குக் காற்றை இறக்கி விடுதல் போன்ற செயற்பாடுளிலேயே சிறிலங்கா படைத்தரப்பு அப்போதும் இறங்கியது. பன்னாட்டு விண்ணர்கள் வாய்களை இறுக மூடிக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான பின்னணியில்தான், அக்கினிச் சுவாலை, 2006 ஒக்ரோபர் மாத நடவடிக்கை மற்றும் 2008 ஏப்ரல் மாத நடவடிக்கை என்பவற்றைச் செய்துவிட்டு நெட்டுயிர்த்து நிற்கிறது சிறிலங்கா படைத்தரப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;செறிவான காலாட்படை நகர்த்தல், பல கிலோ மீற்றர்கள் அகலமான முனையை ஏக காலத்தில் திறத்தல், வரலாற்றுச் சாதனை படைக்கும் அளவிற்குச் செறிவான கணைவீச்சு, கவசப் படைகளின் செயற்பாடு, இப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட மக்-இன்பன்றியின் பங்கேற்பு, இரவு நகர்வுகள், வான்படை ஆதரவு என்று ஈரூடக முயற்சி போன்ற ஓரிரு உத்திகளைத் தவிர இன்னோரன்ன எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டது சிறிலங்காப் படைத் தரப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட, நாலாம் கட்ட ஈழப்போரில் சிறிலங்கா தரப்பு பெரிதும் நம்பியிருக்கும் படைக்கலச் சக்திப் பயன்பாட்டில் அடியொற்றிய மூலோபாயத்தில் ஆண்டுக்கணக்கில் தொங்கி நிற்பதற்கான ஆயத்தங்களையும் கொள்வனவுகளையுமே படைத்தரப்பினர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமது தரப்புப் படைக்கலச் சக்தி மேம்பாட்டிற்குத் தாரளமாக உதவக்கூடிய கூட்டாளி நாடுகளையே மகிந்தர் தேடித்தேடிப் பிடிப்பதாக தாயகப் படைத்துறை அவதானி ஒருவர் தெரிவித்தார். ஆயினும், முக்கிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடையே கொழும்பு நிருவாகம் அமைத்து வரும் கூட்டணிகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும், அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை, வாழ்வு அனுபவம், வரலாறு என்பவற்றில் இருந்து தனது உத்திகளையும் மூலோபாயங்களையும் வகுத்துக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்களின் வியூகங்களின் சிறப்பு, ஆனையிறவைக் கைப்பற்றுதல் மற்றும் அதற்கான பாதுகாப்பு வியூகங்களை வனைதல் என்பவற்றில் மிளிர்வதை இலங்கைத் தீவின் படைய நிகழ்வுகளை ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நுட்பங்களுக்கு முன் வெறும் படைக்கலச் சக்தி எடுபடாது என்பதை ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மீளவும் நிரூபித்திருக்கிறது என்ற கருத்தையே அவர்களும் கொண்டுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மீண்டும் முகமாலை வட போரரங்கில் ஏற்படக்கூடிய மோதல்கள் இத்தீவின் படைய வரலாற்றில் புதிய சில பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;-- சேனாதி- வெள்ளிநாதம் (02.05.08) --&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-1132061039077952800?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/1132061039077952800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=1132061039077952800&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1132061039077952800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1132061039077952800'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/05/blog-post.html' title='ஆனையிறவுக்கான விலை!!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/SByxdIVrBTI/AAAAAAAAABA/iOEa-oPxqf0/s72-c/eelam_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7604580733470041569</id><published>2008-01-13T14:36:00.000-05:00</published><updated>2008-01-13T14:42:12.220-05:00</updated><title type='text'>புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ்</title><content type='html'>-கலைஞன்- /thinakkural&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப் பார்த்தால் அவற்றில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் புலிகளின் எண்ணிக்கையும் இலங்கையில் தமது தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறும் புலிகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே காணப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20 க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உண்மையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூட அவர்களை விடுதலைப் புலிகளாக காட்டவே பொலிஸ்துறையும் சில ஊடகங்களும் தீவிரமாக முயற்சிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பீடி பண்டல் கடத்துவோர், 1015 லீற்றர் டீசல் கடத்துவோர், ஒன்றிரண்டு பற்றரிகள் கடத்துவோர், கடன் அட்டை மோசடிக்காரர்கள், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றக்காரர்கள் இவர்களை கைது செய்துவிட்டுத்தான் பாரிய கடத்தல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிக்கை விடுக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களும் உடனடியாக அச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதுடன் கிழடு தட்டியவர்களினதும் விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளுமற்றவர்களினதும் புகைப்படங்களை பிரசுரித்து இவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களெனக் கொட்டை எழுத்துகளில் போட்டு தம்மை திருப்திப்படுத்திக் கொள்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மங்களூரில் வைத்து இரு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி கடவுச்சீட்டுகள், ஒன்றரை லட்சம் ரூபா பணம், சில நகைகள் மீட்கப்பட்டன. எவ்வித விசாரணைகளும் இடம்பெறாத நிலையில் உடனடியாகவே இவர்களை விடுதலைப் புலிகளென பொலிஸ் அறிவித்தது. அதனை அப்படியே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், இவர்கள் போலி கடனட்டைகளை பயன்படுத்தி நகைக் கடைகளில் நகைகளை கொள்வனவு செய்வதாகவும் பின்னர் அந்த நகைகளை வேறு நகைக் கடைகளில் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிவருவதாகவும் ஊடகங்கள் தமது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு கதையளந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;மங்களூரில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான செய்திகள் இலங்கையிலுள்ள அரசு ஊடகங்களிலும் இராணுவ இணையத் தளங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாது தமிழக ஊடகங்கள் புலிகள் தொடர்பாக வெளியிடும் தவறான செய்திகளையெல்லாம் இலங்கை அரசு, இராணுவ ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மங்களூரில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமும் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணைகளின் போது இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமாக தொடர்புமில்லை என்பது தெரியவந்தது. இதனை மங்களூர் பொலிஸ் ஆணையாளரே தம்மால் கைது செய்யப்பட்ட இரு இலங்கையருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என பகிரங்கமாக அறிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பீடி பண்டல் கடத்தல்காரர்களைக் கூட விடுதலைப் புலிகளாக்கும் ஊடகங்கள் சில, நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான மறுப்புகளை வெளியிடும்போது அதனை திட்டமிட்ட முறையில் இருட்டடிப்பு செய்கின்றன. புலிகள் மீது பழியைப்போடும் வேலையை மட்டுமே இந்த ஊடகங்கள் செய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஊடகங்களின் இவ்வாறான திட்டமிட்ட விஷமப் பிரசாரங்களால் இலங்கைத் தமிழர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய சூழல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பாதுகாப்புக்கும் சட்டம் ஒழுங்குக்கும் இலங்கைத் தமிழர்கள் அச்சுறுத்தலானவர்கள் என்ற எண்ணமொன்றை ஏற்படுத்துவதே இவ்வாறான ஊடகங்களின் தலையாய கடமையாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் இலங்கைத் தமிழர்கள் தமிழகம் சென்றால் அவர்கள் விரும்பிய இடத்தில் தங்கமுடியும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகளை வாடகைகளுக்கு கொடுப்பதற்கு போட்டிநிலை ஏற்படும். எங்கும் சென்றுவரமுடியும். எவ்வேளையிலும் நடமாட முடியும். மிக இலகுவாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்று ஊடகங்களின் விஷமத் தனமான பிரசாரங்களினால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. தற்போது இலங்கைத் தமிழர்கள் வீடொன்றை வாடகைக்கெடுப்பது கூட முயற்கொம்பாகி விட்டது. ஓரிடத்தில் சிறிது நேரம் நின்றாலே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் கேவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலுள்ள லொட்ஜ்களில் கூட இலங்கைத் தமிழர் தங்குவது ஆபத்தாக மாறி வருகிறது. புலிச் சந்தேக நபர்களை தேடுகிறோமென்ற போர்வையில் தமது இலஞ்ச லாவண்யங்களுக்காக லொட்ஜ்களில் தேடுதல்களை நடத்தும் பொலிஸார் தமது தலைமை அதிகாரிக்கு கணக்கு காட்டுவதற்காக அங்கு தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை புலிச் சந்தேக நபரென்ற பேரில் கைது செய்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட தற்போது விசா மூலம் இந்தியா வந்து விசாக்காலம் முடிந்த பின்னரும் இங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாகத் திரட்டுமாறு பொலிஸ் ஆணையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இங்கு விசாக்காலம் முடிந்த பின்னரும் தங்கியிருப்போரின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசாவில் வந்து அது முடிவடைந்த பின்னரும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் இலங்கை யுத்தத்தில் தமது வாழ்விடங்களை இழந்துள்ளனர். இலங்கைப் படைகளால் தேடப்படுவோர், உயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளானோர் மற்றும் வசதி படைத்தவர்களே இவ்வாறு விசாவில் வந்து அது முடிந்த பின்னரும் இங்கே தங்கியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இவர்களின் விபரங்களை பொலிஸார் திரட்டி வருவதால் தமது எதிர்காலம் குறித்த அச்சத்தில் பலர் காணப்படுகின்றனர். கைது செய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்களோ என்ற ரீதியில் பல இலங்கைத் தமிழர்கள் வீதியில் இறங்கக்கூட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக தமிழகத்தில் பரவிவரும் வதந்திகள் பொலிஸாருக்கு தலையிடியைக் கொடுப்பதுடன் அவர்களை இரவு பகலாக அலையவும் வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகம் வந்துவிட்டதாக பரவிய வதந்தி பொலிஸாரை வெறுப்படைய வைத்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் மனைவி தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரையொன்றில் அதிவேகபடகு மூலம் அகதிகளுடன் அகதியாக வந்திறங்கியுள்ளதாக பரவிய செய்தியினால் உஷாரடைந்த பொலிஸார் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடாத்தியதுடன் அகதிமுகாம்களையும் விட்டு வைக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வீடு வீடாக தேடுதல்களை நடத்தியதுடன் வீதிகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் துருவித்துருவி சோதனையிட்டனர். அன்று காலை தொடங்கிய தேடுதல்கள் இரவு வரை நீடித்தது. இதில் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;காலை முதல் இரவுவரை தேடுதல்களை நடத்தி சோர்வடைந்த பொலிஸார் பின்னர் நடாத்திய விசாரணைகளிலேயே அச்செய்தி வதந்தி என்பது தெரியவந்தது. இதனால் பல பொலிஸ் உயரதிகாரிகள் கடுப்படைந்து காணப்பட்டனர். இவ்வாறான செய்திகளை இனிமேல் நம்ப வேண்டாமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இராணுவத்துடனான போரில் காயமடையும் புலிகள் சிகிச்சைக்கு தமிழகம் வருவார்கள். காயமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வரவுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்துக்கு வந்துவிட்டார். தமிழக டாக்டர்களை புலிகள் வன்னிக்கு கடத்திச் செல்லவுள்ளனர். சகல டாக்டர்களும வன்னி சென்றுவந்துள்ளனர். புலிகள் தமிழகத்துக்கு தப்பி வந்து கொண்டிருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தமிழகத்தையும் பொலிஸாரையும் அலைக்கழிக்க வைக்கும் ஊகங்களும் வதந்திகளும் கட்டுக்கதைகளுமாகும். ஆனால், இவற்றின் உண்மைக் தன்மை என்னவென்பது குறித்து கொஞ்சம் கூட சிந்திக்காது தேடுதல்வேட்டைகளையும் சோதனைகளையும் நடத்தும் தமிழக பொலிஸாரின் நிலைதான் பரிதாபமாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புலனாய்வுத்துறையிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் மிகவும் பெயர் பெற்றவர்கள் தமிழக பொலிஸார். இந்தியாவிலேயே தமிழக பொலிஸாருக்கும் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் தனிமரியாதையுண்டு. ஆனால் இவர்களின் புலிகள் தொடர்பான அண்மைக்கால செயற்பாடுகள் இதனைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7604580733470041569?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7604580733470041569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7604580733470041569&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7604580733470041569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7604580733470041569'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2008/01/blog-post.html' title='புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-3305312946075674609</id><published>2007-12-19T14:09:00.000-05:00</published><updated>2007-12-19T14:11:03.604-05:00</updated><title type='text'>திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை</title><content type='html'>திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வந்த முஸ்லிம்களை தமது பிறந்த இடங்களிலிருந்துவெளியேற்ற திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; &lt;br /&gt;&lt;br /&gt;கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்ட மடு, செம்பி மோட்டை,வழைமடு, பனிச்சங்குளம், கள்ளரப்பு, குரங்குப் பாஞ்சான், போன்ற கிராமங்களில் முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், விவசாய காணிகளிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உட்பட அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டிலும், 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களுக்கமையவே இக்காணிகளில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் தமது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி வேறுபகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 17,18 வருடங்களுக்குப் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பி விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்துக்குரியதெனக் கூறி அதிகாரிகளும், வான் எல பொலிஸாரும் அக்குடியிருப்புக்களில் மக்களை அச்சுறுத்தி உடன் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு மாகாணத்தை அரசு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனக் கூறும் அரசாங்கம் மறுபுறத்தில் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுக்கொடுக்கத் தவறினால் இப்பகுதி முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் அந்த மக்களை இன்னுமொரு தடவை அகதிகளாக்க வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;thinakkural&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-3305312946075674609?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/3305312946075674609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=3305312946075674609&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3305312946075674609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3305312946075674609'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/12/blog-post_19.html' title='திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-1510670978880749671</id><published>2007-12-09T11:33:00.000-05:00</published><updated>2007-12-09T11:36:00.908-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல்</title><content type='html'>இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 38 பேர் கைதுசெய்யப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழகமும் தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் மலேசியாவை விட அருகிலுள்ள இலங்கையில் இந்தியவம்சாவளித் தமிழரும் தமது இரத்த உறவுகளும் ஆயிரக்கணக்கில் ஆண் பெண் பேதமின்றி வயதுவித்தியாசமின்றி கைது செய்யப்பட்டபோது அமைதிகாத்ததற்கும் வலுவான அரசியல் பின்னணி உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் தற்போது இரு கொள்கைகளையுடைய அரசியல் கட்சிகள் உண்டு. ஒருதரப்பு ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவு தெரிவித்து அரசியல் நடத்துவார்கள். இன்னொரு தரப்பு விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைக்கூறி அரசியல் பிழைப்பு நடத்துவார்கள். இது ஒரு கொள்கையுடைய இரு அணிகள். &lt;br /&gt;&lt;br /&gt;மத உணர்வையும் மதத்தையும் பயன்படுத்தி அரசியல் நடத்துவது இன்னொரு கொள்கை. ஒரு தரப்பு மத உணர்வுகளை புண்படுத்தி மதவாதிகளை தாக்கிப் பேசி மதவாதக் கொள்கைகளை உடைத்தெறிந்து நாஸ்திக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு தரப்பு மதஉணர்வுகளையே மூலதனமாகக் கொண்டு மதவாத அரசியலை முன்னெடுக்கும் ஆஸ்திக அரசியலை நடத்தி வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலையில் இன்று தமிழகத்தின் அரசியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் மதவாதமுமே செல்வாக்குச் செலுத்திக் கொண்டிக்கின்றது. இதனால், இங்கு மனிதாபிமானம் தார்மீக கடமை, இரத்த பாசம் போன்றவையெல்லாம் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் வெளிப்பாடே மலேசியாவில் இந்தியத் தமிழர்கள் கைது செய்யப்பட்ட போது கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பி கண்ணீர் விட்ட தமிழக் முதலமைச்சரும் தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளி மக்களான தோட்டத் தொழிலாளர்கள் 400 க்கும் மேற்பட்டோர் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு சிறைகளிலடைக்கப்பட்ட போது கண்டு கொள்ளாமலிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் 38 இந்தியவம்சாவளித் தமிழர் கைதுசெய்யப்பட்ட போது கண்டனக்குரல் எழுப்பிய தமிழகம் இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளித்தமிழர் கைதுசெய்யப்பட்ட போது ஏன் கண்டனம் செய்யவில்லை. மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர் வேறா ? &lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை வழங்க வேண்டுமென மத்திய அரசு ஊடாக வலியுறுத்தும் தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழருக்கு உரிமைகளை கொடுக்க வேண்டுமென எப்போதாவது குரல்கொடுத்ததுண்டா? குரல் கொடுக்க நினைத்தாலும் அவர்களால் முடியாது. அதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைவரம் &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக வடக்கு-கிழக்கு தமிழர்களை மட்டுமே இலக்கு வைத்து செயற்பட்டு வந்த இலங்கையரசும் அதன் படைகளும் இம்முறை இலங்கையிலுள்ள இந்தியவம்சாவளித் தமிழர்கள் மீதும் கைவைத்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக இந்திய அரசுகள் மௌனம் காத்து வருவது எதிர்காலத்தில இந்தியவம்சாவளித் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தப் போகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலர் இலங்கை அரசில் அங்கம் வகித்தாலும் அவர்கள் அரசுக்கு கூசா தூக்கி சேவகம் செய்பவர்களாக இருப்பதால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் அநாதைகள் போலவே இருக்கிறார்கள். அராதைகள் போன்றே இலங்கையரசினாலும் நடத்தப்படுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான ஒரு நிலையில் இந்திய வம்சாவளித் தமிழ்மக்கள் இலங்கைப் படைகளால் வீதிகளிலும் வீடுகளிலும் தொழில் புரியும் இடங்களிலும் வைத்துக் கைது செய்யப்பட்டு ஆடு மாடுகளைப்போல் சிறைகளில் அடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோது அதனை தமிழக அரசும் இந்திய அரசும் வேடிக்கை பார்த்து தமது மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தமிழரின் காவலன் என தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழகத்தின் முதலமைச்சர் கருணாநிதி இலங்கைத் தலைநகரில் வடக்கு-கிழக்கு தமிழர்களும் இந்திய வம்சாவளித் தமிழர்களும் இலங்கைப்படைகளால் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்ட போது தனது காவலன் பணியிலிருந்து கடமை தவறிவிட்டார். இது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஆர்.பி.யின் அபாண்ட குற்றச்சாட்டு &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் புயலைக்கிளப்பிக் கொண்டிருக்க தமிழ்ச்செல்வனை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இலங்கையரசுக்குத் காட்டிக்கொடுத்து படுகொலை செய்தாரென தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பி.என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அபாண்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக காங்கிரஸின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர் எஸ்.ஆர்.பி.அண்மைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் திடீரென தமிழ்ச்செல்வன் கொலைக்கு பிரபாகரன் தான் காரணமென்ற குற்றச்சாட்டுடன் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இது காங்கிரஸ் கட்சியினரையே கொஞ்சம் திகைக்க வைத்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த எஸ்.ஆர்.பி. மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதற்காகவே தமிழ்ச்செல்வன் விவகாரத்துடன் ஊடகவியலாளர்கள் முன் தோன்றியதாக காங்கிரஸிடையே முணுமுணுப்புகள் கேட்கின்றன. இக் கருத்தை நிராகரிப்பதற்கில்லை. ஏனெனில், ஊடகங்களில் பிரதான செய்தியாக வேண்டுமென்றால் ஒன்று இராமரைப் பற்றிக் கூறவேண்டும். இல்லையென்றால் விடுதலைப் புலிகளைப் பற்றிக்கூறவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இக்குற்றச்சாட்டை மறுக்கும் எஸ்.ஆர்.பி. அரசியலுக்காக பரபரப்பாக செய்ய வேண்டிய தேவை எதுவும் தனக்கில்லை எனக்கூறியுள்ளார். தமிழ்ச்செல்வனை பிரபாகரன் படுகொலை செய்ததாகக் கூறும் அவரின் குற்றச்சாட்டுக்கு அவர் கூறும் ஆதாரம் இலங்கையில் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆனந்தசங்கரி கூறிய கருத்து மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் . அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படக் கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகக்கூறியுள்ள காங்கிரஸின் மத்திய அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும். அவர்களை மன்னிக்கவோ, மறக்கவோ காங்கிரஸ் தயாரில்லை எனக் கூறியுள்ளதுடன் புலிகளை ஆதரிப்போர் தமது முதல் எதிரிகளென்றும் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் அவர்களை தமது காவலர்களாக போற்றுபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவ்வாறெனில் இளங்கோவனின் கூற்றுப்படி இலங்கைத் தமிழர்கள் தான் காங்கிரஸின் முதல் எதிரிகள். அதனால்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைத் தமிழரை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றதா? &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கூறும் அமைச்சர் இளங்கோவன் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமெனவும் கூறுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவனின் கருத்துப்படி விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது மணமகன் இல்லாமல் நடக்கும் திருமணம் போன்றது. இளங்கோவன் தொண்டர்களை உசுப்பேற்றும் கருத்துகளை கூறுகிறாரே தவிர யதார்த்த பூர்வமானவற்றை ஏற்கமறுக்கிறார். இதுதான் இளங்கோவனின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு. &lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் இளங்கோவனின் கருத்தையே இந்திய பார்ப்பன ஊடகமும் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டதுமான த ஹிந்து தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதன் மூலமோ அல்லது அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலமாகவே தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென கருத்து வெளியிட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்கள் தமது உயிரினும் மேலாக நேசிக்கும் தமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவாரென நம்பியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டுமென்பதிலேயே இந்தியாவின் அதிகார சக்திகள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. பிரபாகரனை அழிப்பதன் மூலம் ஒரு இனமே அழிந்து விடுமென்பதை நன்குணர்ந்தும் அதனை மூடிமறைத்து பிரபாகரனை அழிப்பதன் மூலமே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்குமென்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே பிரபாகரன் தனது மாவீரர் தின உரையில் தமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக இந்தியா செய்த வரலாற்றுத் தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் மீண்டும் அவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாமெனவும் தமது போராட்டத்துக்குத் தார்மீக ஆதரவை தருமாறும் கோரியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இக்கோரிக்கை பிணத்திடம் கேட்டதற்கு ஒப்பானதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், தமிழர்களை இலங்கையரசு சிறுகச்சிறுக அழித்தாலும் ஒட்டுமொத்தமாக அழித்தாலும் இந்திய அரசோ, தமிழக அரசோ கண்டுகொள்ளாது. அதேவேளை, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் தேவையான உதவிகளை வழங்கத்தயார் என்பதே தமிழக, மத்திய அரசுகள் இலங்கை தொடர்பில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வரும் செயற்பாடுகளின் உண்மை வடிவமாகும். &lt;br /&gt;&lt;br /&gt; -கலைஞன்-/thinakkural&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-1510670978880749671?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/1510670978880749671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=1510670978880749671&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1510670978880749671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1510670978880749671'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/12/blog-post_09.html' title='காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-1298213044893178126</id><published>2007-12-02T13:09:00.000-05:00</published><updated>2007-12-02T13:18:09.478-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்.'/><title type='text'>தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு</title><content type='html'>போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தெற்கின் பாதுகாப்பென்பது வடக்கில் இடம்பெறும் தாக்குதல்களைப் பொறுத்ததே. வடக்கில் எந்த அழிவுகளைச் செய்தாலும் எவருமே கேட்கக் கூடாதெனக் கருதும் இனவாதிகள், தெற்கில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் அது பயங்கரவாதத்தின் உச்சமென்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் புலிகளின் முகாம்களிருப்பதால் வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களில் மக்களின் இழப்பு தவிர்க்க முடியாததெனத் தனது தாக்குதல்களை நியாயப்படுத்த முயலும் அரசு, தெற்கில் மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலும் வர்த்தக பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் படைமுகாம்களிருப்பதை மறந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு நுகேகொடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. எந்த வன்முறையிலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எவரதும் குற்றங்களுக்காக ஏதுமறியாதவர்கள் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. &lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கப்படுபவர்கள் எந்த மக்களாயிருந்தாலும் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது கோழைத்தனமானது. அவ்வாறானதொரு செயலைச் செய்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதும் அப்படியொரு தாக்குதல் நடைபெற்றதா, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களே இவ்வாறான தாக்குதல் பற்றிய தகவல்களெனக் கூறப்படுவதும் மேலும் அப்பாவிகளை பழிவாங்கப் போவதற்கான செயல்களேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;முழு அளவில் போர் தொடங்கிவிட்டது. சமாதானத்திற்கான வாய்ப்புகள் இனி சாத்தியப்படமாட்டாது. புலிகளைத் தடை செய்வதில் அரசு தீவிரம் காட்டுகிறது. வரவு - செலவுத் திட்டத்தின் 3 ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறுவதற்கு முன் புலிகளை அரசு தடை செய்துவிட வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. இது பெரும்பாலும் சாத்தியப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அரச படைகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் கடும் விசனமடைந்துள்ளது. இதனால், போர்நிறுத்த உடன்படிக்கையை நேரடியாக முறிக்காமல், புலிகள் மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவர்களைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு முடிவுகட்டி விடலாமென சில தரப்புக்கள் சிந்திக்கின்றன. இதனால், அடுத்து வரும் நாட்களில் வன்முறைகள் அதிகரிக்கலாமென்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 வருட காலப்போரில் புலிகளுக்கெதிராக துணிச்சலாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என அவரைப் புகழுவோர் தற்போது தெற்கில் அதிகம். இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் கண்டுவிடக் கூடாதென விரும்புவோர் இராணுவத் தீர்வைத் தூண்டி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இனப்பிரச்சினை வேறு பயங்கரவாதப் பிரச்சினை வேறென அதற்கு வியாக்கியானம் கூறும் அவர்கள், பயங்கரவாதப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு கண்டுவிட்டால் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் கண்டுவிடலாமென விளக்கமும் கூற முற்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வை காணுமாறு அரசை வலியுறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு காண்பதென்பது ஈழத்தை உருவாக்குவதற்கு சமனென அவர்கள் விளக்கம் கூற முற்படுகின்றனர். இதனால், தமிழ் மக்களின் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையாக்கி புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டுமென இனவாதிகள் துடிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாக இனவாதிகள் கருதுகின்றனர். அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலால் தென்பகுதி அதிர்ந்து போயிருந்தது. ஆனால், புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால், இழந்த உற்சாகத்தை அவர்கள் மீளப்பெற்றதுடன் புலிகளின் ஏனைய தலைவர்களையும் இவ்வாறு அழித்துவிடலாமென்ற நப்பாசையில் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால், வன்னியில் தினமும் விமானத் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் ஆழ ஊடுருவும் படையினரின் கிளேமோர் தாக்குதலும் நடைபெற்று வருகிறது. வடக்கே அனைத்து தடைகளையும் விதித்துவிட்டு அங்கு நடைபெறும் கொடூரத் தாக்குதல்களை அரசு முழு உலகுக்கும் மறைத்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தெற்கில் இடம்பெறும் சிறுசிறு சம்பவங்களும் மிகப் பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுகிறது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்தச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக்கி வருகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் இடம்பெறும் சம்பவங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அவை பற்றி மூச்சும் விடுவதில்லை. இதனால், தென்னிலங்கை மக்களுக்கு அங்கு தினமும் நடைபெறும் கொடூரங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. முற்றாகவே இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு - கிழக்கில் தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். யுத்தமென்ற பெயரில் வடக்கே தினமும் தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் ஆட்லறி ஷெல் தாக்குதலும் மோட்டார் குண்டுத் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெறுகிறது. இவற்றின் தாக்கம் சொல்லில் உணர்த்தப்பட முடியாது. நேரில் அனுபவிக்கும் மக்களுக்கே அதன் தாக்கம் புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கில் மட்டும் விமானங்கள் ஆயிரக் கணக்கான குண்டுகளை வீசியுள்ளன. கிபிர் மற்றும் மிக் விமானங்கள் வீசும் ஒவ்வொரு குண்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டன. ஒவ்வொரு குண்டும் குறைந்தது ஒரு வீட்டையாவது தரைமட்டமாக்கும். இன்று வரை ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டு பல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் நடைபெறும் பூமி வடக்கு - கிழக்கு என்பதால் அங்கு மட்டும் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென்பது என்ன நியாயம்? இதே தாக்குதல்களில் ஒன்று,இரண்டு தெற்கில் நடைபெற்றால் எப்படியிருக்குமென்பதை இன்று வரை சிங்கள மக்கள் எவருமே உணரவில்லை. இதனால்தான் தெற்கில் சிறிய குண்டுவெடித்தால் உலகம் முழுவதற்கும் மரண ஓலம் எழுப்பப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம், புலிகளை எந்தளவு தூரம் ஆத்திரப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு ஆத்திரப்படுத்தி அவர்களை வன்முறைகளில் ஈடுபடச் செய்ய வேண்டுமென்பதில் அரசும் இனவாதிகளும் தீவிரம் காட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல், விமானப் படையினரின் துல்லியமான செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. வழமைபோல் வன்னியில் குண்டுகளை வீசியபோது எதேச்சையாக ஏற்பட்டதொன்றென்பதை அனைவரும் அறிவர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் சமாதான முயற்சிக்கே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதாக தென்பகுதி மக்கள் கூட உணர்ந்தபோது, தமிழ்ச்செல்வனை எந்தளவில் அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவர்குறித்து அரசும் இனவாத ஊடகங்களும் மிக மோசமாகப் பிரசாரம் செய்தன. தங்கள் தரப்புடன் சமாதானம் பேசியவர், தங்களுடன் இனியும் சமாதானம் பேச இருந்தவரெனக் கூடப் பார்க்காது அவரை அரசு மிகவும் கேவலப்படுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளன்று, அவரை கொல்லப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷ சபதமிட்டார். அடுத்த மாவீரர் தினத்தில் உரையாற்ற அவர் இருக்கமாட்டாரெனவும் கூறி புலிகளை எந்தளவுக்கு சீண்ட முடியுமோ அந்தளவுக்கு சீண்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர் தினமன்று வன்னியில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். புலிகளின் தலைவர் ஆற்றும் மாவீரர் தின உரையை எவருமே கேட்கக் கூடாதென்பதற்காக, ஊடக நிலையமென்றும் பாராது அன்று மாலை `புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது 12 குண்டுகள் வீசி அந்த நிலையம் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனாலும், பிரபாகரனின் உரையை முழு உலகமும் கேட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் புலிகளை ஆத்திரமூட்ட முயன்று பார்க்கிறார். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போமென்றும் அவ்வாறு உயிருடன் பிடிக்க முடியாது, இராணுவ நடவடிக்கை மூலம் அவர் கொல்லப்பட்டால் அவரது உடல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவோ அல்லது வேறு வழிகளிலோ புலிகளிடம் ஒப்படைக்கப்படமாட்டாதெனவும் பிரபாகரனின் உடலை இந்தியா கேட்டால் அதனை அவர்களிடம் ஒப்படைப்போமென்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறெல்லாம் கூறி அவர்களை சினமுறச் செய்து அதன்மூலம் அவர்கள் ஏதாவது வன்முறையில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கில் அரசு செயற்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், கடந்த காலங்களிலெல்லாம் இவ்வாறான ஆத்திரமூட்டல்களை புலிகள் சந்தித்தவர்களென்பதால் உரியவர்கள் மட்டுமே இதற்குரிய பலாபலன்களை அனுபவிப்பார்களென புலிகள் தரப்பில் கூறப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையெனக் கூறி வடக்கில் தமிழ் மக்கள் மிக மோசமாக இம்சிக்கப்படுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை முகமாலையுடன் அரசு மூடியது. தற்போது வன்னிக்கான பாதையை மூடியதுடன் மட்டுமல்லாது மதவாச்சியுடன் ரயில் சேவையை நிறுத்தி வடபகுதிக்கான போக்குவரத்தையே அரசு முடக்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே, யாழ்.குடா மக்களை குடாநாட்டுக்குள் முடக்கிய அரசு இன்று வடபகுதி மக்களை முழுமையாக முடக்கியுள்ளது. தென்பகுதியின் பாதுகாப்புக்காக வடபகுதியை அரசு முழுமையாகத் தனிமைப்படுத்தியுள்ளது. தெற்கை முதன்மைப்படுத்தியே நாட்டின் நலன்கள் அனைத்துமிருப்பதை இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசு உணர்த்தியுள்ளது. சர்வதேச சமூகமும் இதனடிப்படையிலேயே செயற்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மௌனம் சாதித்த ஐ.நா.வும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெற்கில் ஒரு தாக்குதல் நடைபெற்ற பின்பே தங்கள் மௌனத்தை கலைத்துள்ளன. வன்முறைகளை கண்டிப்பதில் கூட சர்வதேச சமூகமும் ஒரு வரைமுறைக்குள் தான் நிற்கின்றதென்பதை அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா என உலக நாடுகளிடமிருந்தெல்லாம் போர்த் தளபாடங்களை வாங்கிக் குவிக்கும் இலங்கை அரசு இவற்றை வைத்திருப்பது சமாதானம் பேசவல்ல. படையினருக்கு ஏற்படும் இழப்புகளால் படைகளை விட்டுத் தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் படைகளுக்குச் சேருவோரின் தொகையும் குறைவடைந்து வருவதால் இனிமேல் போர்த் தளபாடங்களையே அரசு பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆயுத உதவிகளை அள்ளிக் கொடுக்கும் அயல்நாடுகள் மனிதாபிமானம் பற்றி பேசுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் அழிவுகள் ஏற்படும் போதெல்லாம் மௌனம் சாதிப்பவர்கள் தெற்கில் ஏதாவது நடந்ததும் துடித்து விடுகின்றனர். வடக்கே மோசமான தாக்குதல் இடம்பெறும் போது தெற்கில் அதன் பிரதிபலிப்பு இருக்குமென்பது இன்று நேற்றுத் தெரிந்ததல்ல, இனப்பிரச்சினை தொடங்கிய காலம் முதலே என்பதை அனைவரும் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;-விதுரன்- thinakkural.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-1298213044893178126?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/1298213044893178126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=1298213044893178126&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1298213044893178126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1298213044893178126'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/12/blog-post.html' title='தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-2092451660257402466</id><published>2007-11-25T12:30:00.000-05:00</published><updated>2008-12-11T13:35:20.394-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/R0myW9tn9lI/AAAAAAAAAA4/-wtpMThY09c/s1600-h/1125960118figure3.jpe"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/R0myW9tn9lI/AAAAAAAAAA4/-wtpMThY09c/s320/1125960118figure3.jpe" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5136832957585552978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;த&lt;/strong&gt;மிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன் சமாதானத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்து முகமாக இலங்கையரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருந்த போதும் இலங்கையரசு அதனை உதாசீனப்படுத்தி பெரும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்த உடன்படிக்கையில் முக்கிய சரத்துக்களை மீறி கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து கோடிக்கணக்கான ரூபா சொத்துகளை அழித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை பகுதிகளை ஆக்கிரமித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாக பல படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக வன்னி பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு சிலாவத்துறை பிரதேசத்தை ஆக்கிரமித்தது. தற்போதும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் படை நடவடிக்கைகளை தொடர்வதால் வன்னி முன்னரங்க பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களெனக் கூறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சில கப்பல்களை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்தனர். குடும்பிமலை ஆக்கிரமிப்பு, கப்பல்கள் மூழ்கடிப்பென இலங்கையரசு வெற்றி விழாக்களை கொண்டாடி முழுவதுமான ஒரு போரை முன்னெடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையரசின் ஒவ்வொரு செயலுக்கும் விடுதலைப் புலிகளும் பதிலடி வழங்கினர். காலி துறைமுகம் மீதான தாக்குதல், கட்டுநாயக்கா, பலாலி விமானத் தளங்கள், கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதல்கள், விளாத்திக்குள அதிரடித் தாக்குதல், பம்பைமடுவில் கனரக ஆயுதங்கள் அழிப்பு, அநுராதபுரம் விமானத் தளம் மீதான கரும்புலிப் படையணித் தாக்குதல்களென இலங்கையரசுக்கு பேரழிவை ஏற்படுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தும் தாக்குதல்கள், தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களென புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்க, யால வன விலங்கு சரணாலய தாக்குதல், திஸ்ஸமகராம தாக்குதல்களென தென் பகுதி கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையரசின் வலிந்த தாக்குதல்களுக்கே புலிகள் பதிலடி வழங்கி வந்த அதேவேளை இலங்கையரசின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களை சர்வதேசத்தினதும் சமாதானப் பேச்சுக்களுக்கான அனுசரணையாளர்களினதும் கவனத்துக்கும் கொண்டு சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கையரசு சீராக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டினர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கையரசு போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதான பாத்திரமும் தம்முடனான சமாதான பேச்சுக்களில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் இடம்பெறும் சமாதான செயலகத்துக்கருகில் வைத்து விமானக் குண்டு வீச்சு மூலம் படுகொலை செய்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக்குழுவின் தலைவர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த இலங்கையரசு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஒரு கொடிய பயங்கரவாதியை கொன்றொழித்துவிட்டதாக தீவிர பிரசாரம் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட அதேநாள் அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, தமிழ்ச்செல்வன் படுகொலையே ஆரம்பமெனவும் இனி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தலைவர்களையும் பலியெடுப்போமெனவும் சூளுரைத்தார். இதேபோன்றே விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக எச்சரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் உடனடியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவததாக அறிவிப்பார்களென்றே அனைவரும் எதிர்பார்த்ததுடன் தமிழ்ச்செல்வன் இழப்புக்காக பாரிய பதிலடியொன்றை மேற்கொள்வார்களெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இவை எதனையும் இன்றுவரை புலிகள் செய்யாதது பலரையும் சந்தேகப் படவைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்செல்வன் படுகொலையின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்த விடுதலைப் புலிகள் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மௌனத்தை கண்டித்ததுடன் சமாதான அனுசரணையாளரான நோர்வே எவ்வித கருத்தையும் வெளியிடாதது குறித்து தமது வருத்தத்தையும் தெரிவித்ததுடன் நோர்வே தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இவ்வாறிருக்க அரசின் மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப் புலிகள் விரைவில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தவுள்ளனரெனக் கூறி தென்னிலங்கையில் பீதியைக் கிளப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தில் தமிழீழ பிரகடனம், தைப்பொங்கலில் தமிழீழ பிரகடனமென தினமும் ஒரு செய்தி தென்னிலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதேநேரம், சமாதானத்தை விரும்பும் நாடுகளின் அழுத்தம் இலங்கையரசு மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன இலங்கையரசின் போர் இயந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக தாராளமான இராணுவ உதவிகளை அள்ளி வழங்கிவருவதால் இலங்கையரசு போர் மூர்க்கம் கொண்டு வன்னி மீதான படையெடுப்புக்கு தயாராகி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளும் தற்போது தற்காப்பு போரிலேயே ஈடுபட்டு வந்தாலும் பாரிய படை நடவடிக்கையொன்றுக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான சில முன்னேற்பாட்டு, ஒத்திகை சண்டைகளையும் புலிகள் நடத்தியுள்ளனர். முப்படைப்பலத்தை கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தம்மை தயார்படுத்திவிட்டே உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையரசும் விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தயாராகிவிட்ட நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாவீரர்தின உரையில் தமிழீழ பிரகடனமென இலங்கையரசும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகல் அறிவிப்பு வருமென சர்வதேசமும் குழப்பிக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமது விடுதலைப் போராட்டத்தில் இதுவரை சுமார் 20 ஆயிரம் வரையான போராளிகளையும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துவிட்ட புலிகள் இனியும் பொறுமை காக்கமாட்டார்களென்ற கருத்து வலுத்துவரும் நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர் பாலகுமார் அண்மையில் நிகழ்த்திய உரையொன்றில் இனியும் நாம் போராளிகளை விதைக்க தயாரில்லை என்பதால் விரைந்து முடிவொன்றை எடுப்போமெனக் கூறியதும் கவனிக்கத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் பாரிய தாக்குதலொன்றை மிக விரைவில் நடத்துவார்களென்று இலங்கையரசும் எதிர்பார்ப்பதால் அதற்கு முன்பாக தாம் முந்திவிட வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ளது. அதனாலேயே பூநகரி மற்றும் மடுப்பகுதிகளை கைப்பற்றிவிடத் துடிக்கிறது. பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் ஆட்டிலறி பலத்தை முறியடிக்கவும் மடுப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டாடவும் இராணுவம் முயற்சிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான ஏட்டிக்கு போட்டியான இராணுவ முனைப்புகளுக்கு மத்தியில் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனைக் கூறப் போகின்றார்? தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அறிவிப்பா? அல்லது வழக்கம் போலவே இலங்கையரசுக்கு இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பான கவலையுமா? &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இலங்கையரசுக்கும் சமாதான அனுசரணையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் பல இம்மாவீரர் தின உரையில் வெளிவருமென்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகன்,தினக்குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-2092451660257402466?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/2092451660257402466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=2092451660257402466&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2092451660257402466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2092451660257402466'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/11/blog-post_25.html' title='மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/R0myW9tn9lI/AAAAAAAAAA4/-wtpMThY09c/s72-c/1125960118figure3.jpe' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-8130511399284338681</id><published>2007-11-01T13:51:00.000-04:00</published><updated>2007-11-01T13:54:51.909-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>முரண்பட்ட கருணா குழுவினர் ஒன்றுகூடி மீண்டும் சேர்ந்தியங்குவர் என அறிவிப்பு</title><content type='html'>தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) என்று அழைக்கப்படும் கருணா அணிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் உள் முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன என்று அந்த அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்திருக்கிறார்&lt;br /&gt;.&lt;br /&gt;இது தொடர்பாக அவர்களுடைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை வருமாறு:&lt;br /&gt;கடந்த 21 ஆம் திகதி மட்டக்களப்பில் கட்சியின் சகல உயர் மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி மக்களினதும், கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்தில் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.&lt;br /&gt;அதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவின் ஆலோசனையிலும் பணிப்புரையின் கீழும் பிள்ளையான் இரண்டாம் நிலைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு கருணாவின் நேரடிக் கண்காணிப்பில் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆறுபேர் கொண்ட அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் உறுப்பினர்களாக பிள்ளையான், திலீபன், பாரதி, அசாத் மௌலானா, மார்க்கன், பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் நிதிநிலைகள் தொடர்பாக கையாள்வதற்கு 7 பேர் கொண்ட நிதி செயற்குழு ஒன்றும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;கட்சியின் நற்பெயருக்கும், கட்டுக்கோப்பிற்கும்,விதிக்கு முரணாகச் செயற்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பதவி நிலை கருத்தில் கொள்ளப்படாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பலவாரங்களாக கருணா அணிக்குள் முரண்பாடுகள் உருவாகி இருந்தமை உண்மையே.&lt;br /&gt;அதற்குப் புறம்பாக தலைமைத்துவப் போட்டி, நிதிமோசடி என்றெல்லாம் கூறப்பட்டவை கற்பனை இவ்வாறான கருத்தையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது&lt;br /&gt;.&lt;br /&gt;அண்மையில் தமது அமைப்புக்குச் சொந்தமான பல கோடி ரூபா நிதியை அதன் தலைவர் கருணா மோசடி செய்துவிட்டார் என்றும், ரி.எம். வி.பி. அணியில் இருந்தும் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அவரை மத்தியகுழு இடைநிறுத்தியிருக்கிறது எனவும் அறிவித்திருந்தமை தெரிந்ததே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-8130511399284338681?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/8130511399284338681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=8130511399284338681&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8130511399284338681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/8130511399284338681'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/11/blog-post.html' title='முரண்பட்ட கருணா குழுவினர் ஒன்றுகூடி மீண்டும் சேர்ந்தியங்குவர் என அறிவிப்பு'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-85444970841909456</id><published>2007-10-30T03:47:00.000-04:00</published><updated>2007-10-30T03:51:03.077-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>போரியல் தீவிரப் போக்கால் மோசமடையும் பொருளாதாரம்</title><content type='html'>&lt;strong&gt;அ&lt;/strong&gt;நுராதபுரம் விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலி அணி நடத்திய அதிரடிப் பாய்ச்சலினால் அதிர்ந்துபோயிருந்த தென்னிலங்கையை, திடீரென வந்த பால்மா விலை அதிகரிப்புப் பற்றிய அறிவிப்பு மேலும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.&lt;br /&gt;போரியல் வெறிப் போக்கால் நாட்டின் பொருளாதாரத்தை மண்ணாக்கி வருகின்றது இந்த அரசுத் தலைமை. அதன் விபரீத விளைவுகளுக்கு முகம்கொடுத்து, அவற்றை எதிர்கொள்ள வேண்டிய நெருக்குவாரத்துக்குள் இக்கட்டுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் பொதுமக்கள்.&lt;br /&gt;ஒரு கிலோ பால்மா பக்கெட்டின் விலை ஒரேயடியாக இருநூறு ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் அரசின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கு முன்னரே விலை அதிகரிப்பு அறிவிப்புகள் தம்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் புதிய வரி விதிப்புகள், விலை அதிகரிப்புகள் தாராளமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருபுறம் யுத்தத்துக்காகப் பெரும் தொகை நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றது. மறுபுறம் அதே யுத்தம் பொருளாதார விருத்தியை வீழ்த்தி, வருமானத்தை முடக்கி, பொருளாதார நெருக்கடியை உருவாக்கி நிற்கின்றது. இவற்றுக்கு மத்தியில் புதிய வரிவிதிப்புகள், விலை அதிகரிப்புகள் என்று நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரச் சுமையை மக்கள் மீது சுமத்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியேயில்லை. எனவே, வரவு செலவுத் திட்டத்தை ஒட்டியும் புதிய விலை அதிகரிப்புகள் வரும் என நம்பிக்கையாக நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே சமயம்,தொலைத் தொடர்புக் கட்டண (தொலைபேசிக்கட்டண) அதிகரிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு என்று பல நிதிச் சுமை அறிவிப்புகள் அடுத்தடுத்துத் தொடர்ந்தும் வெளியாவதற்கு வரிசையாகக் காத்து நிற்கின்றன என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாட்சி தவறி, ஊழலும், மோசடியும், லஞ்சமும் அரச நிர்வாகத்துக்குள் புரையோடிப் போயிருக்கின்றமையும் நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு அதல பாதாளத்துக்குள் வீழ்ந்தமைக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு குளறுபடிகளையும் "புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்ற ஏமாற்று நாடகத்தின் அரங்குகளினால் மூடி மறைத்துக்கொண்டு ஆட்சி வாகனத்தை ஓட்டுகின்றது அரசுத் தலைமை.&lt;br /&gt;மிகவும் மோசமடைந்துவரும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு எப்படித் தாக்குப் பிடித்துப் பிழைத்து, மீண்டு, தப்பும் என்பதே தென்னிலங்கை அரசியல் விமர்சகர்களின் ஆச்சரியத்துடன் கூடிய வினாவாகவிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமட்டில்லாமல் எகிறிவரும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுத்து, குடும்பத்தின் அன்றாடத் தேவைகளையாவது நிறைவு செய்து, எவ்வாறு வாழ்க்கையை ஓட்டுவது என்பது சாதாரண அப்பாவிப் பொதுமகனின் ஒரே வினாவாகவிருக்கின்றது. ஒரு வேளை கூட முழுமையாக உணவு அருந்தும் வசதியில்லாத "அன்றாடம் காய்ச்சி' நிலைக்குப் பல குடும்பங்கள் வந்துவிட்டன.&lt;br /&gt;விலைவாசி அதிகரிப்புச் சுமையால் சமூகம் தடுமாறுகிறது என்றால், மறுபுறம் அதிகார நிர்வாகத் தவறுகளில் அதிருப்தி கொண்டுள்ள நாட்டு மக்கள் குறிப்பாகத் தென்னிலங்கை மக்கள் இந்த அரசுக்கு எதிராகத் தமது எரிச்சலை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். &lt;br /&gt;நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் குதிக்கின்றார்கள். இதனால் அரச பாடசாலைகள் முற்றாகச் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழர் சார்பு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்படாததால், இந்த வேலைநிறுத்தத்தின் நேரடிப் பாதிப்பு வடக்கு, கிழக்கில் அநேகமாகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேசமயம், சுகாதார சேவைத் தொழிற்சங்கங்கள் நாளை மீண்டும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளன.&lt;br /&gt;அதேவேளை, மின்சாரசபை உட்பட பல அத்தியாவசியத் துறைத் தொழிற்சங்கங்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றன.&lt;br /&gt;ஆட்சி, அதிகாரக் கையாள்கை தவறியதால் விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் சுமை உயர்வு, பண வீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்று நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு அடிப்படை அங்கங்களும் வரிசையாகத் தளர்ந்து வருகின்றன.&lt;br /&gt;தற்போதைய அரசின் யுத்தத் தீவிரப் போக்கு பல மோசமான பின்னடைவுகளையும், விளைவுகளையும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி வருவது அப்பட்டமாகப் புலப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்குப் பெரும் வருமானம் ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை, போர் விபரீதங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. உல்லாசப் பயணிகளின் வருகை ஏற்கனவே சுமார் இருபது வீதத்திலும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. யால வனச் சரணாலயம் மற்றும் அநுராதபுர விமானப்படைத்தளம் ஆகியவை மீதான புலிகளின் வெற்றிகரத் தாக்குதல்கள் இந்தத் துறையை மேலும் மோசமாகப் பாதிக்கும் சூழ்நிலை தென்படுகிறது. &lt;br /&gt;மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் கட்டையில் ஏறிப் படுக்கப்போகின்றது என்பது மெல்ல மெல்ல நிச்சயமாகி வருகின்றது.&lt;br /&gt;இந்த மோசமான நிலைமைக்கு அரசை வழிப்படுத்திய "ராஜபக்ஷ சகோதரர்கள் அண்ட் கம்பனியே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;-sudaroli-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-85444970841909456?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/85444970841909456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=85444970841909456&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/85444970841909456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/85444970841909456'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/10/blog-post_30.html' title='போரியல் தீவிரப் போக்கால் மோசமடையும் பொருளாதாரம்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-5852830044651725404</id><published>2007-10-15T02:24:00.000-04:00</published><updated>2007-10-15T02:30:28.349-04:00</updated><title type='text'>இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை</title><content type='html'>இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகக் காத்திரமான விடயங்களை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட, மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் இலங்கை விஜயம் முடிவடைந்துவிட்டது.&lt;br /&gt;எதிர்பார்க்கப்பட்டபடி, இலங்கை நிலைமை தொடர்பான தெளிவான பார்வை ஒன்றை ஆர்பர் அம்மையாரின் இந்தப் பயணம் மூலம் உலகம் தரிசிக்கக்கூடிய நல்லதோர் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.&lt;br /&gt;இலங்கையில் மிக மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நாவின் அவதானிப்பு அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிக்க வேண்டும் என்பதில் ஐ.நா.உறுதியாக இருப்பதும் &lt;br /&gt;அதற்கு இடமளிப்பது இல்லை என்பதில் இலங்கை அரசு பிடிவாதமாக இருக்கின்றது என்பதும் &lt;br /&gt;ஆர்பர் அம்மையாரின் கொழும்பு விஜயத்தின் முடிவின்போது நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெளிவாக வெளிப்பட்டன.&lt;br /&gt;இலங்கை விவகாரத்தைக் கண்காணிப்பதற்காக சர்வதேச அமைப்புகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிப்பது இல்லை என்பதிலும் அரசு உறுதியாக இருக்கின்றது.&lt;br /&gt;மேற்படி அலுவலகம் திறப்பதைப் பிரேரிக்கும் விதத்தில் ஆர்பர் அம்மையார் தெரிவித்த கருத்துக்கு அதே பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து அரசின் திட்டவட்டமான நிராகரிப்புப் பதில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;இலங்கை அரசின் சார்பில் அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை உறுதியாகத் தெளிவுபடுத்தினார்.&lt;br /&gt;அந்த மாநாட்டில் வைத்து மனித உரிமைகளுக்கான ஐ.நா.தூதுவர் ஆர்பர் அம்மையார், தெரிவித்த கருத்துகளின் சாராம்சம் இங்கு நோக்கற்பாலது.&lt;br /&gt;""மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் வெறும் தொழில்நுட்ப உதவிப் பரிமாற்றம் இருந்தால் மட்டும் போதுமானது என நான் நம்பவில்லை. மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் இதில் ஐ.நாவின் பங்களிப்பு உயர்ந்தளவுக்கு மேம்படுத்தப்படவேண்டும்.&lt;br /&gt;""மனித உரிமை மீறல்கள் கட்டுமட்டில்லாமல் நடக்கின்றன. இவை அரசுக்கு எதிரான புலிகளின் வெறும் பிரசார உத்தியின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் என்று கூறப்பட்டாலும் கூட, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் அவற்றில் புதைந்திருப்பதை உணர முடிகின்றது.&lt;br /&gt;""பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள அவசரகாலச்சட்ட விதிகள் தொடர்பான இறுக்கமான ஏற்பாடுகள், சட்டத்தின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நலிவு நிலைமை, குற்றமிழைத்தோரைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் விசேட சட்டவிலக்களிப்பு வசதிகள் போன்றவை மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அபாய எச்சரிக்கையை ஏற்படுத்துவனவாக உள்ளன.&lt;br /&gt;""ஊன்றிய கவனிப்புடன் கூடிய விசாரணைகள், குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துதல், அத்தகையோரைத் தண்டித்தல் போன்றவை தொடர்பாக இறுக்கமான சட்ட ஏற்பாடுகள் இல்லாமை கவலையைத் தருகின்றது.''&lt;br /&gt;இப்படியெல்லாம் தமது இலங்கை விஜய முடிவில் ஆர்பர் அம்மையார் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.&lt;br /&gt;ஆர்பர் அம்மையார் தமது இலங்கை விஜயத்தை அடுத்து, கொழும்பில் தெரிவித்த கருத்துகளில் இருந்து ஊன்றிக் கவனிக்கத்தக்க அம்சங்களாக வெளிப்பட்ட விடயங்களை இனிப் பார்ப்போம். அவை:&lt;br /&gt;* மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று இலங்கை அரசு கூறினாலும், அவ்வாறு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டிய பல்வேறு சம்பவங்கள் இன்னும் விசாரிக்கப்படாமலேயே உள்ளன.&lt;br /&gt;* அவ்வாறு நிலுவையில் விடப்பட்டிருக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்படுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் போதுமானவையல்ல.&lt;br /&gt;*குற்றச்சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படாத நிலைமை நீடிப்பது பெரும் குழப்பத்தைத் தருகின்றது.&lt;br /&gt;இவையே ஆர்பர் அம்மையார் வெளிப்படுத்தும் முக்கிய விடயங்களாகும்.&lt;br /&gt;ஏற்கனவே சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய முக்கிய தேசங்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைக் கையாண்ட நிரம்பிய அனுபவம் பெற்றவரே லூயிஸ் ஆர்பர் அம்மையாராவார்.&lt;br /&gt;முன்னாள் யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் மிக மோசமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து, அந் நாடுகளின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நடத்திய முன் அனுபவம் ஆர்பர் அம்மையாருக்கு நிறையவே உண்டு.&lt;br /&gt;சர்வதேச நீதிமன்றத்தில் சிறந்த வழக்குத் தொடுநராகப் பணியாற்றிய ஆர்பர் அம்மையாருக்கு, இலங்கைக்கு உள்ளே இனப்பிரச்சினை ரீதியாகத் தமிழர் அடக்கி, ஒடுக்கப்பட்டு, அவலப் படுத்தப்படும் வாழ்க்கை நிலையைப் புரிந்து கொள்வது (அவருக்கு) ஒன்றும் அப்படிக் கஷ்டமான விடயமே அல்ல.&lt;br /&gt;இந்தப் பின்னணியில் &lt;br /&gt;இங்கு தாம் கண்ட உண்மைகளை சர்வதேச மயப்படுத்தி, இலங்கைப் பிரச்சினையில் மேற்குலகு உட்பட்ட பெரும்பான்மை சர்வதேச சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்பர் அம்மையார் உதவி செய்வார்; உறுதியாக நடவடிக்கை எடுப்பார் எனத் தமிழர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி- சுடரொளி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-5852830044651725404?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/5852830044651725404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=5852830044651725404&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5852830044651725404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5852830044651725404'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/10/blog-post.html' title='இலங்கை நிலைமை தொடர்பாக ஆர்பர் அம்மையாரின் கையாள்கை'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-4560590441106568091</id><published>2007-09-03T18:17:00.000-04:00</published><updated>2008-12-11T13:35:20.714-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்தோவியம்.'/><title type='text'>நாலு வரி தேவையா?இது மட்டும் போதுமே.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/RtyKAyWLtcI/AAAAAAAAAAc/-PjjDdOPJ5Q/s1600-h/pulam1.jpe"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5106107823650747842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/RtyKAyWLtcI/AAAAAAAAAAc/-PjjDdOPJ5Q/s320/pulam1.jpe" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;மே&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;லே உள்ள கருத்தோவியத்தினைப்(கேலிச்சித்திரம்?????) பாருங்கள்.ஓவியர் என்ன சொல்லவருகிறார் என்பது புரிந்திருக்கும்.&lt;br /&gt;உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிகள்:- ஓவியர் - மூனா,&lt;br /&gt;                       யாழ் இணையத்தளம் (&lt;a href="http://www.yarl.com/"&gt;http://www.yarl.com/&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-4560590441106568091?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4560590441106568091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4560590441106568091'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/09/blog-post.html' title='நாலு வரி தேவையா?இது மட்டும் போதுமே.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9UKPXrzV184/RtyKAyWLtcI/AAAAAAAAAAc/-PjjDdOPJ5Q/s72-c/pulam1.jpe' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-1432981800051313621</id><published>2007-06-18T00:39:00.000-04:00</published><updated>2007-06-18T01:04:38.031-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><title type='text'>ஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்!</title><content type='html'>எனது நண்பர் ஒருவரின் இல்லத்தில் ஒரு புது வரவு.ஒரு குட்டி இளவரசன்&lt;br /&gt;பிறந்துள்ளான்.அந்த குட்டி இளவரசனுக்கு பெயர் வைப்பதற்காக நண்பர் குடும்பம் பல பெயர்களை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள். பெயர் வைப்பது&lt;br /&gt;தொடர்பாக என்னையும் ஆலோசித்தார்கள்.நான் உங்களிடம் வேண்டி நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு&lt;br /&gt;தேவை நல்ல அழகான தமிழ் பெயர்,அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும்&lt;br /&gt;எழுதும்போது சுருக்கமானதாக அதாவது குறைந்த எழுத்துக்கள் கொண்டதாக&lt;br /&gt;இருக்கவேண்டும்.ஆங்கிலத்தில் உச்சரிக்க இலகுவாய் இருக்கவேண்டும்.&lt;br /&gt;சரி நண்பர்களே எப்படியும் நல்லபெயர்களை உங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இதனை பதிந்துள்ளேன்.&lt;br /&gt;நன்பர்களே உதவி செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-1432981800051313621?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/1432981800051313621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=1432981800051313621&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1432981800051313621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/1432981800051313621'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/06/blog-post.html' title='ஆண் குழந்தைக்கு தமிழ் பெயர் வேண்டும்!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-4755933733890440769</id><published>2007-05-31T15:16:00.000-04:00</published><updated>2007-05-31T15:20:41.205-04:00</updated><title type='text'>வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-கேசவன்-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது  ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt; இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.&lt;br /&gt;முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான  ணுடுஐNணு143டு  விமானங்களே என்பது திட்டவட்டமாக உறுதியாகியிருக்கிறது. இந்த விமானங்களைப்பயன்படுத்திப் புலிகளால் எத்தகைய தாக்குதல்களை நடத்தி அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கு விடைகாண்பதே அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் விமானங்களைப் பயன்படுத்தி தற்கொலைத்தாக்குதல்களை மட்டுமே நடத்த முடியும். என்றும் அப்படியான தாக்குதல்களைக்கூட ஒரிரண்டு தடவைக்குமேல் நடத்த முடியாது என்றுமே இலங்கை அரசு கருதியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புலிகளோ கட்டுநாயக்க வரை வந்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இது புலிகளின் வான்படைப்பலம் ஏற்கனவே கணிக்கப்பட்டதையும் விட அதிகமானதென்பதை எடுத்துக் காட்டியிருக்ககிறது.  புலிகளால் விமானப்படைப் ஒன்று அமைக்கப்பட்டதே வியப்புடன் பார்க்கப்படும் நிலையில் அவர்கள் தம்மிடமுள்ள விமானங்களைத் தாக்குதலுக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு விமானிகளுடன் அவற்றை  இழப்பதற்கு தயாராக இல்லை என்ற செய்தியே முக்கியத்துவமாக நோக்கப்படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் பெருமளவு பணத்தைக்கொடுத்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கொள்வனவு செய்த விமானங்களையும் மிகுந்தசிரமங்களின் மத்தியில் உருவாக்கி பயிற்றுவித்த விமானிகளையும் தற்கொலைத் தாக்குதலுக்காகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்த்தது தவறானதே.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் புலிகளின் விமானத் தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. புலிகளிடமுள்ள விமானங்கள் குண்டுவீச்சுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டவையல்ல ஆயினும் அவர்கள் சுய முயற்சியால் தான் குண்டு வீச்சுத் தொழில்நூட்பத்தைப் பெற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளிடமுள்ள குண்டுவீச்சு தொழில்நூட்பமானது நவீனமாயமானதாக இல்லாவிடினும் அவர்களால் துல்லியமான தாக்குதலை நடத்த முடிந்திருக்கிறது. இப்போது அரசாங்கத்திற்கும் விமானப்படைக்கும் உள்ள முக்கிய பிரச்சினை அதுவல்ல வான்புலிகள் தனியே குண்டுத்தாக்குதல்களை  நடத்துகின்ற அளவுக்கு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா அல்லது அதற்கும் அப்பால் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறார்களா எனபதே இலங்கை அரசுக்கு விடைகாண வேண்டிய முக்கிய வினாவாக உள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாக இருப்பது கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்றே குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளால் தாக்குதலுக்குப் புறப்பட்ட விமானங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படி விமானத்தின் அடிப்பகுதியில் பின் சக்கரங்களுக்கிடையில் நான்கு குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை ஒவ்வென்றும் சுமார் 25 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரிலேயே இந்தக்குண்டுகள் வடிவமைக்கப்பட்டதும் உறுதியாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த இரண்டு விமானங்களில் வந்த புலிகள் தலா நான்கு வீதமாக எட்டுக்கொண்டுகளையல்லவா வீசியிருக்கவேண்டும்? ஆனால் நான்கு குண்டுகள் மட்டுமே வான்புலிகளால் வீசப்பட்டன இதில் மூன்று குண்டுகள் வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தின ஒன்று மட்டுமே வெடிக்கவில்லை. இதில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதல் நடத்தியது உறுதியாகிறது. அப்படியானால் இரண்டாவது விமானம் எதற்காக வந்தது என்ற கேள்வி எழுகிறது புலிகளை பொறுத்தவரையில் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்தான விமானம் ஒன்றையும் விமானிகள் இருவரையும் தேவையில்லாத ஒரு களத்துக்குள் அனுப்பியிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கட்டுநாயக்கா தாக்குதலுக்காக வந்த மற்றைய விமானத்தையும் இராணுவ நோக்கங்களின்றிப் புலிகளால் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்புகளில்லை. கட்டுநாயக்க மீதான தாக்குதலில் அதியுயர் விளைவுகளை எதிர்பார்த்திருக்கக் கூடிய புலிகளின் தலைமை இரு விமானங்களின் மூலமும் ஆகக் கூடியளவுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை மட்டும் போடும் அளவுக்குத் திட்டமிடல் அமைந்துள்ளதென்றால் அதில் ஏதோ ஒரு உட்காரணம் இருந்திருக்க வேண்டும.; குண்டுத்தாலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக மற்றைய விமானம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக குண்டுவீச்சுக்களை நடத்தச் செல்லும் விமானங்களுக்கும் ஆபத்தான இடங்களில் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் விமானங்களுக்கும் போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமே 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை வீச வந்தபோது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரகப் போர் விமானங்கள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்தமை நினைவிருக்கலாம்  இதுபோன்று புலிகளின் குண்டு வீச்சு விமானத்துக்குப் பாதுகாப்பாக இன்னொரு விமானம் வந்திருக்கலாம் ஆனால் ஒரு விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கான விமானம் சாதாரணமானதாக இருக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;வானில் சண்டயிடக் கூடிய திறன் அந்த விமானத்துக்கு இருப்பது அவசியம் விமானத்தில் அப்படிப்பட்ட வசதிகள் இருப்பினும் விமானிகளுக்குப் போதிய பயிற்சியும் அனுபவமும் தேவை இந்த நிலையில் புலிகளிடம் இருக்கின்ற இலகு ரக விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான்புலிகளால் வான் சமர்களை நடத்தமுடியுமா? ஏன்ற கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;புலிகளிடமுள்ள ZLIN Z 143 L  ரக விமானங்கள் அடிப்படையில் பயிற்சி மற்றும் சாகசங்களுக்காகவே தயாரிக்கப்பட்டவையாகும்&lt;br /&gt;&lt;br /&gt; இந்த விமானங்களால் கிபிர் மிக் போன்ற போர் விமானங்களுக்கெதிராகச் சண்டையிட முடியாவிட்டாலும் சராசரி வேகமும் ஆற்றலும் இருக்கின்றன. கடந்த பல வருடங்களாகவே இரகசியமாக வான்புலிகளைப் பயிற்றுவித்து வந்த புலிகள் அவர்களை வான் சண்டைகளுக்காகத் தயார்படுத்தியிருக்க மாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் தம்மிடமுள்ள இலகு ரக விமானங்களில் 12.7 மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையோ அல்லது 14.5 மி.மீ சிறு பீரங்கிகளையோ பொருத்தி வான் சண்டைக்களுக்காகத் தயார்படுத்தியிருக்கலாம் சாதாரணமாக குண்டு வீச்சுத் தொழில் நூட்பத்தையே சுயமாக கண்டறிந்த புலிகளுக்கு இது ஒன்றும் கடினமான காரியமாக இருக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக வன் சண்டைககளுக்காகத் தயார்படுத்தப்பட்ட விமானத்தில் குண்டுகளை ஏற்றிச் சென்றிருக்க முடியாது ஆகக் கூடியது 240 கிலே எடையையே சுமக்கக் கூடிய இந்த விமானத்தில் கனரக துப்பாக்கிகளைப் பொருத்தினால் குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாது. இதனால் கட்டுநாயக்க தாக்குதலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் மற்றைய விமானம்வந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவுக்கு வடக்கே விஞ்ஞானகுளத்தில் இலங்கை விமானப்படையின் ஆளில்லா வேவுவிமானம வீழ்ந்து நொருங்கிய போது அது மற்றொரு விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்தச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. புலிகள் வான் தாக்குதலை நடத்தியதற்கே ஆடிப்போன அரசு அவர்கள் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்ற செய்தி உறுதியானால் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப்பபோகிறதோ தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-4755933733890440769?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/4755933733890440769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=4755933733890440769&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4755933733890440769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4755933733890440769'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/05/blog-post.html' title='வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-6190038550341471188</id><published>2007-04-16T11:59:00.000-04:00</published><updated>2007-04-16T12:05:20.393-04:00</updated><title type='text'>கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு!</title><content type='html'>* ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது, `இலங்கைக் கடற்படையா விடுதலைப் புலிகளா' என்ற ஆய்வில் தமிழக, மத்திய அரசுகள் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் நாசப்படுத்தப்பட்டு வருகின்றன. பல மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சம்பவங்களின்போது மயிரிழையில் உயிர் தப்பி கரைசேரும் மீனவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைக் கடற்படையே படுகொலைகளைச் செய்கின்றதென கூறிவருகின்ற நிலையில், அவர்களின் வேதனைகளையும் உணர்வுகளையும் சீண்டிப்பார்க்கும் விதமாக இலங்கை அரசும் இந்திய மத்திய அரசும் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்கப்பார்க்கின்றனர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மீனவர்கள் தயாரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டும் மத்திய அரசோ, இலங்கை அரசோ அதனை காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்பில் தமிழக அரசும் மென்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே தெரிகிறது. நெய்வேலி அனல் மின் நிலையப் பிரச்சினையின்போது தனது ஆதரவை வாபஸ் பெறப்போவதாக மிரட்டிய தமிழக அரசு, தினமும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் மென்போக்காகவே நடந்து கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடுகளையும் அரச வேலைவாய்ப்புக்களையும் வழங்கி அவர்களை சாந்தப்படுத்த முனையும் தமிழக அரசும் ஏனைய அரசியல் கட்சிகளும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தம்மீது இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுவதாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிநின்றபோது இந்தியக் கடற்படைத் தளபதி இப் படுகொலைகளில் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாமென கூறிய கருத்து தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது, தமிழக மீனவர்களை படுகொலை செய்யவேண்டிய தேவை இலங்கைக் கடற்படைக்கு இல்லையென, இலங்கை அரசின் பேச்சாளர் போன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மீனவர்களை சினமடைய வைத்துள்ளது.&lt;br /&gt;இலங்கை அரசும் இந்திய - இலங்கை நட்புறவை சீர்குலைப்பதற்காக விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாகவும் தமது கடற்படை தமிழக மீனவருக்கெதிராக ஒரு `ரவை' கூட சுட்டதில்லையென்றும் கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மத்திய அரசும் இலங்கையரசும் இவ்வாறு புலிகளின் மீது பழிபோட முயற்சிக்கையில் தமிழக அரசோ, மீனவர்களின் குற்றச்சாட்டை புறந்தள்ளிவிட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக்குழு நியமிக்குமாறு கோருவது நகைப்புக்கிடமாகவுள்ளது.&lt;br /&gt;தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் பழியை விடுதலைப் புலிகள் மீது போடவேண்டிய தேவை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் நிறையவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் ஆதரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது காலம் புலிகளுக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாக இருந்தபோதும் தற்போது அது வெளிப்படத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அண்மையில் இலங்கை கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது புலிகளின் விமானப் படை நடத்திய தாக்குதல் தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. இதன் வெளிப்பாடாக தமிழகத்தின் ஊடகங்கள் விடுதலைப் புலிகள் பலம் தொடர்பில் பெரும் பிரசாரங்களை முன்னெடுத்தன. இவையெல்லாம் மத்திய அரசையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சுற்றியுள்ள எம்.கே.நாராயணன், சிவ்சங்கர்மேனன் போன்றோரையும் சினமூட்டியதன் விளைவே புலிகள் மீது பழிபோடும் இந்த முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களை புலிகள்தான் படுகொலை செய்கிறார்களென்ற பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழகத்திலே புலிகளுக்கு அதிகரித்து வரும் ஆதரவை சீர்குலைக்க மத்திய அரசும் உளவுத் துறையும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றன. அதன் வெளிப்பாடே இந்தியக் கடற்படைத் தளபதியும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் விதமாக வெளியிட்ட கருத்துகளாகும்.&lt;br /&gt;இலங்கையரசைப் பொறுத்தவரையில் புலிகள் மீது பழிபோட வேண்டிய தேவைகள் நிறையவேயுள்ளன. விடுதலைப் புலிகளிடம் உள்ள கடற்புலிகளை வெற்றிகொள்ள முடியாத நிலையில் இலங்கைக் கடற்படையினர் உள்ளனர். கடற்புலிகளை வெற்றிகொள்ள வேண்டுமானால் இந்தியக் கடற்படையின் உதவி இலங்கைக்கு இன்றியமையாதது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்தியா சற்று எட்டவே நிற்பதனால் இலங்கைக்கு நேரடியாக உதவ பின்னடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்தில் ஈடுபடுமாறு இலங்கை அரசு பலமுறை இந்தியாவிடம் வற்புறுத்திக் கேட்டபோதும் அதற்கு இந்தியா இணங்கவில்லை. இந்நிலையில் இந்தியாவை வழிக்குக் கொண்டுவர இலங்கை தெரிந்தெடுத்த வழிமுறையே தமிழக மீனவர் படுகொலை.&lt;br /&gt;தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதன் மூலம் தமிழக அரசினூடாக மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமிழக மீனவர்களை பாதுகாப்பதென்ற போர்வையில் கூட்டு ரோந்திற்கு இந்திய கடற்படையை இணங்கவைப்பதே இலங்கையரசின் நோக்கம். அதேவேளை, தம்மீது தமிழக அரசின் கோபப் பார்வை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே சிவிலுடைகளில் வந்து தமிழக மீனவர்களை தாக்கிவிட்டு விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடும் முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு, புதுடில்லியில் கூடிய சார்க் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் தமக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் நிலைப்பாடுகளை எடுக்க வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த மாநாட்டில் இலங்கை நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. இலங்கை கூட்டு ரோந்திற்கு இந்தியா சம்மதிக்கும் என்ற பெரு நம்பிக்கையிலிருந்த இலங்கையரசு கூட்டுரோந்து தொடர்பில் இந்தியா சாதகமான பதிலை தந்துவிட்டதாக இலங்கையிலுள்ள அரச ஆதரவு ஊடகங்கள் மூலம் பெரிய பிரசாரத்தை முன்னெடுத்தது.&lt;br /&gt;ஆனால், நெய்திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இணங்க வேண்டாமென மத்திய அரசை வலியுறுத்தினார். கருணாநிதியின் இந்த வலியுறுத்தலுக்கு பின்னணியில் மீனவர்களின் வாக்கு வங்கி இருந்ததே தவிர கூட்டு ரோந்தினால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களோ ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளோ இருக்கவில்லை என்பது வேறு விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசுடன் கூட்டு ரோந்துக்கு இணங்கும் நிலையிலிருந்த மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்கியது. இதனால் கூட்டு ரோந்துக்கு தயாரில்லையென தெரிவித்ததுடன் யுத்த மூலம் தீர்வுகாணும் முயற்சியை கைவிட்டுப் பேச்சு மூலம் தீர்வு காண முன்வரவேண்டுமென இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறி அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;சார்க் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்பட உறுதி எடுக்கப்பட்டதே தவிர, புலிகளுக்கு எதிராகவோ அல்லது இலங்கை அரசுக்கு சார்பாகவோ எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால், சார்க் மாநாட்டை தமக்கு சார்பாக பயன்படுத்த திட்டமிட்டிருந்த இலங்கையரசு தோல்வி கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சார்க் மாநாடு முடிந்த சில தினங்களிலேயே இலங்கைக் கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. கூட்டு ரோந்து என்ற தமது சூழ்ச்சித் திட்டத்துக்கு இந்திய அரசு இணங்கும்வரை தமிழக மீனவர்கள் மீதான படுகொலைகளை இலங்கையரசு தொடர்ந்து முன்னெடுக்குமென்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு, இந்திய மத்திய அரசு கூறுவதுபோல் தம் மீதான தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்றே, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அந்த அமைப்பின் இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் ஆகியோர் இலங்கை, இந்திய அரசுகளின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளனர். தமிழக மக்களும் தமது உறவுகளென தெரிவித்துள்ள அவர்கள் தம்மை தமிழக மக்களிடமிருந்து வேறுபடுத்தவே இலங்கைக் கடற்படையினர் செய்யும் படுகொலைகளை தம்மீது இலங்கை அரசு சுமத்துவதாக விளக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் தமக்கு அதிகரித்து வரும் ஆதரவினை இழக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இழந்த ஆதரவினை மீண்டும் பெறுவதற்கு புலிகள் பெரும் சிரமப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தமிழகத்தில் தற்போது ஈழப் போராட்டத்திற்கு சார்பாக மீண்டும் ஏற்பட்டுள்ள எழுச்சியை சீரழிக்கும் முயற்சியில் புலிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் இந்த எழுச்சியை சீர்குலைக்கும் தேவை இலங்கையரசுக்கும் இந்திய மத்திய அரசுக்குமே அதிகளவில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித தொடர்புகளுமில்லையென்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கையரசுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை பகடைக்காயாகப் பார்க்கின்றனர். ஆனால், இவர்களின் புலிகள் மீதான பழிப் பிரசாரங்கள் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. இதற்கு இங்கு அதிகரித்து வரும் இலங்கையரசுக்கும் அதன் கடற்படைக்கும் எதிரான தொடர் போராட்டங்களே எடுத்துக்காட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக் கடற்படையின் தாக்குதலினால் கொல்லப்பட்ட மீனவர்களின் கிராமங்களுக்கு சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, `இலங்கைக் கடற்படையை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டுமென' கூறியமை இந்திய அரசே உண்மை நிலையை உணர்ந்துள்ளமைக்கு எடுத்துக்காட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை தமது ஜீவாதாரப் பிரச்சினையை அரசியலாக்காது அன்றாட வாழ்வுக்கு வழியேற்படுத்தி தரவேண்டுமென்பதே ஒரே கோரிக்கையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞன்/thinakkural&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-6190038550341471188?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/6190038550341471188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=6190038550341471188&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6190038550341471188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/6190038550341471188'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/04/blog-post.html' title='கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-9060675547594711208</id><published>2007-03-30T12:12:00.000-04:00</published><updated>2007-03-30T12:19:21.974-04:00</updated><title type='text'>தேவையா இது இந்தியாவுக்கு?</title><content type='html'>&lt;strong&gt;திவயின சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ( 28.03.2007) &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தியா ஸ்ரீ லங்காவுக்கு நல்லது செய்வதை தற்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது என்பதே எமது கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதல் 2,500 ஆண்டுகளுக்கு முன் உலகத்தின் மிகச் சிறந்த நன்மை ஒன்று இந்தியாவிடமிருந்து  சிறிலங்காவுக்கு கிடைத்தது. அது தான் புத்த சமயமாகும். அதைத் தொடர்ந்து இந்திய கலைகள் கலாசார நன்மைகளும் எமக்குக் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதற்குப் பின்னர் இந்தியா எமக்கு நேரடியாக கொடுத்தவைகளும் இந்திய மத்தியஸ்தம் மூலம் கொடுத்தவைகளும் கெட்டவைகளேயாகும். அவற்றின் பிரதானமானவை கீழே காட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு அழுத்தம்.&lt;br /&gt;2. பிரபாகரனின் தாயகக் கொள்கை&lt;br /&gt;3. இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987)&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி மூன்று விடயங்களில் இந்திய ஆதிக்க விஸ்தரிப்பு என்பது ஸ்ரீ லங்காவுக்கு இந்தியா நேரடியாக இல்லாத முறையில் சுற்றி வந்து கொடுக்கும் அழுத்தமாக அமைந்துள்ளது. இதற்கேற்ப இந்தியாவுக்கு வேண்டாத முறையிலான ஸ்ரீ லங்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறியடித்தல் மேற்படி இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையில் ஒரு அங்கமாகும். (கட்டுநாயக்கவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலுக்கும் இந்திய ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கையே பொறுப்புக் கூற வேண்டும். இது பற்றி தொடரும் பந்திகளில் விபரித்துள்ளோம்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலங்கா குழப்பங்களற்ற சமாதானமான பிராந்தியமாக முன்னேற்றமடைந்து வருவதை விரும்பாத நிலையில் இந்தியாவே பிரபாகரன் என்ற வியாதியை ஸ்ரீலங்காவில் அறிமுகப்படுத்தியது. இந்தியா ஸ்ரீ லங்கா மீது பலாத்காரமாக 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணித்ததற்குக் காரணமும் இந்தியாவின் ஆதிக்க விஸ்தரிப்பு நிலைப்பாட்டுக்கேற்ப ஸ்ரீ லங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை பிரபாகரனிடம் ஏலம் போடுவதற்கேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி மேற்படி இந்தியாவின் விஸ்தரிப்பு அழுத்தமும் மற்றும் இந்நாட்டின் மீதான பலவந்தக் கொள்கையும் கட்டுநாயக்காவில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட விமானத் தாக்குதலும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிநவீனமான ராடர் உபகரணத்தின் தேவை ஸ்ரீ லங்காவுக்கும் ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;அது நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ராடர் உபகரணத்தைப் பெற வேண்டிய அத்தியாவசிய தேவையாகும். இவ்வாறான உயர் தொழில் நுட்ப ராடர்களை சீனா உற்பத்தி செய்து நியாயமான விலைகளில் விற்று வந்ததால் சீனாவிலிருந்து ராடர்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா முயற்சி எடுத்தது. ஆனால், சீனாவுடன் பனிப்போரில் நெடுங்காலமாக ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இவ்வாறு ஸ்ரீ லங்கா சீனாவுடன் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொள்வதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றம் உடைய ராடர் கருவிகளை ஸ்ரீ லங்காவில் பொருத்தி வைத்தால் இந்தியப் பிரதேசங்களிலுள்ள யுத்த தளங்களின் இரகசியங்கள் அந்நியர் கைகளில் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் இந்தியா தானாகவே முன்வந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ராடர் கருவியை ஸ்ரீ லங்காவுக்கு வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுநாயக்க விமானப்படை முகாமில் பொருத்தப்பட்ட இந்தியாவின் ராடர் உபகரணம் இன்னும் முற்றாகப் பொருத்தி முடிக்கப்படாத பழைய வகை ராடர் உபகரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் நுட்ப ரீதியில் முன்னைய முதலாம் பரம்பரைக்குரியதென கருதப்படும் இரட்டை அமைப்புடைய அந்த ராடர் கருவி மூலம் பெறக்கூடிய பயனைப் பொறுத்தவரை எந்த பிரியோசனமும் கிடையாது என்பது இப்போது தெரிந்து விட்டது. (அப்படி ஏதேனும் பயன் இருந்திருந்தால் பிரபாகரனின் விமானங்கள் கட்டுநாயக்காவை நெருங்கியிருக்க முடியாது).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா அன்று ஸ்ரீ லங்காவுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு பயங்கரமான ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இதன் மூலம், நிகழ்ந்து கொண்டிருப்பது யாதெனில், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பிரபாகரன் எனப்படும் நாசகார சக்தி இந்தியாவின் அழுத்தத்திற்கேற்ப தொடர்ந்து மனிதப் படுகொலைகளை செய்து கொண்டிருக்கப் போகிறது. இந்தியா எம்மீது சுமத்தியுள்ள ராடர் எனப்படும் பழைய இரும்புக் குவியலிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த இரும்புக் குவியலை உருக்கி மண்வெட்டிகள் செய்வதற்காக வைத்துக் கொண்டு வேறுநாட்டிலிருந்து அதிநவீன டாடர் உபகரணங்களை நாம் பெற்றுக் கொள்ளா விட்டால் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மிகப் பெரியதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயுள்ள பகைக்கு ஸ்ரீலங்கா பலியாகிவிடக் கூடாது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ லங்காவின் அனைத்து அரசாங்கங்கள் மீதும் இந்தியா பிரயோகித்த அழுத்தங்கள் பற்றி அனைவரும் அறிவார்கள். எமது மூத்த சகோதரன் என்ற ஸ்தானத்தில் இருக்க வேண்டிய நாடு இன்று எங்களை அழித்தொழிக்க முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ளுவதும் கடினமாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-9060675547594711208?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/9060675547594711208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=9060675547594711208&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/9060675547594711208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/9060675547594711208'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/03/blog-post_30.html' title='தேவையா இது இந்தியாவுக்கு?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7110708453471816249</id><published>2007-03-23T13:07:00.000-04:00</published><updated>2007-03-23T13:18:49.158-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது''</title><content type='html'>-மனோகரன்-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;ச&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;மாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள் மிகத்தீவிரமாக இயங்கும். அதிலும் சிறிலங்காப்படைகள் வெற்றிபெறுகின்றபோது அதை ஊடகங்கள் கொண்டாடுகிற விதம் சொல்லத் தேவையில்லை.   அந்தளவுக்கு உண்மையும் புனைவும் கலந்த ஒருவகையான ஊடகப்பரப்புரை அப்போது நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே யுத்த்தின் போது சிறிலங்கா அரசாங்கமும் மிகத்தீவிரமாக இயங்கும். உள்நாட்டிலும் வெளியுலகிலும் யுத்தத்துக்கு ஆதரவான பரப்புரையை அரசாங்கம் மிக நுட்பமாக செய்யும். குறிப்பாக யுத்தத்தை நியாயப் படுத்துவதில் அரசாங்கம் மிகத்தீவிரமாகச் செயற்படும்.&lt;br /&gt;இப்போது இது தான் நடக்கிறது மூதூர், சம்பூர், வாகரை  பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் நியாயப்படுத்திவரும் விதம் சாதாரணமானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ-15 பாதையை மூடி, தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி, மக்களை கொலை செய்து பட்டினிபோட்டு வாகரையை ஆக்கிரமிதத்து சிறிலங்கா அரசு. இதன் போது தமிழ் மக்களுக்குச் சார்பான அல்லது நியாயமான முறையில் சர்வதேச சமூகத்தின் கவனம் திசை திரும்பவேயில்லை. பதிலாக அங்கிருந்து மக்கள் வெளியேறி படைக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றவுடன் சர்வதேச சமூகம் அந்த மக்களின் நலன்களைக் கவனிக்கவென வருகின்றது&lt;br /&gt;.&lt;br /&gt;இப்படி மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டுத்தூதுவர்கள் அணிதான் கடந்தவாரம் நடைபெற்ற தாக்குதொலொன்றில் சிக்கியுமிருந்தது. இப்போது சிறிலங்கா அரசாங்கம் மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசம் மீது வாகரை சம்பூர் பகுதிகளில் பின்பற்றிய வழிமுறையையே தொடர்கிறது.&lt;br /&gt;படுவான்கரை மக்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடி, அவர்களின் நாளாந்த இயக்கத்தையும் இயல்பு வாழ்வையும் நெருக்கடிக்கள்ளாக்கியது அது. ஒரு சில பாதைகள் மட்டும் இடையில் திறக்கப்படுவதும் மூடப்படுவதுமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அங்குள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றன படைகள். கிராமங்கள் அழிகின்றன. மக்கள் இழப்புக்களுடன் இடம்பெயர்கின்றார்கள். மனிதப் பேரவலம் அங்கே தொடர்கிறது. சனங்கள் என்ன செய்வது எங்கே செல்வது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவல நிலை குறித்தோ சிறிலங்காப்படைகள் நடத்துகின்ற மனித உரிமை மீறல்கள் பற்றியோ நியாயமற்ற முறையில் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ எந்தத் தகவல்களையும் செய்திகளையும்   சிங்களத்தரப்பு ஊடகங்கள் வெளியிடுவதில்லை. இப்போதும் அவை இது விடயத்தில் அப்படித்தானிருக்கின்றன. சிங்களத்தரப்பினால் வெளியிடப்படும் சிங்கள ஆங்கில தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் மீதே தாக்குதல்கள் நடத்தப் படுவதாகவும் இதில் புலிகளே பாதிக்கப்படுவதாகவும் அவை உறுதி உரைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படைதரப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றி அவை ஒரு சொல்தானும் வெளியிடுவதில்லை அதற்கு அவை தயாராகவும் இல்லை. அத்துடன் மக்களின் பாதிப்புகளையிட்டோ மக்கள் படுகின்ற பேரவல நிலையையிட்டோ அவை எதுவும் தெரியாமலே இருக்கின்றன.&lt;br /&gt;இந்த ஊடகங்களின் மனதில் படையின் வெற்றி குறித்த எதிர்பார்ப்பும் அதற்கான வரைபடங்களுமே பதிவாகியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில் மூதூரில் படையினர் மீது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையை விடுதலைப்புலிகள் நடத்திய போது இந்த ஊடகங்கள் மனித அவலங்கள் பெருகிவிட்டன என்றும் கண்டனங்களையும் ஒப்பாரிகளையும் பெரிய அளவில் வெளிப்படுத்தின. மூதூர் மீண்டும் படைத்தரப்பின் பிடிக்குள் வந்த போது சட்டென மறுபடியும் அமைதியாகிவிட்டன. மூதூரில் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அங்கள்ள முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல் தலைவர்களுக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்திய பின்னரே தமது நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கோ படைதரப்புதான் பெரும் படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை அப்போது களத்தில் நின்றிருந்த முஸ்லிம் மக்களே சாட்சி பூர்வமாக தெரியப்படுத்தினர். அத்துடன் சர்வதேச தொண்டு நிறுவனமான பிரான்சின் அக்ஸன்பெய்ம் அமைப்பின் பணியாளர்கள் பதினேழு பேர் படையினரால் படுகொலை செய்யப்பட்டுமிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறெல்லாம் சிறிலங்கா அரசு அங்கே நடத்திய படுகொலை மற்றும் மனித அழிவுகளையிட்டு எந்த வருத்தத்தையம் தெரிவிக்காமல் இருந்தன   சிங்கள அறிவுலகமும் ஊடகமும்.&lt;br /&gt;ஆக, படைத் தரப்போ சிறிலங்கா அரசோ தமிழ் மக்கள் மீது எந்த அழிவுகளையும் மேற்கொண்டாலும் அதுபற்றி சிங்கள மனதுக்கும் மூளைக்கும் எந்தச் சலனமும் ஏற்படுவதில்லை. அதனுடைய அறிவியக்கத்தில் தமிழ் மக்களின் அவலம்பற்றிய எந்தப் பதிவம் ஏற்படாது. அதேபோல சிங்கள மனச்சாட்சியிலும் தமிழ் மக்கள் மீதான அநீதிகளையிட்டு எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊடகங்கள் மட்டக்களப்பு படுவான்கரை மீதான சிறிலங்காப்படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும் பற்றிய செய்திகளையும் இராணுவ நலன் சார்ந்தே அணுகுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படுவான்கரையில் இருந்து கடந்த மூன்று நாட்களுள் அறுபதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள அகதிகளாகி போக்கிடமின்றி இருக்கிறார்கள். ஏற்கனவே   வாகரை சம்பூர் ஈச்சிலம்பற்று பிரதேசங்கிலிருந்து இடம்பெயர்ந்த தொண்ணூறாயிரம் அகதிகள் மட்டக்களப்பு அகதிகள் நகரில் அல்லற்படுகின்றனர் இப்போது படுவான்கரை அகதிகளும் சேர்ந்து ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் அகதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.&lt;br /&gt;மாவட்டச் செயலகத்தினால் அகதிகளின் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அகதிகளுக்கு அங்கே தங்குமிடமில்லை தவிர நகரில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டே படையினர் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் மக்களின் கிராமங்களின் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தினர் இந்தத் தாக்குதலின் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் படைமுகாமுக்கு அண்மித்ததாக இருந்த பாடசாலையின் மாணவிகள் சிலர் மயக்கமடைந்தமை இங்கே கவனிக்கதக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மத்தியில் பாரிய படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து பாரிய அளவில் தாக்குதல்களை மேற்கொள்வது அடிப்படையில் பெரும் மனித உரிமை மீறல் இதனை சர்வதேச சமூகம் ஏன் காண&lt;br /&gt;மறுக்கிறது என்று அயலிலுள்ள மக்கள் கேட்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் மக்கள் மத்தியில் நின்று விடுதலைப் புலிகளைத் தாக்குவதானது தமக்குப் பாதுகாப்புhக இருக்கும் எனவும் படையினர் கருதுகின்றனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு   விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல்களை தம்மீது நடத்தமாட்டார்கள் என்று சிறிலங்கா படைதரப்புக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இடம் பெயர்ந்து படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உயிர்பாதுகாப்புக்  கருதிய அச்சத்தின் காரணமாகவே செல்கின்றனர். சிறிலங்காப்படையினர் பரவலலாக எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை மக்களின் வாழிடங்கள் மீது நடத்துவதாலும் போக்குவரத்து உணவுப் பொருட்களுக்குத் தடைகள் எற்படும் என்பதாலும் படையினரின் பகுதிக்குள் வேறு வழியில்லாத நிர்ப்பந்தம் காரணமாகக் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை மிக நெருக்கடிக்குள்ளாக்கி  அவர்களை இடம்பெயரச் செய்துவிட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை படையினர் மேற்கொள்கின்றனர்   என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது.&lt;br /&gt;இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காட்டி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருவாரியான நிதியினையும் அது பெறுகிறது. படையினர் ஆக்கிரமித்த பகுதிகளுக்கு ஊடகவியளாளர்களை அழைத்துச் சென்று   காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் படையினர் இப்போது தாக்குதல் நடத்துகின்ற பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்களை அனுப்பலாமே! அவர்கள் உண்மை நிலையையும், மக்களின் அவலத்தையும் அப்போது அறியமுடியும்.  சிங்கள ஊடகவியலாளர்களின் நடுநிலைமை ஊடகதர்மம், மக்கள் நலன், தேசியப்பாதுகாப்பு என்பனவெல்லாம் இந்த ஊடகங்களுக்கு அப்போது புரியும்.&lt;br /&gt;இதனை நாம் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் ஊடகங்களும் அரசும் போர்காலத்தின் போது தமது ஊடகவெளிப்பாட்டையும் இராஜதந்திர அணுகுமுறையையும் வேகப்படுத்தி நுட்பமாகவே கையாள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; போர் தீவிரமாக நடக்கும் போது குறிப்பாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மிகப்பிரமாண்டமான அளவில் செய்யும் போது சிறிலங்கா அரசின் சனாதிபதியோ படைத்தளபதிகளோ வெளிவிவகார அமைச்சரோ வெளிநாடுகளில் சற்றுப்பயணங்கள் செய்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரையோ செய்கிறோம் என்று பரப்புரை செய்வார்கள்.&lt;br /&gt;சந்திரிக்கா குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் மறைந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதனையே செய்தார். பின்னர் மங்களசமரவீர செய்தார். அமைச்சுப் பதவியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவுடனான முரண்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில் மங்கள சமரவீர இந்த விடயங்களையெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். இப்போது புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் இதனையே செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் பணி என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போரை சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று நம்பவைக்கும் பணியாகவே தொடர்கின்றது. ஏ-9 விதியை மூடியது மனித உரிமைக்கு முரணானது என்பதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பதிலாக கடல்வழி விநியோகத்துக்கு விடுதலைப்பலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அது சொல்வதன் பின்னணி என்ன?&lt;br /&gt;முற்றுமுழுதான இராணுவ நலனை முதன்மைப்படுத்தியதன் விளைவுகளே இவையெல்லாம். இராணுவ நலன் இராணுவ மேலாதிக்கம் என்பதனூடாக தமிழ் மக்களை ஒடுக்குவதே அதன் ஒரே   நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரல் அந்த நிகழ்ச்சி நிரலுக்குத் தோதானமாதிரி  இதற்கு சிங்களத் தரப்பு ஊடகங்கள் முழுமையாக துடிப்புடன் இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சி நிரல் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது. எனவே இதற்கு தமிழ் மக்கள் தங்களைத் தயார்படுத்தி செயற்பட வேண்டீயுள்ளது. சர்வதேச அளவில் தமிழர்கள் சிறிலங்கா அரசின் உண்மைத் தோற்றத்தை அதாவது தமிழரின் விடுதலை நடவடிக்கையை அம்பலப்படுத்த வேண்டும். புதிய ராஜதந்திர முயல்வுகளுக்கு நுட்பமாக தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து   செயலாற்ற வேண்டும். ஒடுக்குமுறையை செய்வோர் அடக்குமுறையாளர் அநீதியை இழைப்போர் பொய் சொல்வதற்கு கூச்சப் படவோ வெட்கப்படவோ மாட்டார்கள். நீதியின் பக்கம் நியாயத்தோடு நிற்கும் நாங்கள் இனியும் பின்னிற்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி--ஈழமுரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7110708453471816249?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7110708453471816249/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7110708453471816249&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7110708453471816249'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7110708453471816249'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/03/blog-post_23.html' title='&apos;&apos;சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது&apos;&apos;'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-3606139349257868949</id><published>2007-03-22T11:25:00.000-04:00</published><updated>2007-03-22T11:26:50.083-04:00</updated><title type='text'>சும்மா ஒரு பரிசோதனை.</title><content type='html'>சும்மா&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;பரிசோதனை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-3606139349257868949?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/3606139349257868949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=3606139349257868949&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3606139349257868949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3606139349257868949'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/03/blog-post_22.html' title='சும்மா ஒரு பரிசோதனை.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-3708813316828420488</id><published>2007-03-01T12:12:00.000-05:00</published><updated>2007-03-01T12:20:27.849-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்.'/><title type='text'>தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......</title><content type='html'>கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்&lt;br /&gt;பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாக&lt;br /&gt;திருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே வளர்க்கப்பட்டு&lt;br /&gt;ஈற்றில் அவர்களின் ஒரு பக்கமே மக்களின் முன் காட்டப்படுகிறது.இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய ஒரு தகவல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு பழி சுமத்தும் -ஈழவேந்தன் எம்.பி. கூறுகிறார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றது. சிறந்த ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது குறைகாண்பது மனிதப்பண்பல்ல. ஆனால் நாட்டின் மிகப்பெரும் ஒரு தலைவர் செய்கின்ற தவறை மன்னிக்கலாம். மூடிமறைக்க முற்பட்டால் வரலாறு எம்மீது பழிசுமத்தும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நூற்றாண்டு தின விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை டியூ.குணசேகர தலைமையில் நடைபெற்ற போது இணைப்பாட்சி தத்துவத்தில் ஈடு இணையற்ற புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து பேராசிரியர் சிறப்புரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்ட முடிவில் சுவிட்சர்லாந்து பேராசிரியருடன் கலந்துரையாடிய ஈழவேந்தன் கொல்வின் ஆர்.டி.சில்வா தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது;&lt;br /&gt;&lt;br /&gt;கொல்வின் ஆர்.டி.சில்வா ஆழ்ந்து படித்த மேதை - வரலாற்றாசிரியர். என்.எம்.பெரேராவுடன் இணைந்து இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பியவர். மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமைக்காக குரலெழுப்பியவர்.&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரலெழுப்பியவர். தொலைநோக்குடன் ஒரு மொழி எனில் இருநாடு, இருமொழி எனில் ஒரு நாடு என்ற சிந்தனையுடன் 1954 இல் அவர் எழுப்பிய குரலை நாம் மறந்துவிட முடியாது. மாறாக நன்றி உணர்வுடன் நினைவு கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அயர்லாந்து மக்கள் மீது ஆங்கிலத்தை திணித்த போது அதனை எதிர்த்து அந்த மக்கள் வாந்தியெடுத்தார்களோ அவ்வாறே சிங்களத்தை தமிழர் தொண்டைக்குள் திணித்தால் தமிழர் வாந்தியெடுப்பதும் உறுதியென்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கொல்வின் ஆர்.டி.சில்வா பெருந்தகை சோல்பரியின் அரசியல் யாப்பில் மாற்ற முடியாத விதி என்று கூறப்பட்ட 29 ஆவது விதியை நீக்கி தமிழர்களுக்கு துளியளவும் பாதுகாப்பாற்ற நிலைமையை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் 1972 இல் உருவாக்கிய வரும் இவரேயாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தனிச் சிங்களச் சட்டத்துடன் பௌத்த மதத்தை ஆளும் மதமாகவும் மாற்றியமைத்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவேயாவார். நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த செனட்டர் நடேசன், தமிழ் மக்களுக்கு உரிமை வழங்காவிடினும் உள்ளதையும் கெடுக்காதே என்று கெஞ்சிக் கேட்ட போது சாத்தியமானதை செய்வதே அரசியல் என்று கூறி இருந்த சலுகைகள் சிலதை இல்லாமல் செய்தவரும் கொல்வின் ஆர்.டி.சில்வாவே.&lt;br /&gt;எனவே தான் கொல்வினின் சட்டம் தமிழர்களை கொல்லும் சட்டம் என்று அப்போது எதிர்ப்புக்குரல்கள் எழுப்பியது என்றும் ஈழவேந்தன் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட விடயங்களை சுவிட்சர்லாந்து பேராசிரியருக்கு ஈழவேந்தன் சுட்டிக்காட்டிய போது; அரசியல் வாதிகள் பலர் சூழ்நிலையின் கைதிகளாக மாறி தடம்புரள்வது இயல்பு. டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் இந்த தவறுக்கு ஆளானார் எனத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடிக்கடி மறதிக்கு ஆளாகின்ற தமிழர்கள் மறதி தவறாதிருக்க வேண்டுமென்பதற்காகவே இச்செய்திகளை தெரிவிக்கின்றேன் என்றும் ஈழவேந்தன் அவரிடம் மீண்டும் சுட்டிக் காட்டினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தினக்குரல்..&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-3708813316828420488?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/3708813316828420488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=3708813316828420488&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3708813316828420488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/3708813316828420488'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/03/blog-post.html' title='தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-5915719839444577702</id><published>2007-02-22T12:28:00.000-05:00</published><updated>2007-02-22T12:33:12.415-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;5&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;strong&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார்  !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அழிவுகளையும் துயரங்களையும் தந்துகொண்டிருந்த கொடிய யுத்தத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுப்பதாக இந்த உடன்படிக்கை அமையுமென்ற நம்பிக்கை அது கைச்சாத்திடப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளாகவே அற்றுப்போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையிலிருப்பதாகவும் அதனைப் பேணிப் பாதுகாப்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இருதரப்பினரும் கூறிக்கொள்கின்ற போதிலும், அதற்கு முரணான நடவடிக்கைகள் எந்தவித தயக்கமுமின்றி முன்னெடுக்கப்படுவதைத்தான் தாராளமாகக் காணக்கூடியதாகவிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டவேளையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தவர் திருமதி சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அந்த எதிர்ப்புக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணமாக இருந்தது. அந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர் பதவி கவிழ்த்தார். அதன் பின்னர் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்துக் கொண்டபோது புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாகவே திருமதி குமாரதுங்க தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் இரட்டை அணுகுமுறையொன்றைத்தான் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை இது புலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர்கள் பின்னர் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மீது பற்றுறுதி கொண்டிருப்பதாக காட்டிக்கொண்டார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கின்றார். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்தார். "இந்த உடன்படிக்கையானது வரலாற்றில் ஒரு தவறு" என்ற நிலைப்பாட்டைத்தான் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், "புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதன் மூலமாக இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்" என ஜே.வி.பி. உட்பட இனவாத அமைப்புகள் கொடுக்கும் அழுத்தத்துக்கு அடிபணிய அவர் தயாராயில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவது சர்வதேச ரீதியாக பாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையும் என ஜனாதிபதி ராஜபக்ஷ கருதுகின்றார்போலும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு போராளி அமைப்பு ஐந்து வருட காலமாக உடன்படிக்கை ஒன்றை பாதுகாக்கும் நிலையில், அரசாங்கம் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது சமாதானத்தில் அதற்கிருப்பதாக சர்வதேச சமூகம் இன்னமும் நம்பும் பற்றுறுதியைக் கேள்விக்குறியாக்குவதாக அமையலாம். அத்துடன், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிவதென்பது சமாதானத்துக்கான கதவை மூடிவிடுவதாகக் கருதப்படும் என்பதும் இதற்கான மற்றொரு காரணம். அதாவது, சமாதானத்தில் நம்பிக்கை வைத்து அதற்காக செயற்படுவதாகக் காட்டிக்கொள்ள வேண்டுமாயின், புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட முடியாது! ஆக, அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிழித்தெறியும் முடிவை அரசாங்கம் எடுக்கப்போவதில்லை எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கையை செயலற்றதாக்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு கணிசமானதாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள் குடியேற்றம், பொதுக் கூட்டங்களிலிருந்து படையினரது வெளியேற்றம், துணைப் படைகளின் ஆயுதக்களைவு மற்றும் அவை செயலிழக்கச் செய்யப்படுதல் என்பன எழுத்தில் மட்டுமே உள்ளன. இவற்றைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை.&lt;br /&gt;இதனைவிட, கட்டுப்பாட்டு எல்லைகள் பேணப்பட வேண்டும் என்பது புரிந்துணர்வு உடன்படிக்கையில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சம்பூர், வாகரை ஆகிய பிரதேசங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது காணப்பட்ட இராணுவச் சமநிலை இதன்மூலம் மாற்றமடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத் தாக்குதல்கள் போர் நிறுத்த விதிகளுக்கு முரணானதாக இருக்கின்றபோதிலும், அவை பெருமெடுப்பில் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான ஒரே தரைவழிப் பாதையான ஏ-9 பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துவிடப்பட வேண்டும் என புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும், கடந்த ஆறு மாதகாலமாக அது மூடப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள், தடுத்துவைத்தல் என்பன மேற்கொள்ள முடியாது என்பதாகும். ஆனால், இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எழுந்தமான கைதுகளும், விசாரணையற்ற தடுத்து வைத்தல்களும் தாராளமாக இடம்பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலுள்ள அனைத்து அம்சங்களுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை அல்லது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி 14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இரு தரப்பும் தயாராகவே இருக்கின்றது. கண்காணிப்புக் குழுவும் செயலிழந்து போயிருக்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அதிகளவில் காணப்பட்ட சர்வதேச சமூகத்தின் அக்கறைதான் அதில் பெருமளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. நிரந்தரமான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது பொய்த்துப் போய்விட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் எந்தவொரு அம்சமுமே நடைமுறைப்படுத்தப்படாத நிலைதான் இன்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;இதன் தோல்விக்கான பொறுப்பை சர்வதேச சமூகம் இலகுவில் தட்டிக் கழித்துவிட முடியாது. &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-5915719839444577702?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/5915719839444577702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=5915719839444577702&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5915719839444577702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/5915719839444577702'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/02/5.html' title='5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-2003804260525468042</id><published>2007-02-10T12:38:00.000-05:00</published><updated>2008-12-11T13:35:21.189-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/Rc4DSexocII/AAAAAAAAAAM/_v6qPCGBFpE/s1600-h/oru-radio-ad-1.jpe"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5029961449853186178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/Rc4DSexocII/AAAAAAAAAAM/_v6qPCGBFpE/s320/oru-radio-ad-1.jpe" border="0" /&gt;&lt;/a&gt; ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து&lt;br /&gt;வெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய வானொலி&lt;br /&gt;லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பர் என்ற அவர்களது&lt;br /&gt;பத்திரிகை பெயரினைப் போலவே வானொலிக்கும் ஒரு ரேடியோ என்று&lt;br /&gt;பெயரிட்டுள்ளனர். பேச்சுவழக்கிலே பத்திரிகையினை வெளியிட்டு ஆரம்பத்தில் எதிர்ப்பினை சந்தித்தாலும் பின்னர் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதைப் போல வானொலியிலும் முற்று முழுதாக பேச்சு தமிழினை கொண்டுவருவார்கள் என்பதனை நம்பலாம்.அவர்களின் பத்திரிகையினைப் போலவே வானொலியும் தரமானதை கொண்டுவரும்&lt;br /&gt;எண்டு நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஒரு பேப்பரினை வீட்டுக்கு கொண்டுபோவது வடை ,ரோல்ஸ் என்பவற்றில் இருக்கும் எண்ணையினை ஒற்றுவதற்காக ,ஏனெனில் ஒரு&lt;br /&gt;பேப்பர் பத்திரிகை தாள்கள் நல்லா எண்ணையினை ஒற்றுதாம் என்று&lt;br /&gt;யதார்த்தத்தினையும் சமூகத்தினையும் கிண்டலடிக்கும் ஒரு பேப்பர்காரர்களின் "ஒரு ரேடியோ" விளம்பரம் இப்படி சொல்லுகிறது.&lt;br /&gt;பேச ,கதைக்க,குரைக்க ,கனைக்க ஒரு ரேடியோ.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமாக செய்பவர்கள்,யோசிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.அந்தவகையில் வித்தியாசமாக செய்வோம் என்று ப்ல வானொலிகள் இருக்கும் களத்தில் இறங்கி இருக்கும் ஒரு ரேடியோகாரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேடியோ கேட்க:-&lt;a href="http://www.oruradio.com/"&gt;http://www.oruradio.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொசுறு:-&lt;br /&gt;&lt;br /&gt;எனது பக்கத்து வீட்டுக்காரர் சில நாட்களாக காரில் இருந்து இறங்கும்போது நிறைய தமிழ் பத்திரிகைகளை கொண்டு போறதை&lt;br /&gt;பாத்தன். நேற்று அவற்றை வீட்டை போகவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. பாத்தன் அவரின் லோண்றி ரூம் முழுக்க கனடாவில் வெளிவரும் ஒரு&lt;br /&gt;பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை. 120 பக்கம் கொண்ட அந்தபத்திரிகையில்&lt;br /&gt;7,8 பக்கம் தான் ஏதாவது விசியம் வரும் அதுவும் இணையத்தில் இருந்து&lt;br /&gt;உருவியது.மிகுதி முழுவது விளம்பரம்,விளம்பரம். 10 பக்கத்தில் முழுக்க முழுக்க முழுப்பக்க மரணஅறிவித்தல்கள். இந்த பத்திரிகைக்கு எனது நண்பர்கள் வட்டாரத்தில் செத்தவீட்டு பத்திரிகை என்ற பட்ட பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இதைநிறைய அடுக்கி வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ,அவரிடமே&lt;br /&gt;கேட்டேன்.ஏன் அங்கிள் பத்திரிகை டெலிவறி செய்யுறீங்களோ? ரூம் நிறைய&lt;br /&gt;பேப்பராய் இருக்கு. அவரின் பதில் இல்லை தம்பி நாங்கள் எல்லோ இப்ப&lt;br /&gt;ஒரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறோம்.எனக்கு ஒண்டும் புரியவில்லை&lt;br /&gt;நாய்க்குட்டி வாங்கினதுக்கும் பத்திரிகைகள் ரூம் முழுக்க அடுக்கி வைத்திருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?இல்லை தம்பி இது குட்டி நாய் தானே கக்கா இருக்கிறதுக்கு இப்பதான் பழகிறார்.4,5 பத்திரிகை தாள்களை ஒரு மூலையில்&lt;br /&gt;போட்டால் அவர் அதில கக்கா இருப்பார்.அதுக்கு தான் இந்த பத்திரிகைகளை&lt;br /&gt;ஒவ்வொரு கிழமையும் கொண்டுவாரனான்.நான் மூச்...........&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-2003804260525468042?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/2003804260525468042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=2003804260525468042&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2003804260525468042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/2003804260525468042'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/02/blog-post_10.html' title='&quot;ஒரு பேப்பர்&quot;காரர்களின் &quot;ஒரு ரேடியோ&quot;'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9UKPXrzV184/Rc4DSexocII/AAAAAAAAAAM/_v6qPCGBFpE/s72-c/oru-radio-ad-1.jpe' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-4631074089722166417</id><published>2007-02-06T01:00:00.000-05:00</published><updated>2007-02-06T01:04:47.020-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்.'/><title type='text'>அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;em&gt;வி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;டுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ்ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் புதிய சர்வதேச ""குரலாக'' திருமதி அடேல் விளங்குவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் அது குறித்து அவர் தமது கருத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்றும் "த டெய்லி டெலிகிராப்' குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் திருமதி அடேல், தமது கணவர் அன்ரன் பாலசிங்கம் வகித்த பதவியை ஏற்றுப் பணியாற்றுவார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் அவரைக் கைது செய்யுமாறு ஸ்ரீ லங்காவின் ராஜதந்திரிகள் பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.எனினும் 57 வயதான திருமதி அடேல் பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் நீண்டகால தீவிர ஆதரவாளர் என்பதாலும் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையிலும் கணவருடன் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் பணியாற்றுவதில் மிகுந்த அனுபவம் உள்ளவர் என்ற வகையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருக்குக் குறிப்பிடத்தக்க இடமொன்று உண்டு என்று புலிகளுக்கு நெருங்கிய வட் டாரங்கள் கருதுவதாகவும் "த டெய்லி கிராப்' தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உதயன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-4631074089722166417?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/4631074089722166417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=4631074089722166417&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4631074089722166417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4631074089722166417'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/02/blog-post_06.html' title='அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-7950478702667041671</id><published>2007-02-04T20:17:00.000-05:00</published><updated>2007-02-04T20:27:03.567-05:00</updated><title type='text'>சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்</title><content type='html'>எனது இந்த பதிவில் இனி சுப்புஅம்மானும்,சுப்புக்குட்டியும் இடையிடையேசந்தித்து கதைக்க போகிறார்கள்.பல்வேறுபட்ட பல விடையங்களை அவர்கள்கதைப்பார்கள். நகைச்சுவையுடன் அதே நேரம் சிந்திக்க வைக்ககூடியதாகவும்அவர்களின் உரையாடல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணத்தில் உதித்து சில மாதங்களேஆன ,முதன்முதலாக வலையேறும் சுப்பு அம்மானையும் சுப்புக்குட்டியையும்வரவேற்க நீங்கள் தயாரா? சரி ,சரி கைதட்டியது போதும்.இன்றைக்கு அவர்கள் கதைக்கும் விடையம் அரசியலாக இருந்தாலும்தொடர்ந்து பல்வேரு விடையங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்..இதோ சுப்பு அம்மானும் சுப்புக்குட்டியும் இணைந்து கலக்கும்.................................... என்ன பெயரை வைக்கலாம் என்பது உங்களிடமே விட்டுவிடுகிறேன்.ஒரு பெயரை முன்மொழியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் கரிகாலன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v296/kukan/suppu.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;/a&gt;சுப்புக்குட்டி:-வணக்கம் அம்மான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:-வணக்கம்டா மோனை.எங்க துலையாலையோ?&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:-இல்லை அம்மான் சும்மா ஒரு தேத்தண்ணி குடிப்பம் எண்டு வந்தனான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:-இல்லையடா மோனை நீ அடிக்கடி அம்மான் அம்மான் எண்டு கூப்பிட எனக்கொரு விசியம் எல்லோ ஞாபகத்துக்கு வருது.அம்மான் எண்டு யாரை சொல்லுறது எண்டு தெரியுமோ. அந்த காலங்களில அப்பு,ஆச்சி ,குஞ்சிஅப்பு எண்டு கூப்பிட்ட காலங்களில தாயின்னரை சகோதரங்களை தான் அம்மான் எண்டு சொல்லுறது.அனால் இப்ப சிலதுகள் அம்மான் எண்டால்அது இது எண்டு கரடிவிட்டுக்கொண்டிருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:- அம்மான் நீங்கள் சந்தடி சாக்கில எங்கேயோ அம்பு விடுறீங்கள் போல கிடக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:- அதை விடு மோனை.. என்ன மோனை புதினங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சு.குட்டி:-எங்கடை ரணிலார் எல்லோ நேபாளம் போயிருந்தவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:-எட மோனை அவர் அங்க என்னத்துக்கடா மோனை போனவராம்.?எங்கடை அரசியல் வாதிகள் அங்கை எல்லாம் போகமாட்டினமே.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:-நேபாளத்திலே சண்டைஎல்லாம் முடிஞ்சு போச்செல்லே அம்மான்.அதுதான் அங்கை ஒரு மகாநாடாம் இலங்கையின் அனுபவத்தின் அடிப்படையில் மோதலின் பின்னரான பொருளாதார முகாமைத்துவம்எண்ட தலைப்பிலே.அதுக்கு தான் ரணிலை கூப்பிடவையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புஅம்மான்:-அடிடா எண்டானாம் புறப்படலையிலை.சரி,சரி அவர் அங்கை என்ன சொன்னவராம்?&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:-நேபாளம் முன்னேற வேண்டும் எண்டால் நாடும் அதன் மக்களும் ஒற்றுமைப்படவேண்டும் எண்டும் நேபளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என்றும் வேற பல விசியங்களையும் சொன்னவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:- எனக்கெண்டா சிரிப்புதான் வருதடா தம்பி.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வைகுண்டம் ஏறி... எண்டெண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே.தன்ரை நாட்டிலே,நாட்டையே சீரழிக்கும் இனப்பிரச்சனையையே தீர்க்க மனதில்லாதவர்கள் அடுத்த நாட்டுக்கு போய் அவர்களுக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா சிரிப்பு சிரிப்பு தான் வருது. ஊருக்கு தான் உபதேசம் உனக்கு இல்லையடி பெண்ணே எண்டதுதான் எனக்கு ஞாபகம் வந்து துலைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு குட்டி:- கூப்பிட்டவர்களை தான் சொல்லவேணும்.அம்மான் நீங்கள் நீங்கள் சிரிப்பா சிரிக்க எண்டு சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது இவர் இப்படி வெளிநாட்டில இருக்க இவரின் கட்சியிலை இருந்து 17 பேர் எல்லோ கூண்டோட கட்சி மாறிட்டினம்.கட்சி மாறினதுமல்லாமல் எல்லாருக்கும் அமைச்சு பதவிகள் நாடே சிரிப்பா சிரிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:- இப்ப இலங்கையின்னரை அமைச்சரவையயை பாத்தியே தம்பி 107 பேர்.2 கோடி பேர் இருக்கிற ஒரு நாட்டுக்கு 107 அமைச்சர்கள் எண்டால் ,இனி அவயின்றை சம்பளம்,கிம்பளம் எண்டு எவ்வளவு செலவுகள் பாத்தியேடா மோனை. பதவியாசை எப்படி எல்லாம் மனுசரை ஆட்டுது பாத்தியோ தம்பி. முந்தின காலங்களிலே எல்லாம் தொண்டமானின்றை கட்சி மட்டும்தான் யார் ஆட்சிக்கு வரீனமோ அவரோடை கூட்டு வைக்கும்.அதிகாரத்தில் இருந்தால் தான் தனது ம்க்களுக்கு எதாவது? நன்மை செய்யலாம் எண்டு.இதிலே கண்டியோ ஆருக்கு நன்மை எண்டு சொல்லாமலே தெரியும் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு குட்டி:-ஓம் அம்மான் இண்டைக்கும் அந்த மலையக மக்கள் கல்விஅறிவு பெறாமல் ,சரியான வீட்டு வசதிகூட இல்லாமல்,குடிக்கும்,சினிமாவுக்கும் அடிமையாக இருப்பதற்கே காரணமே மேற்படி தலைவர்கள் தான்&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பு அம்மான்:-இப்படி இருந்த இலங்கையில் இப்ப பிரதான எதிர்க்கட்சியில் இருந்தே கட்சி தாவுறாங்கள் எண்டால் இலங்கை அரசியல் எப்படி சாக்கடையா போட்டுது பாத்திட்டியோ?இலங்கையிலே பெரும்பாலான அரசியல் வாதிகள் சட்டத்தரணிகள்,படித்தவர்கள் இருந்தும் அதிகார போதை அவங்களை எப்பிடி ஆட்டுது பாத்தியோ?இதில இரண்டு பேர் மகிந்தவை கடுமையா விமர்சித்தவை&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:-இப்பிடி வர்றவைக்கு எல்லாம் பதவி குடுத்தால் மகிந்தற்றை கட்சிக்குள்ள பிரச்சனை வராதோ அம்மான்.சு.அம்மான்:-ஏன் வராது? இப்பவே புகைச்சல் கிளம்பிட்டுது எண்டு லேசுபாசா கதை வருது.ஜே.வி.பி காரங்கள் வேற முறுக்கிக்கொண்டு நிக்கினம் பாப்பம் என்ன நடக்குதெண்டு.சில வேளை இலக்சன் வந்தாலும் வரும் கண்டியோ.&lt;br /&gt;&lt;br /&gt;சுப்புக்குட்டி:- சரி, அம்மான் வீட்டை போகவேணும் பிறகு சந்திப்பம் என்ன?சுப்பு அம்மான்:- ஓமடா தம்பி பிறகு சந்திப்பம் என்ன?&lt;br /&gt;சு.குட்டி:- ஓமோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-7950478702667041671?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/7950478702667041671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=7950478702667041671&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7950478702667041671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/7950478702667041671'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/02/blog-post.html' title='சுப்புஅம்மானும் ,சுப்புகுட்டியும்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-4991497541261860738</id><published>2007-01-29T13:52:00.000-05:00</published><updated>2007-01-29T13:55:45.931-05:00</updated><title type='text'>ஆத்தா புது ப்ளாக்கரில் சேந்திட்டேன்.</title><content type='html'>பாம்பு தின்ற ஊருக்கு போனால் நடு முறி எனக்கு என்பது பெரியோர் சொன்ன வாக்கு அதற்க்கு இணங்க நானும் புது ப்ளாக்கரில் ஜக்கியம்&lt;br /&gt;ஆகிவிட்டேன்.இனி  தமிழ்மணத்திலும் பிரச்ச்னை இல்லாமல் எல்லாம்&lt;br /&gt;நல்லபடி நடக்கும் என்று நம்புகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-4991497541261860738?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/4991497541261860738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=4991497541261860738&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4991497541261860738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/4991497541261860738'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/01/blog-post_9490.html' title='ஆத்தா புது ப்ளாக்கரில் சேந்திட்டேன்.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116966316173904936</id><published>2007-01-24T13:19:00.000-05:00</published><updated>2007-01-24T13:26:01.770-05:00</updated><title type='text'>ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் புலிகளைப் பணிய வைக்குமா?</title><content type='html'>எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது.ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அர சியல் முதிர்ச்சியற்ற சாத்தியமற்ற ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பட்ட அணுகு முறையைத்தான் சிங்கள ஆட்சிப் பீடம், இவ் விடயத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரு கின்றது என்பதை ஏற்கனவே இப்பத்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கி விடும் இராணுவக் கெடுபிடிப் போக்கு. மறுபுறம் சமா தான வழித் தீர்வு குறித்து பிரபலாபம். இதுவே சிங்களத்தின் இரட்டை வேட அணுமுறை.கடந்த காலக் கொழும்பு அரசுகளால் தீவிர முயற்சியுடன் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வி கண்ட தந்திரோபாயம் இது என்ற உண்மையைக் கவனத்தில் கொள்ளாது, அதே பாணியைப் பின்பற்ற மஹிந்தரின் அரசும் முயல்கின்றது.விடுதலைக்கான உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயம் பெறு வதற்கான தமிழரின் போராட்டம், ஆயுத வழிக் குத் திரும் பியுள்ள இன்றைய சூழலில் அந்த வழியிலேயே தீர்வையும் தனக்கு விருப்பமான முடிவையும் தமிழர் தரப்பு மீது திணிக்க முயல் கிறது தற்போதைய அரசு. தமிழரின் அரசியல் தலைவிதியை, படை பலத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ண யிப்பதற்கு, இந்த அரசு முயன்று வருகின்றது என்பதைக் கடந்த வாரம் இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிடுவதே அரசின் திட்டம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தோம். அக்கருத்துக்களை ஊர்ஜிதம் செய்வது போன்று, இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் அறிவிப்பு அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கில் கணிசமான பகுதியைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுக் கைப்பற்றிய பின்னர் வாகரை வெற்றியை அடுத்து இறுமாப்புடன் இந்த அறிவிப்பை அவர் விடுத்திருக்கின்றார்.மோதல்களை நிறுத்தி, பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குப் புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மென்மேலும் சண் டைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியி ருக்கும். என்று எச்சரித்திருக்கின்றார் அவர்.யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே அந்த ஒப்பந்தப்படி ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் மற்றத் தரப்பு, படை நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற தெளிவான ஏற்பாடு இருக்கத் தக்கதாகவே கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளைப் படை நடவடிக்கை மூலம் விரட்டி, அப்புறப்படுத்தி விட்டு இந்த அறிவிப்பை அரசு விடுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னைய சிங்கள அரசுகள், இதே போன்ற தந்திரத்தைக் கையாண்டு பெற்ற அனுபவம் என்னவென்பது மறக்கப்பட்ட சரித்திரம் அல்ல.இலங்கை யுத்தக் களத்தில் படைவலுச் சம நிலை, காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருப்பதும், ஒரே சமச்சீர் நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிப்பதில்லை என்பதும் அனுபவப் பாடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டு மாதங்களாக ஜெயசிக்குறு இரா ணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்புக்குச் சாதகமாக மேம்பட்டிருந்த படைச் சமவலு நிலை, திடீரெனப் பதினெட்டு மணித்தியாலங்களில் தலைகீழாக மாறியமை மறுக்கப்படக் கூடியதல்ல. அது போல, கட்டு நாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் விமான நிலையம் மீதான அதிரடித் தாக்குதலினால், ஒரு சில மணி நேரத்தில் படை வலுச் சமநிலை தலைகீழானதும் நினைவுகொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழ்நிலையில் பாரிய படைக் கலச் சக்தியையும், சுடுகல வலுவையும் பயன் படுத்தி, புதிய புதிய படையெடுப்புகளை நடத்தி, தமிழர் மண்ணை ரணகளமாக்கி விட்டு, உடன் பேச்சுக்கு வராவிட்டால் இது போன்ற மென்மேலும் பல விபரீதங்களை எதிர்கொள்ள நேரும் என்று தமிழர் தரப்பை எச்சரிப்பதால் உருப்படியாக நடைபெறப்போவது எதுவுமில்லை.இராணுவச் சமநிலை நிலையில் வீழ்ச்சி அல்லது பின்னடைவு கண்ட நிலையில், பேச் சுக்கு அமைதி வழித் தீர்வுக்கு புலிகள் இறங்கி வந்தனர் என்று கூறுவதற்கும் கடந்த காலங் களில் எந்தப் பதிவோ அன்றி உதாரணமோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையும், அதை அச்சுறுத்தலாகக் காட்டி பேச்சுக்கு மசிய வைக்கும் மடக்கிப் போடும் மிரட்டல் தந்திரமும் புலிகள் விடயத்தில் பயன் தருமா என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய நெருக்குதல் போக்கு அல்லது அழுத்த நடவடிக்கை, அமைதி எத்தனங்களில் இருந்து இரு தரப்புகளையும் மேலும் மேலும் விலத்திப்போக வைத்துப் பகையுறவையும், விரோத மனப்பான்மையையுமே வளர்க்கும். அதன் விளைவு மோசமானதாகவும், விபரீத மானதாகவும் அமையும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைப் பட்டறியவும் காலம் அதிகம் செல்லாது என்பதும் கடந்தகால அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;-uthayan-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116966316173904936?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116966316173904936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116966316173904936&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116966316173904936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116966316173904936'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/01/blog-post_24.html' title='ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் புலிகளைப் பணிய வைக்குமா?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116883573062201339</id><published>2007-01-14T23:22:00.000-05:00</published><updated>2007-01-14T23:35:30.646-05:00</updated><title type='text'>இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!</title><content type='html'>உலகெங்கும் பரந்து வாழும் என் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது&lt;br /&gt;தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பனி படர்ந்த தெருக்களில் கால்கள் நடந்தாலும் மனம் மட்டும் மண் புழுதி&lt;br /&gt;நிறைந்த தெருக்களில் நடந்ததையே நினைக்கிறதே"&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியின்   அதிகாலை விடியல் பொழுது புகைப்படத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v296/kukan/pongal.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரிகாலன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116883573062201339?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116883573062201339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116883573062201339&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116883573062201339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116883573062201339'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2007/01/blog-post.html' title='இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116697241683387007</id><published>2006-12-24T09:54:00.000-05:00</published><updated>2006-12-26T00:07:26.153-05:00</updated><title type='text'>நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.......</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:180%;"&gt;எ&lt;/span&gt;ன் மனதினை கவர்ந்த பாடல்களில் ஒன்று.பாண்டவர் பூமி படத்தில் யுகேந்திரன் மற்றும் சித்திரா சிவராமன் பாடிய ஒரு அழகிய பாடல்.&lt;/p&gt;&lt;p&gt;கேட்டு ரசியுங்களேன் நீங்களும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;object codebase="http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=" height="100" width="250" classid="clsid:6BF52A52-394A-11D3-B153-00C04F79FAA6"&gt;&lt;param name="URL" value="http://karikaalan.tripod.com/mymusic/Track_13.wma"&gt;&lt;param name="rate" value="1"&gt;&lt;param name="balance" value="0"&gt;&lt;param name="currentPosition" value="0"&gt;&lt;param name="defaultFrame" value=""&gt;&lt;param name="playCount" value="1"&gt;&lt;param name="autoStart" value="-1"&gt;&lt;param name="currentMarker" value="0"&gt;&lt;param name="invokeURLs" value="-1"&gt;&lt;param name="baseURL" value=""&gt;&lt;param name="volume" value="50"&gt;&lt;param name="mute" value="0"&gt;&lt;param name="uiMode" value="full"&gt;&lt;param name="stretchToFit" value="0"&gt;&lt;param name="windowlessVideo" value="0"&gt;&lt;param name="enabled" value="-1"&gt;&lt;param name="enableContextMenu" value="-1"&gt;&lt;param name="fullScreen" value="0"&gt;&lt;param name="SAMIStyle" value=""&gt;&lt;param name="SAMILang" value=""&gt;&lt;param name="SAMIFilename" value=""&gt;&lt;param name="captioningID" value=""&gt;&lt;param name="enableErrorDialogs" value="0"&gt;&lt;param name="_cx" value="6615"&gt;&lt;param name="_cy" value="2646"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;embed type="application/x-mplayer2" src="http://karikaalan.tripod.com/mymusic/Track_13.wma" width="250" height="100"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116697241683387007?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116697241683387007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116697241683387007&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116697241683387007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116697241683387007'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_24.html' title='நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.......'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116603476333703644</id><published>2006-12-13T13:27:00.000-05:00</published><updated>2006-12-13T13:35:12.863-05:00</updated><title type='text'>தமிழ் குடில் -- இணைய வானொலி.</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;நீ&lt;/span&gt;ண்ட நாட்களாக உறை நிலையில் இருந்த "தமிழ் குடில்" இணைய வானொலி நவம்பர் 27 முதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழால் உலகளக்க" தரணியெங்கும் முழங்கும் தமிழ் குடில் இணைய வானொலி தற்போது பதிவு செய்யப்பட்ட பல நிகழ்சிகளை வழங்கிவருகிறது.சித்திரைப் புத்தாண்டிலிருந்து பல்வேறுபட்ட பல நிகழ்சிகளை படைக்க இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னலுறும் மக்களினதும் தமிழ் தேசியத்தின் பால் பற்றுக்கொண்ட இவ்வானொலியின் உருவாக்கத்தில் திரு அ.மனோகரன்,அமல்ராஜ்,இல .சஞ்சீவ்கான்,ரி.ஞானரட்ணசிங்கம் மற்றும் ஏ.சி.தாசீசியஸ் போன்றோர் பங்களித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் விரும்பினால் இவ் வானொலியுடன் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilkudil.com/kudil/index.php?option=com_content&amp;task=view&amp;amp;id=23&amp;Itemid=9"&gt;தமிழ்குடில் இணைய வானொலி பற்றிய விளக்கம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் குடில் வானொலியின் அண்மைய அலசல் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilkudil.com/kudil/index.php?option=com_content&amp;amp;task=view&amp;id=116&amp;amp;Itemid=40"&gt;குட்டக் குட்டக் கணக்க குனிந்து விட்டோமோ&lt;/a&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116603476333703644?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116603476333703644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116603476333703644&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116603476333703644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116603476333703644'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_13.html' title='தமிழ் குடில் -- இணைய வானொலி.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116590915820328271</id><published>2006-12-12T02:34:00.000-05:00</published><updated>2006-12-15T06:23:31.056-05:00</updated><title type='text'>வல்லவன்.-மலேசியாவிலிருந்து தமிழ் குரல்</title><content type='html'>மலேசிய தமிழ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "வல்லவன்" ஒளித்தட்டில் இருந்து&lt;br /&gt;இந்தப் பாடல்.எப்படி பாடல்? ரசித்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7TVgGsIuLYU"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7TVgGsIuLYU" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116590915820328271?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116590915820328271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116590915820328271&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116590915820328271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116590915820328271'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_116590915820328271.html' title='வல்லவன்.-மலேசியாவிலிருந்து தமிழ் குரல்'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116569773508630494</id><published>2006-12-09T15:38:00.000-05:00</published><updated>2006-12-09T19:35:05.693-05:00</updated><title type='text'>நான் ஒரு தடவை சொன்னா................</title><content type='html'>எனது மனதில் எழும் கருத்துக்களைப்  மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த "என் மனவெளியில்" வலைப்பதிவினை ஆரம்பித்தேன். கருத்துக்களை பகிர ஆரம்பித்தது கடைசியில் வெட்டி ஒட்டும்&lt;br /&gt;வேலையினை தான் நீண்ட காலமாக செய்யமுடிந்தது. சரி 2006 ம் முடிகிறது. புதிய 2007 ம் ஆண்டிலிருந்து எனது  சொந்த ??கருத்துக்களை எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து&lt;br /&gt;கொள்ளலாம் என எண்ணுகிறேன். இதிலும் அரசியல் கண்டிப்பாக வரும்.&lt;br /&gt;அரசியலையும் கரிகாலனையும் பிரிப்பது கடினம். இருந்தாலும் பல்வேறு பட்ட விடயங்கள் தரலாம் என்று நினைக்கிறேன்.நான் தயார் நீங்கள்&lt;br /&gt;தயாரா? ( இதுக்கொண்டும் குறைச்சல் இல்லை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதத்தில் இருந்து பல விடயங்கள் வலையேறலாம். இருந்தாலும் வருட தொடக்கத்தில் நாட்குறிப்பு எழுதத்தொடங்கி 4,5 மாதத்துக்கு பின்பு வெற்றுத்&lt;br /&gt;தாள்கள் ஆகிவிடுவதைப் போல அல்லாமல் போக வேண்டும் என்று&lt;br /&gt;நானும் பிரார்த்திக்கிறேன் நீங்களும் பிராரத்திக்கவும் ( தலையெழுத்தா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116569773508630494?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116569773508630494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116569773508630494&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116569773508630494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116569773508630494'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_116569773508630494.html' title='நான் ஒரு தடவை சொன்னா................'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116568524276011909</id><published>2006-12-09T12:12:00.000-05:00</published><updated>2006-12-09T14:07:28.500-05:00</updated><title type='text'>சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.</title><content type='html'>சில செய்திகளை படித்தால் சுவரில் தலையை முட்டவேண்டும் போல்&lt;br /&gt;இருக்கும் அப்படி ஒரு செய்திப்பதிவை சில நிமிடங்களுக்கு முன்னர் படிக்க&lt;br /&gt;நேர்ந்தது.சில ஊர்க்குருவிகளுக்கு தாம்  பருந்தாக வேண்டும் என்ற எண்ணம்.&lt;br /&gt;ஆனால் என்னதான் உயரப்பறந்தாலும்  ஊர்க்குருவி பருந்தாக முடியாது.&lt;br /&gt;அதே போல ஊர்க்குருவியை பருந்தாக்க நினைப்பவர்களாலும் முடியாது.&lt;br /&gt;சரி அவர்களின் ஆசைக்கு விருப்புக்கு வலைப்பதிவிலாகட்டும் குருவியைப்&lt;br /&gt;பருந்தாக்கி மகிழ்ந்து கொள்ளட்டும்.  ஆனால் பலருடைய தலையிடியுடன். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116568524276011909?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116568524276011909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116568524276011909&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116568524276011909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116568524276011909'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post_09.html' title='சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது அண்ணை.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116516632846087518</id><published>2006-12-03T12:14:00.000-05:00</published><updated>2006-12-03T12:18:48.496-05:00</updated><title type='text'>யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?</title><content type='html'>யாழ் நகரில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படையினரின் தடைகள்! - &lt;br /&gt;&lt;br /&gt;(யாழின் மைந்தன்)/தினக்குரல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;em&gt;யா&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ழ்ப்பாண சமுதாயம் மூன்று சகாப்தமாக"போரின் வலி"யை தாங்கிய சமுதாயமாகவே இன்றும் உயர்ந்து நிற்கின்றது. காலம் முழுவதும் பசி,பட்டினி, சாவு போன்ற கொடுமைகளுக்கு முகம் கொடுத்து, இனத்தின் விடுதலைக்காக தன்னைக்காவு கொடுத்து வருகின்றது. யாழ்ப்பாண மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், வாழும் நாடுகளில் எல்லாம், விடுதலையுணர்வுடனே வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கு அரசின் அடக்குமுறையால் நாளை என்ன நடக்கும் என்ற நினைவில் அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கச் சொன்னால் தினம் தினம் வரும் செய்திகள் அவர்களைத் தடுமாற வைத்துள்ளது. அரசாங்கம், யாழ்ப்பாண மக்களுக்கான பிரதான வழங்கல் பாதையை மூடிவிட்டு அம் மக்களை பட்டினிச்சாவில் தள்ளியுள்ளது. அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்து அவர்களை சொந்த மண்ணிலே சிறை வைத்துள்ளது. உறவைப் பிரிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதற்காக ஏங்கி நீண்ட நாட்களாக கண்ணீர் வடிக்கின்றனர். காலை எழுந்தவுடனே பெட்டி படுக்கையுடன் இன்று கப்பல் பயணம் கிட்டுமா, விமானப் பயணத்துக்கு யாரை நாட வேண்டுமென பசி பட்டினியுடன் திரிவது சர்வ சாதாரண நிகழ்வாகி விட்டது. எது வேண்டுமானாலும் தருகின்றோம் எங்களை அனுப்பி விடுங்கள் என கெஞ்சிக் கேட்பது யாருக்கு கேட்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் யாழ்ப்பாண மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை, உணவு மருந்து பரிசோதகர்கள் நிச்சயமாக வழங்க வேண்டாமென எச்சரிக்கை விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தப் பொருட்களை அரசாங்கத்துக்கு விற்பனை செய்பவர்கள் கொழும்பில் `குளுகுளு' அறைகளில் வாழும் யாழ்ப்பாண வியாபாரிகள் தான் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் காலம் காலமாக நாட்டரிசியை தமது மதிய உணவுக்கு பயன்படுத்தி வந்த கலாசாரம் அவர்களுடையது. தென்னிலங்கையில் ஒரு பிடி நாட்டரிசி கூட கிடைக்கவில்லையென்ற நினைப்பில், தரம் குறைந்த கோறா, சம்பா அரிசியையல்லவா யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.இந்த அரிசிச் சோற்றை உண்டு பழகாத மக்களுக்கு தினம் தினம் வயிற்றோட்டத்தால் வாடும் நிலையே காணப்படுகின்றது.இதுவரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேயிலை, தேயிலைத் தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையாக கிலோ முப்பது ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் தேயிலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு பிரிவினருக்கு, பாவிப்பதற்கு மணப்புச் சவர்க்காரம் யாழ்ப்பாண மக்களுக்கு சொறி சிரங்குள்ளவர்கள் என காபோலிக் அமிலம் சேர்த்த லைபோய்தான் என்கிறார்கள். சாக்குக் கணக்கில் "சோயாமீற்" என தரம் குறைந்த உணவுப் பொருளே பங்கீட்டுக்கு என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ். மாவட்டத்தில், ஒரு போதும் சூரியா தீப்பெட்டியைத் தவிர வேறு எந்த தீப்பெட்டியையும் வாங்க மாட்டார்கள். காரணம் மற்றைய தீப்பெட்டிகள் பற்றாது என்பது நம்பிக்கை, ஆனால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட தீப்பெட்டிகளோ இருபது குச்சுகள் கூட பற்றாது. ஆனால் அரசாங்கம் நானாவித பொருட்கள் தாராளமாக அனுப்புவதாக பிரசாரம் செய்கின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால் லீற்றர் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்ததால், அது கிடைக்குமா என நாய் போல் அலைந்து திரிவது எல்லோர் மனங்களையும் வருத்துவது யாருக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடாநாட்டில் அதிக மக்கள் நடமாடும் ஒரே நகரம் யாழ்ப்பாணம் தான். அதற்கும் முழுமையாக பாதுகாப்புப் பிரிவினர் வேட்டு வைத்து விட்டனர். முதலில் பிரதான வீதிகளில் இடைக்கிடை தடையைப் போட்டு மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர். எந்தவொரு வர்த்தக நிறுவனம் முன்னாலும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை நிறுத்தக் கூடாதென தடை விதித்தனர். உத்தரவை மீறியவர்களை தாக்கினர். இன்றைக்கு நகரமே சோபை இழக்கும் வகையில், திடீர் திடீரென யாழ்ப்பாண பஸ் நிலையத்தை புனரமைப்பதாகக் கூறி பேருந்து தரிப்பிடத்தை கழற்றி விட்டு பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் பண்ணைக்கு மாற்றப்பட்டு விட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது. இது நகருக்குள் நடமாடும் சகல மக்களுக்கும் ஆபத்து என்பதை சொல்லாமலே சொல்லியிருக்கிறார்கள். நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ மையங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அனுமானிக்கலாம். இது கோடிக்கணக்கான முதலீட்டை வைத்திருக்கும் நகர வர்த்தகர்களை தமது பொருட்களை நகரின் மத்தியில் இருந்து அகற்றுவதற்கு வழி செய்துள்ளது. அழுது புலம்புவதைத் தவிர வெள்ளம் வருமுன்னர் அணைகட்டுவது அவசியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரைப்பாதையைத் திறக்க வேண்டுமென இணைத் தலைமை நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் கூடிய நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு தீர்மானித்து அதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடிவு செய்தது. இந் நடவடிக்கைக்கு ஆதரவாக யாழ்ப்பாண சமுதாயம் முழுமுனைப்போடு செயல்பட்டது மட்டுமல்ல, அவ் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் பிரிவினர், இவ் வேலைத் திட்டத்தில் பங்கு கொண்ட இரு மதகுருமாரையும் பொது மக்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் விரோத உணர்வைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். இம் மதகுருமார் உண்மையில் அப்படி நடந்து கொண்டனரா என விசாரணை நடாத்தி வருகின்றது. துன்பப்படும் மக்களுக்காக நீதியை நிலைநாட்ட மதகுருமார் செயல்படுவது தேச விரோத குற்றம் என யாழ்ப்பாண சமுதாயம் அழுதுபுலம்புகின்றது.&lt;br /&gt;இதேவேளையில் யாழ்ப்பாண மாணவர் சமுதாயம் மீதும் கல்வியாளர்கள் மத்தியிலும் புதிதாக குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுமத்தி வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தவர்களை தவறாக மதிப்பிடுகிறார்கள் என்பதை இந் நடவடிக்கை காட்டுகின்றது.அதிபர்கள், குடாநாட்டில் இடம்பெறும் அவலங்களுக்கு மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருவதாக புதிய குற்றச்சாட்டு தோன்றி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நடுநிலையாக செய்திகளை வெளியிட்டு வரும் பத்திரிகை நிறுவனங்களையும் தங்கள் வழிகாட்டலில் தான் செய்திகளை பிரசுரிக்குமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது உலகமே வெறுக்கும், மியன்மார் இராணுவ ஆட்சி முறைக்கு யாழ்ப்பாணம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயகத்தை நேசிக்கும் யாழ். மக்கள் கருதுகின்றனர். குடாநாட்டில் விரைவில் "பத்திரிகை தணிக்கை" வரும் என்பதில் சந்தேகமில்லை. குடாநாடு பல தடவைகளில் செய்தித் தணிக்கைகளுக்குள் ஜனநாயகத்தின் குரலாக வெளிவந்த வரலாறு இருந்துதான் வந்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116516632846087518?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116516632846087518/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116516632846087518&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116516632846087518'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116516632846087518'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/12/blog-post.html' title='யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116357180407836679</id><published>2006-11-15T01:12:00.000-05:00</published><updated>2006-11-16T11:43:32.123-05:00</updated><title type='text'>அம்பலமாகும் இலங்கையின்" பொட்டுக்கேடு"</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;span style="color:#000000;"&gt;சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'&lt;/span&gt;!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;இ&lt;/span&gt;&lt;/strong&gt;லங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக். ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் தங் கள் படைக்குத் திரட்டுகின்றார்கள் என்று "ஆடு நனைகிறது எனக் கவலைப்பட்ட ஓநாய்கள்' போல முதலைக் கண்ணீர் வடித்த தென்னிலங்கை, இப்போது "தேள் கொட்டிய திருட னாக' துடிக்கின்றது. வயது குறைந்த தமிழ்ச் சிறுவர்களை விடுதலைப் புலி கள் படைக்குச் சேர்க்கிறார்கள் என்றுதான் இதுவரை குற்றச் சாட்டுக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இலங்கை அரசுப் படைகளோ தனது ஒட்டுப்படையான கருணா குழு மூலம் தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாக மடக்கிப் பிடித்து, கடத்திச் சென்று, படைக்குச் சேர்க்கின் றன என்ற உண்மையைச் சர்வதேச அமைப்பு இந்த விட யத்தில் உண்மையைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் தகுதியுடைய ஸ்தாபனம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகத் தென்னிலங்கை அரசின் போக்கு எத்தகையது, அதன் உண் மைச் சொரூபம் என்னவென்பவையெல்லாம், அதன் முகமூடி கிழிய இப்போது வரிசையாக அம்பலமாகத் தொடங்கிவிட் டன.&lt;br /&gt;&lt;br /&gt;1990 களில் யாழ். நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி அகதிகள் 170 இற்கும் அதிகமானோரை விமானக் குண்டு வீச்சு மூலம் கூண்டோடு கொன்றொழித்துவிட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று உண்மையைத் தென்னிலங்கை புதைகுழி தோண்டிப் புதைத் தமை போன்றதல்ல இப்போதைய நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;சீருடையினரின் இரும்பு வேலிகளைத் தாண்டி, மறைப்புகளைக் கடந்து, கொடூர நெருக்குவாரங்களை மீறி, உண்மைகளும், நிகழ்வுகளின் மூலங்களும் அம்பலமாகும் நிலைமைக்குத் தொழில் நுட்பமும், வசதிகளும் வளர்ந்துவிட்டன. அதனால், சத்தியத்துக்கு வேலி போட்டு மூடும் தென்னி லங்கை முயற்சி தோற்றுக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களைச் சுற்றி வளைத்து கருணா குழு பிடிப்பதற்கு கிழக்கில் அரச படைகள் எப்படி உதவுகின்றன, எவ்வாறு சிறுவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கின்றன, மடக்கிப் பிடிக்கப்படும் சிறுவர்கள் பல படை முகாம்கள் மற் றும் தடைநிலைகளைத் தாண்டி, பாதுகாப்பான இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறார்கள், அங்கு பலவந்தமாக ஒட்டுப்படைகளில் இணைத்து ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத் தப்படுகிறார்கள், இத்தகைய அராஜகம் குறித்துச் செய்யப்படும் முறைப்பாடு களை அரசும், அரசுப் படைகளும், பொலிஸும் எவ்வாறு உதாசீனம் செய்கின்றன என்று எல்லா விடயங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் அலன் றொக்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரங்களை நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துத் தாம் முறையிட்டார் எனவும், இது குறித்து முழு அளவில் விசாரணைகளை நடத்தி உண்மை களைக் கண்டறியவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் ஜனாதிபதி உறுதி யளித்தார் என்றும் கூட அலன் றொக் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த உறுதி வழக்கங்களில் சர்வதேச சமூகத் துக்கு ஏதோ நம்பிக்கையிருக்குமோ என்னமோ, ஆனால் தமி ழர் தரப்புக்கு நம்பிக்கையே கிஞ்சித்தும் கிடையாது. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வி.விக்னேஸ்வரனில் தொடங்கி ரவிராஜ் எம்.பி.படுகொலை வரை பல்வேறு அராஜகங்களுக்கு இவற்றில் பலவற்றுக்குக் குற்றச்சாட்டு விரல் அரசுப் படைகளை நோக்கி நீண்ட நிலையில் இத்தகைய நியாயமான விசாரணைகள் பற்றிய அறிவிப்புகள் ஜனாதிபதி மஹிந்தரின் திருவாயிலிருந்து வெளிப்பட்டமையையும் அவற்றினால் ஏற்பட்ட பலன் யாதுமில்லை என்பதை யும் "விசாரணை எனும் மாயமான்' எனும் தலைப்பில் நேற்று முன்தினம் இப்பத்தியில் விவரமாக விளக்கியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விடயத்தில் விசாரணை அறிவிப்புக்கும் அது அப் படியே பொருந்தும். இன்னொரு விடயம். சிறுவர்களைப் பலவந்தமாக மடக் கிப் பிடித்துக் கடத்திச் சென்று ஆயுதப் படையில் சேர்க்கும் இந்தத் திருகுதாளம் தமிழர்களுக்கு ஒன்றும் புதியதல்ல. 1988 1989 ஆம் ஆண்டுகளில் "அமைதிப்படை' என்ற பெயரில் இந்தியத் துருப்புகள் ஈழத் தமிழர் தாயகத்தை ஆக் கிரமித்திருந்த சமயத்தில், அந்தப் படைகளுடன் சேர்ந்து வந்த குழுக்களும் கூட இதே மாதிரி அராஜகம் புரிந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான பலவந்த கட்டாய ஆட்சேர்ப்பும், ஆயுதப்&lt;br /&gt;பயிற்சியும் சண்டை என வரும்போது எவ்வாறு பொல பொலத்து எதிர்ப்பக்கமாகத் திரும்பின என்பதை 1989 நவம் பர், டிசம்பர் மற்றும் 1990 ஜனவரி அனுபவங்கள் மூலம் இலங்கை கண்டறிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பட்டறிவிலிருந்து கற்ற பாடத்தை மறந்து, இராணுவத்தின் சதி வலையில் சிக்கி, அதே "மண் குதிரைத் திட்டத்தை' நம்பிப் போர் எனும் ஆற்றில் இறங்க முயலும் தரப்புகள் ஒன்றுக்கு இரண்டு தடவை இந்த உழுத் துப்போன முயற்சி குறித்து சிந்திப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி:-யாழ் உதயன் ஆசிரிய தலையங்கம் (14-11-2006)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;a id="idSiteMeterHREF" href="http://www.sitemeter.com/stats.asp?site=s22foruthweb" target="_top"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://s22.sitemeter.com/stats.asp?site=s22foruthweb" target="_top"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116357180407836679?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116357180407836679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116357180407836679&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116357180407836679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116357180407836679'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/11/blog-post_15.html' title='அம்பலமாகும் இலங்கையின்&quot; பொட்டுக்கேடு&quot;'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116326531234965415</id><published>2006-11-11T12:10:00.000-05:00</published><updated>2006-11-11T12:15:12.390-05:00</updated><title type='text'>பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கதிரவெளிப் பகுதியிலிருந்து புதன்கிழமை புலிகள் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* &lt;span style="color:#ff0000;"&gt;கண்காணிப்புக் குழு தெரிவிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை அரசாங்கமும் படைத் தரப்பும் கூறுவதுபோல் கடந்த புதன்கிழமை கதிரவெளிப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் படை முகாம்களை நோக்கித் தாக்குதல் எதனையும் நடத்தவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதுகுறித்து கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ் டொற்ரியர் கூறுகையில்; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கதிரவெளியில் படையினரின் கடுமையான தாக்குதலுக்கிலக்கான பாடசாலைப் பகுதியில் புலிகளின் முகாம்கள் எதுவுமிருக்கவில்லை.&lt;br /&gt;இதனை அந்தப் பகுதி மக்கள் உறுதிப்படுத்தியதுடன் அங்கு சென்ற கண்காணிப்புக் குழுவினரும் புலிகளின் முகாம்கள் எதனையும் காணவுமில்லை.&lt;br /&gt;புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால், புலிகள் தாக்குதல் நடத்தியதற்கான அறிகுறி எதுவுமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாடசாலையில் இருந்த அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் இந்தப் பாடசாலையின் மீதே தொடர்ச்சியாக ஷெல்கள் வீழ்ந்துள்ளன.&lt;br /&gt;அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எந்தத் தரப்பாயிருந்தாலும் அப்பாவி மக்களை இலக்கு வைப்பதை உடன் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;a href="http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm"&gt;http://www.thinakkural.com/news/2006/11/11/importantnews_page14977.htm&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7001936-116326531234965415?l=karikaalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karikaalan.blogspot.com/feeds/116326531234965415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7001936&amp;postID=116326531234965415&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116326531234965415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7001936/posts/default/116326531234965415'/><link rel='alternate' type='text/html' href='http://karikaalan.blogspot.com/2006/11/blog-post_11.html' title='பொய் சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டும்.'/><author><name>கரிகாலன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://img.photobucket.com/albums/v296/kukan/king.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7001936.post-116322238319262389</id><published>2006-11-11T00:05:00.000-05:00</published><updated>2006-11-13T02:10:03.696-05:00</updated><title type='text'>படுகொலை செய்யப்பட்ட தமிழ் M.Pயின் இறுதிப் பேட்டி.</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2716/409/1600/raviraj-10-11-2006-5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2716/409/320/raviraj-10-11-2006-5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2716/409/1600/RavirajMP.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2716/409/320/RavirajMP.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;சி&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;றிலங்கா தலைநகர் கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்கள் சிங்களத் தரப்பின் பொய்மைகளுக்கு விளக்கமான சாடல்கள் என ஆணித்தரமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"மாமனிதர்" ரவிராஜின் இறுதி நேர்காணல்":&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ-9 பாதை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இதனிடையே ஒக்ரோபர் 16 ஆம் நாள் வடக்கு - கிழக்கை பிரிக்க வேண்டும் என்று அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அந்தத் தீர்ப்பில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. எமக்கு அரசியல் பிரச்சனை உள்ளது. வடக்கு -கிழக்கு மக்கள் இணைந்தே வாழ்கின்றனர். வடக்கு கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் அபிலாசையாகும். அந்த மக்களினது அடிப்படை மனித உரிமையும் அதுதான்.&lt;br /&gt;முன்னைய காலத்தில் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் அரசுகள் இருந்தன. எங்கள் மக்களுக்கு இது புதியது அல்ல. வடக்கு - கிழக்கு பிரதேசங்கள் முன்னைய காலத்திலேயே தமிழ் பகுதிகளாக இருக்கின்றன. அதற்காக நாம் இந்த நாட்டை பிரிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. வடக்கு கிழக்கு ஒரே அலகாக கருதப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படும் நிலையில் அதுதான் அடிப்படையானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடு பிரிக்கப்படக்கூடாது என்று ஏன் நீங்கள் சொல்லுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இந்த நாடு பிரிக்கப்படாமல் இருக்கும்போது மக்களின் உணர்வுகள் வலுவானதாக இருக்கும் என கருதுகிறீர்கள். அதேபோல் வடக்கு - கிழக்கு இணைந்து இருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களுக்கு வலுவானதாக கருதுகின்றனர். தங்களது அபிலாசைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக அது இருக்கும். இரு மாகாணங்களும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் ஒற்றையாட்சி அரசாங்கக் கோட்பாடு என்பது நீண்டகாலமாக ஏற்கப்படாதது. அது பழைய நடைமுறை. அது இன்று செல்லுபடியாகாதது. நாம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தோம். எந்த ஒரு தமிழர் தலைவரும் தனியரசையோ கூட்டரசையோ அப்போது கோரவில்லை. ஆனால் ஏன் தற்போதைய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்?&lt;br /&gt;பொன்னம்பலம் அவர்கள் 50-க்கு 50 விழுக்காடு கோரிக்கையை முன்வைத்தார் எனில் காரணம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று மொகமெட் அலி ஜின்னா கோரினார். நாமோ 50-க்கு 50 விழுக்காடு மற்றும் கூட்டரசு கோரிக்கையை முன்வைத்து தற்போது தனியரசுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றனர். இருந்தபோதும் அரசியல்வாதிகளாகிய நாங்கள் ஐக்கிய நாடாக இருக்க வேண்டும் என்று இப்போதும் நம்புகிறோம். யார் இந்த நிலைக்கு பொறுப்பு? சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோல்பரி ஆணையத்தின் சரத்துகள் முதலில் நீக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கானது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் எம்மை இந்த நிலைக்குத் தள்ளியது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சுதந்திரமடைந்தது 1947. இப்போது 22 மாநிலங்கள் உள்ளன. இருந்தபோதும் ஐக்கிய நாடாகத்தானே இருக்கிறது. ஏனெனில் அங்கே நிர்வாக அமைப்பு அப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.&lt;br /&gt;கூட்டரசு முறை என்பது நாட்டை பிளவுபடுத்தும் என்று சிலர் கருதுகின்றனர். நாம் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் கொள்ளலாம்.&lt;br /&gt;1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனியரசு அதிகாரங்கள் கோரப்பட்டன. இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்களை கேட்டால் நாங்கள் இந்தியர்கள் என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தின் ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பட்டினிச்சாவில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒரே குடும்பத்தவர். ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட அல்லது இளையவர்கள் மீது அனுதாபம் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம். ஆனால் ஏ-9 மூடப்பட்டதால் என்ன செய்துள்ளனர்?&lt;br /&gt;&lt;br /&gt;1995 ஆம் ஆண்டு ஏ-9 பாதை திறப்புக்காக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தினால் திறக்க முடியவில்லை என்று கூறப்பட்டால் அந்த மக்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்கிற தோற்றம்தானே வெளிப்படும். நாங்கள் கப்பலில் உணவுப் பொருட்களை தருகிறோம் எனில் எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏ-9 பாதை மூடப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் அறவிடுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. என்னே ஒரு பொய்? ஏ-9 பாதை திறப்பு என்பது 2002 ஆம் ஆண்டு நடந்தது. அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தனர்? ஏ-9 திறப்புக்கு முன்னர் அவர்கள் நிதி பெறவில்லையா? அவர்களிடம் போதுமான உணவும் இதர வசதிகளும் இருந்தது இல்லையா? அரசாங்கத்தின் கீழ்த்தரமான பொய் இது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று தான் திரும்பினேன். மக்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வரி விதிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;ஆனால் 1995 ஆம் ஆண்டு முதல் யாழ். மேயராக இருந்தபோது கப்பல்களில் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தோம். பெற்றோலின் விலை அப்போது 1இ000 ரூபாயாக இருந்தது. அப்போது வரி யாருக்குப் போனது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ஏழை மக்களுக்கான இலவசமாக பிரதேச செயலகங்களினூடே விநியோகிக்கப்படுகின்ற அரசாங்கம் தருகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரி விதித்தது இல்லை. மேலும் 
