Friday, June 11, 2004

நான் என்பது நீயல்லவோ சரிகா!

கமல்ஹாசன் சரிகா இணைந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையாக இருந்தால் மிகவும் சந்தோசம் அடைகிறேன். நல்லதொரு தமிழ் கலைஞன். சிவாஜிக்கு பின்பு நடிப்பாற்றலால் தமிழ்
உள்ளங்களைக் கட்டிப்போட்ட பாசாங்கில்லாத ஒரு சிறந்த கலைஞன். கமலின் மண வாழ்க்கைமுறிவு
பல ரசிகர்களின் மனதினை பாதித்திருந்தது. கமலின் தனிப்பட்ட வாழ்வில் கமல் ஒரு மாதிரியானவராக
இருந்தாலும் அதை அவர் என்றும் மறைத்தில்லை. தாங்கள் செய்பவற்றை எல்லாம் மறைப்பதற்காக பலப்பல
வேடங்கள் போடும் நடிகர்கள் மத்தியில் கமல் திரைக்கு வெளியே வேடங்கள் போட்டதில்லை. இப்படி நான் சொல்வதால், தவற்றை செய்துவிட்டு ஒப்புக்கொண்டால் செய்யும் தவறு சரியாகிவிட்டது என்று அர்த்தமல்ல.
நான்கு படம் நடித்துவிட்டாலே" நாற்காலிக்கனவு"காணும் நடிகர்கள் மத்தியில் அரசியலுக்கு என்றுமே தான்
வரப்போவதில்லை என்று கூறியவன் இந்தக் கலைஞன். சிவாஜிக்கு பின்னர் வரலாறு இவன் பெயரைதான்
உச்சரிக்கும். மகிழ்ச்சியுடன் மனைவி பிள்ளையுடன் இணைந்திருக்கும் கமல் இனிவரும்காலங்களில் புத்துணர்ச்சியுடன் பல படைப்புக்களை தருவார் என்று நம்பலாம். வாழ்த்துக்கள் கமல்!

No comments: