Monday, April 13, 2020

தமிழன்டா!!

இலங்கை, இந்தியாவில் லாக்டவுன் காரணமாக சாராய கடைகள் பூட்டி இருக்கின்றன. தமிழகத்தில் குடிமக்கள் பலர் காலையில் கண் விழிப்பதே சாராய கடையில்தான்.

ஒருநாள் கூட சாராயம் இல்லாமால் இருக்க முடியாதவர்கள் இவர்கள். பலருக்கு காலையிலேயே கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்.சாராயம் உள்ளே போனால்தான் நிதானத்துக்கே?? வருவார்கள்.

இப்போது மது கிடைக்காத படியால் பல வீடுகளில் குடும்பத்தகராறுகள், கொலைகள் நடக்க தொடங்குகின்றன.

அத்துடன் "குடிமக்கள்" பலர் மன உளைச்சல், உடல் வலிகள் காரணமாக தற்கொலைகளும் செய்கிறார்கள்.

இப்படி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் இருப்பவர்களில் நடிகை மனோரமாவின் மகனும் ஒருவர். அவர் ஒரு பெரும் குடிமகன்.

அடுத்து நேற்று ஒருவர் hand sanitizer அருந்தி இறந்து விட்டார். இன்னும் இருவர் வித்தியாசமாய் சிந்தித்து After Shaving Lotion அருந்தி வெற்றிகரமாக உயிரை விட்டிருக்கிறார்கள்.

இன்னும் இருவர் வார்னிசை எடுத்து குடித்து மேலோகம் போய் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை.

இங்கு கனடாவில் LCBO எனப்படும் சாராய கடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பிரிவினுள் கொண்டு வந்து , திறந்து வைத்திருக்கின்றனர். என்ன திறந்திருக்கும் நேரத்தினை மட்டும் குறைத்திருக்கிறார்கள்.

ங் , மேற்படி கடைகள் அரசுக்கு உரியவை. பூட்டினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்

கஞ்சா விற்பனை கடைகளையும் அத்தியாவசியம் என்று சொல்லி திறந்து வைத்திருந்தவர்கள். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பவை தனியார் கடைகள். கடைகளை பூட்டி விட்டு ஆன்லைனில் விற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

நேற்று பார்த்தேன் லொட்டொவும்(லாட்டரி ) இணையத்தில் வாங்கலாமாம்... இனி என்ன இணையத்தில் வாங்கி, இணையத்தில் முடிவை பார்த்து பொழுதை கழிக்கலாம்.

 நன்றி .....