Friday, November 11, 2005

ஈழத்தமிழர் தொடர்பான சில பதிவுகள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" பத்திரிகையில் திரு சா.ஆ. தருமரத்தினம் அவர்களால் ஈழத்தமிழர் ஒடுக்குதலுக்குள்ளாகி வருதலை சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு உறுத்திய வரலாற்றுப் பதிவுகள் எனும் தலைப்பில் ஒரு தொடரெழுதப்பட்டுவருகிறது. இதுவரையில்
இந்ததலைப்பில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்துவிட்டன.நூலாக எழுதப்பட்டதை வெளியிடுகிறார்களோ அல்லது இப்போதுதான் வெளியிடப்படுகிறதோ என்பது எனக்கு தெரியவில்லை.ஆனாலும்
இது ஒரு பாராட்டத்தக்க முயற்சி.இன்றைய காலகட்டத்தில் ஈழத்தவர் அல்லாத உலகெங்கினும் பரந்து வாழும் பல தமிழர்களுக்கு ஈழப்போராட்டம்,ஈழசரித்திரம் சம்பந்தமாக சரியான தெளிவான அறிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த இணையம் வந்ததன் காரண்மாக சரியான தெளிவான அறிவினை பெற்றவர்கள் பலர்.அதில் இந்த வலைப்பூக்களுக்குகூட நிறைய
பங்கு இருக்கிறது. வலைபதிய வந்ததன் பின்னர் தான் ஈழம்,ஈழப்போராட்டம்,ஈழவரலாறு சம்பந்தமாக சரியான அல்லது தெளிவான அறிவை பெற்றுக்கொண்டதாக பலர் சொல்லியிருக்கின்றனர்.அந்தவகையில்
இக்கட்டுரைகளை எழுதுபவரும் இணையத்தில்வெளியிடுபவர்களும் பாராட்டுக்குரியவர்களே.
இனறைய இளைஞர் சமுதாயம் கூட வரலாற்றை தெளிவாக அறிந்து கொள்ள இது உதவும்.

இதுவரையில் வந்த இரண்டு கட்டுரைகளாவன.

"தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்"

"வட்டுக்கோட்டைத் தீர்மானம்"

Wednesday, November 09, 2005

ஐ.தே. க. பின்னிய சர்வதேச வலை!


.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவாக்கமே கருணாகுழு. புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் யுத்தத்துக்குப் போனால் அவரது புலிப்படையை எதிர்த்துப் போராட அமெரிக்க, இந்தியப் படைகளைத் தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றார் ரணில்'' என்று ஐ.தே. கட்சி எம்.பியான நவீன் திஸநாயக்கா பெருமிதத்தோடு கூறினார் என வெளியான செய்தியை அவரே மறுத்திருக்கின்றார். நவீ னின் மறுப்பு பிரசுரமான பத்திரிகை அச்சாகும் அதேவேளை யில் நவீன் திஸநாயக்கா கூறியவை என வெளியான கருத்தை ஒத்த விடயங்களை ஐ.தே. கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருங்கியவருமான மிலிந்த மொற கொட கூறியிருக்கின்றார் என்ற செய்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அச்சாகியிருக்கின்றது.

ரணில் பிரதமராயிருந்த போது தமிழர் தரப்போடு முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளில் முக்கிய பங்காற்றிய வரும், தற்போது ரணிலின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான மிலிந்த மொறகொடவிடமி ருந்து இக் கருத்துகள் வெளிவந்திருக்கின் றன என்பது முக்கியமாகும்."" ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகளவான பங்களிப்பி னால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளின் உருவாக்கமே கருணா.""யுத்தச் சூழ்நிலையில் கருணா போன்ற அதிருப்தியா ளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் உருவாகவே முடியாது. துப் பாக்கிகளை அமைதியடைய வைத்து தடைகளை அகற்றி பாதைகளைத் திறந்து அதன்மூலம் இரக்கமேயில்லாத விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மாற்றுவழியை அளிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஐக் கிய தேசியக் கட்சியினரான நாங்கள்தான்'' இப்படி பெரு மிதத்தோடு கருணா குழுவின் உருவாக்கத்துக்கு உரிமை கோரி யிருக்கின்றார் மிலிந்த மொறகொட.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை உறுப்பினர்களுக்கும், அதிலிருந்து வெளியே மீண்டு வேறு மாற்றுப் பாதைக்குத் திரும்புவதற்கான சூழ்நிலையைத் தமது கட்சியே ஏற்படுத்திக் கொடுத்தது என்றும் அவர் அந்தச் செயலுக்கு தமது கட்சியின் சார்பில் பாந்தயம் கோருகின்றார்.இலங்கை அமைதி முயற்சிகளில் சர்வதேச வலைப் பின்னலை தமது ஐ.தே. கட்சி அரசு கொண்டு வந்து செருகியதையும் கூட இந்தப் பேட்டியில் தங்கள் சாதனையாக பெருமையாக மார்தட்டி சுட்டிக்காட்டியிருக்கின்றார் மொறகொட.

அந்த சர்வதேச வலைப்பின்னலை நாங்கள் ஏற்படுத்தியதால்தான் இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பினருமே யுத்தத்துக்குத் திரும்ப முடியாமல் யுத்த நிறுத்தத் தடத்தை விட்டு விலகமுடியாமல் அமைதி நிலையில் நின்று பிடிக் கின்றார்கள் என்றும் அவர் தம்பட்டம் அடித்திருக்கின்றார்.ஐ.தே.கட்சித் தலைவர்களாலும் அக்கட்சியின் முன்னைய அரசினாலும் பின்னப்பட்டது என்று பெருமிதத்துடனும், உரிமையுடனும் இப்போது கூறப்படுகின்ற இந்த சர்வதேச வலையை தமிழர்கள் எப்படி நோக்குகின்றார்கள்?முன்னைய சமாதானப் பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததற்கு இந்த வலைப் பின்னலும் முக்கிய காரணம் என் பதுதான் தமிழர் முடிவு. இந்த முயற்சிகளில் தமிழர் தரப்பில் தலைமை வகித்து நேரடியாக அதில் ஈடுபட்ட மதியுரைஞர் பாலசிங்கமே அதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்த சமாதான முயற்சிகள் தொடர்பான தமது மதிப்பாய்வின் இறுதியில் அவர் இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறார்.

""பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல் கேந் திர அபிலாஷைகளும் அதிகார வீச்சுகளும், பேச்சில் பங்கு கொண்ட இரு தரப்பினரது அதிகாரச் சமவலு உறவில் பாதிப்பை ஏற்படுத்தின. உலக அரசுகளின் கூட்டணியான சர்வதேசச் சமூகம், ஸ்ரீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நின்றது. இதனால், சம உறவு நிலை எமக்குப் பாதகமாக அமைந்தது. உதவி வழங்கும் சர்வதேச நாடுகள், ஸ்ரீலங்கா அரசின் தூண்டுதல் காரணமாக, அரசியல் தீர்வுக்கு வரம்பு களைத் திணிக்கத் துணிந்தன.

இத்தலையீடானது, எமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் நாமே நிர்ண யித்துக் கொள்ளும் எமது சுயாதீன உரிமையைப் பாதித்தது. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலி களைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் (இணிணtச்டிணட்ஞுணt) தனது அந்தரங்கத் திட்டத்தையே " சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறி வந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் விக்கிரமசிங்க அரசு விரித்து வைத்த சர்வதேசச் சதி வலைப்பொறிக்குள் சிக்கி விடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.

சமாதானப் பேச்சுகளை எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைச் சர்வதேச மயப் படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால், அதே வேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட இலட்சியத் தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு, தலையீடு செய்வதை நாம் வன்மையாக எதிர்த்தோம். மூன்றாம் தரப்பு அனுசரணை யாளரின் மத்தியஸ்துடன், எமது மக்களின் பிரச்சினையை நேர்மையுடன் பேசித்தீர்க்கும் பக்குவமும், அதிகாரமும் அற்ற விக்கிரசிங்கவின் நிர்வாகம், அமெரிக்காவின் தலைமையி லான உலக நாடுகளை அணிசேர்த்து, புலிகளைப் பொறியிட முனைந்ததும் பேச்சுகள் முடங்கிப் போனதற்கு இன்னொரு காரணமாகும்'' என்கிறார் மதியுரைஞர் பாலா.

சமாதானப் பேச்சுகள் முடங்குவதற்குக் காரணமான சர்வதேச வலைப் பொறியை இப்போதும் தனது சாதனையாகத் தூக்கிப் பிடிக்கிறது ஐ.தே. கட்சி.அதன் உள்நோக்கங்களை அம்பலப்படுத்திப் புலப்படவைக்கின்றன மொறகொட போன்ற தலைவர்களின் கருத்துகள். அவ்வளவே.

யாழ் உதயன் பத்திரிகையின் 09-11-2005 இதழில் வந்த ஆசிரியர் தலையங்கமே இது.

Tuesday, November 08, 2005

வலதுசாரியாகிவிட்ட வாசுதேவா-ஒரு மடல்!

வாசுதேவ நாணயக்காரவுக்கு!

ஒரு காலத்தில் இடது சாரிகள் சிங்கள அரசியலில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளின் யதார்த்தத்தை ஒட்டுமொத்தமாகப் புரியாவிட்டாலும் சிறிதளவாவது அவர்கள் புரிந்து விட்டார்கள் போன்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. வலதுசாரிகள் அல்லாமல் இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சி அமைக்குமானால் தமிழ் மக்களது பிரச்சினை விடயத்தில் அணுகுமுறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எண்ணபாடு இருந்தது.

இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுக்கள் ஒரு காலத்தில் சிங்களவர்களிடையே வாசு நல்லவர், நமது பிரச்சினையின் ஆள நீளத்தைப் புரிந்திருக்கிறார், இவரைப் போன்றவர்கள் தெற்கே கணிசமானளவு புரிந்து கொள்வார்களாயின் நல்ல சூழல் உருவாகும் என தமிழ் மக்கள் அபிப்பிராயப்பட்டதும் உண்டு.

ஆனால், அது இப்போ தப்பாகப் போச்சு. ஏனெனில் வாசு இப்போது இடது சாரியல்ல. இனவாதக் கூட்டுடன் நெருக்கமாகி விட்டார். பேரினவாதக் கயிற்றை விழுங்கி விட்டார். தமிழர்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் என அன்று கூக்குரலிட்ட வாசுதேவா அல்ல இவர். நாட்டை துண்டாடக் கூடாது. தமிழனுக்கு உரிமையை வழங்கக் கூடாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு நிறுவக் கூடாது. போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும் மங்களவுக்கு எப்படி ஐயா சாமரம் வீசமனசு வந்தது.

வெற்றிலைக்கு நேரே புள்ளடி போடுங்கோ! என தென்னிலங்கை மக்களிடையே துணிந்து கூறுகிறீர்களே! அன்று சொன்னதை ஒருக்கால் ஞாபகமூட்டிப் பாருங்கோ புரியும். போர்க் காலச் சூழலில் படையினர் தமிழ் மக்களை வெட்டிக் குதறி, கொலைசெய்த போது நீங்கள் தமிழ் மக்களது பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டுமெனக் கூறியது இப்போது என்னாச்சு. பேரினவாதம் இடது சாரிகளை ஆக்கிரமித்து விட்டது.

கட்டுக் கட்டாக பணம், கை நிறைந்த சலுகைகள் கொட்டித் தருகிறார்கள். உங்கள் மனதைக் குளுமைப்படுத்துகிறார்கள். அதற்கு பிரதியுபகாரமாக இடதுசாரிக் கொள்கைகள், முற்போக்கான சிந்தனைகள், சிறுபான்மையினம் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகளையெல்லாம் புதைகுழியில் போட்டு மூடிவிட்டு இனவாதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற கூட்டத்துடன் ஒருவராக அங்கத்துவமாகி விட்டீர்கள்.

இனியும் ஏமாறாது எமது இனம். எங்கள் இனத்தின் மீது பரிந்து பேசுபவர்கள் நாளை பேரினவாதிகளுடன் நின்று குழிவெட்டுவார்கள். எமது தமிழினம் இனி எச்சரிக்கையாகவே இருக்கும். வாசு அல்ல வாசு போன்ற வழித் தோன்றல்கள் சிரித்த முகத்துடன் சமத்துவம் பேசினாலும் தமிழினம் ஏற்காது. ஏனெனில் இனி இடது சாரிகளையும் நம்பத் தேவையில்லை. நீங் களே வலது சாரியாகி விட்டீர்கள் என்று கூறி மடலை முடிக்கின்றேன்.

இங்ஙனம் ஈழமகன்
நன்றி ஈழநாதம் செய்திப்பத்திரிகை( மட்டு பதிப்பு)