Saturday, June 11, 2005

ரொரன்ரோவில் எஸ்.வி.சேகரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.

ரொரன்ரோவில் நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியினை
புறக்கணிக்கும்படி தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே இங்கு இது போன்ற ஒரு புறக்கணிப்பு விசுவுக்கு எதிராக கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் மேற்கொள்ளப்பட்டதும் அது முழு வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஒரு பதிவு கடந்த வருடம் நான் எழுதியிருந்தேன்.
தற்போது இடம்பெறும் இப் புறக்கணிப்பு தொடர்பான கருத்துக்களை
அடுத்த பதிவில் தருகிறேன்.

( ஆகா எனது இந்தவலைப் பூ ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டதே)
வெற்றிகரமான 365 ஆவது நாள். ஆனால் என்னஎழுதிக் கிழிச்சனி எண்டு
மட்டும் கேட்கவேண்டாம். ஜாதி,மதம்,தனிமனிதர் மீதான தாக்குதல்கள்,மாறுவேட பின்னூட்டங்கள்,வம்பு வழக்கு இப்படி எதிலும்
சிக்காமல் 365 நாள் வலைப்பூ நடத்தியதற்கு யாராவது "பட்டம்"
தரமாட்டார்களா? ஆனால் என்ன எழுதிக் கிழிச்சனீர் எண்டு யாராவது கேட்கக்
கூடாது.