
பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.மேலதிக விபரங்கள் புரிந்துகொள்ளமுடியவில்லை.
செருப்பணிந்தவன் சப்பாத்து அணிந்தவனை ஏக்கத்துடன் பார்க்கிறான்.ஆனால் கால் இல்லாதவன் அவன் கால்களை ஏக்கத்துடன் பார்ப்பதை மறந்துவிடுகிறான்.
1. யாரையோ எதிர்க்க சாதாரண மக்களின் ஜீவனத் தொழிலான கழுதையை "கேவலக்" குறியீடாக மாற்றிய உங்களை என்ன செய்வது?
2. ஏன் உங்கள் பார்வையில் கழுதை கேவலக் குறியீடாகத் தெரிகிறது?
3. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது கழுதையை போட்டோ எடுக்க?
4. ஏன் குதிரையை அழைத்துவந்து உங்கள் எதிர்ப்பை சினிமாவுக்கு காட்ட வேண்டியது தானே?
5. கழுதையை வைத்து கஷ்ட ஜீவனம் செய்யும் எங்களைப் பற்றி ஏதாவது சிந்தித்தது உண்டா?
6. ஏன் சினிமா/நடிகை/நடிகர்கள் சுற்றியே கழுதையை வைத்துக் கொள்கிறீர்கள்?
7. கேவலம் ..கேவலம் ..கழுதைக்காக ஒரு போஸ்ரரைக்கூட கிள்ளிப்போடாத நீங்கள்தான் கூட்டாளி வர்க்கமா?
8. பெற்ற மகனையே கழுதை என்று திட்டி "கழுதையை" அவமானப்படுத்தும் நீங்கள்"குதிரை" என்று திட்டமுடியுமா?
இப்படிக்கு,
கீழைத்தெரு சலவைத்தொழிலாளர்கள் சங்கம்.
( குதிரை வைத்துள்ள " சோம.இராமசாமி" இதில் சேத்தி இல்லை)
கீழைத்தெரு பிராணிகள் முன்னேற்ற சங்கம்
(சிறுத்தைபுலி வைத்திருக்கும் கோந்து.கோயிந்தசாமி இதில் கண்டிப்பாக சேத்தி இல்லை)
"என்னமோ போங்க" எழுதியிருந்த பதிவைப் பார்த்தவுடன் எழுந்த(காப்பி) கற்பனை இது. ஹீ.....ஹீ...... யாரும் இதை சீரியசாக எடுக்கவேண்டாம்.
நகைச்சுவைக்காவே இப்பதிவு.இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.அனால் ஒண்டு சிலவேளைகளில் சிந்தித்தால் மனிதனை விட கழுதையும், குதிரையும் எல்லாவிடயத்திலும் மேல் என்று எனக்கு படுகிறது.
நடப்பவைகளை நினைத்தால் எங்கு போய்முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.மொத்தத்தில் ஒண்ணுமே புரியலை உலகத்திலே, என்னமோநடக்குது மர்மமாய் இருக்குது.